Posted in சினிமா

படப்பிடிப்பில் விஷால் காயம்

படப்பிடிப்பில் விஷால் காயம்

வீரமே வாகைச்சூடும் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், தற்போது லத்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் காயம்… சிகிச்சைக்கு சென்ற விஷால்
விஷால்


விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகைச்சூடும் திரைப்படம் வெளியானது. இப்படத்தை அடுத்து லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் இடம் பெறும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத்தில் நடந்தது. கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர். அடியாட்களுடன் மோதிக் கொண்டு குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் காங்ரீட் சுவற்றில் மோதி விஷாலுக்கு கையில் அடிப்பட்டது.

விஷால்

சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்ந்தார் விஷால். கை வலியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு மேலும்

படப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனது. இதனால், நடிகர் விஷால் சிகிச்சைக்காக கேரளா சென்றிருக்கிறார். லத்தி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் மார்ச் மாதம் தொடரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    Posted in சினிமா

    ரசிகர்களை ஏமாற்றிய விஷால்

    ரசிகர்களை ஏமாற்றிய விஷால்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்.

    ரசிகர்களை ஏமாற்றிய விஷால்
    விஷால்


    விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில்

    விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

    நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின்

    படப்பிடிப்பு முடிந்து ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இப்படம் இன்று வெளியாகவில்லை.

    விஷால்

    கொரோனா ஊரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியாகவில்லை. இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

      Posted in சினிமா

      விஷாலுக்கு அபராதம்… நீதிபதி எச்சரிக்கை

      விஷாலுக்கு அபராதம்… நீதிபதி எச்சரிக்கை

      முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

      நடிகர் விஷாலுக்கு அபராதம்… நீதிபதி எச்சரிக்கை
      விஷால்
      தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் ரூ.1 கோடி வரையில் சேவை வரி செலுத்தவில்லை என அவர்மீது ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திரைப்பட

      தயாரிப்பாளராகவும் இருந்து வரும் விஷாலின் நிறுவனம் மீதான சேவை வரி விவகாரத்திலேயே

      இந்த புகார் கூறப்பட்டு இருந்தது. நடிகர் விஷாலுக்கு எதிராக பலமுறை சம்மன் அனுப்பி உள்ளனர் சேவை வரித்துறையின் சென்னை மண்டல அதிகாரிகள்.

      கடந்த 2016ம் ஆண்டில் இருந்து 2018 வரையில் சுமார் 10 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இருப்பினும் விஷால் நேரில் ஆஜராகி தன்மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம்

      அளிக்கவில்லை. வழக்கு இதையடுத்து விஷால் மீதான குற்றச்சாட்டுகளை தெரிவித்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரக்கு மற்றும் சேவை வரித்துறை

      அதிகாரிகள் எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

      எனவே குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர அவசியம் இல்லை என வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி கூறியதாவது ரூ.500 அபராதம் சேவை வரி அதிகாரிகள் 10

      முறை சம்மன் அனுப்பியும் விஷால் வேண்டும் என்றே ஆஜராகாமல் விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது.

      வழக்கு தொடர்ந்த பிறகே சேவை வரி தொடர்பான விவரங்களை விஷால் அதிகாரிகளிடம்

      தாக்கல் செய்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டின் மீதான தன்மை குறைவாகவே உள்ளதால்

      வெறும் ரூ.500 அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
      இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

        Posted in சினிமா

        தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் – விஷால்

        தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் – விஷால்

        நடிகர் புனித் ராஜ்குமார் நடத்திய மைசூரு சக்திதாமா இல்ல குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

        2 நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் – விஷால்
        விஷால்


        பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு

        புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:-

        நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2 நாட்கள் எனக்கு தூக்கம் வராமல்

        கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன்.

        வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்.

        விஷால்
        விஷால்

        இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன். புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

        அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை. அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளா

        ர். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன்.

        இவ்வாறு விஷால் பேசினார்.

          Posted in சினிமா

          சாமி கும்பிடட விஷால் – எதுக்கு தெரியுமா ..?

          சாமி கும்பிடட விஷால் – எதுக்கு தெரியுமா ..?

          தீபாவளி தினத்தில் எனிமி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தனது வேண்டுதலை நடிகர் விஷால் நிறைவேற்றி இருக்கிறார்.

          வேண்டுதலை நிறைவேற்றிய விஷால்
          விஷால்


          விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்

          . இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படக்குழுவினர் புரமோஷன் பணிகளை சென்னையில் முடித்து விட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றனர்.

          விஷால்

          இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க

          திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல

          முடியவில்லை. திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தற்போது தரிசனம் செய்து இருக்கிறார்.

            Posted in சினிமா

            புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்

            புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்

            மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

            புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்
            புனித் ராஜ்குமார், விஷால்


            மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19

            கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்த புனித், 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார்.

            இந்நிலையில், புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் தான் ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.

            புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஷால்
            புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஷால்

            மேலும் இந்நிகழ்ச்சியில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி

            செலுத்தினர். விஷால் நடித்துள்ள எனிமி படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

              Posted in Uncategorized

              ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

              ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

              நடிகர் விஷால் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கினார்.

              ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்
              ஆதரவற்ற குழந்தைகளுடன் விஷால் பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த புகைப்படம்


              தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால். இவர் கைவசம் தற்போது எனிமி, துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் உள்ளன.

              இதில் எனிமி படத்தை ஆனந்த் சங்கரும், வீரமே வாகை சூடும் படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணனும் இயக்கி உள்ளனர்.

              மேலும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நடிகர் விஷால் நடிப்பதோடு, இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார்.

              நடிகர் விஷால் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

              இந்நிலையில், நடிகர் விஷால் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கினார்.

              மேலும் குழந்தைகளோடு கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

                Posted in சினிமா

                படப்பிடிப்பில் அடிவாங்கும் விஷால்

                படப்பிடிப்பில் அடிவாங்கும் விஷால்

                தன்னுடைய 31 வது படத்தில் நடித்து வரும் நடிகர் விஷால், ஐதராபாத் படப்பிடிப்பில் ரவுடிகளிடம் அடிவாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                படப்பிடிப்பில் அடிவாங்கும் விஷால்… வைரலாகும் வீடியோ
                விஷால்
                தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளை பெற்றார்.

                இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட

                படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அங்கு விஷால் 31 படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்கள்.

                அங்கு நடைபெற்ற சண்டைக்காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகர் விஷால் ரவுடிகளிடம் அடிவாங்குவது போல் காட்சி எடுத்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                  Posted in சினிமா

                  விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை

                  விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை

                  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார்.

                  ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

                  எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க இருக்கிறார்.

                  இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம்

                  உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றார்.

                  தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக

                  டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

                  ரவீனா ரவி

                  சமீபத்தில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் ரவீனா ரவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

                  மேலும், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகாவிற்கு பின்னணி குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                  Posted in சினிமா

                  50 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் விஷால்

                  50 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் விஷால்

                  விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

                  இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.

                  எனிமி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக துபாயில் நடைபெற்று வருகிறது.

                  விஷால்

                  இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. துபாயில் நடக்கும் படப்பிடிப்பில், 50 அடி உயரத்தில் இருந்து விஷால் குதிப்பதற்கு முன்பான புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                  Home » விஷால்
                  Posted in சினிமா

                  தேர்தலில் போட்டியிடும் விஷால்

                  தேர்தலில் போட்டியிடும் விஷால்

                  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

                  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் விஷால்
                  விஷால்
                  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல், நடிகர் சங்க தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார். நடிகராக

                  இருந்தாலும் சமூக அக்கறையுடனும் சமூக சிந்தனையுடனும் சமூகத்திற்கு தேவையான நிறைய உதவிகளையும் செய்து வருகிறார்.

                  சமீபத்தில் நடந்து முடிந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட விண்ணப்பித்த போதிலும் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஷால் வருகின்ற

                  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவருடைய வட்டாரத்திலும், தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

                  விஷால்

                  விரைவில் எந்த தொகுதியில் விஷால் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                  Posted in உலக செய்திகள்

                  பிரபல கட்சியில் இணையும் விஷால்

                  பிரபல கட்சியில் இணையும் விஷால்

                  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் பிரபல கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                  பிரபல கட்சியில் இணையும் விஷால்
                  விஷால்
                  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி உள்ளது.

                  இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. பின்னணி வேலைகள் முடிவடைந்தவுடன் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

                  இப்படத்தையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இவரே இயக்கி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு

                  நவம்பர் 9 முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் பிரபல கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

                  விஷால்

                  நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம், உள்ளிட்டோர் பிஜேபியில் இணைந்து வரும் நிலையில் விஷாலும் அந்தக் கட்சியில் இணைய

                  இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், விஷாலோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                  சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷாலை அணுகி திமுகவில் இணைய வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு விஷால் சம்மதம்

                  தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஷால் திமுகவில் இணைந்தால் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.