மனைவி கள்ள காதால் – வெட்டி கொன்ற கணவன்
இலங்கை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் யாழ் மருத்துவ பீட மாணவி கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டார் .
முப்பது வயதுடைய பரந்தன் இராணுவ முகாம் மருத்துவ பிரிவில் கடமையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய் இந்த
பெண்ணை நான்கு வருடங்களுக்கு முன்னர் பதிவு திருமணம் செய்து கொண்டார்
அதன் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வந்த பொழுது அங்கு வாலிபர் ஒருவருடன் காதல்
வயப்பட்ட சம்பவத்தை அறிந்த கணவன் ஆத்திரமுற்று இந்த கொலையை செய்துள்ளார் .
பண்ணை பகுதியில் இருவரும் ஒன்றாக கதைத்து கொண்டிருந்த பொழுது திடீரென தான் மறைத்து
வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவியின் கழுத்தை வெட்டி கொன்றுள்ளார் .
காயங்களுடன் கடற்கரை மேட்டில் இருந்த அவர் சுருண்டு தண்ணீருக்குள் வீழ்ந்து பலியாகியுளளார் ,இவர் பேருவளை பகுதியை சேர்ந்தவர் என கண்டறிய பட்டுள்ளது
குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர்