Posted in இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு கொரனோ ஊசி -செலுத்துதல் ஆரம்பம்

யாழில் மக்களுக்கு கொரனோ ஊசி -செலுத்துதல் ஆரம்பம்

யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார

சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு அரசினால் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் வடக்கு மாகாண ஆளுநரால்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது

    Posted in Uncategorized

    குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி video

    குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி video

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும்

    ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

    சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    தினமும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

    ஷிவானி

    அந்தவகையில் தற்போது, நடிகை ஷிவானி, ரீமிக்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘லாக்டவுன்ல ரொம்ப போர்

    அடிக்குது, சரி நம்மளும் ஒரு ரீல்ஸ போடுவோம்’ என அந்த பதிவில் ஷிவானி குறிப்பிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த ரீல்ஸ் வீடியோவை, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக ஷிவானி தெரிவித்துள்ளார்

    https://www.instagram.com/p/CPc-vXinmtC/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
      Posted in சினிமா

      சர்ச்சையில் சிக்கிய பிரபல ஆபாச பட நடிகை

      சர்ச்சையில் சிக்கிய பிரபல ஆபாச பட நடிகை

      சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். வலைத்தளங்களில் அடிக்கடி அறைகுறை உடையில் ஆபாச படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

      சமூக வலைத்தளத்தில் இவரை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதன் மூலம் தனது வலைத்தள பக்கங்களிலும் வணிக பொருட்களை அறிமுகம் செய்து பணம் சம்பாதிக்கிறா

      ர். கிம்கர்தாஷியான் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்து 400 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

      கிம் கர்தாஷியான்

      இந்த நிலையில் கிம்கர்தாஷியான் காதில் வடமொழி ஓம் முத்திரை டிசைன் கம்மல் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

      இந்துக்கள் புனிதமாக கருதும் ஓம் முத்திரையை கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பலரும் அவருக்கு கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

        கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

        இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

        திருமலை மாவாட்டத்தின் பாராளும்னற உறுப்பினராக விளங்கி வரும் Kapila Nuwan Athukorala பாதிக்க பட்டுள்ளார்

        இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் ,இவர் கோத்தபாயவின் இனவெறி கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா VIDEO

          நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா

          பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

          சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

          இந்நிலையில் தனது செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

          செல்லமாக தான் வளர்த்து வரும் நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கேக் வெட்டி, அதை நாய்க்கு ஊட்டு

          ம் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

          https://www.instagram.com/p/CPalGusDuEJ/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் பயணத்தடை – எப்போது நீக்கம் – இராணுவ தளபதி விளக்கம்

            இலங்கையில் பயணத்தடை – எப்போது நீக்கம் – இராணுவ தளபதி விளக்கம்

            இலங்கையில் விதிக்க பட்டுள்ள பயணத் தடையானது நான்காம் திகதி விலக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

            ,ஆனல் நோயின் தாக்குதல் மரணங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில் இந்த தடை மேலும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

              தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

              தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

              இலங்கை தம்புள்ள பகுதியில் ஒன்றரை வயது சிசு ஒன்று வீட்டின் முன் பகுதியில் நீர் நிரப்பி வைக்க பட்ட பானைக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது

              மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,இது விபத்தா ,கொலையா என்ற நிலையில் விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                Posted in Uncategorized

                ஒரே நாளில் 39 பேர் கொரனோவால் மரணம்

                ஒரே நாளில் 39 பேர் கொரனோவால் மரணம்

                இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
                கடந்த தினம் மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர்

                இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,364 பேர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  குண்டுகளுடன் முன்னாள் போராளி யாழில் கைதாம்

                  குண்டுகளுடன் முன்னாள் போராளி யாழில் கைதாம்

                  யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் சிங்கள அரச

                  பயங்கரவாத இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார்

                  இவரிடம் இருந்து கிளைமோர் குண்டுகள் மீட்க பட்டுள்ளது , விடுதலை புலிகளை மீள்

                  உருவாக்கம்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் மீள கைது செய்ய பட்டுள்ளார்

                  அவர்களே குண்டை வைப்பார்களாம் ,பின்னர் புலி என கூறி பிடிப்பாங்களாம் ,இவை ஆளும்

                  ஆட்சியில் இலங்கையில் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

                    ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

                    இலங்கை அம்பாறை கல்லிரைச்சல் ஆற்றுக்குள் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்க பட்டுள்ளது

                    ,இவ்வாறு மீட்க பட்ட அந்த துப்பாக்கி தற்போது இயங்கு நிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
                    வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி இவை என தெரிவிக்க படுகிறது

                    இதுவரை இந்த ஆயுத மீட்பு தொடர்பில் எவரும் கைது செய்ய படவில்லை

                      Posted in இலங்கை செய்திகள்

                      கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

                      கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

                      இலங்கையில் விதிக்க பட்டுள்ள நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                      நாள் தோறும் இவ்வாறு கைது செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in சினிமா

                        பாலியல் கொடுமை நடக்கவில்லை-கவுரி கிஷன் கோபம்

                        பாலியல் கொடுமை நடக்கவில்லை-கவுரி கிஷன் கோபம்

                        பள்ளியில் தனக்கு பாலியல் கொடுமை நடக்கவில்லை என்றும், தனது நண்பர்களுக்கு நடந்த விஷயங்களை தான் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாகவும் நடிகை கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.

                        இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் – கவுரி கிஷன் கோபம்
                        கவுரி கிஷன்


                        சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பின் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                        இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

                        96, மாஸ்டர், கர்ணன் பட நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ – மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது,

                        மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவித்ததாக தெரிவித்திருந்தார்.

                        கவுரி கிஷன்

                        நண்பர்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்த இடத்தில், தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் தவறாகக் குறிப்பிட்டிருப்பதாக, அதனை தற்போது

                        தெளிவுப்படுத்தியிருக்கிறார் கவுரி. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ”நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீதியான எந்த

                        துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்

                          Posted in சினிமா

                          ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறி உள்ளது – தமன்னா

                          ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறி உள்ளது – தமன்னா

                          தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

                          சமீபத்தில் தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் வெளியானது. இந்த நிலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில், “

                          தற்போது சினிமாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் மாறி உள்ளது.

                          சினிமா பற்றிய அவர்களின் பார்வையும் இனிமேல் மாறும். இந்த மாற்றங்கள் காரணமாக நட்சத்திர அந்தஸ்தும் மாற தொடங்கி உள்ளது.

                          தனி நடிகருக்காக ரசிகர் யாரும் படங்களை பார்க்க மாட்டார்கள். படத்தின் கதை வலுவாக உள்ளதா என்பதை வைத்தே படம் பார்க்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் ஒரு நடிகருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு கிடைப்பது கஷ்டமான விஷயம்.

                          தமன்னா

                          இந்த நிலையில் எனக்கும் ரசிகர் கூட்டம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கிரைம், திரில்லர்

                          கதைகளில் நடிக்காத குறையை நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் போக்கியது. அதில் நான் நடித்த கதாபாத்திரம் பெரிய சவாலாக இருந்தது’’ என்றார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள். முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம்-மனோ

                            இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள். முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம்

                            -மனோ கணேசன்

                            இந்த நாட்டில், சிங்கள-பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை,

                            பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என தமிழ் முற்போக்கு

                            கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார்.

                            தனது டுவீடர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ எம்பி இதுபற்றி மேலும் கூரியுள்ளதாவது,

                            உங்கள் நண்பர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு கூட நீங்கள் பிரதமர் பதவியை தர மறுத்தீர்கள். ஜேவிபி மட்டுமே அவருக்கு பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது.

                            இலங்கை, இயற்கை வளமில்லாத வள-ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை

                            இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவ பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான “இல்லை”களின் உண்மை.

                            கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம்.

                            இப்போது இந்நாடு, இலங்கை தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது என தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது. எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன்.

                            இன்று இந்நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950 களில், இந்நாட்டின் வெளிநாட்டு செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு

                            அடுத்து அதிகம் இருந்தது. கடன் கொடுக்க கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கிறோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருந்தமைதான்.

                            தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள். சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிபைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா வியட்னாம் ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம்.

                            நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டி பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாக கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?

                            இப்போது தென்னாசியாவை பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972ல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்தி போகிறது. இது உங்களுக்கு தெரியுமா?

                            இன முரண்பாடுகள், யுத்தம், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள், பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டு செலவாணி பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகிறேன் என்று

                            சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த

                            உங்களது போலி தேசியவாதம்தான் என்பதை உணருங்கள். முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

                            அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

                            தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

                            சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                            கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

                            பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

                            இதில் ஈழத்தில் சீனாவின் காலப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் அமர்வில், தமிழர் தேசத்தின் இறையை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

                            தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மத்தினை பெறாது எந்தவொரு அந்நிய

                            சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

                            இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

                            வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

                            பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

                            கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

                            அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

                            அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.


                            https://youtu.be/ZL0zrrJIX30
                            தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

                            சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                            கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

                            பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

                            இதில் ஈழத்தில் சீனாவின் கால்ப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் விவாதிக்கப்பட்ட இந்த அமர்வில், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

                            தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மதத்தினை பெறாது நிலத்தில் மட்டுமல்ல,

                            நிலத்தை அண்டிய கடலிலும் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

                            இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

                            வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

                            பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

                            கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

                            அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

                            அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.

                            Posted in Uncategorized

                            கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

                            கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

                            பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய தீப்பரவலினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அகற்றும் செயற்பாடுகள் இராணுவ

                            அவசர உதவிக் குழு குண்டு செயலிழக்கும் பிரிவு ட்ரோன் கண்காணிப்பு குழுவின் உதவியுடன் சுமார் 300 படையினரின் பங்கு பற்றலுடன் நீர்கொழும்பு தொடக்கம் பொருதொட்ட வரையான 06

                            கிலோ மீற்றர் கடற்கரை பகுதியில் இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பொருட்கள் கொழும்பு துரைமுகப்பகுதியில் தீபற்றி எரியும் சிப் எக்ஸபிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து கரையொதுங்கியவை.

                            இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

                            தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்புக்கு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

                            இந்நிலையில் கப்பலின் பணியாளர்கள் கப்பலை கைவிட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர்.

                            அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

                            அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு பயணத் தடை காலத்தில் மக்களின் அச்சங்களை தனிப்பதற்கும் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

                            வடமேற்கு கரையோர பகுதியில் இரசாயன நச்சுத் தன்மை கொண்ட கப்பல் கொள்கலன்களில் இருந்து மிதக்கும் பொருட்களை பொதுமக்கள் சேகரிப்பதாக பொலிஸார்

                            உறுதிப்படுத்தியிருந்ததோடு அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுமாறு இராணுவ தலைமையகத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் கப்பலின் எச்சங்களை சேகரிக்க கூடுவோரை

                            கலைக்கும் பணிகளில் பொலிஸாராருக்கு உதவிகளை வழங்குவதற்காக படையினர் குறித்த பகுதியில் அமர்த்தப்பட்டனர்.

                            அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

                            அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு கொவிட்19 பயணத் தடை காலத்தில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரிற்கு

                            ஒத்துழைப்பு வழங்குவதுடன் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

                            இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

                            தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்பு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

                            இந்நிலையில் கப்பல் பணியாளர்களில் இருவர் காயங்களுடனும் ஏனையவர்கள் பாதுகாப்பாகவும் மீட்பதற்கு விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

                            மேற்படி தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ

                            செனரத் யாப்பா 141 பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கைக்கு நிதியை அள்ளி வழங்கும் உலக வங்கி

                            இலங்கைக்கு நிதியை அள்ளி வழங்கும் உலக வங்கி

                            இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள உலக வங்கியின்

                            விசேட பிரதிநிதிகள் குழு மே மாதம் 17ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரை நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள் அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

                            மேலும், 2019ஆம் ஆண்டு இலங்கையில் 50 வைத்தியசாலைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியினால் செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

                            இத்திட்டத்தினூடாக, வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் நோய் வாய்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான பாதிப்பை குறைப்பதற்காக தமது

                            வைத்தியசாலை பிரிவிலுள்ள பிரதேச மக்களை பதிவு செய்து, அவர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் நோய்களை தாமதமின்றி அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் உள்ளிட்ட சமூக அளவிலான சேவைகள் மக்கள் மத்தியில் செயல்படுத்தப்பட்டன.

                            அத்துடன், இச் செயற்திட்டமானது 2020 ஆம் ஆண்டு 150 வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

                            இந்த 150 வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக குறித்த கணிப்பீட்டின் படி கண்காணிக்கப்படும்.

                            இதன்படி உலக வங்கியும், இலங்கை அரசும் உடன்பட்டதற்கமைய உலக வங்கிக்கு அறிக்கை வழங்கிய பின்னர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

                            இவ்வாறு வழங்கப்படும் ஒதுக்கீடானது 2020ஆம் ஆண்டுக்குறியதாகும், என்று வைத்தியர் ஜெயசுந்தர பண்டார மேலும் தெரிவித்தார்.

                              Posted in Uncategorized

                              அதிக விலையில் பொருட்கள் விற்றல் நடவடிக்கை

                              அதிக விலையில் பொருட்கள் விற்றல் நடவடிக்கை

                              இலங்கையில் நிகழ்காலத்தில் விதிக்க பட்டுள்ள பயன்கட்டுப்பாடுகள் மற்றும் தனிமை படுத்தலை

                              அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்து வந்தால் அவர்கள்

                              மீது நடவடிவக்கை மேற் கொள்ள படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

                              மேலும் இவ்விதம் விலை அதிகரித்து விற்பனை செய்தால் பொலிசாருக்கு தெரிவிக்கலாம் என சுட்டி தி கட்டட பட்டுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                கோர புயலால் 18 வீடுகள் சேதம்

                                கோர புயலால் 18 வீடுகள் சேதம்

                                இலங்கையில் வீசிய கோர புயல் காரணமாக இலங்கை திருகோணமலையில் பதினெட்டு வீடுகள்

                                சேதமடைந்துள்ளன

                                மேலும் பயன் தரும் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன ,பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த

                                முகாமைத்துவ அமைச்சு முயன்று வருகிறது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கொரனோ விதிகளை மீறிய 829 பேர் கைது

                                  கொரனோ விதிகளை மீறிய 829 பேர் கைது

                                  இலங்கையில்தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 829 பேர் கைது செய்ய

                                  பட்டுள்ளனர் ,இதுவரை கைதானவர்களில் கடந்த தினம் கைது செய்ய பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

                                  தொடர்ந்து உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது