மாணவியை கொன்ற பேரூந்து
மாணவியை கொன்ற பேரூந்து ,புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு
புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதிய கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அதிகரித்து செல்லும் பேரூந்து விபத்தினால் ,மக்கள் பேருந்துகளில் பயனாகவே அச்சம் கொண்டுள்ளனர் .
சாரதிகள் பேருந்துகளை வீதி விதிமுறைகளுக்கு ஏற்ப செலுத்தி செல்லா நிலையிலேயே ,இலங்கையில் நாடு தழுவிய நிலையில் அதிக பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்ற விடயம் அம்பலமாகியுள்ளது .












