Tag: இளம்
இளம் சமையல்காரர் ஒலிம்பியாட் 2026 இல் இலங்கை மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்
இளம் சமையல்காரர் ஒலிம்பியாட் 2026 இல் இலங்கை மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்
இளம் சமையல்காரர் ஒலிம்பியாட் 2026 இல் இலங்கை மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியாவில் நடைபெற்ற 12வது இளம் சமையல்காரர்
இந்தியாவில் நடைபெற்ற 12வது இளம் சமையல்காரர் ஒலிம்பியாட் (YCO) 2026 இல் இலங்கையைப்
பிரதிநிதித்துவப்படுத்திய மாணவி சமையல்காரர் ரூமிரா பியாசிறி, வெண்கலப் பதக்கத்தை வென்று இன்று (8) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மாணவர் சமையல்காரர்களுக்கான உலகின் மிகப்பெரிய உலகளாவிய சமையல் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நிகழ்வை, இந்தியாவின்
சர்வதேச ஹோட்டல் மேலாண்மை நிறுவனம், லண்டனில் உள்ள சர்வதேச விருந்தோம்பல் கவுன்சிலுடன் இணைந்து ஏற்பாடு செய்தது.
இந்த போட்டி பிப்ரவரி 1 முதல் 6 வரை இந்தியாவின் கொல்கத்தாவில் 50 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
போட்டியின் போது விரிவுரையாளர் எமேஷிகா டி சில்வா ரூமிரா
போட்டியின் போது விரிவுரையாளர் எமேஷிகா டி சில்வா ரூமிரா பியாசிரியுடன் வழிகாட்டியாகவும் வழிகாட்டியாகவும் இந்தியா வந்தார்.
அவர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 6.50 மணிக்கு புது தில்லியில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் AI-277 இல் இலங்கைக்கு வந்தனர்.
SLIIT உடன் இணைக்கப்பட்ட கொழும்பு விருந்தோம்பல் மேலாண்மை அகாடமியின் முதல்வர், நிர்வாகிகள் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவுடன்,
ரூமிரா பியசிறியின் பெற்றோர், பதக்கம் வென்றவரை விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றனர்.
பட்ட பகலில் இளம் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்
பட்ட பகலில் இளம் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்
மக்கள் பார்த்திருக்க பட்ட பகல் வேளை St. Petersburg பகுதியில் காரில்
வருகை தந்த குழு ஒன்று இளம் பெண்ணை கதற கதற காரில் கடத்தில் சென்றுள்ளனர்
குறித்த பெண்ணை நபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார் ,இவருடன் ஒன்றாக வசித்து வந்த காதலி காதலனை கை விட்டு ,தப்பி ஓடி வந்து விட்டார் .
காதலியின் இந்த செயலினால் விரக்தி உற்ற காதலன் ,சம்பவம் தினம் அன்று அவரை கடத்தி செல்ல திட்டம் போட்டார் .
அதன் பிரகாரம் ,காதலி தாயுடன் வீதியால் பயணித்து கொண்டிருந்த பொழுது அவரை காரில் கடத்தி தப்பி சென்றுள்ளார்
எனினும் மக்கள் வழங்கிய புகாரின் அடைப்படையில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
ஆமா .இதுக்கு பேர் தான் காதலா ..?

விவசாயம் செய்யும் இளம் நடிகை – வைரலாகும் வீடியோ
விவசாயம் செய்யும் இளம் நடிகை – வைரலாகும் வீடியோ
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை ஒருவர் விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயம் செய்யும் இளம் நடிகை – வைரலாகும் வீடியோ
கீர்த்தி பாண்டியன்
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில்
அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்யும் இப்படத்தில் கீர்த்தி
பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன்
சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டியபடி சென்று நிலத்தில் உழுவது
போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. “கொரோனா விடுமுறையில் சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்து விட்டேன். இது சுற்றிலும்
வேலிகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட இடம். பொது இடம் அல்ல. சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவது போன்று
ஆகாது நாங்கள் ஊரடங்கை மதிக்கிறோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.









