Tag: சடல
வர்த்தகர் நுவரெலியாவில் சடலமாக மீட்பு
வர்த்தகர் நுவரெலியாவில் சடலமாக மீட்பு
நுவரெலியா -பட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட “டேப்பன்டைல்” வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று, (13) மதியம் 12.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், நீர்கொழும்பு குணரத்தின மாவத்த 50 ஏக்கர் கிராமம் பகுதியை சேர்ந்த சத்துருவான் ஹப்புகாமி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,இவர் வர்த்தகர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டிப்பொல நகரில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள உலக முடிவு பகுதிக்கு செல்லும் பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோசணைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்படும் எனவும் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்த நபர் பயணித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது என்றனர்.
வீட்டில் சடலமாக தமிழ் போலீசார் மீட்பு
வீட்டில் சடலமாக தமிழ் போலீசார் மீட்பு
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.
அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
3வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு
3 வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு
வவுனியாவில் இருந்து முல்லைதீவிவு கடலில் குளிக்க சென்ற மூன்று வாலிபர்கள் நீரில் அடித்து
செல்ல பட்ட நிலையில் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளனர்
காணமல் போயிருந்த இவர்களை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டனர் ,தற்போது சடலமாக
மீட்க பட்டுள்ள நிலையில் உறவுகள் கண்ணீரில் உறைந்துள்ளனர்
விழிப்புணர்வு அற்று நமது மக்கள் இவ்விதம் செல்வதும் ,இறந்த நிலையில் கடலில் மிதப்பதும்
தொடர் துயர நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது
வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்
வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்
எட்டியாந்தோட்டை- மலல்பொல கிராம உத்தியோகத்தர் பிரிவின் அமுஹேன பிரதேசத்திலுள்ள
காட்டுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் பழுதடைந்துள்ளதாகவும் எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த ருவன்வெல்ல பதில் நீதவான் நிமல் புஸ்பகுமார, மரண
விசாரணையை நடத்தியதுடன், நேற்றைய தினமே சடலம் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இச்சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஓடையில் இருந்து இரு சடலங்கள் மீட்பு
ஓடையில் இருந்து இரு சடலங்கள் மீட்பு
பண்டாரவளை- நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தெற்கு கெபில்லவெல- பண்டாரவளை என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் என பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பண்டாரவளை- மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இச்சடலங்கள் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன
இலங்கையில் பிரிட்டன் நபர் – கொட்டலில் சடலமாக மீட்பு
இலங்கையில் பிரிட்டன் நபர் – கொட்டலில் சடலமாக மீட்பு
பிரித்தானிய நாட்டு குடிமகன் ஒருவர் இலங்கை கொட்டல் ஒன்றில் தங்கி இருந்த வேளை சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் சம்பவ தினம் அன்று முதல் தினம் விருந்து நிகழ்வு ஒன்றிற்கு கலந்து விட்டு கொட்டல் திரும்பிய நிலையில் இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார்
குறித்த நபரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்
காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய அவர், புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மினுவங்கொட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்
கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு
யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்..
மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.
சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.
குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை
முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான மருத்துவப்பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..
வவுனியா வீதியில் வெட்டுக்காயங்களுடன் சிறுவன் சடலமாக மீட்பு
வவுனியா வீதியில் வெட்டுக்காயங்களுடன் சிறுவன் சடலமாக மீட்பு
வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியில் இருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஜ்ஜிவன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடிகாயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு – எகிறும் படுகொலைகள்
அடிகாயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு – எகிறும் படுகொலைகள்
இலங்கை பொத்துவில் பகுதியில் உள்ள வயல் வெளி ஒன்றில் இருந்து முப்பத்தி ஐந்து வயது மதிக்க
தக்க மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உடலில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் அடித்து கொலை செய்ய பட்டு வயல் வெளியில் வீச பட்டு இருக்கலாம் என்ற சநதேகம் வலுத்துள்ளது
மேற்படி கொலையுடன் தொடர்பு பட்டார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,கோட்டா ஆட்சியில் இலங்கையில்
தொடர்ந்து இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது







