Author: நலன் விரும்பி
மாணவர்களுக்கு பஸ் சேவை – அசத்தும் கோட்டா
மாணவர்களுக்கு பஸ் சேவை – அசத்தும் கோட்டா
தற்போது நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மேலதிக சிசுசரிய பேருந்துகளை ஈடுபடுத்துமாறு
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
சிசு சரிய பேருந்துகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக மேலும் பல பேருந்துகள் திங்கட்கிழமை
முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
திருமலையில் ரவுடிகள் அட்டகாசம் – லொறி ,கடைகள் எரிப்பு
திருமலையில் ரவுடிகள் அட்டகாசம் – லொறி ,கடைகள் எரிப்பு
திருகோணமலை – கந்தளாய், பளுகஸ்வெவ சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்
வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளதோடு, சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ள சம்பவத்தால்
அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றிருந்த நிலையில், வாள்வெட்டுக்கு இலக்கான நபர் பலத்த
காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அங்கிருந்த லொறி, பெட்டிகடை ஒன்று தீவைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன்
தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து பொலிஸார் மேலுதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மகன் இறந்து நான்கு நாளில் தாய் மரணம்
மகன் இறந்து நான்கு நாளில் தாய் மரணம்
மாரடைப்பு காரணமாக, மகன் இறந்து நான்கு நாள்களில் அவரது தாய் உயிரிழந்த சம்பவம்
மாத்தளை- பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான கிர்ஷாந்தனும் அவரது தாயாரான 59 வயதான பொன்செல்வி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனது இறப்பையடுத்து, குறித்த தாய் திடீரென நோய்வாய்ப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மாத்தளை பிரதேச இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானவர் என்றும்
பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் மற்றும் மகனது இறுதிக்கிரியைகள் இன்று மாத்தளை- வாவன்னாவத்த பொது மையானத்தில் இடம்பெறவுள்ளது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – கூவும் இலங்கை
எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – கூவும் இலங்கை
இலங்கையில் இந்த வரும் இறுதி வரைக்குமான எரிபொருள் இருப்பில் உள்ளதாகவும் அதனால்
அதற்கு தட்டு பாடு ஏற்படாது என ஆளும் அரசு தெரிவித்துள்ளது
கோட்டா ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் நாட்டில், எரிபொருள் விலையும் ,அதற்கான தட்டுப்பாடும்
நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது
விபச்சாத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது
விபச்சாத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது
இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு இளம் பெண்கள்
காவல்துரையினரால கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளனர் .போலீசாருக்கு
கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
14 பிக்குகளுக்கு கொரனோ
14 பிக்குகளுக்கு கொரனோ
இலங்கையில் ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில்
பகுதியில் தங்கி பயின்று வரும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக
சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்
நாட்டில் மேலும் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
நகை கொள்ளையார் சுமந்திரன் – பாராளுமன்றில் டக்கிளஸ் செம்பு தூக்கி கூவல் – வீடியோ
நகை கொள்ளையார் சுமந்திரன் – பாராளுமன்றில் டக்கிளஸ் செம்பு தூக்கி கூவல் – வீடியோ
இலங்கை பாராளுமன்றில் சுமந்திரன் முள்ளி வாய்க்காலில் இறந்த தமிழர் உடல்களில் இருந்து
நகைகளை திருடி வந்தவர் என டக்கிளஸ் கூலி கும்பல் தலைவன் ஒருவர் பாராளுமனற
உறுப்பினர் என கூறிய படி சிறிதரன் எம்பியுடன் மோதினார்
அவரை கீழ்த்தரமான வார்த்தைகள் ஊடாக திட்டுவதை இங்கே காணலாம்
இவன் எல்லாம் ஒரு எம்பி தூ ,உங்களை போட்டு தள்ள பிரபாகரன் மீள் வரணுண்டா
click here video
பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை
பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை
பரந்தன் பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து வசித்து வந்த வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு
காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவரை கொலை செய்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை
போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தமிழர் பகுதிகளில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து காணப்படுகின்றமை
குறிப்பிட தக்கது
என் படத்தில் அது இல்லை – பிரபு தேவா
என் படத்தில் அது இல்லை – பிரபு தேவா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை – பிரபு தேவா
பிரபு தேவா
பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேள்’. ஹரிகுமார் இயக்கியுள்ள
இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் குறித்து பிரபுதேவா கூறும்போது, ‘இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை இப்படத்திற்கு தந்துள்ளார்.
ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன்
திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால்,
இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன்.
பிரபுதேவா
நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குனர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார்.
ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார்.
அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்’ என்றார்.
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றால் தடை
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றால் தடை
வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய வருடந்தோறும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி துயிலுமில்லங்களில்
தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு ஆண்டு தோறும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு கடந்த 2009 ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்ரிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2018 ம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.
இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR 868/21 வழக்கினூடாக முல்லைத்தீவு பொலிஸ் பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன், சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா (கரன்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்), சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் – விஷால்
தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் – விஷால்
நடிகர் புனித் ராஜ்குமார் நடத்திய மைசூரு சக்திதாமா இல்ல குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
2 நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் – விஷால்
விஷால்
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு
புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:-
நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2 நாட்கள் எனக்கு தூக்கம் வராமல்
கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன்.
வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்.
விஷால்
விஷால்
இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன். புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை. அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளா
ர். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன்.
இவ்வாறு விஷால் பேசினார்.
சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், சூர்யாவின் வீட்டுக்கு தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி – சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
சூர்யா
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த
வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதன்பேரில் தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர்
சூர்யாவின் வீட்டுக்கு நேற்று இரவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
சூர்யா
சூர்யாவின் வீடு
சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் 2 போலீசார் பாதுகாப்பு பணியில்
இருப்பார்கள். அவர் வெளியில் செல்லும் போது அந்த போலீசார் உடன் செல்வார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
பனாமுரே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனாமுரே பொலிஸ் சிறைக்கூண்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதி மக்கள்
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்ப தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட
பனாமுரே, வெலிபோத யாய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை
ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து இன்று (17) காலை பனாமுரே பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய
பிரதேச மக்கள், இந்த மரணத்திற்கு பொலிஸாரே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது
முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயித்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே, காத்தான்குடி 4ஆம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரை அடையாளம் கண்டுகொண்ட பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் அந்நபரை, சம்பவதினமான நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களுக்கான பூஸ்டர் என்ற 3 ஆவது கொரோனா
தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இன்று (17) ஆரம்பமாகிறது.
இரண்டாவது தடுப்பூசியை ஏற்றி 3 மாதங்கள் பூர்த்தியடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
இதுவரை பத்து இலட்சம் பாடசாலைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும்
பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 480 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
ஏற்றப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கைகளை ஒருசில நாடுகளே
ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கக் கிடைத்துள்ளமை இலங்கைக்கு கிடைத்த
வெற்றியாகும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 நவம்பர்17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையை அண்டி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 18ஆம் திகதியளவில்
தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில்
பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய
சாத்தியம் காணப்படுகின்றது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின்
வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது
கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி
புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இலங்கையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் தலைவிரித்தாடிய
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முஸ்லீம்கள் உதவினர் என பகீரங்கமாக
முஸ்லீம் கூலியும் சிங்கள அடிமையுமான ரிச்சர்டு பதியுதீன் பாரளுமன்றில் கூவியுள்ளார்
இவரது இந்த பேச்சு ஒட்டு மொத்த தமிழர்களையும் கொதிப்புற செய்துள்ளது ,தமிழர் என பேசிய
படி தமிழர்களை காட்டி கொடுத்து
வேட்டையாடிய எட்டப்பர்களுக்கு அதே சிங்களவன் ஆட்சியில் சிறையில் அடைத்து போத்தலில்
மூத்திரம்
கழித்திட செய்தது சிறந்த தண்டனை தான் ,வாழ்க கோட்டா என இப்போது கோஷம் போடுங்கள் ரிச்சார்ட்
மகிந்த கோட்டாவால் ஓரங்க கட்ட பட்டுள்ளார் – ரிச்சர்டு
மகிந்த கோட்டாவால் ஓரங்க கட்ட பட்டுள்ளார் – ரிச்சர்டு
இலங்கையில் தமிழர்களை இல்லா தொழித்து அதன் தீவிர வேட்டையில் ஈடுபட்டவர் முசுலிம்
ரிச்சார்டு ஆவர் ,இவர் ஒரு சண்டியர் ,அவரை சிறையில் கோட்டா அடைத்தார் ,அதனால்
சீற்றமுற்ற இவர் மகிந்த நல்லவர் எனவும் அவர் கொட்ட ஆட்சியில் ஓரணிக்கட்ட பட்டுள்ளார் என
கேள்வி எழுப்பியுள்ளார்
அந்த நடிகருடன் ஜோடி சேர மறுக்கும் நடிகை
அந்த நடிகருடன் ஜோடி சேர மறுக்கும் நடிகை
அதிக சம்பளம் வாங்கி வரும் பெரிய நடிகை ஒருவர், தனக்கு ஜோடியாக சின்ன நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.
சின்ன நடிகருடன் ஜோடி சேர மறுக்கும் நடிகை
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்களா
ம். இதில் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய நம்பர் நடிகை கதாநாயகியாக நடிக்கிறாராம்.
இவருக்கு கணவர் வேடத்தில் நடிக்க சின்ன நடிகர் ஒருவரை தேர்வு செய்தார்களாம்.
இதனால் கோபமடைந்த நடிகை, தனக்கு ஜோடியாக சின்ன நடிகரை நடிக்க வைக்கக் கூடாது என
படத்தின் இயக்குனரிடம் சண்டை போட்டு இருக்கிறாராம். முன்னணி நடிகர்களுடன் மட்டுமே
ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை, சிறிய நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுப்பதே அதற்குக் காரணமாம்.
வாய்ப்புகளை இழக்கும் நடிகை
வாய்ப்புகளை இழக்கும் நடிகை
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஒருவர், தற்போது பட வாய்ப்புகளை இழந்து வருகிறாராம்.
பட வாய்ப்புகளை இழக்கும் நடிகை
கோலிவுட்டில் தல, தளபதி போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகை என்ற
அந்தஸ்தை பெற்ற ஸ்வீட் கடை பெயர் கொண்ட நடிகை, திருமணத்துக்கு பின்னரும் படங்களில்
பிசியாக நடித்து வந்தாராம். அந்த நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம்.
இதனால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதாம். அந்த நடிகைக்கு பட
வாய்ப்புகள் ஒவ்வொன்றாக நழுவி வருகிறது. தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும்
படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க
படக்குழு முயற்சித்து வருகிறார்களாம்.













