Tag: இலங்கை
5 பிள்ளைகளை காட்டில் விட்டு காதலனுடன் ஓடிய தாய்
5 பிள்ளைகளை காட்டில் விட்டு காதலனுடன் ஓடிய தாய்
தனது ஐந்து பிள்ளைகளையும் காட்டில் தவிக்கவிட்டுவிட்டு, முறையற்ற காதலனுடன் தாயொருவர் தலைமறைவான சம்பவம் வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
காட்டில் ஓரிடத்திலிருந்து பிள்ளைகள் அழும் சத்தம் கேட்பதாக, பொலிஸாருக்கு தகவல்
கிடைத்துள்ளது. அதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே, அந்த ஐந்து பிள்ளைகளும் மீட்கப்பட்டனர்.
அந்த பிள்ளைகள் ஐவரும் கடந்த இரண்டு நாட்களாக எவ்விதமான உணவுமின்றி இருந்துள்ளனர்
என அறியமுடிகின்றது. அந்த பிள்ளைகளில் சிறியவருக்கு 2 வயதெனவும் பெரிய பிள்ளைக்கு 12 வயதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிள்ளைகளின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர். அன்றையநாள் மதுபோதையில்
வந்திருந்த கணவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதன்போதே, தன்னுடைய ஐந்து
பிள்ளைகளையும் அழைத்துச் சென்ற 35 வயதான தாய், காட்டில் தவிக்க பிட்டுவிட்டு, முறையற்ற காதலுடன் தப்பியோடிவிட்டார்.
பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பிள்ளைகள் ஐவரும் நன்னடத்தை
நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் வரையிலும் அப்பிள்ளைகளின் பெரிய தாயாரின்
பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தன
நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்
நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை குச்சாவெளி மற்றும் ,ஈச்சிலம்பற்று பகுதிகளில் நால்வர் நீரில் மூழ்கி மரணமாகினர்
,மேற்படி மரண சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மேற்படி மரணங்கள் படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள்
ஆரம்பிக்க பட்டுள்ளன
1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை
1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை
இந்தியாவிடம் இருந்து இலங்கை 1,4 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது
இந்தியா சென்றிருந்த நீதியமைச்சர் இந்த கடன் உதவி தொகை தொடர்பில் பேசி இருந்த
நிலையில் இந்த உதவி தொகை வழங்க படுகிறது
ஆளும் கொள்ளையர்கள் ஆட்சியில் நாடு பெரும் கடன் சுமையை சுமந்து வருகிறது குறிப்பிட தக்கது
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக்
கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு இரண்டு சிறுவர்களினதும்
சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்று (03) இரவு 10.40
மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடியுள்ளனர். இதில்
இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது உயிர் தப்பிய
மற்றைய இரண்டு சிறுவர்கள் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில்
தேடியபோது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்
முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்
இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளன
மேற்படி சம்வத்தில்க் பல வீடுகள் சேதமாகின
இவ்விதம் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் வீடொன்றில் சிலிண்டர் வெடித்து சிதறியது
எனினும் சேதங்கள் இன்றி குடும்பத்தினர் தப்பித்துள்ளனர்
போதையில் தாக்குதல் – நால்வர் கைது
போதையில் தாக்குதல் – நால்வர் கைது
மல்லாவி பகுதியில் போதை அருந்திவிட்டு வீட்டின் முன்பாக நின்ற குடும்பஸ்தர் மீது நால்வர்
அடங்கியா குழு தாக்குதல் நடத்தியுள்ளது
மேற்படி தாக்குதலை நடத்திய குழுவினர் கைது செய்ய பட்டுள்ளனர் .
போதைக்கு அடிமையாகி எமது சமுதாயம் சீரழிந்து செல்வதனை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கின்றன
மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை
மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை
காணாமலாக்கிய சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14
கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.
இந்த வழக்கு நேற்று சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள்
கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன.
இவ்வழக்கில் வசந்த கரண்ணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர்
தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 8 ஆம் திகதி ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
அந்த ரிட் மனுவின் தீர்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான
விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது
பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை
பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை
பாகிஸ்தானில் சிங்களவர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரையோ உயிரோடு எரித்து கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவரது கொலையுடன் தொடர்புடைய ஐம்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கடும் தணடனை வழங்க படும் என
ஆளும் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்
35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்
35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்
இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து
வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார்.
35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்
புதுமண தம்பதியை படத்தில் காணலாம்.
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 65). இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு வந்து கூலி வேலை பார்த்தார். அப்போது இவருக்கும்
மைசூருவை சேர்ந்த அவரது அத்தை மகளான ஜெயம்மா (60) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு ஜெயம்மாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரது பெற்றோர் ஜெயம்மாவுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். சிக்கண்ணாவை
மனதில் நினைத்து கொண்டு கல்நெஞ்சுடன் வேறு வழியின்றி வேறொருவருக்கு ஜெயம்மா கழுத்தை நீட்டினார்.
ஆனால் காதலன் சிக்கண்ணா நினைவிலேயே இருந்ததால் ஜெயம்மாவால் கணவருடன் சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. சில ஆண்டுகள் கணவருடன் குடும்பம் நடத்திய ஜெயம்மா, 4 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார்.
புதுமண தம்பதியை படத்தில் காணலாம்.
ஆனால் ஜெயம்மாவின் காதலன் சிக்கண்ணவோ, திருமணம் எதுவும் செய்யாமல் ஜெயம்மாவின் நினைவிலேயே வாழ்ந்து வந்தார். இவ்வாறாக 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
இந்த நிலையில், சமீபத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் சந்தித்து உள்ளனர். அப்போது தான் சிக்கண்ணா திருமணம் செய்யாமல் இருப்பது ஜெயம்மாவுக்கும்,
ஜெயம்மா கணவரை பிரிந்தது சிக்கண்ணாவுக்கும் தெரியவந்தது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் இருவரும் கண்ணீர் சிந்தி பரஸ்பரம் விசாரித்து கொண்டனர்.
இதையடுத்து கடந்த கால நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்ட சிக்கண்ணாவும், ஜெயம்மாவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் மண்டியா மாவட்டம்
மேல்கோட்டைக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களை நண்பர்கள் வாழ்த்தினர்.
இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார்.
இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு
இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு
இலங்கையில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி
ஒருவர் பாதிக்க பட்டுள்ள்ளார் , மேலும் இந்த நோயானது பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள்
மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது
உலக நாடுகளில் இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது
புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் புலிகள் புதைத்து வைக்க பட்ட தங்கத்தை தோண்டியவர்கள்
கைது செய்ய பட்டுள்ளனர்
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது
இடம் பெற்றுள்ளது
குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது
குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது
இலங்கையில் மைத்திரி ஆட்சியில் தொடராக நடத்த பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி
பல நூறு மக்கள் பலியாகினர்
மேற்படி குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி
சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி
இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு – ஒதியமலைப் படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (02) இடம்பெற்றன. அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை, ஒதியமலையில் படுகொலைசெய்யப்பட்ட 32 அப்பாவித் தமிழர்களுடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும் எனவும் அவர் பிராத்தித்ததுடன், இப்படியான
கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி இந்த ஒதியமலைப் பகுதியிலே இடம்பெற்ற ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு எமது அஞ்சலிகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்த ஒதியமலைப்படுகொலை தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, இராணுவ உடை தரித்த இனந்தெரியாதோர் இந்த கொலைகளைச் செய்த்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாட்டிலே தன்னுடைய மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு, கொடூரமான இராணுவம் இருந்ததெனில் அது இலங்கயில்தான் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
குறிப்பாக கடந்த 1984.12.02அன்று அதிகாலை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்களை வீடுவீடாகச் சென்று, பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துவந்து 27பேரை
ஈவிரக்கமின்றி படுகொலைசெய்தது மாத்திரமின்றி, மிகுதி ஐந்து பேரை வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்களையும் மிக மோசமான முறையில் படுகொலைசெய்துள்ளார்கள்.
இவ்வாறான மிக மோசமான பல செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது சர்வதேசம் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதே எனது கேள்வியாகும்.
கடந்த காலங்களிலிருந்தே எமது தமிழ் மக்கள்மீது மிகமோசமான கொடுமைகளையும்,
சித்திரவதைகளையும் இந்த நாட்டுபடையினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வருகின்றது.
இந்த படுகொலைச்சம்பவத்தைப் போன்று, பல படுகொலைச் சம்பவங்களையும், பல துன்பியலான சம்பவங்களையும் எமது தமிழ் மக்கள் கண்டிருக்கின்றனர்.
இவ்வாறான துன்பியல் மிக்க சம்பவங்களை முடிவுக்குக்கொண்டுவருமாறுதான்
எங்களுடையவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். தமிழ் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கி, தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்யுமாறுதான் கேட்கின்றோம்.
மேலும் இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட 32பேருடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும்.
இப்படியான கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும்- என்றார்.
7 உணவகங்களுக்கு அபராதம் – அதிரடி காட்டிய நீதிமன்றம்
7 உணவகங்களுக்கு அபராதம்- அதிரடி காட்டிய நீதிமன்றம்
மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான 3
உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை
தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடிர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள்
உட்பட 7 உணவங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.
இதனை அடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதிம்,
70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு
இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு
இலங்கை பாடசாலைகள் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும்
நீடிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்
வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்
வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்
வவுனியா பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்த காணிக்குள் அடாத்தாக நார் ஒருவர்
கொட்டகை அமைக்க முயன்றுள்ளார் ,இதனை தடுத்து நிறுத்திய குறித்த குடும்பத்திற்கு
வந்தேறிகளுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது
இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர் ,மேற்படி விடயம் தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்
தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்
இலங்கையில் தொடராக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது
கடந்த தினம் வவுனியா பகுதியில் இவ்விதம் வெடித்து சிதறியுள்ளது
மேற்படி சம்பவங்களினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது ,எங்கு எப்போது
சிலிண்டர்கள் வெடிக்கும் என பீதி நிலையில் மக்கள் வசித்து வருவதுடன் தற்போது மின்சார
பாவனைக்கு மக்கள் திரும்பி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துளளது
இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்
இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்
இலங்கை மொனராகலை பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்த 13 மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு
அவரது மாமனார் மிளகாயை கரைத்து அந்த சிறுமிகள் முகத்தில் ஊற்றியுள்ளார்
தந்தை தயை பிரிந்து சென்ற நிலையில் தயார் கொழும்பில் தங்கி இருந்து வேலை பார்த்து
வருகின்றார் ,அவ் வேளையே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
சிறுமிகளை வதைத்தார் என்ற என்ற குற்ற சாட்டில் அவர் கைது செய்ய பட்டுளளார் ,மேற்படி
சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இப்படியும் வக்கிர குணம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்
லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office
லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office
இலங்கையை சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு பிரிட்டன் Home
Office விசா வழங்கியுள்ளது இவர் சோலா மின்துறையில் தொழில் புரிந்து வந்த நபர் அகதி தஞ்சம்
கோரிய நிலையில் இந்த விசா வழங்க பட்டுள்ளது
தயாரின் உடல் நிலை பாதிக்க பட்டு இலங்கை சென்று பார்த்து வந்த பொழுது சிங்கள
படைகளினால் தேட பட்டு வந்த நிலையில் அதில் இருந்து தப்பித்து லண்டன் வந்தடைந்த
நிலையில் அகதி தஞ்சம் கோரியுளளார் ,.ஆளும் கோட்டா மகிந்த அரசில் தமிழர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிட தக்கது
இது Home Office இந்த மன நிலையில் தற்போது இலங்கையர் தொடர்பில் கரிசனை கொடுள்ளதாக
மேற்குலக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன
இலங்கையில் மான்களுக்கு கொரனோ
இலங்கையில் மான்களுக்கு கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் மான்கள் பாதிக்க பட்ட நிலையில்
கண்டு பிடிக்க பட்டுள்ளன .
உருமாறிய புதிய நோய்கள் பரவி வரும் நிலையில் ,விலங்குகளுக்கும் பாதிக்க படுவது
மேலும் இந்த நோயானது புதிய வடிவில் பரவும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது












