Tag: கடலில் மூழ்கி
கடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்
கடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்
பங்காளதேஸ் பகுதியில் இருந்து ஆபத்தான கடல்வழியை கடந்து ,வடமேற்கு
இந்தோனோசியா கடல்பகுதியில் ரோகினிய அகதிகள் வந்து இறங்கினர் .
கடந்த இரு தினங்களில் 58 மற்றும் 178 அகதிகள் கடலில் தத்தளித்த,
பொழுது இந்தோனேசிய மீனவர்கள் மற்றும் ,
அதே கடற்படையால் காப்பாற்ற பட்டு கரை சேர்க்க பட்டனர் .
மேலும் தத்தளித்து கொண்டிருந்த 26 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்
இவர்களை போன்று மேலும் பல அகதிகள்,
மீன்பிடி கப்பல்கள் கடலில் தத்தளித்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவர்களுக்கு இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்க பெறவில்லை ,
என்கின்ற தகவல் மனித குலத்தை அதிர வைத்துள்ளது .
மியன்மார் அரச இராணுவத்தால் ,
முசுலீம்கள் என்ற காரணத்தால் இந்த மக்கள் கொலை செய்யப்பட்டு
அங்கிருந்து விரட்ட பட்டு வருகின்றனர் .
அதனால் அகதிகளாக இந்த மக்கள், நாடு நாடக அலைந்த வண்னம் உள்ளனர் .
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக்
கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு இரண்டு சிறுவர்களினதும்
சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்று (03) இரவு 10.40
மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடியுள்ளனர். இதில்
இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது உயிர் தப்பிய
மற்றைய இரண்டு சிறுவர்கள் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில்
தேடியபோது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.


















