வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்

வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட , இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 27ம் திகதி வடமேற்கு மாகாண ஆளுநரும், கடற்படையின் முன்னாள் தளபதியுமான அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்

அவர் கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது நாட்டிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு, குறித்த தடை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உரிய நடவடிக்கையின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சட்டரீதியான சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் தமக்கு அறிவிக்கவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Error: View 9293b2au4w may not exist
வசந்த கரன்னாகொடவிற்கு அமெரிக்காவில் நுழைய தடை
Posted in இலங்கை செய்திகள்

வசந்த கரன்னாகொடவிற்கு அமெரிக்காவில் நுழைய தடை

வசந்த கரன்னாகொடவிற்கு அமெரிக்காவில் நுழைய தடை

வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவிற்கு தமது நாட்டிற்குள் நுழைய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த கரன்னாகொடவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி ஜே. பிலின்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் வசந்த கர்ன்னாகொடவிற்கு இந்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை

மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை 

காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14

கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்  தீர்மானித்தது. 

இந்த வழக்கு நேற்று சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது,  முன்னாள்

கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. 

இவ்வழக்கில் வசந்த கரண்ணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர்

தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 8 ஆம் திகதி  ஆம் திகதி  விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.  

அந்த ரிட் மனுவின் தீர்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான

விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது  ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது