வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை

வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
Spread the love

வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை

வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை ,மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாய்த்தர்க்கம் நீண்டதில் மோதல்

உயிரிழந்த நபருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் நீண்டதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் சந்தேக நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த தகராறு ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

சம்பவம் தொடர்பில் மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு வெட்டி படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

வோரோதம் காரணமாகவே வெட்டி படுகொலைகள் அதிகம் இடம்பெறுவதாக குற்றவியல் விசாரணை குழுக்கள் தெரிவிக்கின்றன .

அவ்வாறு தெரிவிக்கும் காவல்துறையினால் கூட இவ்வாறு இடம்பெறும் வெட்டி படுகொலை சம்பவங்களை ,தடுக்க முடியவில்லை என்ற விடயம் வெளியாகியுள்ளது .