சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு ,காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட 24 வயதுடைய நபர் ஒருரே இவ்வாறு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
குறித்த கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர மாத்தறை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியும் காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பரில் மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் கைதிகள் பாதிக்கப்பட்டதோடு, சில மரணங்களும் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசைனால் பராமரிக்க படும் சிறை சாலைகளில் ,நோயினால் பாதிக்க பட்டு மரணமாகவும் நிலையில் ,கைதிகள் நிலை உள்ளது என்ற விடயம் ,இந்த கைதி மரணத்தின் ஊடக அம்பல .பட்டுள்ளது
சிறை சாலைகள் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் அல்ல என்பதையும் ,இவ்வாறு நோய் வாய்ப்பட்டு இறந்து விடுங்கள் என்ற விடயமே, இதன் ஊடக குற்றங்களை விளைவிக்கும் நபர்களுக்கு இலங்கை சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிப்பதை இதன் ஊடாக காணமுடிகிறது .
உழவு இயந்திரம் கவிழ்ந்தது
உழவு இயந்திரம் கவிழ்ந்தது
உழவு இயந்திரம் கவிழ்ந்தது ,பல பிரதேசங்களில் இடம்பெற்ற 5 வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகள் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு பரந்தன் வீதியில்வீதி விபத்து
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பரந்தன் வீதியில் மூங்கிலாறு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இதில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்து மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் தம்பிராசபுரம், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
உழவு இயந்திரத்தில் பயணித்த 14 பேர் முல்லயாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிற்காக பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி லொறியுடன் மோதல்
இதேவேளை, நீர்கொழும்பு – திவுலப்பிட்டி வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதியதில், பலந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பிலிபிட்டிய – நோனாகம மேரி ஹல்மில்லகெட்டிய பிரதேசத்தில் லொறி ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த இருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.
தெலில்பலே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி – மைலோட் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்கம்பத்தில் மோதி விபத்து
மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குளியாபிட்டிய – நாரம்மல வீதியின் தும்மோதர பிரதேசத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் இவ்விதமான விபத்துக்களை தடுத்திட அரசும் ,அரசு இயக்கும் காவல்த்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுவிக்க பட்டுள்ளது .
ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது ,இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு, இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் குறித்த நால்வரையும் கைது செய்துள்ள குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு.
தீவிர விசாரணை
தீவிர விசாரணைக்காக சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு சந்தேக நபர்கள் நால்வரும் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு
இதனால் அந்த விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐ.பி. எல் போட்டிகள் இடம்பெறுவதால் தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று அணிகள், அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
இந்த கைதை அடுத்து மிக பெரும் தாக்குதல் ஒன்று முறியடிக்க பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது .
போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர் கைது செய்யும் நடவடிக்கையை சர்வதேச நீதிமன்றம் எடுத்திட தயாராகி வருகிறது .
பாலஸ்தீன தேசத்தின் மீது இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த நாடக அறிவித்த காலம் முதல் இன்றுவரை ,பாலஸ்தீன மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது .
இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் மனித படுகொலை
அந்த நாட்கள் முதல் இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் மனித படுகொலைக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்றன .
இஸ்ரேல் மீதும் தொடுக்க பட்ட காசா போர் படைகளின் தாக்குதல் ,இஸ்ரேல் அமெரிக்கா மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது .
சர்வதேச நீதி மன்றம்
இதனை அடுத்தே தற்போது சர்வதேச நீதி மன்றம் சர்வதேச சட்டங்களை சர்வதேச நாடுகள் மதிக்க வேண்டும் என்பதற்க்காக ,தற்போது நெதன்யாகுவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
ஆண்டுகளாக அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் பலஸ்தீன மக்கள் இந்த விடுதலைக்கு போராடும் ஹமாஸ் மூன்று தலைவர்கள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கைக்கு சர்வதேச நீதிமன்றம் தயாராகி வருகிறது .
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு என் ஈரான் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஈரானிய ஜனாதிபதியின் உலங்கு வானூர்தி விபத்து சம்பவத்தால் அதிர்ச்சியில் அரபு நாடுகள் உறைந்துள்ள .
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார வர்க்கத்தின் கரங்களும் ,அமெரிக்கா அரசிய இயைத்தின்றத்தின் ,அணுகுமுறையில் ஒளிந்திருக்கும் புலனாய்வு கட்டமைப்பும் இணைந்தே இந்த மரணத்தை ஏற்படுத்தி இருக்க கூடும் என குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன .
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்போது .உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் ஜேஜேனாதிபதி மற்றும் ,ஈரான் முக்கிய அதிகாரிகள் பலியாக காரணமாக மைய பெற்றுள்ளது என விடயம் சந்தேகமாக காணப்படுகின்றன .
உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி
இந்த உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதில் முழுமையாக அவர்களது சடலங்கள் மீட்கப்பட்ட முடியா நிலையில் ,சிதைந்த உடல்பாகங்களே மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் மேற்கு நாடுகள் சதி என அரேபிய மக்கள் குற்ற சாட்டு .
இராணுவவாகனம் மோதி யுவதி பலி
இராணுவவாகனம் மோதி யுவதி பலி
இராணுவவாகனம் மோதி யுவதி பலி ,யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை , புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் பிறந்தநாள் இன்றாகும் (திங்கட்கிழமை 20) என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாள்தோறும் வெளியாகவும் இலங்கை செய்திகளில் வாகன விபத்துக்கள் தலைப்பு செய்திகளாக வலம் வருகின்றன .
இலங்கையில் விபத்துக்கள் அதிகம் என்பதே இலங்கை தலைப்பு செய்திகள் ,மூலம் இலங்கை நாடு ஆபத்தான நாடக உள்ளதை இவை எடுத்து காட்டுகின்றன .
இந்த அவல நிலை மாற்றம் பெற்று இலங்கை வீதி போக்குவரத்திற்கு சிறந்த நாடக என்று மாற்றம் பெறும் என்பதே நமது மக்கள் வேண்டுதலாக உள்ளது .
இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
இலங்கை வருகிறார் எலோன் மஸ்க் ,தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இந்த ஆண்டு இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி விக்கிரமசிங்க
ஜனாதிபதி விக்கிரமசிங்க, காலநிலை விவகாரங்கள் தொடர்பான தனது ஆலோசகர் ருவான் விஜேவர்தனவுடன் நேற்று இந்தோனேசியாவின் பாலியில்
எலோனைச் சந்தித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
எவ்வாறாயினும், எலோனின் இலங்கை விஜயத்தின் சரியான திகதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படாததுடன் இலங்கை அரசாங்கம் எலோனின் குழுவுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை தீர்மானிக்கவுள்ளது.
“இலங்கை எவ்வாறு ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துகிறது என்பதைப் பொறுத்தே, அது முடிந்தவுடன், Starlink ஐ அறிமுகப்படுத்த எலோன் இலங்கைக்கு வருவார்.
இந்த ஆண்டின் இறுதியில் அவர் இலங்கைக்கு வருவார் என்று தற்காலிகமாக விவாதிக்கப்பட்டது” என்று தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் பில்லியனர் தலைவரும், எக்ஸ் சமூக தளத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க், ஸ்டார்லிங்க்
செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலிக்கு வந்தார்.
ஸ்டார்லிங்க் சேவையை இலங்கையில்
ஸ்டார்லிங்க் சேவையை இலங்கையில் தொடங்குவதற்கு எலோன் விண்ணப்பம் அனுப்பியிருந்ததுடன், மேலும் அந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொண்டார்.
இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான இணைய சேவை உதவிகரமாக அமையும் எனவும் ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஈரானிய ஜனாதிபதி மற்றும் முக்கிய பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ,பயணித்த உலங்கு வானூர்தி வீழ்ந்த்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா தயாரிப்பு உலங்கு வானூர்தி
அமெரிக்கா தயாரிப்பு உலங்கு வானூர்தியை என்றான் ஜனாதிபதி பயன் படுத்தியது மிக தவறான செயல் என்ற வாதம் நிலை பெற்றுள்ளது .
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வரும் இவ்வேளை இந்த அமெரிக்கா உலங்குவானூர்தி பயன் படுத்திய சம்பவம் பெரும் தவறாக பார்க்க படுகிறது .
மூன்று உலங்கு வானூர்தி
ஜனாதிபதியின் பாதுகாப்பைற்கு பயணித்த மூன்று உலங்கு வானூர்திகளில் இரண்டு திரும்பிய பொழுது ,இவர்கள் பயணித்த உலங்குவானூர்தி மட்டும் எவ்வாறு வீழ்ந்து நொறுங்கியது என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
இந்த விபத்தில் மிக பெரும் சதி உள்ளதை தெளிவாகவே காண முடிகிறது .
ஈரானிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
ஈரானிய இராணுவத்திற்குள் அல்லது அரசியலுக்குள் முக்கியகறுப்பு ஆடு ஒன்று மிக பெரும் நாசகார வேலையில் ஈடுபட்டு வருவதை இந்த சம்பவம் காண்ப்பிக்கிறது .
சிக்கிய திருட்டு கும்பல்
சிக்கிய திருட்டு கும்பல்
சிக்கிய திருட்டு கும்பல் ,பல மாதங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட கால்நடை திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட 7 பேரை போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பிலியந்தலை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் சுமார் 50 மாடுகளை இந்தக் குழுவினர் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தில் மாடு திருட்டில் ஈடுபட்டும் வேன் ஒன்று உலாவுவதாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கிடைத்த தகவலின்
அடிப்படையில் பிலியந்தலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
வேனை பொலிஸ் அதிகாரிகள் வழிமறித்தனர்.
இதன்படி மொரட்டுவை வீதியில் தெனிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான வேனை பொலிஸ் அதிகாரிகள் வழிமறித்தனர்.
இதன்போது அந்த வேனில் இருந்து 02 கைக்குண்டுகள், 15 கிராம் ஐஸ் போதைப்பொருள், மாடுகளை அறுப்பதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாள்கள், மன்னா கத்தி, பொல்லு, கயிறுகள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி குறித்த வாகனத்தில் இருந்த 05 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இராணுவ விசேட படையின் ஓய்வுபெற்ற ராணுவ சிப்பாய் ஒருவர் தலைமையில் மாடு கடத்தல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் கெஸ்பேவ, பிலியந்தலை, கஹத்துடுவ, பொரலஸ்கமுவ, மொரந்துடுவ, பண்டாரகம மற்றும் ஹிரண ஆகிய 07 பொலிஸ் பிரிவுகளில் சுமார் 50 மாடுகள் திருடப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட மாடுகள்
இவ்வாறு திருடப்பட்ட மாடுகள், வத்தளை, மாபோல மற்றும் காலி பிரதேசங்களில் உள்ள இறைச்சி கூடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கெஸ்பேவ பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, மற்றுமொரு கைக் குண்டு, 05 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பல போலி வாகன இலக்கத் தகடுகளுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ருக்கஹவில நிட்டம்புவ, பண்டாரகம வெல்மின்ன, கொழும்பன்ன மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.
சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் ,ஏப்ரல் மாதத்தில், நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் கடந்த மாதத்தில் 42 வீதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, இந்த மாதத்தில் புதிய முன்பதிவு, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த கொள்முதல் குறியீடுகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக ஒட்டுமொத்த சுட்டெண் வீழ்ச்சியடைந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டமையே இந்த பின்னடைவுக்கு
முக்கிய காரணம் எனவும், நீண்ட விடுமுறை காரணமாக விநியோகஸ்தர்கள் முன்பதிவை வழங்குவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் முன்னையதை விட ஏப்ரலில் வேகமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைத் துறையில், இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் 56.7 வீத மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் மூலம், நிதிச் சேவைகள் துணைத் துறையின் வணிக நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைந்துள்ளதுடன்,
பண்டிகைக் காலத்தின் தேவை
பண்டிகைக் காலத்தின் தேவைக்கு மத்தியில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக உப பிரிவின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சொத்து விற்பனை ஆகிய துணைத் துறைகளும் ஏப்ரல் மாதத்தில் சாதகமான முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளன.
எவ்வாறாயினும், மார்ச்ச மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததிற்கு அமைய தங்குமிடம் மற்றும்
உணவு விநியோக சேவையின் உப பிரிவானது சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார் ,ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை தூதரகத்திற்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தூதுவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளதால் தற்போது பரபரப்பாக பேசப்படும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய விவகாரம் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
ரசியாவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவத்தின் போரிட சென்றதன் பின்புலத்தில் ,இலங்கைக்கான ரஷ்ய இலங்கை தூதர் உள்ளார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த விடயம் கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மகிந்தவின் ஆட்ச்சியில் அவரது சகோதரர் உறவு காரர் ஒருவர்ரஷ்ய தூதரக இருந்து கோட்டாவுக்கு ஆதரவை வழங்கி வந்தார் என்பது குறிப்பிட தக்கது .
ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது அதிர்ச்சியில் ஈரானிய மக்கள் .
ஈரானிய நாட்டின் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது இந்த உலகுவானூர்தியில் பயணித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ,மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் ,பாதுகாப்பு ஊழியர்கள் என இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம்
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் இந்த கால பகுதியில் ,இவர் பாயனித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பல மணித்தியாலங்களாக காணாமல் போயுள்ள உலங்கு வானூர்தியை கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளன .
இவரது இந்த உலங்குவானூர்தி விபத்து மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மொசாட் உளவுத்துறை
இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையால் இவர் பயணித்த உலங்குவானூர்தி வீழ்த்த பட்டு இருக்கலாம் என்கின்ற விடயமும் கசிகிறது .
இறந்து விட்டார் என ஒரு தகவலும் ,உயிரோடு உள்ளார்கள் என ஒரு தகவலும் வெளியாகியுள்ள நிலையில் ,மிக பெரும் பர பரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
பாதுகாப்புக்கு சென்ற இரண்டு உலங்குவானூர்தி மீள களம் திரும்பியுள்ள நிலையில் ,வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி அவ்விடம் விட்டு பாதுகாப்புக்கு பயணித்த உலங்குவானூர்திகள் எவ்வாறு சென்றன என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
விபத்து
சற்றும் எதிர்பாராத இந்த விபத்து சம்பவம் உலக நாடுகள் மத்தியில் மக்கள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன .
வளர்ந்து வரும் நாடுகளில் பட்டியலில் அடக்கம் பெற்றுள்ள ஈரான் இன்றைய அரசியல் பொருளாதார,அபிவிருத்தி மற்றும் ஆயுத உற்பத்தியில் முன்னிலை பெற்றுள்ள இவ்வேளையில் , இந்த உலங்குவானூர்தி வீழ்ந்து நொருங்கிய சம்பவம் அதிர்வலைகளை .ஏற்படுத்தியுள்ளன .
பரம எதிரியின் சூழ்ச்சியால் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்து என கூறப்படுகின்ற பொழுதும் ,ஒருசாரார் இது இயற்கை விபத்து என்கின்ற ஒற்றை ,சொல்லுக்குள் யாவற்றையும் மறைத்துவிட முயல்கின்றன .
வரலாற்றியலில் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள மிக பெரும் மோசமான நிகழ்வாக இது காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
பதினெட்டாம் நாளில்
படாத பெரும்பாடுபட்டு
பிணம் தொட்டு அளைஞ்ச
பெரும்துயரைச் சுமந்துசென்று
பனங்கொட்டு நிறமுடைய
படையினர் ஆட்சிக்குள்ள
உயிர்விட்ட உடல்பிணமாய்
உள்ளுக்குள்ள கால்வைத்தோம்.
கொட்டி கொட்டியாவென ஆமி
கிட்டவரப் பயந்து, பேரூந்தில்
முட்டமுட்ட அடைஞ்சு
மூச்சுவிடேலாம அவிஞ்சு
செட்டையுரிச்ச கோழிபோல
செட்டிகுளம் போனகதை
ஐயோ!
செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
செத்திருந்தாலும் பரவாயில்ல.
ஏனம் அரக்கி அரக்கி
எலும்பு நாரிமுறிய
சாமம்வரை காத்திருந்து
சருவத்தில தண்ணியெடுத்து
ஓமம் வளர்ப்பதுபோல் உடம்பை
ஒவ்வொருக்கா ஒத்தியெடுத்த
பாவப்பட்ட எம் நிலையை
பாவில் வடிக்கேலுமோ?
காலைக் கடன்முடிக்க
காப்போத்தில் தண்ணியோட
மாலைவரை அடக்கி அடுத்த
மத்தியானம் போய்க்குந்த
ஆளைக் கண்டவுடன்
அரைகுறையா எழும்பி நாம்
அவஸ்தைப்பட்ட நிலையை
ஆரிடம் போய்ச்சொல்ல..
கியூவில உறவுகள் வந்து
கிட்டவரேலாமல் எட்டிநின்று
சூவிலுள்ள புலிபோல
சூம்பண்ணி எமைப் பாத்து
மாவில்செய்த பலகாரத்தை
மாத்தையாவிடம் அனுப்பியதை
சாவிலும் மறக்கேலுமோ?
சரித்திரம் நிறைய உண்டு.
வனாந்தர காட்டுக்குள்ள
வளைக்கப்பட்ட ரென்ருக்குள்ள
பனங்கிழங்கு அடுக்கியதுபோல்
பதினைந்து பேர் கிடந்து
சினந்து, சிரங்குவந்து
சீழ்வடிந்து சீரழிஞ்சு
இணைந்து வாழ்ந்ததை
இன்றைய சந்ததி அறியுமோ?
கொன்னைத் தமிழ் கதைப்போர்
கூர்ந்து எமைப்பார்க்க
இன்னஇவர் இயக்கமெண்டு
எங்கடையள் காட்டிக்கொடுக்க
உண்ணஏதும் தருவினமோவென்று
ஒவ்வொருநாளும் ஓடிப்பாத்து
என்னயிது வாழ்க்கையென்று
ஏதிலியாய் எத்தனை நாட்கள்.
வெய்யிலில் வாடிவதங்க
விழுப்புண் புழுப்பிடிக்க
கையினில் எதுவுமின்றி
காண்பவரைக் கடன்கேட்க
செய்ய ஏதும் வழியின்றி
செத்தபாம்பாய் சூழ்ந்திருந்ததை
சீ..சீ ..செட்டிகுளமும் மறக்காது
சீவியத்திலும் இது மறையாது❗
-பிறேமா(எழில்)-19-05-2024
ஓடும் இஸ்ரேல் படைகள்
ஓடும் இஸ்ரேல் படைகள்
ஓடும் இஸ்ரேல் படைகள் .பாலஸ்தீனம் காட தெற்கு பகுதி ஊடாக பாரிய தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் படைகளை வழிமறித்து கடும் தாக்குதல் .
ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ,இசுரேலியா அரச இராணுவத்தை எதிர்கொண்டு கடும் தாக்குதலை நடத்தின .
இஸ்ரேலிய அதிகாரிகள் பலி
இவர்கள் நாடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரிகள் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அதிகாரி தரத்திலானவர்கள் என தெரிவிக்க படுகிறது .
ரபா எல்லையூடாக மக்களை வெளியேற்றும் இனச்சுத்திகரிப்பு தாக்குதலாக இது மாற்றம் பெற்றுள்ளது .
சியோனிச அரச இராணுவத்தின் தந்திரம்
சியோனிச அரச இராணுவத்தின் தந்திரங்களை நன்கு புரிந்து கொண்ட ,ஹான்ஸ் மக்கள் விடுதலை இயக்கம் கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது .
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரஸ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் மக்கள் வாழ்விடங்கள் எரிந்த வண்னம் உள்ளன ,மேலும் ஆறு பொது மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
முன்னரங்க போர் முனையில் இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் தெற்கு ஊடாக படை நகர்வை மேற்கொண்ட இஸ்ரேல் ராணுவத்தின் தாங்கி கனரக படை பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காசா ஹமாஸ் விடுதலை போராளிகள்
பாலஸ்தீனம் காசா ஹமாஸ் விடுதலை போராளிகள் நடத்திய வீரம் சேர்ந்து ஊந்துகணை ஏவுகணை தாக்குதலில் டாங்கிகள் சிதறியது .
இதன் பொழுது டாங்கிகளை செலுத்தி சென்ற இராணுவத்தினர் மற்றும் ,அதன் கட்டளை தளபதிகள் யாவரும் பலியாகியுள்ளனர் .
கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய இராணுவம்
இவ்வாறன கால பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது .
1948 ஆண்டு நக்பா இனசுத்திகரிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் இராணுவம் நடத்தியது .
ஏழுலடசம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தமது நாட்டை விட்டு அகதிகளாக சென்றனர் .
அவ்வாறான ஒரு நிகழ்வை நடத்தவே இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் ,அதற்கு தகுந்த நெத்தியடி வைத்தியத்தைவழங்கி வருகின்றனர் .
ஹமாஸ் போர் படைகள் ,ஹிஸ்புல்லா என்பன இணைந்து கடுமையாக நடத்தி ,இஸ்ரேல் கபட நாடகத்தை முறியடித்து வருகின்றனர் .
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு ,பல முக்கிய போர் தளபாடங்கள் சேதம் .கொண்டாடும் ஹிஸ்புல்லா இராணுவம் .
இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்கு இராணுவ பகுதிகள் தொண்டராக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
ஹிஸ்புல்லா போர் படை
லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அநடத்திய பழிவாங்கும் பதிலடி தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகளுக்கு பெயரம் இழப்பு ஏற்பட்டுள்ளது .
நீட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த ப்பட்டுளள்து .
இந்த தாக்குதலின் மேற்படி சேதங்களை இஸ்ரேல் படைகளுக்கு தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளன .
உக்ரைன் ரஸ்யா போர்
இதேவேளையில் உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் ,கடந்த ரெண்டு வாரத்தில் மிக முக்கிய உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட நான்கு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக, உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது
Su ரக தாக்குதல் போர் விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் அறிவித்துள்ளன .
அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள் ,அக்கரைப்பற்றில் உள்ள 241ஆம் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தின் சிற்றுண்டிச்சாலையின் முன்னாள் .
இருக்கும் வேம்பு மரத்திலிருந்து கடந்த ஒரு வாரகாலமாக பால்போன்ற திரவம் வழிந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஆரம்பத்தில் சாதாரணமாக வெளியேற தொடங்கிய பால்போன்ற பதார்த்தம் தொடர்ந்தும் வழிந்து வருவதுடன் போத்தல்களில் சேமிக்கும் அளவிற்கும் வெளியேறி வருவதை காண முடிகின்றது.
போத்தல்களில் பால் சேமிப்பு
சில காலங்களில் சில வேம்பு மரங்களிலிருந்து இது போன்ற பால் வெளியேறும் சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட கண்ணகி அம்மனின் ஆலயங்கள்
திறக்கப்பட்டு திருக்குளிர்த்தி உற்வசங்கள் நடைபெற்றுவரும் இக்காலத்தில் இவ்வாறு பால்போன்ற திரவம் வழிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது இதனை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
வேம்பு மரத்தின் பால் சுரக்கும் காட்சி
இந்த அதியச வேம்பு மரத்தின் பால் சுரக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .
இதில் வடியும் திரவம் என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பலவித பேச்சுக்கள் ஊசலாடுகின்றன .
குறித்த வேப்ப மரத்திலிருந்து வெளியேறும் பால்போன்ற திரவம் இனிப்பாக உள்ளமையும் அப்பிரதேசத்தில் ஒரு வகை வாசம் வீசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மாணவனை தாக்கிய பொலிஸ்
மாணவனை தாக்கிய பொலிஸ்
மாணவனை தாக்கிய பொலிஸ் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவர் அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி பொலிசார் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில்,
“முச்சக்கர வண்டி ஓட்டியவர் அடிக்கவில்லை. மற்றவர்களே என்னை தாக்கினர். தற்போது அதற்காக சிகிச்சை பெறுகிறேன்” என்றார்.
பாடசாலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நாடத்திய சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நாட்டின் சட்டத்தை தமது கையிலெடுத்து ,தமது அதிகார வரைமுறையை மீறி ,அப்பாவி மாணவர்களை போலீசாரை தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவங்களை நடத்தி படுகொலை புரிதல் ,மற்றும் ,சிறையில் கைதிகளை கொலை செய்தல் என்ற குற்ற சாட்டுக்கள் போலீசார் மீது வைக்க பட்டுள்ள நிலையில் ,இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மந்திரவாதியால் பெண் படுகொலை
மந்திரவாதியால் பெண் படுகொலை
மந்திரவாதியால் பெண் படுகொலை ,பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார்.
அந்த மந்திரவாதி யின் ஆலோசனைக்கு அமைய அவரது சீடரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எஹலியகொடை, எருபொல பிரதேசத்தில் வசித்து வந்த சந்திரிகா பெரேரா என்ற 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த காலத்தில் நிறைய பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது, அதற்கு பரிகாரமாக, தொடர்ந்து சாந்திகர்மா பூஜைகள் செய்த போதும், தலை நிமிர முடியாத அளவுக்கு தன் குடும்பத்திற்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அந்த சூனியத்தை அகற்றி பாதுகாப்பைப் பெறுவதற்காக கிரியெல்ல பிரதேசத்தில் உள்ள மந்திரவாதியிடம் அண்மைக்காலமாக அவர் சென்றுள்ளார்.
லட்ச ரூபாய் செலவு
ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து அந்த சூனியத்தை போக்க முயன்றுள்ளதுடன், மந்திரவாதியால் அந்த பெண்ணுக்கு தங்கத்திலான தாயத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், தனது தாய் காணாமல் போனதாக அவரது மகன் எஹலியகொடை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த எஹலியகொடை பொலிஸார் சந்திரிகாவின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுள்ளனர்.
அங்கு ஒரு தொலைபேசி எண்ணைக் கவனித்த பொலிஸார், ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி காலை, அவரது தொலைபேசிக்கு அந்த எண்ணிலிருந்து பல அழைப்புகள் வந்துள்ளன.
மேலும், அதே எண்ணுக்கு அவர் அழைப்பு விடுத்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்
குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் கிரியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார்
கண்டறிந்து, மேலதிக தகவல்களைத் தேடிய போது, குறித்த நபர் தங்கப் பொருட்களை கொள்வனவு செய்யும் இடத்தில் தங்க தாயத்தினை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபரை கைது செய்த பொலிஸார், விசாரணையின் போது குறித்த தாயத்து காணாமல் போன பெண்ணுடையது என தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை கிரியெல்லவிற்கு அழைத்து வந்து கொன்றதாகவும், தான் மந்திரவாதியின் சீடன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சூனியத்தை அகற்றுவதாக குறித்த பெண்ணுக்கு வழங்கிய தாயத்து பலனளிக்கவில்லை என பல தடவைகள் குறித்த மந்திரவாதியை தொலைபேசியில் அழைத்து திட்டியதாகவும் சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் சந்தேக நபர் குறித்த பெண்ணிடம் “தாயத்தை பலப்படுத்தி மீண்டும் தாயத்தை போடுவதாக மந்திரவாதி கூறியுள்ளதால் கிரியெல்லவுக்கு வருமாறு கூறியுள்ளார்.
பெண்ணால் நிறைய பிரச்சனைகள்
பின்னர் ஏப்ரல் 24ஆம் திகதி காலை அந்த பெண் எஹெலியகொடையில் இருந்து கிரியெல்லக்கு வந்துள்ள நிலையில், மந்திரவாதி தனது சீடனிடம், “இந்தப் பெண்ணால் நிறைய பிரச்சனைகள் உள்ளது, ஏதாவது செய் என்று கூறியுள்ளார்.
அதன்படி, குறித்த நபர், குறித்த பெண்ணிடம் குறுக்குவழி இருப்பதாக கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்தை நெரித்து படுகொலை
கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க தாயத்தை எடுத்துக் கொண்டு, உடலை காட்டில் நிறைய கிளைகளுக்கு அடியில் மறைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், பொலிசார் குறித்த இடத்தில் இருந்து சடலத்தை மீட்டுள்ள போதும் விலங்குகளால் சடலம் சேதப்படுத்தப்பட்டதால் உடல் சிதைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மகன் சடலத்தை அடையாளம் கண்ட பின்னர் பொலிஸார் மந்திரவாதியையும் கைது செய்துள்ளனர்.
ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை ,மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்துள்ளார்.
இன்று (19) காலை 42 வயதுடைய ஒருவரே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மாலதெனிய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்த்த மூன்று நபர்கள் ஒரே இரவில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த மூவர் படுகொலைகானக காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
சடலங்களை மீட்ட போலீசார் தற்போது தொடர் கொலை குற்ற பின்புலத்தை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கையில் சமீபகாலங்களாக இவ்வாறான கொலைகள் இடம்பெற்று நாட்டை உலுப்பி வருகிறது .
இந்த மர்ம படுகொலைகளின் பின்னால் மறைந்த்துள்ள அந்த நபர்கள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியாது இலங்கை பொலிசார் திணறி வருகின்றனர்.














































