Tag: பெண்
சிறுநீர் -பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை
சிறுநீர் -பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை
பெண்களுக்கு பிரசவத்தின் போதும், கர்ப்பப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப்பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன.
இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப்பை தொடர்பான
அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப் பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத
பெண்களுக்கு உள்ளது. இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது.
மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.
ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பை, சிறுநீர்ப் பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.
இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.
இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன்,
கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம்.
இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க (Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
சிறுநீர் -பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை
சிறுநீர் கட்டுப்பாடு இல்லாத பிரச்சினைகளுக்குச் சிகிச்சை என்ன?
- சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினைக்கு (Uroflowmeter) பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப கூபகத் தசைப் பயிற்சி, மருந்துகள், அறுவைச் சிகிச்சை ஆகியவை பலன் அளிக்கும்.
- சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீர்ப் பைக்குப் பயிற்சி (Bladder Training): பெண்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழித்துவிட்டுப் புறப்படுவது வழக்கம்.
- ஏனெனில் போகும் இடத்தில் கழிப்பறை இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம். இதனால் சிறு நீர்ப்பை முழுவதும் நிரம்பாமலேயே சிறுநீரை வெளியேற்றும் பழக்கம் ஆரம்பிக்கிறது.
- இதனால் சிறிதளவு மட்டுமே சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மைக்கு சிறுநீர்ப்பை (Bladder) உட்படுகிறது.
- தொடர் பழக்கம் காரணமாகச் சிறிதளவு சிறுநீர் சேர்ந்தவுடனேயே வெளியேற்றும் தன்மையும் உருவாகி விடுகிறது. இது நல்லது அல்ல.
- குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தில் கழிப்பறை சுகாதாரமின்மையை மனத்தில் கொண்டு மாலை வரை சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள்.
- இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பு நோய்த் தொற்றும் ஏற்படும். எனவே அலுவலகத்திலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும்.
- மேலும் கழிப்பறைக்குச் செல்வதில் குறிப்பிட்ட நேரங்களை ஆரம்பம் முதலே நிர்ணயித்துக் கொள்ளுதல் நல்லது.
- கூபகத் தசைகளுக்குப் பயிற்சி (Pelvic Floor Exercises): கூபகத் தசைகளுக்கு எளிய பயிற்சிகள் கொடுத்து சிறுநீர்ப் பையின் கட்டுப்பாட்டுத் தன்மையை மேம்படுத்த முடியும். பெண்கள் எப்போது வேண்டுமானாலும் அப்பயிற்சியினை செய்யலாம்.
- தினந்தோறும் செய்ய வேண்டிய அப் பயிற்சிகளின் பலன் வெளிப்படுத்துவதற்கு சில வாரங்கள், சில மாதங்கள் ஆகலாம். பொறுமை அவசியம்.
உடைந்து வீழ்ந்த பல்கணி – உயிருக்கு போராடும் பெண்
உடைந்து வீழ்ந்த பல்கணி – உயிருக்கு போராடும் பெண்
அவுஸ்ரேலியாவில் பெண் ஒருவர் பல்கனியில் வீற்றிருந்த பொழுது அது திடிரென உடைந்து
வீழ்ந்தது ,இதன் பொழுது பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
பெண்களை விற்கும் வலைத்தளங்களுக்கு வலைவீச்சு
பெண்களை விற்கும் வலைத்தளங்களுக்கு வலைவீச்சு
பெண்கள் மற்றும் சிறுவர்களை இணையத்தின் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் இணையத்தளங்களில் உரிமையாளர்களை கைது செய்ய நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.
15 வயது சிறுமி இணையத்தில் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்தமை தெரியவந்ததைத்
தொடர்ந்து இதுபோன்ற வலைத்தளங்களைத் தேடுமாறு நீதிமன்ற உத்தரவை குறித்த பணியகம் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வு துறையின் டிஜிட்டல் பிரிவின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு
திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ற பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா ?தற்கொலையா? எனபது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ
குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ
யாழ்ப்பாணம் அரியாலை
பகுதியில் இளம் பெண் ஒருவர் பச்சிளம் குழந்தை ஒன்றை சரமாரியாக அடிக்கும் காட்சி
சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில் குறித்த பெண் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்
குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் அதனை காணொளி பிடித்து
சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
இவளை பிடித்து தூக்கில் தொங்க விட வேண்டும் என நெட்டிசன்கள் கருது எழுதுவருகின்றமை குறிப்பிட தக்கது


நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
அவுஸ்ரேலிய தலைநகர் மெல்போர்ன் பகுதியில் பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட
பெண்மணி ஒருவர் அதிக போதையில் அங்கு கலந்து கொண்ட நண்பியின் விரலை கடித்துள்ளார்
பலத்த காயமடைந்த பெண் மருத்துவனையில் அனுமதிக்க பட்டார் ,மேற்படி
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வந்த
விசாரணைகளில் இவர் சிறை தண்டனை இன்றி விடுவிக்க பட்டுள்ளார்
இளம் பெண் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை
அதிகாலை வேளை நீர்த்தேக்கத்தில் திடீரென பாய்ந்து இளம் பெண் தற்கொலை ,நடந்தது என்ன ,கண்ணீரில் குடும்பம்
இன்று காலை இலங்கை கொத்மலை நீர்த்தேக்கத்தில் 16 வயது இளம்
பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் ,உயர்தரம்
பயின்று வரும் மேற்படி மாணவியை இந்த தற்கொலையினை புரிந்துள்ளார்
நீர் தேக்கத்திற்கு சென்ற குறித்த பெண் பாய்ந்து தற் கொலை செய்வதை
அங்கு நின்ற சிலர் கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கிய
நிலையில் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
திருமணத்திற்கு முன்னர் பெண்கள் செய்யும் அந்த விடயம்
இவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக
தெரியவரவில்லை ,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
அந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்
அந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்
அழகாக தோன்ற விரும்பும் பெண்களும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க
வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.
பெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருப்பது, சுத்தம். அதிலும் குறிப்பிடத்தக்கதாக இருப்பது அந்தரங்க சுத்தம். அதனால் அழகாக தோன்ற விரும்பும் பெண்களும்,
ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.
அந்தரங்க சுத்தம் பற்றி குறிப்பிடும்போது பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. வெள்ளைப்படுதல் என்பது இயற்கையானது.
ஆரோக்கியமான கருப்பை யும், சினைப்பையும், இனப்பெருக்கத்திறனும் கொண்ட எல்லா பெண்களுக்குமே இயற்கை யாகவே உறுப்பு பகுதியில் வெள்ளைப்படுதல் தோன்றும்.
அந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்
அதுபோல் பெண்களின் இனப் பெருக்க உறுப்புகளில் நோய் எதிர்ப்புத்திறனை தருவதற்காக இயற்கை அணுக்களும் காணப்படும். வெள்ளைப்படுதலை தவறாக புரிந்துகொண்டு
தேவையற்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டுவிட்டால், அந்த நல்ல அணுக்கள் அழிந்துவிடும். அப்போது அந்த திரவம்
நிறமாற்றத்துடன் வெளிப்பட்டு வாடையும் வீசும். அதுதான் நோய் பாதிப்பின் அறிகுறியாகும்.
பாதிப்பு எதுவும் இல்லாத இயற்கையான திரவம் நிறமற்றதாக இருக்கும். முகர்ந்து பார்த்தால் அதில் இருந்து வாடை எதுவும் வீசாது. இந்த இயற்கையான வெள்ளைப் படுதல் ஏற்படும்போது சுத்தமான
நீரால் கழுவினாலே போதுமானது. உறுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கி சுத்தப்படுத்துவதும் அந்தரங்க சுத்தத்திற்கு அவசியம். கணவரோடு தாம்பத்ய தொடர்பு
வைத்துக்கொள்ளும் பெண்கள் பாலியல் உறவுக்கு முன்பும், பின்பும் தண்ணீர் பயன்படுத்தி கழுவவேண்டும். கணவன், மனைவி இருவருமே இதை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும். அந்தரங்க
சுத்தம் இல்லாத தம்பதிகளுக்கு தாம்பத்ய ஆர்வம் குறைந்துபோகும். அதனால் அவர்கள் தாய்மையடைவதும் தள்ளிப்போகும்.
அந்தரங்க சுத்தத்திற்கு உள்ளாடை பராமரிப்பும் இன்றியமையாதது. செயற்கை நூற்களால் உருவான உள்ளாடைகள் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதல்ல. கோடைகாலத்தில்
தொடை இடுக்குப்பகுதிகளில் அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வை தேங்காத அளவுக்கு உறிஞ்சி எடுக்கும்
உள்ளாடைகளையே அணிய வேண்டும். அதனை துவைத்து சூரிய ஒளிபடும் இடத்தில்தான் உலரவைக்க வேண்டும்
35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு
35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு
முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை
மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது.
35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்
35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்
முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள்
ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும்
ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது. அத்தகைய ஊட்டச்சத்துக்கள் குறித்து பார்ப்போம்.
இரும்பு சத்து: கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கோழி இறைச்சி, மீன், கீரை, பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், பயறு, தானியங்கள் உள்ளிட்டவற்றில் இரும்பு சத்து அதிகம்
நிறைந்திருக்கும். மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது உடலில் முழுமையாக இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவும்.
அயோடின்: இந்த தாது அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு தேவையான அயோடின் தாய்மார்களிடம் இருந்து கிடைக்கும். அதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும்
தாய்மார்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு அயோடின் முக்கியமானது. அதனால் கடல்
உணவுகள், முட்டை, பால், தானியங்கள் என அயோடின் நிறைந்திருக்கும் உணவு பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும்.
புரதம்: தசைகளின் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியம். வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடைய தொடங்கும். அதனை தவிர்ப்பதற்கு கோழி, மீன், பீன்ஸ், பயறு, குறைந்த கொழுப்புள்ள
தயிர், பால், பாலாடைக்கட்டிகள், நட்ஸ்கள், கொட்டைகள், முட்டை போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் புரதம் அதிகம் இருக்கிறது.
வைட்டமின் பி 12 : நரம்பு திசுகள், மூளையின் செயல்பாடு மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் பி 12 அவசியமானது. அவை அதிகம் நிறைந்த மீன், இறைச்சி, முட்டை,
பால், பால் பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும். இவை 35 வயதுக்கு பிறகு ஏற்படும் ரத்தசோகை போன்ற சிக்கல்களை போக்கவும் உதவும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி : எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்வது நல்லது. குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், பாலாடைக்கட்டி,
கொழுப்பு நிறைந்த மத்தி மீன் போன்றவை கால்சியம் நிறைந்த உணவு பொருட்கள். கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது. நேரடி சூரிய ஒளி மூலமும் பெறலாம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்: இதயம், எலும்பு மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 அவசியம். மேலும் இவை மனம், கண்கள், சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கடல்
உணவுகள், நட்ஸ்கள், ஆளி விதை, சோயா பீன் எண்ணெய், முட்டை, தயிர், ஜூஸ், பால், சோயா பானங்கள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
நார்ச்சத்து: பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவற்றை தினமும் சாப்பிட வேண்டும். வயது அதிகரிக்கும்போது ஊட்டச்சத்தின் தேவையும் அதிகரிக்கும் என்பதால் உணவு
அட்டவணை தயாரித்து அதற்கேற்ப உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றி வரலாம். அதன் மூலம் உண்ணும் உணவில் இருந்து அதிக
ஊட்டச்சத்துக்களை பெற முடியும். ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.
சைக்கோ கொலையாளிகள் அட்டகாசம் -கொன்று வீசப் பட்ட தமிழ் பெண்
சைக்கோ கொலையாளிகள் அட்டகாசம் -கொன்று வீசப் பட்ட தமிழ் பெண்
இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் 31 வயதுடைய
அழகிய இளம் குடும்ப பெண் ஒருவர் மர்ம மான முறையில் படுகொலை செய்ய பட்டு வீதியில் வீச பட்டுள்ளார் .
ஒரு பிள்ளையின தாயாரான பிரதீபா டிலக்சன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இராணுவ முகம் அருகில் இருந்து இவர் சடலம் கண்டுபிடிக்க பட்டுள்ளது ,
ஊரடங்கு வேளையில் மக்கள் நட மாட்டம் குறைந்து காணப்படும் இவ்வேளையில் இந்த அழகிய இளம் பெண் இவ்விதம் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினத்தில் மட்டும் ஐந்து தமிழர்கள் மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்
ஊரடங்கு வேளையில் ,வீதிகள் எங்கும் இராணுவம் ,காவல்துறையினர் வீற்று நிற்க ,இராணுவ முகாம் அருகில் இந்த பெண் சடலமாக மீட்க பட்டது எப்படி ..?
திரை மறைவில் நடக்கும் சைக்கோ கொலையாளிகள் இதன் மூலம் அடையாளம் காணப் படுவார்களா ..?
கூலிக்கு மக்களை கொலை செய்யும் ,இவ்வாறான குழுக்கள் கைது செய்ய படுமா ..? இவர்கள் பின்புலம் அம்பல படுத்த படுமா …?
இந்த பெண் படு கொலையை இயற்கையை மரணம் என சான்றிதழ் வழங்க பட்டுள்ளது
அப்படி என்றால் இந்த கொலைகளின் பின்னால் யார் யாரெல்லாம் தொடர்பு
பட்டுள்ளனர் என்பதனை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் ,ஒரே பாணியில் ,அடுத் தடுத்து இந்த ஐந்து கொலைகள் இடம் பெற்றுள்ளன
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் இந்த சைக்கோ கொலையாளிகள் கைது செய்ய படுவார்களா ..?
இந்த உறங்கு நிலை உண்மைகளை உடைப்பது யார் ..?
இந்த பெண் படுகொலைக்கு நீதி வழங்குவது யார் ..?தமிழ் அரசியல் காட்சிகள் பதில் என்ன ..?
- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

குடும்ப தகராறு ,விபத்து ,என கதைவசனம் எழுதி ,மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு ,கொலை மூடி மறைக்க பட்டு
வருகிறதை காண முடிகிறது ,மக்களே உசாராக இருங்கள் கூலி குழுக்கள் உங்களை பின் தொடர்கின்றன .
உங்கள் கருத்துக்களை கீழே சென்று ,கருத்து பெட்டியில் பதிவிடலாம் -இங்கே உடனே பிரசுரிக்க படும்

பட்ட பகலில் இளம் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்
பட்ட பகலில் இளம் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்
மக்கள் பார்த்திருக்க பட்ட பகல் வேளை St. Petersburg பகுதியில் காரில்
வருகை தந்த குழு ஒன்று இளம் பெண்ணை கதற கதற காரில் கடத்தில் சென்றுள்ளனர்
குறித்த பெண்ணை நபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார் ,இவருடன் ஒன்றாக வசித்து வந்த காதலி காதலனை கை விட்டு ,தப்பி ஓடி வந்து விட்டார் .
காதலியின் இந்த செயலினால் விரக்தி உற்ற காதலன் ,சம்பவம் தினம் அன்று அவரை கடத்தி செல்ல திட்டம் போட்டார் .
அதன் பிரகாரம் ,காதலி தாயுடன் வீதியால் பயணித்து கொண்டிருந்த பொழுது அவரை காரில் கடத்தி தப்பி சென்றுள்ளார்
எனினும் மக்கள் வழங்கிய புகாரின் அடைப்படையில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
ஆமா .இதுக்கு பேர் தான் காதலா ..?

நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?
நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?
அமெரிக்காவின் Bronx alleyway பகுதியில் 38 வயதுடைய இளம் பெண்
ஒருவர் சடலம் ஒன்று குப்பை மேட்டின் அருகில் வீச பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளது
இவர் படுகொலை செய்யப்பட்டு நிர்வாணமாக்க பட்ட நிலையில் சடலம் வீச பட்டுள்ளது .
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு பின்னர் படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என நம்ப படுவதால் ,அது தொடர்பான தீவிர விசாரணையை குற்ற தடுப்பு போலீசார் ஆரம்பித்துள்ளனர்
குறித்த பகுதிகளில் உள்ள கமராக்கள் ,மற்றும் மறைத்து வைக்க பட்டுள்ள
ரகசிய போலீசார் கண்காணிப்பு கமராக்கள் என்பன தற்பொழுது சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன
இதுவரை இந்த படு கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டு விட்டு மீள் இலங்கை
திரும்பிய பெண் ஒருவருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது
கொழும்பு கொட்டென பகுதியில் வசிக்கும் இந்த பெண்ணோடு பழகியவர்கள் இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்
இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்
இலங்கையில் வெளிநாட்டு கப்பலில் வருகை தந்த ஜெர்மன் நாட்டு பெண்
ஒருவர் தற்பொழுது பலியாகியுள்ளார் என இலங்கை அறிவித்துள்ளது
வைரஸ் நோயினால் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்திய
பொழுதும் இவர் மரணமாகியுள்ளார் என இலங்கை தெரிவித்துள்ளது
இலங்கையில் இதுவரை 214 பேர் பாதிக்க பட்டும் ஏழுபேர்
மரணமடைந்துள்ளது குறிப்பிட தக்கது

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது.
காசர்கோடு அருகே கும்பலா பகுதியில் இருந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்த நபர் கடந்த மாதம் முதல் வாரம் கேரளா திரும்பினார்.
அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.
அவர் மூலம் அந்த நபரின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கணவன் -மனைவி இருவரையும் பரியராம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவி இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கணவரை வீட்டுக்கு அனுப்பிய டாக்டர்கள், அவரது மனைவிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் அவரை மட்டும் ஆஸ்பத்திரியில் தங்க வைத்தனர்.
நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல உடல் நலத்துடன் 3 கிலோ எடையுடன்
காணப்பட்டது. தற்போது காயும், சேயும் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாக அவருக்கு பிரசவம் பார்த்த அரசு டாக்டர்கள்
தெரிவித்தனர். கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண் கடந்த 10-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டதால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கரூரைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர்
அல்லது உறவினர்களிடம் இருந்து நோய் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.
முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
முகத்தில் எண்ணெய் வழிவதை குறைத்து, நாள் முழுக்க பளபளப்பாக தோன்ற இந்த விசயங்களைத்தான் நீங்கள்
செய்ய வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
எத்தகைய சருமமாக இருந்தாலும் சரி, அதை காலை முதல் மாலை வரை, புத்துணர்ச்சியுடன், பளிச்சென பராமரிக்கும்
ஆர்வம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் முகத்தை அழகாக மாற்றுவது எளிது. எண்ணெய் வழியும்
பிரச்சனையை தவிர்க்க, இதோ உங்களுக்கு சில அழகு குறிப்புகள். இவை உங்களுக்கு நிச்சயமாக நல்ல பயன் தரும்:
உங்களது முகத்தில் ரொம்ப எண்ணெய் வழிந்தால், மை ஒற்றும் காகிதம் பயன்படுத்தி, அதை ஒற்றி
எடுத்துவிடுங்கள். இந்த மை ஒற்றும் காகிதம் எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. அனைத்து அழகுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் இது கிடைக்கும்.
முகத்தை நன்கு சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதால், எந்நேரமும் அதனை
பேப்பர் வைத்து துடைத்துக் கொண்டே இருக்கனும் என்பது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, முகத்தை சுத்தம்
செய்ய உதவும் பொருட்கள் நிறைய மார்க்கெட்டில் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை வாங்கி
பயன்படுத்தலாம். முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதால், முகத்தின் இறுக்கம் மறைந்து, தளர்வு ஏற்படும். இதுதவிர,
முகத்தில் உள்ள எண்ணெய்பசை, அழுக்குகள் அகன்றுவிடும். இந்த வைத்திய முறையை மிக மெதுவாகச்
செய்ய வேண்டும். கடுமையாகச் செய்தால், ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த, இலகுவான, எண்ணெய் பசையற்ற மாஸ்ச்சுரைஸரை தடவுங்கள். இதை மறந்துவிடவேண்டாம்.
பிரைமர் தடவுவதால், முகத்தின் எண்ணெய்பசை உடனடியாக உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு
மென்மையான, வெல்வெட் போன்ற முகம் கிடைக்க, இது உதவும். லேக்மி ஆலி டே கிரீம், அக்வா ஜெல்லை பிரைமராக பயன்படுத்தி, கன்ன கதுப்புகள், நெற்றி உள்ளிட்ட
பகுதிகளில் தடவுங்கள். இது நாள் முழுக்க முகம் பளபளப்புடன் இருக்க உதவும். இதுதவிர, முகத்தில் உள்ள
ஓட்டைகள், பள்ளங்கள், தழும்புகள் போன்றவற்றை, இது மறைத்து, மேக்அப்பை எடுத்துக் காட்ட உதவும்.
படுக்கை நேரத்திலும், மேக்அப் விசயத்தில் சற்று கவனம் செலுத்துவது நலம் என்றே சொல்வேன். அதாவது, நீங்கள்
தினமும் கிரீம் பயன்படுத்திவந்தால், லோஷன் வகையான பொருட்களை, படுக்கும் முன்பு, தடவிக் கொள்ளுங்கள்.
நீங்கள் லோஷன் விரும்பி எனில், ஹைட்ரேட்டிங் சீரம் பயன்படுத்தி பாருங்கள். அதேபோல, லோஷன் தடவும்
முன்பு, எங்கே தடவுகிறோம் என்பதில் கவனம் தேவை. மறந்தும்கூட மூக்கின் மீது தடவ வேண்டாம். அங்குதான் நிறைய எண்ணெய் சுரப்பிகள் உள்ளன.
மனைவி கள்ள காதால் – வெட்டி கொன்ற கணவன்
மனைவி கள்ள காதால் – வெட்டி கொன்ற கணவன்
இலங்கை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் யாழ் மருத்துவ பீட மாணவி கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டார் .
முப்பது வயதுடைய பரந்தன் இராணுவ முகாம் மருத்துவ பிரிவில் கடமையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய் இந்த
பெண்ணை நான்கு வருடங்களுக்கு முன்னர் பதிவு திருமணம் செய்து கொண்டார்
அதன் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வந்த பொழுது அங்கு வாலிபர் ஒருவருடன் காதல்
வயப்பட்ட சம்பவத்தை அறிந்த கணவன் ஆத்திரமுற்று இந்த கொலையை செய்துள்ளார் .
பண்ணை பகுதியில் இருவரும் ஒன்றாக கதைத்து கொண்டிருந்த பொழுது திடீரென தான் மறைத்து
வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவியின் கழுத்தை வெட்டி கொன்றுள்ளார் .
காயங்களுடன் கடற்கரை மேட்டில் இருந்த அவர் சுருண்டு தண்ணீருக்குள் வீழ்ந்து பலியாகியுளளார் ,இவர் பேருவளை பகுதியை சேர்ந்தவர் என கண்டறிய பட்டுள்ளது
குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர்
பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்
இலங்கையில் -பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்
இலங்கை – காலி பகுதியில் பெண் காவல்துறை ஊழியர் ஒருவரை பிரிட்டன் பெண் ஒருவர் கடித்துள்ள சுவாரசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பிரிட்டன் பெண் தங்கியிருந்த விடுதியை காவல்துறையினர் சோதனை புரிந்த போதே கணவனுடன் தங்கி இருந்த பிரிட்டன் பெண் இவ்வாறு அந்த பெண்ணின் கையை கடித்துள்ளார்
இலங்கைக்கு வருடம் தோறும் சுற்றுலா வரும் இவர்கள் விசா முடிவடைந்த நிலையில் அங்கு மேலதிகமாக தங்கி இருந்த சூழலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
பெண் காவல்துறை ஊழியரை கடித்த குற்ற சாட்டில் இப்பொழுது அவர் கைது செய்யப் பட்டுள்ளார்
சிரிக்கும் ….வாழ்வு ….!
சிரிக்கும் ….வாழ்வு ….!
சந்தன மேனி வெந்தணல் வேக
சாலையில் போகுதடி ….
சாளரம் வைத்த சட்டை மாட்டி-
சர வெடி போடுதடி-
ஆளை அள்ளும் புயலும் கிள்ள
அந்தோ நெளியுதடி ….
ஆடவர் கண்கள் மேனியில் துள்ள
அடி வாங்கியே மாயுதடி …
கூடு உடைத்து கறைவைகள் ஓட
கூடுது வீதிகளே ….
கூட்டியே அள்ளிட – பார்த்தே
கூடுது சதிகளே ….
ஏங்கி சாகும் வேருக்கின்று
ஏக்கம் புரியாது .
ஏறி பறக்கும் சீட்டுக்கின்று – இந்த
ஏக்கம் தெரியாது ….
அடி வாங்கி நொந்து
அழுகையில் தானே அவலம் புரிகிறது- இப்போ
அழுது புலம்பி என் கண்டாய்
அட வாழ்வு சிரிக்கிறது ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/02/2019






