Tag: இலங்கை
குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது
குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது
இலங்கையில் மைத்திரி ஆட்சியில் தொடராக நடத்த பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி
பல நூறு மக்கள் பலியாகினர்
மேற்படி குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி
சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி
இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு – ஒதியமலைப் படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (02) இடம்பெற்றன. அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை, ஒதியமலையில் படுகொலைசெய்யப்பட்ட 32 அப்பாவித் தமிழர்களுடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும் எனவும் அவர் பிராத்தித்ததுடன், இப்படியான
கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி இந்த ஒதியமலைப் பகுதியிலே இடம்பெற்ற ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு எமது அஞ்சலிகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்த ஒதியமலைப்படுகொலை தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, இராணுவ உடை தரித்த இனந்தெரியாதோர் இந்த கொலைகளைச் செய்த்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாட்டிலே தன்னுடைய மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு, கொடூரமான இராணுவம் இருந்ததெனில் அது இலங்கயில்தான் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
குறிப்பாக கடந்த 1984.12.02அன்று அதிகாலை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்களை வீடுவீடாகச் சென்று, பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துவந்து 27பேரை
ஈவிரக்கமின்றி படுகொலைசெய்தது மாத்திரமின்றி, மிகுதி ஐந்து பேரை வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்களையும் மிக மோசமான முறையில் படுகொலைசெய்துள்ளார்கள்.
இவ்வாறான மிக மோசமான பல செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது சர்வதேசம் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதே எனது கேள்வியாகும்.
கடந்த காலங்களிலிருந்தே எமது தமிழ் மக்கள்மீது மிகமோசமான கொடுமைகளையும்,
சித்திரவதைகளையும் இந்த நாட்டுபடையினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வருகின்றது.
இந்த படுகொலைச்சம்பவத்தைப் போன்று, பல படுகொலைச் சம்பவங்களையும், பல துன்பியலான சம்பவங்களையும் எமது தமிழ் மக்கள் கண்டிருக்கின்றனர்.
இவ்வாறான துன்பியல் மிக்க சம்பவங்களை முடிவுக்குக்கொண்டுவருமாறுதான்
எங்களுடையவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். தமிழ் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கி, தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்யுமாறுதான் கேட்கின்றோம்.
மேலும் இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட 32பேருடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும்.
இப்படியான கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும்- என்றார்.
7 உணவகங்களுக்கு அபராதம் – அதிரடி காட்டிய நீதிமன்றம்
7 உணவகங்களுக்கு அபராதம்- அதிரடி காட்டிய நீதிமன்றம்
மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான 3
உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை
தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடிர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள்
உட்பட 7 உணவங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.
இதனை அடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதிம்,
70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு
இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு
இலங்கை பாடசாலைகள் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும்
நீடிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்
வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்
வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்
வவுனியா பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்த காணிக்குள் அடாத்தாக நார் ஒருவர்
கொட்டகை அமைக்க முயன்றுள்ளார் ,இதனை தடுத்து நிறுத்திய குறித்த குடும்பத்திற்கு
வந்தேறிகளுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது
இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர் ,மேற்படி விடயம் தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்
தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்
இலங்கையில் தொடராக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது
கடந்த தினம் வவுனியா பகுதியில் இவ்விதம் வெடித்து சிதறியுள்ளது
மேற்படி சம்பவங்களினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது ,எங்கு எப்போது
சிலிண்டர்கள் வெடிக்கும் என பீதி நிலையில் மக்கள் வசித்து வருவதுடன் தற்போது மின்சார
பாவனைக்கு மக்கள் திரும்பி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துளளது
இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்
இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்
இலங்கை மொனராகலை பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்த 13 மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு
அவரது மாமனார் மிளகாயை கரைத்து அந்த சிறுமிகள் முகத்தில் ஊற்றியுள்ளார்
தந்தை தயை பிரிந்து சென்ற நிலையில் தயார் கொழும்பில் தங்கி இருந்து வேலை பார்த்து
வருகின்றார் ,அவ் வேளையே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
சிறுமிகளை வதைத்தார் என்ற என்ற குற்ற சாட்டில் அவர் கைது செய்ய பட்டுளளார் ,மேற்படி
சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இப்படியும் வக்கிர குணம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்
லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office
லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office
இலங்கையை சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு பிரிட்டன் Home
Office விசா வழங்கியுள்ளது இவர் சோலா மின்துறையில் தொழில் புரிந்து வந்த நபர் அகதி தஞ்சம்
கோரிய நிலையில் இந்த விசா வழங்க பட்டுள்ளது
தயாரின் உடல் நிலை பாதிக்க பட்டு இலங்கை சென்று பார்த்து வந்த பொழுது சிங்கள
படைகளினால் தேட பட்டு வந்த நிலையில் அதில் இருந்து தப்பித்து லண்டன் வந்தடைந்த
நிலையில் அகதி தஞ்சம் கோரியுளளார் ,.ஆளும் கோட்டா மகிந்த அரசில் தமிழர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிட தக்கது
இது Home Office இந்த மன நிலையில் தற்போது இலங்கையர் தொடர்பில் கரிசனை கொடுள்ளதாக
மேற்குலக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன
இலங்கையில் மான்களுக்கு கொரனோ
இலங்கையில் மான்களுக்கு கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் மான்கள் பாதிக்க பட்ட நிலையில்
கண்டு பிடிக்க பட்டுள்ளன .
உருமாறிய புதிய நோய்கள் பரவி வரும் நிலையில் ,விலங்குகளுக்கும் பாதிக்க படுவது
மேலும் இந்த நோயானது புதிய வடிவில் பரவும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது
வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு
வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு
பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதான வீதியில் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வீதிக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கும் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இராணுவ ட்ரக் வண்டியில் இரண்டு இராணுவத்தினர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகந்த புனானி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து ஹிங்குராங்கொட இராணுவ முகாமிற்கு சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இராணுவ ட்ரக் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், ட்ரக் மோதியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பரவும் எயிட்ஸ் – தடுமாறும் சமுதாயம்
இலங்கையில் பரவும் எயிட்ஸ் – தடுமாறும் சமுதாயம்
இலங்கையில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒழுத்து எயிட்ஸ் நோயானது அதிகரித்து
செல்வதாக கவலை வெளியிட பட்டுள்ளது
கடந்த ஆண்டுகளை விட சமீப காலங்களில் இதன் பாதிப்பு அதிகரித்து செல்கின்றது ,முறையற்ற
பாலியல் உறவு மற்றும் ,அதன் செயல்பாடுகள் தொடர்பிலேயே இந்த நோயானது பரவி வருவதாக
தெரிவிக்க படுகிறது
யாழில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்
யாழில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து
சிதறியுள்ளது ,எனினும் இதனால சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது ,உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை
மேற்படி தொடர் வெடிப்புகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை குழு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது
இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு
இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன , திருமண
மன்படங்களில் 200க்கு குறைவானவர்களே அனுமதிக்க படுவார் ,மேலும் உணவகங்களில் உள்ளே
100 உள்ளானவர்கள் மட்டும் அமர வேண்டும்
தவிர வீடுகளை விட்டு தேவையின்றி வீதிகளில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை பட்டுள்ளது
,மீறுவோர் காவல்துறையால் கைது செய்ய படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
மக்களே விழிப்பாக இருங்கள்
பரவும் நோயில் இருந்து உங்களை காப்பற்றி கொள்ளுங்கள்
மோடியை சந்திக்க பறந்தார் – நிதியமைச்சர் பசில்
மோடியை சந்திக்க பறந்தார் -நிதியமைச்சர் பசில்
இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசிட இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸா
விரைந்துள்ளார்
இந்த சந்திப்பில் இலங்கை தொடர்பான அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பாக பேச
உள்ளார் என
தெரிவிக்க படுகிறது
தீயில் எரிந்து சிறுமி மரணம்
தீயில் எரிந்து சிறுமி மரணம்
இலங்கை வெலிகம பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி
இறந்துள்ளார்
இந்த வீடு தீ பற்றல் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சம்பவமா என்பது தொடபில் விசாரணைகள்
ஆரம்பிக்க பட்டுள்ளன
நாடெங்கும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
சூறாவளி மக்களுக்கு எச்சரிக்கை
சூறாவளி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 டிசம்பர்01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு
மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அது அடுத்த சில நாட்களில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் குறிப்பாகபிற்பகலில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பிரதானமாக வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்
வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்
பிரிட்டனில் பிறந்த இலங்கையை சேர்ந்த சிங்கள பெண்மணி ஒருவர் நிறுவனம் ஒன்றின்
நிறைவேற்று சர்வ வல்லமை பொருந்திய முதன்மை அதிகாரியாக விளங்குகிறார் ,அதாவது CEO
அவுஸ்ரேலியாவில் பணியாற்றுமிவர் உலக ஆசிய பணக்கார பட்டியலில் அதிக பணத்தினை
பெற்று கொள்ளும் பெண்மணியாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
இவரது ஆண்டு வருமானம் 16 மில்லியன் டாலராக உள்ளது
அறிவார்ந்த நிலையில் எமது சமூகமும் இது போல பயணிக்க வேண்டும் என்பதே நமது எண்ண
கருத்தாகும் ,இவரை போல நீங்களும் முன்னேறலாம் .
எடுத்து கொண்ட விடயத்தில் உரிய கவனத்தைச செலுத்தி வெற்றி காணுங்கள்
வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை
வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை
இலங்கையில் கடந்த இரு நாட்களில் இருபது காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவத்தினால் சில வீடுகள் சேதமாகியுள்ளன , நாள் தோறும் இந்த எரிவாயுவை பயன்
படுத்தும் மக்களே மிக எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்ட படுகிறது
சிலிண்டரில் எரிவாயு கசிவே இந்த வெடிப்பிற்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் சுற்று சூழல் பாதுகாப்பை அடுத்து புகையை தடுத்து வளி மண்டலத்தை காக்கும்
முகமாக மின்சார காரினை இறக்குமதி செய்திடும் நிலைக்கு இலங்கை தயராகி வருகிறது
இதற்கான அனுமதி தற்போது வழங்க படவுள்ளது
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகளில் 2040 ஆண்டிற்கு பின்னர் முற்று முழுதாக எரிபொருள் கார்கள்
தடை செய்ய படுகின்றன.
அதன் முன்னோடி நடவடிக்கையாக இந்த கார் இறக்குமதிக்கு இலங்கையும் தயராகி வருகிறது
கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்
கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்
யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதி கடலப்குதியில் உருக்குலைந்த நிலையில் மனித சடலம் ஒன்று
மீட்க பட்டுள்ளது
இவ்வாரு சில நாட்களுக்கு முன்னரும் மூன்று சடலங்கள் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிட தக்கது











