Tag: சிம்பு
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என் தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு அறிக்கை
சிம்பு – டி.ராஜேந்தர்
பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.
இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை
மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது.
இந்நிலையில் டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து அவருடைய மகனும் நடிகருமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.
எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய
இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர்
சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார்.
உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
சிம்பு மருத்துவமனையில் அனுமதி
சிம்பு மருத்துவமனையில் அனுமதி
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்பு, காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி
சிம்பு
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும் படம்
மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
சிம்பு
இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
என்னை நீங்க பார்த்துக்கோங்க… கண்கலங்கிய சிம்பு
என்னை நீங்க பார்த்துக்கோங்க… கண்கலங்கிய சிம்பு
மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, ரசிகர்களிடம் என்னை நீங்கள்
பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்… என்னை நீங்க பார்த்துக்கோங்க… கண்கலங்கிய சிம்பு
சிம்பு
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள
இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா
இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
சிம்பு
இதில் நடிகர் சிம்பு பேசும்போது, ‘எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். படத்தை
வெளியிட விடாமல் நிறைய பேர் தடுக்கிறார்கள். பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக்
கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கண்கலங்கி பேசி இருக்கிறார்.
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்
சிம்பு
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மாநாடு படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி இப்படத்தின்
டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது. சிம்பு நடித்த படத்தின் டிரெய்லர் ஒன்று 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெறுவது இதுவே முதன்முறை. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு
ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு
சிம்பு
நடிகர் சிலம்பரசன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது அரசியல் பின்னணி உள்ள கதை என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சிம்பு. அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீண்ட நாள்களாக இயற்கையின் செயல்களால் உங்களிடம்
நேரடியாக உறவாடாமல். தொலைபேசி வழியாக உறவு கொண்டோம். மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவ அணி, தொழில்நுட்ப அணி, கலை இலக்கிய அணிகள் மூலம் மன்றத்தை விரிவுபடுத்த உள்ளோம்.
ஆகவே நம் மன்றத்தின் அகில இந்திய தலைவர் டி.வாசு தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆகாவே மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள்
தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் என் திருமணம் – நடிகர் ஜெய்
சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் என் திருமணம் – நடிகர் ஜெய்
நடிகர் ஜெய் கைவசம் பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்கள் உள்ளன.
சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் என் திருமணம் – நடிகர் ஜெய்
ஜெய், சிம்பு
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதில் பேசும் போது, பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்ட இல்ல.. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.
திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, ‘சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து
கொள்வேன். அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன்’ என பதிலளித்தார் ஜெய்.
நடிகர் ஜெய் கைவசம் பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம்
ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் ஜெய், சுந்தர் சி-க்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மஹா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து இருக்கிறார்.
சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
சிம்பு, ஹன்சிகா
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும்
இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள்.
மஹா
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
சிம்புவின் அடுத்த படம் இவருடனா?… வைரலாகும் புகைப்படம்
சிம்புவின் அடுத்த படம் இவருடனா?… வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு, பத்துதல படத்தை தொடந்து அடுத்ததாக பிரபல தயாரிப்பாளருடன் இணைய இருக்கிறார்.
சிம்புவின் அடுத்த படம் இவருடனா?… வைரலாகும் புகைப்படம்
சிம்பு
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ’பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன்,
பார்த்தா தெரியாது நட்பு
பழகினால் தான் தெரியும் நட்பு
இவர் மேல சில பேருக்கு வெறுப்பு
அதற்கு அவர் இல்லை பொறுப்பு
சிம்பு – ரவீந்திரன்
என்று பதிவு செய்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் அவ்வப்போது பொதுவான விஷயங்களுக்காக சந்திப்போம்
என்றும் ஆனால் எங்களைப் பற்றி மிக அதிக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.
மிக விரைவில் சிம்புவின் திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு
மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு
மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு டுவிட்டரில் பகிர்ந்த சிம்புவின் புகைப்படம்
நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சிம்பு, எஸ்.ஜே.சூர்யா
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
. அதில் ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக்
கொண்டிருக்கிறார். இந்தப் படங்களைப் பார்த்த சிம்பு ரசிகர்கள், அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்
சங்கத்துக்காக சிம்பு நடிக்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சங்கத்துக்காக சிம்பு நடிக்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
சங்கத்துக்காக சிம்பு நடிக்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிம்பு
கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சிலம்பரசன், சுசீந்திரன்
இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை
சிங்கார வேலன் தயாரிக்கிறார். வானம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக
அறிமுகமாகி புகழ்பெற்ற ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
சிம்பு
இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு, நயன்தாராவை மீள இணைத்து வைக்க முயற்சி – முறியுமா அந்த காதல் ..?
சிம்பு, நயன்தாராவை மீள இணைத்து வைக்க முயற்சி – முறியுமா அந்த காதல் ..?
நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவை இணைத்து வைக்க பிரபல இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருகிறார்.
சிம்பு, நயன்தாராவை இணைத்து வைக்க முயற்சி செய்யும் பிரபல இயக்குனர்
நயன்தாரா – சிம்பு
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ’விண்ணை
தாண்டி வருவாயா’ என்ற சூப்பர்ஹிட் படம் உருவாகியது. அதன் பின் 2016ஆம்
ஆண்டு இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்க கவுதம் மேனன்
இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம்
கவுதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சிம்பு – கவுதம் மேனன்
சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ’வல்லவன்’ மற்றும் ’
இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்களில் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்கள்.
சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை
சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை
நடிகர் சிம்புவின் வருங்கால மனைவியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை
சிம்பு
நடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில், சிம்பு, பெண்களை
வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவி சந்தோஷமாக இருக்க
வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேஷிடம் கூறுகிறார்.
இந்த வீடியோவைப் பதிவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை பிந்து மாதவி, சரியான கொள்கை சிம்பு, நாங்கள் எல்லோரும்
அந்தப் பெண்ணை சந்திக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை பிந்து மாதவி
சிம்புவின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

ஆன்மீகத்தில் இறங்கிய சிம்பு
ஆன்மீகத்தில் இறங்கிய சிம்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படம் தொடர்பான அனைத்து முன் தயாரிப்பு பணிகளுமே முடிந்துவிட்டன. சிம்புவின் தேதிகளுக்காக காத்திருந்தது படக்குழு. ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புவுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘மாநாடு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விட்டார். மேலும், இன்று ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடவுள்ளார். 40 நாட்கள் விரதம் இருந்து கோயிலுக்கு செல்லவும் முடிவு செய்துள்ளார்.
சிம்பு
1992-ஆம் ஆண்டு ‘எங்க வீட்டு வேலன்’ படத்துக்காக ஐயப்பனுக்கு மாலை போட்டார் சிம்பு. அதனை தொடர்ந்து சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மாலை போட்டு விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லவுள்ளார். சிம்புவின் இந்த மாற்றம் திரையுலகினர் மட்டுமல்லாது, அவரது நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரது மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.






