Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள் நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இது நடைமுறைப்படுத்தப் படுமென்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

இலங்கையில் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெரும்போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரத்தைக் கொள்வனவு செய்வதற்கு
110 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்த விவசாய நிலங்களுக்கு உரிய உரத்தை பெற்று உள் நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பட்ஷத்தில் தட்சார்பு பொருளாதாரா முறையை கட்டி எழுப்ப முடியும்

அதன் ஊடாக இலங்கை நாட்டில் எழுந்துள்ள உணவு தட்டுப்பாட்டை முற்றாக நீக்கி சிறந்த பொருளாதார வளம் வாய்ந்த நாடக இலங்கை மலர ஏற்பாடு செய்யலாம் என அமைச்சர்கள் நம்பிக்கை வெயியிட்டுள்ளனர்

விவசாய நிலங்கள் உள்ள இலங்கை திரு நாட்டில் அதன் உற்பத்தியை அதிகரிக்கா வண்ணம் பசளை இறக்குமதியை கோத்தபாஜா ராஜபக்ச நிறுத்தினார்

இதனால் உள்ளூர் உற்பத்திகள் பாதிக்க பட்டன ,மக்கள் விவசாய உறபத்தியில் இருந்து விலகினர் ,அடிப்படை வருமான உயர்வை கோட்டா அரசே தடுத்து நிறுத்தியது

இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

இந்த கண்மூடித்தமான நகர்வின் ஊடாகவே இலங்கையில் இன்று பலத்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன்

நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரித்து செல்கிறது பால் ,மா,சீனி,எரிபொருள்,எரிவாயு,பால்மா என அனைத்து விலையும் அதிகரிக்க பட்டுள்ளது

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் வரி விகிதம் அதிகரிக்க பட வேண்டும் ,தொடர்ந்து வரிகளின் அதிகரிப்பும் ரொக்கட் வேகத்தில் செல்கிறது

ஜனாதிபதி கோத்தபாயா அரசின் கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக அடித்தட்டு மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பாதிக்க பட்டுள்ளனர் ,

இதனை தடுக்க வேண்டும் எனின் கிராமங்கள் தோறும் வீட்டு தோட்டங்களை அதிகரித்து அதன் ஊடாக பெரும் பொருளாதார விளைச்சலை உருவாக்க முடியும்

இந்த வீட்டு தோட்டம் அதிகரித்தால் அதுவே இலங்கையின் பொருளாதரத்தில் பலத்த எழுச்சி நிலையை உருவாக்கும் என்பதும் ஆளும் இலங்கை அரசின் சிந்தனை கொள்கையாக மாற்றம் பெற்றுள்ளது

இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

Posted in இலங்கை செய்திகள்

சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு

சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு

சீனா தூதுவரை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் 2022 ஜூன் 02ஆந் திகதி அமைச்சில் வைத்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது, சீனா தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விளக்கியதுடன்,

இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் போது சீனாவின் தாராளமான உதவிகளையும் ஆதரவையும் பாராட்டிய அதே வேளையில், இலங்கையில் பொருளாதார சவால்களைத்

தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பினரும் பன்முக உறவுகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும் பாராட்டினர்

சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு

இச் சந்திப்பின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சீனாவே காரணமாக மாற்றம் பெற்றது ,அபிவிருத்தி என்ற போர்வையில் கடனை அள்ளி வழங்கியது ,அந்த கடனை மீள அடைக்கமுடியா நிலையில் இலங்கை திணறியது

மக்களுக்கு வேண்டிய வேலைத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதிகள் புகழந்து திரிந்தனர்

அபிவிருத்தி என்ற பொறிக்குள் இலங்கையை சிக்க வைத்து அந்தநாட்டின் எழுச்சிமிகு பொருளாதாரத்தை உடைத்து அந்த நாட்டை வறுமைக்குள் சிக்க வைத்த பெருமை சீனாவையே சாரும்

மதம் சார்ந்த நிலையில் சீனாவோடு மகிந்த ராஜபக்ச குடும்பம் ஒட்டி உறவாடியது இன்று ,அதே சீனா நடத்திய பொறிக்குள் சிக்கி சீரழிந்து தமது ஆட்சி அதிகாரத்தை பறி கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது

சீனாவோடு முரண் பட்டு கொண்ட இலங்கைக்கு ,சீனாவின் உதவிகளை போன்று இந்தியா அரசு வழங்கியது ,இந்த இந்தியாவின் திடீர் உதவிகளும் இலங்கை மீதான ஆதிக்கம் செலுத்தும் நகர்வுகளும் சீனாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தின

அதனை அடுத்து தற்பொழுது புதிய திட்டங்களின் கீழ் இலங்கைநாட்டை மறுசீரமைப்பு செய்திட மீளவும் கடன் ,உதவி ,உதவுதல் என்ற ஆசை வார்த்தைக்குள் இலங்கையை சிக்க வைத்துள்ளது ,

சீனாவின் இந்த சதுரங்க ஆட்டத்தில் இருந்து இலங்கை தப்புமா என்பதும் ,மக்களோ தப்பாது என்ற வகையிலும் தமது என்ன கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் – வன்னி மைந்தன் –

    Posted in இலங்கை செய்திகள்

    21ம் திருத்தம் மனோ கணேசன் அறிவிப்பு

    21ம் திருத்தம் மனோ கணேசன் அறிவிப்பு

    21ம் திருத்தம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு 8ம் திகதி தீர்மானிக்கும் என மனோ கணேசன் அறிவிப்பு

    8ம் திகதி கொழும்பு நுகேகொடை செயலகத்தில் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் 21ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.  

    நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதி வகிக்க கூடிய அமைச்சுக்கள், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அமைச்சர்களை

    நியமிப்பதற்கான பிரதமரின் அதிகாரம், இரட்டை குடியுரிமை, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம் உட்பட்ட விவகாரங்களை ஆராயும் அதேவேளை இவற்றை விட

    இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பக்க விளைவாக விகிதாசார தேர்தல் முறைமைக்கும், 13ம் திருத்தம் மூலமான  மாகாணசபை முறைமைக்கும்

    உடனடியாகவோ, காலம் கழித்தோ வரக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அவதானத்தை கொண்டுள்ளதாக மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளார்.  

    இலங்கையை ஆண்டுகளாக ஆண்டு வந்த ஆட்சியாளர்களினால் 21 சட்ட திருத்த மூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ண கருத்தை கொண்டிருக்கவில்லை

    இன்றைய அரசியல் நிலைகள் காரணமாக இதனை உடன் அமுலுக்கு கொண்டு வந்தது அதில் மாற்றங்களை ஏற்படுத்தி ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க வேண்டும் என கருதுகின்றனர்

    இவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அதனால் பாதிக்க பட்டுள்ள சிறுபான்மை தமிழாக்களுக்கு உரிய தீர்வு கிட்டுமா என்பதே மக்கள் கருத்தாக உள்ளது

    காலம் காலமாக ஏமாற்ற பட்டு உதாசீனம் செய்ய பட்டு வந்த சிறுபான்மை தமிழர்களுக்கு சிங்கள பவுத்த பேரினவாத அரசு உரிய தீர்வினை வழங்கி நாட்டையும் ,மக்களிடத்திலும் நல்லெண்ணத்தை விதிக்குமா என்பது சந்தேகமே

    மைத்திரி சிறிசேன ஆட்சியில் நல்லாட்சி கூட்டு தத்துவம் என கூறப்பட்ட பொழுதும் முடிந்தவரை தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ள மைத்திரி சிறிசேன முயன்றார் தவிர இலங்கையில் நிரந்தர அமைதியும் சமாதானமும் ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்பவிலை

    இவ்வாறான கசப்புணர்வுளுடன் கரைந்து செல்லும் இலங்கையில் நிரந்தர சமாதானம் எழுந்திட இந்த அரசியல் சட்ட அமைப்பு மாற்றங்கள் வழிகோலுமா என்பதே கேள்வியாக உள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

      விழித்திடுவோம், பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

      விழித்திடாவிட்டால் பாதகமான விளைவுகளை விட்டு, நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்களின் அன்றாட

      வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

      குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் அதன் தட்டுப்பாடும், கூழித்தொழிலாளிகள் பாதிப்பு, வறுமையினால் வீட்டுச்சூழலில் பல்வேறு குடும்பப்

      பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் போன்றவற்றுக்கு ஏழை, பணக்காரன் என்ற

      வித்தியாசமின்றி அனைவரது வாழ்க்கையிலும் விரக்தியையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தியுள்ளது விளைவுகளை விட்டு விலகிடுவோம் என்ற நிலையில் மக்கள் உள்ளனர்

      இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு, இன்னும் அனைவரது

      வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் கையிலிருப்பிலிருக்கும் மருந்துப்

      பொருட்கள் முடிவடைந்தவுடன் நோயாளிகளின் நிலைமை என்னவாகும் என்பதை நாம்

      அனைவரும் சிந்திக்க வேண்டும். இதற்கான மாற்றுவழி என்ன? விழித்திடுவோம் மக்கள் பாதகமான விளைவுகளை ஆராய்ந்து வறுமையில் இருந்து விட்டு விலகிடுவோம் அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் காலம் ஏற்பட்டுள்ளது.

      விழித்திடுவோம் பாதகமான எமது நாட்டில் நடைமுறையிலுள்ள சுதேச வைத்திய முறைகளான ஆயுர்வேத, யுனானி, சித்த, பாரம்பரிய, வைத்திய முறைகள் பற்றி இதுவரை காலமும் எம் எண்ணத்திலிருந்து தூரமாகி இருந்ததைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டிய தரும்

      விழித்திட பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

      வந்துள்ளது. குறிப்பாக, நமது நாட்டிலுள்ள மூலப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்ற மருந்துப் பொருட்கள் மூலம் சிகிச்சை பெறுகின்றபோது, பல்வேறு வகையான

      விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை நோய்களுக்கு மிகவும் வெற்றியளிக்கக்கூடிய சிகிச்சை மருத்துவ முறையாக இருக்கின்றன.

      இருப்பினும், மேற்கத்தேய மருத்துவ முறையினால் கவரப்பட்டுள்ள நாமும், அதற்கு

      அடிமைப்பட்டுள்ள எமது உடலும் அதிலிருந்து விலகி சுதேச மருத்துவ முறையை பெற்றிட விழித்திட பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

      திணிப்பதென்பது ஒரு கடினமான, கசப்பான விடயமாக இருந்தாலும் எமது

      நோய்களுக்கான தீர்வை, தற்போது சுதேச மருத்துவத் துறையினூடாக பெற்றுச்செல்ல வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

      விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!

      எமது உடம்பில் ஏற்படும் காய்ச்சல், நோவுகளுக்கு பனடோல் மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கமுடையவர்களாகவும், அதனால் எமது உடலுக்குள்

      ஏற்படுத்தப்படும் பாதகமான விளைவுகளை அறிந்தும் அறியாதவர்கள் போன்று இதுவரை காலமும் இருந்துவிட்டோம். சுதேச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள்

      ஊடாக அநேகமான நோய் நிலைமைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம். என்பதை நிலைநிறுத்தி இனியாவது நாம் விழித்துக் கொள்வோம்.

      குறிப்பாக, மேற்கத்தைய மருந்துகளுக்கு அடிமைப்பட்டு
      கடைசிவரை மருந்து மாத்திரைகளை விழுங்கி வாழும் கலாச்சாரத்தை மாற்றி,


      நோய் நிலைமைகளின் ஆரம்பக்கட்டத்திலேயே நமது நாட்டுக்கே உரித்தான மருத்துவத்துறையை


      நாடிச் சென்று அதன் மூலம் கிடைக்கின்ற ஆரோக்கியத்தின் மூலம் நீண்டகால ஆயுளை நாம் எல்லோரும் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

        Posted in இலங்கை செய்திகள்

        பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

        பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

        அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

        கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றதனால் முதலாம் தவணையின் முதற்கட்டம் கடந்த மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்தது.

        இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8ஆம் திகதி நிறைவடையும். இரண்டாம் தவணை அடுத்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகும்.

        கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான நாட்களே பாடசாலை

        நடைபெற்றது.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரா நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டு பாடு நிலவியது

        இதனால் பாடசாலைகள் பேரூந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்கள் என்பன இயங்கும் நிலையில் இருந்து செயலற்று போயின

        மாணவர்கள் வரவு வீழ்ந்த நிலையில் பாடசாலைகளுக்கு இடைக்கால விடுமுறை

        அறிவிப்பையும் கல்வி அமைச்சு விடுத்தது ,இவ்வாறு நீண்டு செல்லும் இலங்கை பொருளாதார நெருக்கடி அணைத்து தரப்பிலும் பாதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

        நாள் தோறும் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் கல்வி கற்றல் செயல் பாடுகள் செயல் இழந்து போனதினால் மாணவர்கள் மத்தியில் அந்த கல்வியை உரிய முறையில் கற்று தேர்வு எழுதிட முடியாமல் போனது

        இதனை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை மேகொண்டால்

        மட்டுமே புதிய ஆளுமை உள்ள மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் ,கற்றவர்கள் எழுந்து வந்தாலே நாட்டை முன் நோக்கி நகர்த்த முடியும்

        இதனை கல்வி அமைச்சின் அமைச்சர் உரிய முறையில் புரிந்து கொண்டால் மட்டுமே கல்வியால் கற்றல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி இலகு முறையில் கல்வியை மாணவர்கள் பெற்று கொள்ள வழி செய்யும்

        இலங்கை மாணவர்கள் கற்றல் செயல் பாடுகளில் எழுச்சியுள்ளது என்ற தோற்றப்பாடு காண்பிக்க பட்டாலும் ,மேற்குலக மற்றும் தென் ஆசிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கல்வி அறிவில் பின்தங்கியுள்ள நிலையிலேயே காணப்படுகின்றனர்

        இலங்கையின் கல்வி தரத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டை

        முன்னோக்கிய நகர்த்தவும் ,மாணவர்கள் மத்தியில் எழுச்சிமிகு கற்றல் ஆர்வத்தை ஏற்படுத்திட கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க படும் விகிதம் முதன்மை பெறவேண்டும்

        பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

        அதற்கு அரச இயந்திரம் உரிய முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி சென்றால் மட்டுமே இலங்கை கல்வியில் மாற்றம் உள்ள புரட்சியை ஏற்படுத்த முடியும்

        இலங்கையில் மட்டுமே மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக விடுமுறை வழங்க படுகிறது ,ஆனால் ஐரோப்பிய நாடுகளில் எட்டுவாரங்கள் மற்றும் ஆறுவரங்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்க படுகிறது

        மாணவர்கள் சலிப்பு இன்றி கற்றலை தொடர்ந்திட இவ்வாறான உளவியல் ஊக்குவிப்பு வழங்க படுகிறது ,

        இலங்கை பாடசாலைக்கும் மாணவர்கள் இவ்விதம் ஆரோக்கியமான கற்றலை மேற்கொள்ள இலங்கை கல்வியால் கட்டமைப்பில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் ஆவலாக உள்ளது – வன்னி மைந்தன் –

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்

          இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்

          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியை திணைக்க தற்போது 2,000 மெற்றிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இன்று காலை இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

          இந்த கப்பல் இலங்கையை வந்தடைந்த போதிலும் , இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

          எரிவாயுடவை பெற்றுடை மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன் காத்துள்ளனர்

          பல மைல்கள் தொலைவில் நீண்டு செல்லும் நிரையில் காத்து கிடந்த மக்களில் சிலர் மரணித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது ,லிட்ரோ நிறுவனம் தம்மிடம் எரிபொருள்,எரிவாயு கையிருப்பில் இல்லை என கையைவிரித்து வருகிறது

          இதனால் சில எரிபொருள் நிலையங்களில் மக்களுக்கும் ,லிட்ரோ நிறுவன ஊழியர்களுக்கும் இடையில் மோதல்கள் கூட இடம்பெற்றன

          இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் தெளிவற்ற அரசியல் ,பொருளாதார கொள்கை காரணமாக இலங்கையில் இவ்விதமான பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது

          இராணுவ தளபதியாக விளங்கியவர் இராணுவவ சிந்தனையில் நாட்டை ஆழ முயற்சித்து இன்று அவர்கள் ஆட்சி அதிகாரம் இழந்து மக்கள் மன்றில் அவமானப்பட்டு நாட்டை விட்டு ஓடும் நிலைக்கு ராஜபக்ச குடும்ப நிலை சிக்கியுள்ளது

          வீட்டுக்கு சிறந்த தலைவன் இருந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப அந்த தலைவனால் முடியும்

          இவ்வாறான கோட்பாட்டு நிலையில் கோத்தபாய மேற்கொண்ட தவறான அரசியல் நகர்வும் பழிவாங்கும் அரசியல் வங்குரோத்தும் இன்று அவரை பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது

          இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்

          எரிபொருள் தட்டுப் பாட்டால் மக்களின் அத்தியாவசிய செயல் பாடுகள் செயலற்று போயின ,பேரூந்துகள்,லாரிகள்,முதல் விவசாயமும் செயல் இழந்து போயிற்று

          இதனால் அன்றாட விவசாய ,உணவு உறபத்தியில் பெரும் வீழ்ச்சியும் ,மக்கள் வாழ்வாதாரத்திலும் பெரும் இடி வீழ்ந்துள்ளது

          போரை வென்று மக்களின் மனங்களை வென்றதாக ஆணவ குதிரையில் ஆடி வந்த ராஜபக்ச குடும்பத்திற்கு இலங்கையில் பெரும் அடி வீழ்ந்துள்ளது ,

          தமிழர்கள் முஸ்லீம் எதிரியாக விளங்கிய நிலையில் இன்று சொந்த சிங்கள மக்களுக்கும் இவர்களுக்கு எதிரியாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          மக்கள் வாழ்வாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையிலே ராஜபாக்ச குடும்பம் வீழ்ச்சி நிலையில் சிக்கியுள்ளது

          வீழ்ந்து போன இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் ,அப்பொழுதே ஆட்சியாளர்களின் மனங்களில் ,சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்

          அப்பொழுதே எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் ,மீளவும் இலங்கை இயல்பு நோக்கி நடைபயிலும் ,எரிபொருள் விலை உயர்வு ,மின்சாரம் தட்டுப்பாடு ,காய்கறிகள் விலை உயர்வு ,உரத் தட்டுப்பாடு

          இவ்வாறான நெருக்கடிகள் தொடர்ந்து சென்றால் ஆளும் ஆட்சியாளர்களை மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வழியில்லை என்பதே இலங்கையின் இன்றைய கள நிலவராம் எடுத்து கூறு விடயமாக உள்ளது

          மாற்றங்கள் எழுந்திட அரசியல் தலைவர்கள் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே நிகழ்காலம் கூறும் விடயமாக பதிந்து கிடக்கிறது .

            Posted in உலக செய்திகள்

            தேவாலயம் மீது தாக்குதல் -50 பேர் பலி

            தேவாலயம் மீது தாக்குதல் -50 பேர் பலி

            கடந்த தினம் நையீரியா St Francis Catholic Church தேவாலயம் மீது மர்ம ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி ஐம்பதுஅப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

            குறித்த நாளன்று வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த அப்பவி மக்கள் படு கொலை செய்ய பட்டுள்ளனர்

            ஆயுத தாரிகள் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலில் இதுவரை,அங்கிருந்து வரும் தகவலின் அடைப் படையில் ஐம்பது பேர் பலியாகியும் மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

            உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என நம்ப படுகிறது , எனினும் இந்த தாக்குதல் சேத விபாரங்கள் முழுமையாக வெளியாகவில்லை

            தாக்குதல் நடந்துள்ளது எனவும் ஐம்பது அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளது
            ,நையீரியாவில் இது போன்ற தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள் என்பன அதிகரிக்க பட்டுள்ளன

            அமைதி வழியில் தமது தேவனை வழிபட சென்ற மக்கள் மீது தீவிரவாதிகள் இந்த திடீர் தாக்குதலை நடாத்தி நட்டு மக்களை அச்சுறுத்தியுள்ளனர் ,

            பொக்கோ கராம் என்ற அமைப்பினர் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் ,மற்றும் மக்களை கடத்தி சென்றனர் ,அது தவிர கிராமங்களுக்குள் புகுந்து அந்த கிராம

            மக்களையும் கொன்று குவித்ததுடன் அவர்கள் வீடுகளையும் எரித்து விட்டு தப்பி ஓடினர்

            தேவாலயம் மீது தாக்குதல் -50 பேர் பலி

            நாள் தோறும் நையீரியாவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,
            தாக்குதல் நடத்த பட்ட ஆலய பகுதி எங்கும் நையீரியா அரச இராணுவம் குவிக்க பட்டு எதிரிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

            தேவாலயத்தில் நடத்த பட்ட இந்த தாக்குதலுக்கு வெளிநாடுகள் ,மற்றும் மத ஒருமைப் பாட்டு சம்மேளனங்கள் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளன

            நையீரியாவில் தொடரும் இவ்விதமான வன்முறை தாக்குதல்கள் உடன் தடுத்து நிறுத்த பட வேண்டும் ,அது தவறின் இது போன்று மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாகும் பேரவலம் இடம்பெறும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

            நையீரியாவில் பாய்ந்தோடும் இரத்த ஆறு என்று தடுக்க படும் ,அங்கு அமைதியான சூழல் என்று எப்போது உருவாகும் என்பதே உலக சமுதாயத்தின் கேள்வியாக உள்ளது

            ஆளும் ஆட்சியாளர்கள் சம்பந்த பட்டவர்களுடன் பேசி புரையோடி போயுள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டு ,ஒன்றித்த தேசமாக வாழும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்றே இந்த துப்பாக்கி குண்டு சத்தங்கள் ஓய்ந்து சமாதானம் நிலவும் என்பது உலகில் நடந்த போர்கள் வரலாறாக கற்பித்துள்ளன .

            • வன்னி மைந்தன் –
              Posted in உலக செய்திகள்

              உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

              உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

              உக்கிரேன் நாட்டின் மீது ரசியா நூற்றி இரண்டாவது நாளாக இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளது

              கடந்த தினம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகர் மீது முதன் முதலாக ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது


              இந்த ஏவுகணைகள் யாவும் மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து நடத்த பட்டுள்ளது

              கார் திருத்தும் இடம் என தெரிவித்து அங்கு வைத்து சேதமாக்க பட்ட டாங்கிகள் திருத்த

              பட்டு வந்துள்ளது, அவ்விதமான ஆயுத கிடங்கு மீதே ரசியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன

              இவ்வாறு ரசியா இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை தமது வான் காப்பு

              படைகள் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது

              கருங்கடல் பகுதியில் ஐந்து ரசியா போர்க் கப்பல்கள் திடீரென குவிக்க பட்டுள்ளது என நாம் தெரிவித்தோம் அல்லவா


              இந்த கப்பல்கள் திடீர் குவிப்பின் பின்னால் ரசியா பெரும் தாக்குதலுக்கு தயராகும் என தெரிவித்தோம் அல்லவா தற்போது அவை இடம் பெற்றுள்ளது

              கோடை காலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரசியா தெரிவித்ததன் நோக்கம் இது தான் போலும்

              மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வருகின்றன ,அவர்களின் ஆயுத தொகுதிகள் யாவும் உக்கிரேனில் வைத்து அழிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது

              மேலும் மேற்குலக நாடுகள் வலிந்து போருக்கு தம்மை இழுத்து வருகிறது எனவும் அது அவர்களுக்கு சிறந்தது அல்ல எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளது

              உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

              எதிரிகள் தம்மை வம்புக்குக்கு இழுத்தால் எதிரி கோட்டைகள் தகரும் என ரசியா காட்டமாக தெரிவித்துள்ளது

              எதிரி நாடான உக்கிரேன் தலை நகர் தற்போது ரசியாவின் நேரடி தாக்குதல் எல்லைக்குள் உள்ளாக்க பட்டுள்ளது ,வரும் நாட்களில் அகோர தாக்குதல்

              உக்கிரேன் தலை நகர் கீவ் மீது மேற்கொள்ள பட போகிறது என்பதற்கு இந்த திடீர் ஏவுகணை நேரடி தாக்குதல்கள் கட்டியம் இடுகின்றன

              அப்படி என்றால் உக்கிரேன் முழுவதுமாக உக்கிர தாக்குதலை ரசியா இராணுவம் நடத்த போகிறது ,இங்கு இதுவரை பாவிக்க படாத ,புதிய வகை ஆயுதங்களை ரசியா

              பாவனைக்கு உட்படுத்த பட போகிறது, அப்படி என்றால் பெரும் பேரழிவை உக்கிரேன் சந்திக்க போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.

              • வன்னி மைந்தன் –
                Posted in உலக செய்திகள்

                மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

                மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

                நேற்று இரவு அமெரிக்கா Philadelphia பகுதியில் கூடியிருந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுததாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தாள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

                இந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில பதினொரு பேர் பிழையாகினர் ,மேலும் இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர்

                காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்
                தெரிவித்துள்ளன

                நிறைந்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் திடிரென துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது ,இதனை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்

                சினிமா காட்சி போல சொற்ப நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

                இறந்த நிலையிலும் மேலும் பலர் கதறலுடன் காயத்துடன் துடித்த வண்ணம் இருந்தனர்
                என நேரில் கண்ட சாட்சிகள் கண்ணீர் மல்க கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்

                அமெரிக்காவில் தொடராக இடம் பெற்று வரும் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சமப்வத்தில் சிக்கி பல நூர் மக்கள் பலியாகியுள்ளனர்

                மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

                அதிகரித்து செல்லும் இந்த முறைகேடான துப்பாக்கி பாவனையை அடுத்து மக்கள் துப்பாக்கிகள் பயன் படுத்த தடை என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது

                எதிரிகள் போல வேடமிட்டு நுழைந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து அதில் மகிழ்ச்சி காணும் மனோ நிலையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்

                தொடர்ந்து இடம் பெறும் இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் மிக பெரும் அரசியல்வாதிகள் உள்ளதாக சந்தேகம் வலுப் பெற்றுள்ளது

                டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றதன் பின்னர் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது

                எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அரியணை ஏறிட காத்திருக்கும் டிரம்ப் இவ்வாறான சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவார் என எதிர் பார்க்க படுகிறது

                மக்களை கொன்று தாம் அரசியலுக்கு வந்து கொள்ளையடித்தால் போதுமென்று சில அரசியல்வாதிகள் உலாவத்தான் செய்கின்றனர்

                அரசியலில் இதெல்லாம் சகயமப்பா ..!

                  Posted in சினிமா

                  நீச்சல் உடையில் கலக்கும் ரைசா

                  நீச்சல் உடையில் கலக்கும் ரைசா

                  தமிழ் திரையுலகில் பிக்பாஸ் ஊடாக அடியெடுத்து வைத்த ரைசா
                  தற்போது நீச்சல் உடையில் கலக்கும் நிழல் படங்களை விதம் விதமாக சுட்டு போட்டுள்ளார்

                  இவரது இந்த படு செக்ஸ் கவர்ச்சி படங்களை பார்த்து ஆண் ரசிகர்கள் தூக்கத்தை மறந்து அம்மணி வாங்கோ என கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர்

                  சமூக வலைத் தளங்களில் ரைசா தொடர்பான வாத பிரதி வாதங்கள் சூடு பிடித்துள்ளது ,
                  சினிமாவில் மேலும் வாய்ப்பை தேடிக் கொள்ள நடிகைகள் தற்போது நீச்சல் உடை காட்சிகளை வெளிட்டு இயக்குனர்களை தம் பக்கம் சுண்டி இழுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்

                  அதன் ஒரு அங்கமாகவே இளம் நடிகையாக உருவெடுத்த ரைசா இந்த கவர்ச்சி படங்கள் வெளியீட்டின் பின்னால் சர்ச்சையில் சிக்கி இருக்கும் ரைசாவுக்கு சினிமா வாய்ப்பு கூடி வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

                  நீச்சல் உடையில் கலக்கும் ரைசா

                  மாடல் நடிகையாக வலம் வந்த ரைசா திடிரென இவ்விதம் கலக்கிய காட்சிகள் அருவருப்புடன்
                  காணப்படுவதாக பெண்களில் சிலர் குமுறுகின்றனர்

                  சிலரோ அது அவரது தனிமனித சுதந்திரம் என்ற கோட் பாட்டுக்குள் சிக்க வைக்கின்றனர் ,


                  ஆரம்பத்தில் ரோமன்ஸ் மற்றும் கவர்ச்சி காட்ட மறுக்கும் நடிகைகள் ,பிற்காலத்தில் இவ்விதமான கவர்ச்சி படங்களை தாராளமாக கவர்ச்சி காட்ட தயராகி வருகின்றனர்

                  இது நடிகைகள் மேற்கொள்ளும் ஒரு யுத்தியாக காணப்படுகிறது ,முக அலங்காரம் செய்திட சென்று சர்ச்சையில் சிக்கிய ரைசா மீளவும் இப்பொழுது கவர்ச்சி உடையில் திறந்த மேனியை காட்டிட முனைந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்

                  இதெல்லாம் சினிமாவில் சாதாரணமப்பா அவர்கள் கூத்தாடிகள் தான் என்கிறது சில கூட்டம் ,

                  நீச்சல் உடையில் கலக்கும் ரைசா


                  என்னதான் இருந்தாலும் அம்மணி இப்படி பார்க்கும் பொழுது லூக்கா தான் இருக்கிறார் என்கிறது கரையும்
                  வாலிப கமன்ட்

                  எது எப்படியோ இதன் மூலம் திரையுலகளில் தாராள கவர்ச்சி காட்ட அம்மணி தயாராகி விட்டார் என்பதாக
                  இந்த திடீர் கவர்ச்சி படங்கள் ஊடாக திறந்த மனதுடன் நடிகை ரைசா தெரிவித்துள்ளார்

                    Posted in சினிமா

                    நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ

                    நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ

                    ஹிந்தி திரையுலககில் சூப்பர்ஸ் டாராக வலம் வரும் பிரபல, ஷாருக்கானுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                    கொரனோ தொற்றுக்கு உள்ளான ஷாருக்கான் தற்போது தன்னை தானே சுய தனிமை படுத்தலுக்கு உட் படுத்தியுள்ளதக தெரிவித்துள்ளார்

                    நம்ம தலைக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள செய்தி தீவிர ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

                    தலைவா விரைவில் நலம் பெற்று எம்மை வந்து சந்திக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் கருத்துக்கள் ரொக்கட் போல பறக்கிறது

                    மேலும் இவரது ரசிகர்கள் சிலர் ஆலயம் சென்று சாருக்கான நலம் பெற வேண்டி வழி பாட்டிலும் ,விசேட ஆராதனைகளும் செய்த வண்ணம் உள்ளனர்

                    இதில் விசித்திரம் என்னவென்றால் பெண் ஒருவர் ஷாருக்கான் நலம் பெற்று திரும்பும் வரை தான் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணப் போவதாக கருத்து பகிர்ந்துள்ளார்

                    நடிகர் ஷாருக்கானுக்கு கொரனோ

                    ஷாருக்கான் ஹிந்தியில் மட்டுமல்லாது ஷாருக்கான் தமிழ் திரைபடங்களிலும் நடித்துள்ளார் ,இவர் நடித்த தமிழா படங்கள் சிலது தமிழகத்தில் பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது

                    ஒரு மொழியில் மட்டும் அல்லாது பல மொழிகளிலும் ஷாருக்கான் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

                    தையா தையா என்ற தமிழ் பாடல் இன்றும் செம் கிட்டாக உள்ளது ,அதில் இவரது துள்ளல் நடன ஆடல் ஓடும் ரயிலில் ரயில் தூள் பறக்கும் வண்ணம் அமைய பெற்று இருந்தது

                    வயதானாலும் இன்று வரை வாலிபன் போல காட்சி அளிக்கும் சாருக்கானது உடல் கட்டமைப்பு இளம் பெண்களையும் கிறங்க வைக்கிறது ,சாரு என செல்லமாக அழைக்க படும் இந்த மனிதன்

                    நடிகராக மட்டும் அல்ல சிறந்த தொழில் அதிபராக விளங்கி வருகிறார் ,அத்துடன் மட்டும் அல்லாது பல நூறு மக்களுக்கும் தொடராக உதவி புரிந்த வண்ணம் உள்ளார்

                    அவ்வாறன ஒருவரே இன்று இந்த கொடிய கொரனோ நோயின் தொற்றுதலுக்கு உள்ளாகியுள்ளார் ,விரைவில் ஷாருக்கான் நலம் பெற வேண்டும் என்பது மக்கள் பிராத்தனையாக உள்ளது


                      Posted in இலங்கை செய்திகள்

                      கோத்தபாய ரணிலை ஏமாற்றிய தமிழர்கள்

                      கோத்தபாய ரணிலை ஏமாற்றிய தமிழர்கள்

                      இலங்கையில் அதிகரித்து செல்லும் பொருளாதார நெருக்கடியையே அடுத்து நாணய பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கிறது ,

                      இதன் அச்சம் காரணமாக வெளி நாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை அதிகமாக தவிர்த்து வருகினறனர்

                      அண்ணியா செலாவணியை பெற்றுக் கொள்வதில் இலங்கை பெரும் நெருக்கடி

                      இதனால் அண்ணியா செலாவணியை பெற்றுக் கொள்வதில் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது ,

                      வங்கிகளில் பணம் வைப்பு செய்தாலும் அந்த பணம் அரசுடைமையாக்க பட்டு விடும் என்பதால் வெளிநாட்டு தமிழர்கள் பலர் பணம் அனுபவதை தவிர்து வருகினறனர்

                      உலக தமிழர் புரிந்து வரும் இந்த செயலினால் ஆத்திரமுற்றுள்ள இலங்கை பிரதமர் ரணில், விக்கிரமசிங்க மற்றும் கோட்டாபய தமிழர்கள் கோரும் அரசியல் தீர்வை தந்திட இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்

                      தமிழர்களுக்குரிய தீர்வுகள் வழங்க பட்டால் ,
                      நாட்டுக்கு பெற்று கொண்ட அத்தனை மில்லியன் கடனையும்
                      தாம் வழங்குவோம் என உலக தமிழர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்து வருகின்றமை
                      இலங்கை அரசை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

                      போருக்கு பல மில்லியன் பணத்தை செலவு செய்து வந்த இலங்கை அரசுகள் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதில் மட்டும் குறியாக செயல் பட்டனரே தவிர தமது பொருளாதரத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என அவர்கள் எண்ணவில்லை

                      கோத்தபாய ரணிலை ஏமாற்றிய தமிழர்கள்

                      அன்று பல கோடிகளில் பாதுகாப்பு செலவீனத்துக்கு ஒதுக்கி வந்த நிலையில் இன்று அதுவே தமது நாட்டை விழுங்கி ஏப்பம் இட்டுள்ளது

                      இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீளவும் இயல்பு நிலை நோக்கில் செல்ல வேண்டும் என்றால்

                      புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே இலங்கையால் நிமிர்ந்து நிற்க முடியும் ,

                      அதற்கு இன்றுள்ள இந்த அரசியல் வாதிகளுக்கு திறன் இல்லை என்பது அவர்கள் இனவாத சிந்தனையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது

                      தொலை நோக்கு பார்வையுடன் மாற்றி சிந்திக்கும் நபர் ஒருவரால் மட்டுமே இலங்கையின் இன்றைய வீழ்ச்சியை தூக்கி நிறுத்த முடியும் என்பது மூன்றாம் தரப்பு சமாதான பணியில் ஈடுபட்டவர்கள் கருத்தாகவும் உள்ளது

                      • வன்னி மைந்தன் –
                        Posted in உலக செய்திகள்

                        தீயில் கருகிய மனித உடல்கள் 16பேர் மரணம் -150 பேர் காயம்

                        தீயில் கருகிய மனித உடல்கள் 16பேர் மரணம் -150 பேர் காயம்

                        பங்களாதேஸ் Sitakunda, துறைமுக பகுதியில் இடம் பெற்ற தீயில் கருகி 16 பேர் மரணித்துள்ளனர்
                        மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                        கொண்டனர் தரித்து வைக்க படும் துறைமுக பகுதியில் பணியாற்றி கொண்டிருந்த பணியாளர்களே இந்த தீ விபத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர்

                        இங்கு பற்றிய தீயானது இரு கிலோ மீட்டர் அப்பாலும் வானில் புகைமண்டலங்களாக காணப்பட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன

                        இந்த தீயில் சிக்கிய மனிதர்கள் பலர் மூச்சு திணறலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் ,

                        இங்கு இடம் பெற்ற தீ விபத்தில் சிக்கியவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

                        இந்த தீ விபத்துக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,ஆளும் அதிபர் இந்த தீ விபத்து தொடர்பில் உடன் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி வேண்டுதல் விடுத்துள்ளார்

                        பங்களாதேஷில் இவ்விதமான தீ பற்றல் சம்பவங்கள் அதிகரித்த வண்னம் உள்ளது

                        தீயில் கருகிய மனித உடல்கள் 16பேர் மரணம் -150 பேர் காயம்

                        ,புடவை தொழில் சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் அங்கு பணியாற்றிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தீயில் கருகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                        இந்த தீ விபத்து திட்டமிடப்பட்ட ஒன்றா அல்லது விபத்தா என்பது தொடர்பில் சில நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது

                        தீயில் கருகிய மனித உடல்களின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் ஆளும் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை இந்த தீ சம்பவம் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

                        முறையான நிர்வாகத்தின் கீழ் பேணப்படாத நிலையில் இந்த தீ விபத்துக்கள் அதிகரித்து செல்வதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

                        கடந்த சில ஆட்சியாளர்களுக்கு எதிராக இராணுவம் இரகசிய சதி முயற்சியில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்ப்பதற்கு இவ்விதமான நாசகார செயல்களில் ஈடுபட்டு வந்தமை பின் நாட்களில் கண்டு பிடிக்க பட்டு அவை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது .

                        • வன்னி மைந்தன் –
                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு

                          இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு

                          கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022

                          ஏப்பிறலின் 29.8 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 39.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு

                          மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது.

                          அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஏப்பிறலின் 46.6 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 57.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை,

                          உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 30.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

                          கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 மேயில் 8.34 சதவீதமாகப் பதிவாகியது. இதற்கு, முறையே 4.87 சதவீதமாகவும் 3.47 சதவீதமாகவும்

                          காணப்பட்ட உணவல்லா மற்றும் உணவு வகைகள் இரண்டினதும் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தது. அதற்கமைய,

                          போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்), வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவப்பெற்றோலிய வாயு மற்றும்

                          இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு

                          பராமரித்தலுக்கான/ மீள்கட்டுமானத்திற்கான பொருட்கள்), உணவகம் மற்றும் விடுதிகள் அத்துடன் நானாவிதப் பொருட்கள் மற்றும் சேவைகள் (கார் காப்புறுதி)

                          ஆகிய துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களைப் பிரதான காரணமாகக் கொண்டு உணவல்லா வகையினுள் உள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.

                          மேலும், உணவு வகையினுள் காய்கறிகள், உடன் மீன், அரிசி, பாண், கருவாடு, பருப்பு என்பவற்றின் விலைகளில் மாதகாலப்பகுதியில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

                          அதேவேளை, ஆண்டுச் சராசரி பணவீக்கம் 2022 ஏப்பிறலின் 11.3 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

                          பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில்

                          28.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம்,
                          2022 ஏப்பிறலின் 8.1 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 10.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்

                            ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்

                            இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரித்து நிற்கும் ஏரோஃப்ளோட் என்ற ரசியா பயணிகள் விமானம் SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது.

                            பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும்

                            வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.

                            இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான ‘ஏரோஃப்ளோட்

                            ‘ மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர், திரு.

                            ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்

                            என். சி அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.

                            இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளது. என இணை வெளிநாட்டு அமைச்சு அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

                            இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் ரணில்,விக்கிரமசிங்கவும் கருத்து பகிர்ந்துள்ளார்

                            இது இரு நாடுகளுக்கு இடையிலான இராயதந்திர தொடர்பண விடயம் அல்ல என குறிப்பிட்டு இருந்தமை ரசியாவை சமாதான படுத்த ரணில் விக்கிரமசிங்கா மேற்கொண்ட கபாட நாடகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது

                            இந்தியாவுடன் ரசியா தற்போது உக்கிரேன் மீது மேற்கொண்டுள்ள போர்க் காலத்திலும் நெருங்கி உறவாடி வருகிறது

                            இவ்வேளை இலங்கையை வைத்து அமெரிக்கா காய்களை நகர்த்தி ,இந்த விமானத்தை நிறுத்தியதா என உள்வீட்டு அரசியல் சித்தாந்த வாதிகள்சந்தேகத்தை கிளறி வருகின்றனர்

                            இது இலங்கை ஆட்சியாளர்களினால் தனித்து எடுக்க பட்ட அரசியல் ஆடுகள விளையாட்டாக அமைய பெறாது என்பதே விடயம் அறிந்த வட்டாரங்களிள் ஆழமான கருத்து பகிர்வாக உள்ளது

                            • வன்னி மைந்தன் –
                              Posted in இலங்கை செய்திகள்

                              காணமால் போனவர் சடலமாக மீட்பு

                              காணமால் போனவர் சடலமாக மீட்பு

                              வீட்டில் இருந்து காணாமல் போனவர் ,கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட்டுள்ளார்

                              குடும்பஸ்தரின் சடலம் ஒன்றே இவ்வ்ரு மீட்க பட்டு ,பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

                              அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்தார்

                              இவ்வாறு காணமல் போன நிலையில் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

                              இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

                              காணமால் போனவர் சடலமாக மீட்பு

                              குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள்

                              இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

                              மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

                              இலங்கையில் தொடராக காணாமல் போபவர்கள் இவ்வாறு சடலமாக மீட்க பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததன் பின்னர் நீர் நிலைகளில் மர்மமான முறையில் மக்கள் சடலங்கள் மீட்க படுகிறது

                              இது தமிழர் பகுதியை மட்டும் இன்றி தென் இலங்கை ஆதிக்க வெறி சிங்களவர்கள் வசிக்கும் பகுதியிலும் சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன

                              அணைத்து மரணங்களும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதே ஓரே விதமான முறையில் மரணங்கள் உள்ளதே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

                              இவை திட்டமிடப்பட்ட குழு ஒன்றினால் மேற் கொள்ள படும் மர்ம படு கொலைகளின் பின்புலம் என கருத படுகிறது

                              ஜே ஆர் ஜேவர்தனா இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய பொழுது ஜேவிபி சகோதர படுகொலையை ஆரம்பித்து வைத்தார் ,நீர் நிலைகளில் மிக கோரமான முறையில் ஜேவிபி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அடித்து வீச பட்ட நிலையில் அந்த ஆண் பெண் சடலங்கள் மீட்க பட்டன

                              அது போலவே இப் பொழுது இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .-வன்னி மைந்தன் –

                                Posted in இலங்கை செய்திகள்

                                கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்

                                கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு சடலம்

                                கிளிநொச்சி மருதநகர் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் நீர் பாசன கால்வாயில்
                                இருந்து ஒன்றரை வயது சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது

                                சிசு தவறி விழுந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
                                சடலம் இரண்டு கிலோ மீட்டர் தொலையில் இருந்து மீட்க பட்டுள்ளது

                                கிளிநொச்சியில் நீரில் மிதந்த சிசு மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன


                                இந்த சிசு மரணம் அந்த கிராம பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  காதலி வீட்டை அடித்து நொறுக்கிய காதலன்

                                  காதலி வீட்டை அடித்து நொறுக்கிய காதலன்

                                  காதலி காதல் தொடர்பை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் கடந்த முன் தினம் இரவு அவனது வீடு சென்று தனது காரால் காதலியின் வீட்டை சேதப்படுத்தியுள்ளஅடித்து நொறுக்கிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

                                  காதலன் தனது காரை ஓட்டிச் சென்று காதலியின் வீட்டின் கேட்டை உடைத்து அதன் பின்னர் அங்கிருந்தவர்களை குழு ஒன்றுடன் இணைந்து தாக்க முயற்சித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

                                  கடந்த முன் தினம் இரவு இரவு 10 மணியளவில் அனுராதபுரத்தில் உள்ள காதலியின் வீட்டிற்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                                  காதலன் தனது காதலியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரையும் தனது காரை கொண்டு பலமுறை கடுமையாக மோதி சேதப்படுத்தியுள்ளார்.

                                  அவர் தனது பெற்றோர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக காதலி பொலிஸில் குறிப்பிட்டுள்ளார்.

                                  இச்சம்பவத்தால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு பொலிஸாரிடம் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

                                  அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                    Posted in உலக செய்திகள்

                                    ரசியா ஆயுத வண்டிகள் சிதறல் – உக்கிரேன் தாக்குதல்

                                    ரசியா ஆயுத வண்டிகள் சிதறல் – உக்கிரேன் தாக்குதல்

                                    ரசியாவின் ஆயுத வண்டி தொடரணியை இலக்கு வைத்து உக்கிரேனே அரச இராணுவத்தினர் நடத்திய துல்லியமான ஏவுகணை தாக்குதலில் ,அந்த ஆயுத தொடரணி முற்றாக அழிக்க பட்டுள்ளது .

                                    அந்த ஆயுத வண்டிகளில் பயணித்த எதிரி படைகளும், படு கொலை செய்ய பட்டுள்ளன ,எதிரிகளின் சடலங்கள் அங்காங்கே சிதறி கிடக்கிறது

                                    அதி நவீன ஆயுத தளபாடங்களுடன் ,பாரிய முன்னகர்வை மேற்கொண்டு வந்த, எதிரி படைகள் மீது ,தாம் வீரமிகு தாக்குதலை நடத்தி ,பாரிய இழப்பினை வழங்கியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் நெஞ்சை நிமிர்த்தி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது

                                    தொடராக ரசியாவின் ஆயுத வண்டிகளை இலக்கு வைத்து உக்கிரேன் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                                    அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக வழங்கி வரும் நாவீன ஆயுதங்களை பயன் படுத்தி நூறாவது நாளில் எதிரிகளை பந்தாடி வருகிறது உக்கிரேன் இராணுவம்

                                    ,எதிரிகள் மீது வீச பட்டு வரும் நவீன ஆயுத தளபாடங்கள் பெரும் இழப்பை எதிரிகளுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளது என்கிறது உக்கிரேன் .

                                    பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள், மற்றும் தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் என்பன உக்கிரேன் போர்க் களத்தில் துள்ளி விளையாடி வருகின்றன

                                    அமெரிக்கா,பிரிட்டன் என்பன தமது புதியவகை ஆயுதங்களை நேரடியாக தமது பரம எதிரிகள் மீது உக்கிரேன் இராணுவத்தை பயன் படுத்தி சோதனை வெள்ளோட்டம் செய்து வருகிறது

                                    ரசியா ஆயுத வண்டிகள் சிதறல் – உக்கிரேன் தாக்குதல்

                                    உக்கிரேன் இராணுவத்தினருக்கு உதவி என்ற கோதாவில் ,பல பில்லியனுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து கொள்ளை இலாபம் ஈட்டி வருவதுடன் ,தமது ஆயுதங்களையும் எதிரி படைகள் சோதனை செய்கிறது

                                    எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல , இந்த நாடுகளின் திடீர் எதிரி என்ற கூட்டணி தொடர்புகள் ஆண்டுகள் நூறு நிலைக்குமா என்பதே கேள்வியாக உள்ளது

                                    மேற்கு நாடுகளின் ஆயுதங்களுடன் ,எதிரி படைகளை மீள அவர் தம் எல்லைக்கு விரட்டி வரும் உக்கிரேன் இராணுவம் மீது ,ரசியா அதிவேக அதிரடி தாக்குதலை நடத்தலாம் என ஆவலுடன் எதிர் பார்க்க படுகிறது ,

                                    ரசியாவியுன் ஆயுத வண்டிகள் சிதறிய காட்சிகள் வெளியிட்டு மகிழ்வுறும் உக்கிரேன் இராணுவம் பெரும் இழப்பை சந்திக்க கூடும் என்பது, எதிரி நாடான ரசியாவின் இராணுவ பரப்புரையாக உள்ளது

                                    வரும் நாட்களில் உக்கிரேன் போர்க்களம் சற்று அகோரமானதாக மாற்றம் பெறலாம் என்பது நமது கணிப்பாக உள்ளது

                                    • வன்னி மைந்தன் –
                                      Posted in உலக செய்திகள்

                                      மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி

                                      மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி- அடுத்து என்ன

                                      மாலி நாட்டில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்


                                      இவ்வேளை மாலியில் சமாதான பணிகளில் ஈடுபட்டிருந்த, ஐக்கிய நாடுகள் தூதரக பணியாளர்கள்பயணித்த வாகனம் மீது திடீரென இந்த வன்முறை தூண்டும் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                                      மாலியில் ஐநா பணியாளர்கள் பயணித்த வாகனம் மீது நடத்த பட குண்டு தாக்குதலில்

                                      சிக்கி இருவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

                                      நாடுகளில் நடை போரின் ,யுத்த வலய பகுதிகளில் சமாதான தூதர்களாக பயணிக்கும்

                                      இவர்கள் ,இரட்டை உளவாளிகளாக செயல் பாட்டு வந்தமை ஈழ தமிழர் போராட்த்தில் அப்பட்டமாக இடம்பெற்றுள்ளது

                                      அவ்விதம் இவர்கள் கறுப்பு கண்ணாடி மாட்டிய உளவாளிகள் என வர்ணித்த , போராளி குழுக்களினால் கொலை செய்ய பட்டுள்ளனர்

                                      எதிரி எமக்கு நண்பன் என கூறும் போராளி குழு ,இவர்களே எமது, பரம எதிரிகள் என கூறி வருகினறனர்


                                      ,புரையோடி போயுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய அரசியல் வாதிகள் ,தமது சட்டை பைகளை நிறைத்த வண்ணம்

                                      உள்ளதை ,ஆசிய நாடுக்ளின் அரசியல் சாபக்கேடுகாட்டி நிற்கிறது

                                      மாலியில் வெடித்து சிதறும் குண்டுகளினால் அப்பாவி மக்களும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,முடிவில்லா தொடரும் இந்த போருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எவ்விதம் தீர்வு காணலாம் என்பதே கேள்வியாக உள்ளது

                                      மாலியில் இதற்கு முன்னரும் வெடித்த குண்டு தாக்குதலில் ,ஐநா பணியாளார்கள் இவ்விதம் படுகொலை செய்ய பட்டனர் ,

                                      அதனை தொடர்ந்து , அந்த நாட்டில் இருந்து ஐநா வெளியேற போவதாக அறிவித்த நிலையில் மீளவும் இந்த தாக்குதல்கள்
                                      இடம்பெற்றுள்ளது

                                      ஆளும் மாலிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் நலன்

                                      சார்ந்து செயல் படும் இந்த பணியாளர்கள் ,சமாதன வேடம் இட்டவாறு வெள்ளை

                                      வண்டிகளில் பயணித்து சொகுசு வாழ்ககை அனுபவித்து வருகினறனர்

                                      மேற்படி குண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .