Tag: யாழில்
யாழில் வீதி சோதனை ஆரம்பம்
யாழில் வீதி சோதனை ஆரம்பம்
யாழில் வீதி சோதனை ஆரம்பம்,யாழில் வீதி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருகை தந்த சில மாதங்களில் மீளவும் யாழில் வீதி சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பு காரணமாக ஆகிறது.
ஒருங்கிணைந்த நாட்டுக்குள் வாழ்வோம் என கூறிவந்த நிலையில் தற்பொழுது சிறுபான்மை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவது ஆளும் அனுரா அரசின் இனவாதத்தை காண்பித்துள்ளது.
எனவே எதிர்வரும் தேர்தலில் அனுர அரசை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் தற்பொழுது குதித்து போய் இருக்கின்றனர்.
இனவாதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்காவின் ஆட்சிபீடம் தமிழர்களை அடக்கியாள நினைத்து வரும் சர்வாதிகார போக்காக காணப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
ஒருங்கிணைந்த இலங்கைக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழ்வோம் என்ற அனுராவின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆகவே ஆளுகின்ற ஆட்சி துடைத்து அழிக்கப்பட வேண்டும் என தமிழர்கள் இப்பொழுது கங்கணம் கட்டி இருக்கின்றனர்.
யாழில் பரவும் புதிய நோய்
யாழில் பரவும் புதிய நோய்
யாழில் பரவும் புதிய நோய் , யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனிய காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் மருத்துவ முறையில் சிகிச்சைக்கு சமூகமளித்திருந்த வழியில் அந்த நோயின் உச்சம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் புன்னாலை கட்டுவான் வடக்கு பகுதியைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .கடந்து சில நாட்களாக பாரிய காய்ச்சல் நோயினால்
தாக்கப்பட்ட உள்ளத்தில் அவர் மருதுவம்சனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு நோய்கள் அதிகமாக பரவி வருகின்ற நிலையில் ,தாக்குதல் அதிகரித்து மக்கள் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது தொடர்பான வருட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் தற்போது உறவினர் சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது,
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது , யாழ்ப்பாணத்தில் பரவலாக பரவி வந்த எலி காய்ச்சலானது தற்பொழுது கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்துறை , கரவெட்டி , சாவக் கச்சேரி பகுதிகளில் சமீப காலங்களாக பரவலாக பரவி வந்த எலிக்காய்ச்சல் நோய் தற்பொழுது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார் .
இந்த நோயானது அதிகரித்து வருவதாகவும் தற்போது அவை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
தற்பொழுது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது எண்ணிக்கையில் சடுதியாக குறைவடைந்து காணப்படுவதாக மேல் அதிகமாக தெரிவித்தார்.
அதே நேரம் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐயா கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .
தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டால் இந்த நோயை மிக வேகமாக கட்டுப்படுத்த முடியும் என அவர் கருத்துக்களை முன் வைத்தார்.
யாழில் அர்ச்சுனாவால் அமளி |ஆளுநர்அவமதிப்பு |ஸ்ரீதரனுக்கு கிழிப்பு
யாழில் அர்ச்சுனாவால் அமளி |ஆளுநர்அவமதிப்பு |ஸ்ரீதரனுக்கு கிழிப்பு
யாழில் அர்ச்சுனாவால் அமளி |ஆளுநர்அவமதிப்பு |ஸ்ரீதரனுக்கு கிழிப்பு ,உள்ளே நடந்த தரமான சம்பவம் .
காணொளியில் முழு விபரம் உள்ளே
யாழில் மீண்டும் தேசியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்
யாழில் மீண்டும் தேசியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்
யாழில் மீண்டும் தேசியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி ,யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் எலிக்காய்ச்சல்
யாழில் எலிக்காய்ச்சல்
யாழில் எலிக்காய்ச்சல் ,யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் வியாழக்கிழமை (24) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சிவாஸ்கர் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 22ஆம் திகதி சங்கானை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கிருந்து யாழ் .
போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கு எலி காய்ச்சலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை (24) ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் பணத்தை எரித்த தமிழர்
யாழில் பணத்தை எரித்த தமிழர், யாழ்ப்பாணம் அராலி தெற்கு பகுதியில் தமிழர் ஒருவர் பத்து லட்சம் பணத்தை எரித்துள்ளார் .
பத்து லட்சம் ரூபாய்களை எரித்ததுடன் மேலும் வைத்திருந்த ஏழு லட்சம் பணத்தையும் தூக்கி வீசியுள்ளார் .
பணத்தை எரித்தும் ,வீசிய தமிழர் செயல் யாழ்பாணத்தில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒத்த ரூபா பணத்தை சேகரிக்க மக்கள் பெரும் இன்னல் படும் இவ்வேளையில் ,பல லட்சம் ரூபாயை ஏன் இவர் இவ்விதம் எரித்தார் என்கின்ற விடயம் கேள்வியை எழுப்பியுள்ளது .
யாழ் அரியாலை பகுதியில் மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்
குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்
குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார் என்கின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது .
ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவல் நியமிக்க பட்ட ஒருவராக வடக்கு ஆளுநர் காணப்படுகின்றார் .
அவ்வாறான இந்த புதிய ஆளுநர் தற்போது யாழ்ப்பாணம் பண்ணை கடல்பகுதியில் குப்பைகள் ,பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன .
இந்த நிகழ்வுகள் தற்போது ஏன் இவ்வாறு வேகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்கின்ற விடயம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .
வீடுகளற்று வீதிகளில் உணவின்றி உறங்கும் ,வீடற்ற மக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு உதவிட முனையத ஆளுநர் தற்போது சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பில் படம் பிடித்து படம் காண்பித்துள்ளார் .
ஆக இந்த படம் என்பது தேசிய மக்கள் சக்தியை வெற்றி பிற செய்திடும் நோக்கில் உருவாக்க பட்ட ஒன்றாக காணப்படுகிறது .
ஆக மொத்தம் மக்கள் சேவைகளை மறந்து ,மக்கள் இந்த விதைகளை கட்டிப்பிடித்தால் வேண்டும் என்கின்ற சட்டம் காணப்படுகின்ற பொழுது அதனை சட்ட ,காண்பிப்பதை ,விட்டு தற்போது படம் பிடித்து ,தலைப்பு செய்தியாக வலம் வர துடிக்கும் ஆளுநர் சிந்தனை சிறப்பு தான் போங்க .
இப்படியே தொடரட்டுங்க ஆளுநர் ,குப்பைகள் எப்படி இங்கே வருகிறது என்பதை கண்டுபிடிக்க மறுத்து தடுப்பதை ,விடுத்து இப்படி படம் பிடித்து செய்திகளின் தலைப்புகளில் மாற முயற்சிக்காதீர்கள் ஐயா .
ஆளுநர் சிந்தனை இப்படி என்றால் பாதிக்க பட்ட மக்களுக்கு எப்படி ஐயா தீர்வு .வரும் வாழ்க அந்தணர் .
யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் ,சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 22 வயதான இளைஞன் கையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும் தாயார் மீதும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் குற்றத் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர்கைது
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர்கைது
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர்கைது ,யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் மூன்று இலட்சம் வரையான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் விசாரணையின் போது துபாயில் இருந்து வீட்டை தாக்க உத்தரவு கிடைத்ததாகவும் அதற்கமைய கூலிப்படையாக குறித்த வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்
யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்
யாழில் ரவுடி கும்பல் தாக்குதல் ,யாழ்ப்பாணம் ஆராளி ஆளடி சந்திக்கு அருகாமையில் கடை ஒன்றுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த வாலிபன் ஒருவர் மீது அங்கு மோட்டார் சைக்கிள் வந்து ரவுடி குழுக்கள் திடீர் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் அந்த வாலிபன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இருவருக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த வன்முறை மற்றும் முருகல் காரணமாகவே இந்த தாக்குதல் இடம் பெற்றதாக அங்கு இருந்த மக்கள் பல கருத்துரைத்துள்ளனர் .
மேற்படித்தாகுல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வாழ்வது மற்றும் மக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவர்கள் மருத்துவமனையில் உள்ள மாபியாக்கள் சிலர் பின்புலத்தில் இயங்குவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மனிதர்களின் உடல் அவயங்களை விற்கும் இந்த மாபியா குழுக்களினால் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் ஊடாகவே இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றன சந்தேகத்தையும் இதை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வன்முறை தாக்குதினால் யாழ்ப்பாணம் செயலிழந்து காணப்படும் ,யாழ்ப்பாணம் மாற்றப்பட்டு வாலிபங்கள் திசை மாறி போவதாக சமூக நல அக்கறை கொண்டவர்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்
யாழில் எரிக்கப்பட்ட வாகனம்
யாழில் எரிக்கப்பட்ட வாகனம் ,யாழ்ப்பாணத்தில் பாகம் ஒன்றுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து புற்றாக எரித்துள்ளது .
யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வாகனத்தினை வீட்டில் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வேளையிலேயே ,அந்த வாகனத்திற்கு மர்ம நபர்கள் அவர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த தீ வாய்ப்பு சம்பவத்தில் வாகனம் முற்றாக தீயில் எரிந்து அழிந்து உள்ளது .
இந்த தீவப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பாகவும் அவர்களை கைது செய்திடும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கூலிக்கு இயங்கி வரும் குழுக்கள் வாழ்வெட்டு மற்றும் மக்கள் மீது தாக்குதல் கொள்ளையில் ஈடுபடுதல், கடத்தல், வாகனங்கள் எரித்தல், போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து இயங்குகின்ற சில குழுக்களினால் இவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு ,அதனால் அவர்கள் அங்கு வைத்து பழிவாங்கப்பட்டு வருவதற்கான தகவல்கள் தற்போது பொலிவாகி வருகின்றன.
இந்த தீ வைப்பு சம்பவத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இந்த வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது ஏன் என்பதற்கான விசாரணைகளை ,தாங்கள் தொடர்ந்து நடத்தி வருவதாக தற்பொழுது இலங்கை காவல்துறை தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அரங்கேரி வரும் இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை
8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை
8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை, யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களாக விளங்கி வரும் 8 பேரை உடனடியாக பணி மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்கள் மேற்கொண்ட பல நடவடிக்கை காரணமாக ,தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல மருத்துவ மோசடிகள் ,மாபியா கொள்ளை அம்பலமானது .
அதனை அடுத்து மருத்துவர் அருச்சுனா இராமநாதன் ,மற்றும் பாதிக்க பட்ட மக்களினால் குற்றம் சுமத்த பட்டதை அடுத்து ,தற்போது எட்டு மருத்துவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் நாட்களில் பணிமாற்றம் செய்ய படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் எதிர் பார்க்கும் விடயங்கள் நடைமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் என எமது டிக் டாக் நேரலையில் ( click here tiktok ) கலந்து கொண்ட மருத்துவ பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார் .
அதனை ஏற்கும் போல் தற்போது மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்களும் தனது முக நூலில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் .
இவ்வாறான மாற்றங்கள் காலம் கடந்து ,மக்கள் அழுத்தம் காரணமாக மேற்கொள்ள படுகிறது .
வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் இடம்பெற்று வரும் ,இவ்வாறான விடயங்கள் மக்கள் மத்தியில் மிக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாயகம் கேதீஸ்வரன்,யாழ்போதன வைத்தியசாலை நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ,பிரணவன் ,மயூரன் ,இந்திரகுமார் ஆகியோர் பிரதான இடம் வகிக்கின்றனர் .
இவர்களுடன் இந்திரகுமார் ,தர்சன் ,மேலும் சிலரும் உள்ளடக்கம் பெற்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஆகவே மக்கள் கொந்தளிப்பை தடுக்க ,உடனடியாக இவர்கள் எட்டு போரையும் பணிமாற்றம் செய்யவேண்டும்.
,அல்லது மக்கள் ,யாழ்போத்ன வைத்தியசாலை உள்ளிட்ட மருத்துவ மனைகளை முற்றுகையிடலாம் என்பதாக மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .
கொந்தளித்துள்ள மக்களும் ,பாதிக்க பட்ட மக்களும் மீளவும் தன் எழுச்சியாக ,போராட்டங்களை நடத்தினால் ,மக்கள் இயல்பு வாழ்வுக்கு தடைகள் ஏற்படும் .
ஆகையால் ,அதனை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு ,உடன் விரைந்து ,மக்கள் கொந்தளிப்பை தடுக்கவும் ,குற்ற சாட்டுகளை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை, நாமும் இங்கே முதன்மை கோரிக்கையாக முன் வைக்கின்றோம் .
புரிந்து கொண்டு செயல் படுங்கள் ,முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளே .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

யாழில் பிரபல ரவுடி கைது
யாழில் பிரபல ரவுடி கைது
யாழில் பிரபல ரவுடி கைது ,வெளிநாட்டு பணத்தில் கூலிக்கு வாள்வெட்டில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார் .
தப்பி ஓடிய கூட்டாளி ரவுடிகளை தேடி போலீசார் வலை வீச்சு .
யாழ்ப்பாணத்தில் மக்களது சுதந்திர வாழ்விற்கு தடையாக விளங்கி வந்த ,ரவுடி கும்பல் ஒன்று தற்பொழுது பொலிசாரினால் , சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தாக்குதல் நடத்தியமை ,அச்சுறுத்தியமை ,மற்றும் கடத்தி மிரட்டி கப்பம்பறித்தமை ,என்பது தொடர்பான பல்வேறுபட்ட குற்ற சாட்டுக்களின் அடிப்படையில் போலீசாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
மேலும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
வெளிநாட்டில் ரவுடி குழுவின் தாதா
வெளிநாடு ஒன்றிலிருந்து ,ரவுடி குழுவின் தாதா ஒருவரினால், அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணத்தில், தெரிவு செய்யப்பட்ட நபர்கள் மீது தாக்குதலை நடத்தி அச்சுறுத்தி வந்த நிலையிலே, அவர் தற்பொழுது போலீசார் நாள் கைது செய்யப்பட்டுள்ளார் .
இவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சர்வதேச போலீசாரின் துணையுடன் வெளிநாட்டில் உள்ள ,அந்த மிக முக்கியமான ரவுடி குழுவின் தலைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் tiktok வலைத்தளங்கள், போன்றவற்றின் ஊடாக , மிரட்டல் சம்பவங்கள் ,கடத்தல் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றனவாம் .
அவ்வாறு அவர்கள் ஊடாக ,இலங்கையில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையிலும் ,வாகன விபத்து, மற்றும் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு கடத்தல் தாக்குதல் ,மற்றும் தனிநபர் தாக்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அவ்வாறான பின்புலத்தில் இடம்பெற்றதாகவே, இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது .
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர், தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .
இவருக்கு எத்தனை லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது, எப்படி வழங்கப்பட்டது ,எதற்காக வழங்கப்பட்டது ,எத்தனை வீடுகள் மீது தாக்குதல் நடத்தி ,மற்றும் குற்ற செயல்களை புரிந்தார்கள்.
என்பன தொடர்பாக தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .
வெளிநாடுகளில் உள்ளவர்கள், இலங்கையில் உள்ளவர்களையும், ஏனைய குடும்பத்தை மிரட்டி ,அடக்கியாலும் நடவடிக்கையில் ,இவர்கள் ஈடுபட்டு வந்ததாக தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
போலீசார் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் ,மேலும் அதிக தகவல் வெளிவருகின்ற பொழுது ,வெளிநாட்டு குழுவும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .#
இவர்களது வாட்சாப் , வைப்பார் மற்றும் ,சமூகவலைத்தள உரையாடல்கள் யாவும் ,தற்போது பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டும், ஓட்டு கேட்கப்பட்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் உடுவில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ,காணி ஒன்றில் .மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ,அந்த காணியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ள சம்பவம், யாழ்ப்பாணா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாண பகுதியில் இவ்வாறான தொடர் வண்டிகள் கடத்தப்படுவது, டயர்கள் குத்தப்படுவது ,மற்றும் அதன் நபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடத்தப்படுவது, மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்படுகின்றது சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகின்றன.
யாழ்ப்பாண போலீசார்புலன் விசாரணை
இந்த காணியில் இந்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு எரிக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் உடனடியாக தெரியவில்லை .
சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, தற்பொழுது யாழ்ப்பாண போலீசார் தமது புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
யாழ்ப்பாணம் இலங்கையினுடைய கட்டுப்பாட்டுக்கு சென்றதன் பின்னர் ,சமீப காலமாக அங்கு தொடர்பான பல்வேறுப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .
மோட்டார் சைக்கிள் எரிப்பது கடத்துவது கொள்ளையடிப்பது, மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது பேருந்துகள் மீது கற்கல் தாக்குவது என்ற விடயங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
மற்றும் வாகன விபத்தில் மக்கள் பலியாகி சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .
அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ,இடம்பெற்ற இந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவம் ,அந்த மக்கள் மத்தியில் ஒருவித பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து
கவிழ்ந்த லொறி யாழில் விபத்து.
கவிழ்ந்த லொறி யாழில் விபத்து , யாழ்ப்பாணம் எ 9 கண்டி பிராதன வீதியில் பவுசர் ஒன்று மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்தது .
இதன் பொழுது லொறி கவிழ்ந்தது .
இந்த சம்பவத்தினால் அந்த சாலைகள் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொறி சாரதி
காயமடைந்த லொறி சாரதி உள்ளிட்டவர்கள் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த இருவரும் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .
தொடராக இடம்பெறும் வீதி விபத்துக்கள் காரணமாக மக்களது உயிர்களுக்கும் நடமாடும் மக்களுடைய நட மாட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது .
சாலைகளில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க மறந்து வேகமாக பயணிப்பதாலே இந்த விபத்துக்கள் ஏற்படுவதற்கான குற்றச்சாட்டு இலங்கையினுடைய காவல்துறையினால் முன்வைக்கப்படுகின்றது.
இலங்கையில் நாள்தோறும் ஏற்படுகின்ற விபத்துகளினால் நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் பல பேர் காயமடைந்து வருவதான புதிய புள்ளி விவரங்கள் காணப்படுகின்றது .
நாள்தோறும் இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இந்த வாகன விபத்துகளினால் இலங்கையுடைய மக்கள் மற்றும் நடமாடும் நடமாடிகளுக்கு எதிர்வித பாதுகாப்பு மற்ற ஒரு நிலை காணப்படுகிறது .
மேலும் மேலும் இந்த விபத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன மேற்படி விபத்து தொடர்பான விசாரணை இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.
யாழில் மனித சடலம் மீட்பு
யாழில் மனித சடலம் மீட்பு
யாழில் மனித சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் ஊர் காவல்துறை குறிபட்டுவான் பகுதியில் அடையாளம் தெரியாத ஆன் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
ஊர்காவல்துறை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு மரணப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இறந்தவர் 50 வயதுக்கு உள்ளான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
இவர் எவ்வாறு இங்கு வந்தார் எவ்விதம் மரணமானர் என்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் சடலங்கள் மீட்பு
இலங்கையில் நாள்தோறும் நீர் ஏரிகள் குளங்கள் வீடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது .
ஆண் பெண்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையிலும் சடலங்காக மீட்க ப்பட்டு வருகின்றனர் .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இந்த மர்மக் கொலைகளின் பின்னால் உள்ளது யார் என்பதை கண்டறிந்து அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு இலங்கை குறித்த புலன்களை தாமதித்து வருவதற்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன .
ஆங்காங்கே அவ்வப்போது சில படுகொலை சாட்சிகள் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்ற பொழுதும் ஏனைய கொலையாளிகளை முக்கியமானவர்களை கண்டுபிடிக்க படவில்லை .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை கூறுகட்டுவான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆண் யார் .
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார்
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார் இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்விதமான தொடர் படுகொலை காரணமாக மக்கள் மத்தியில் ஒருமிது அச்ச உணர்வு காணப்படுகிறது .
இலங்கையில் தேர்தல் சூடாக இடம் பெற உள்ள காலப் பகுதியில் இவ்வாறு மனித சடலங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவது என்பது இயல்பான ஒன்றுதான்.
யாழில் திரைப்பட பாணியில் சண்டித்தனம்
யாழில் திரைப்பட பாணியில் சண்டித்தனம்
யாழில் திரைப்பட பாணியில் சண்டித்தனம் ,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்றிரவு 10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவு
வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.
இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரை அச்சு இயந்திரத்தால் தாக்குவது கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.
இதன்போது, காயமடைந்த வைத்தியசாலை ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பொலிஸ் விசாரணை
வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்தததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் ஜூன் 11 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Featured
யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார் ,யாழில் ஜனாதிபதி இளைஇவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவேன் .
நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“வட. மகாணத்தில் பயன்படுத்தப்படாத பல காணிகள் காணப்படுகின்றன. யாழில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் அவ்வாறான பல காணிகள் காணப்படுகின்றன.
அந்த இடங்கள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் எமது நாட்டில் விவசாய ஏற்றுமதி காணப்பட்டது.
அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது
அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது. பின்னர், தேயிலை, கோபி, இறப்பர், கறுவா உள்ளிட்டவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது அந்த ஏற்றுமதிச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.
அதனால், விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.
இளைஞர் யுவதிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
அதனால் இலங்கை டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக கிடைக்கும்.
கடந்த வாரம் கேகாலைக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன்.
நவீன விவசாயச் செயற்பாடு
அங்கு நவீன விவசாயச் செயற்பாடுகளை முன்னெடுப்போரை காண முடிந்தது. தற்போது அவ்வாறானவர்களே எமக்குத் தேவைப்படுகின்றனர்.
நவீன விவசாயத்தில் 5000 சதுர அடியில் உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு ஹெக்டயாரில் 08 மெட்ரிக் டொன் நெல் விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் ஏற்றுமதி மற்றும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும்.
அரசாங்கம் கவனம்
அதேபோல் சுற்றுலா வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
அதேபோல் வலுசக்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மூலமான மின்சார உற்பத்தியை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளன.
அதனால் கிகாவோட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குளங்கள் மீது சூரிய சக்தி படலத்தை அமைத்து அதனூடாக மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்.
இதற்காக பூநகரி மற்றும் இரணைமடு குளங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வடமாகாணமானது அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலம்
மேலும், இந்தப் பகுதியில் 700 மெகாவோட் திறன் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலத்தை நிறுவும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம்.
இதனை ஆரம்பமாகக் கொண்டு ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வடக்கை மாற்ற முடியும்.
வலுசக்தி துறையின் முன்னேறிச் செல்ல அதிகளவில் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தை மையமாக கொண்டு முதலீட்டு வலயம் ஒன்று நிறுவப்பட உள்ளது.
மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்பார்க்கிறோம். மீனவர்களுக்காக நமது கடற்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது.
நவீன மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித் தொழில் துறையும் பலப்படுத்தப்படும்.
கடந்த நான்கு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மக்கள் பெரும் அவதிப்பட்டனர். தற்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகிறது.
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு, இளைஞர்களின் தொழில் இல்லாத பிரச்சினை நிவர்த்திக்கப்படும்.
பொருளாதார மாற்றச் சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்திருக்கிறோம்.
வியட்நாம், மலேசியா, தாய்லாந்து போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் இலங்கையிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
மேலும், உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் இரண்டு மாதங்களில் தென்னிந்திய கலைஞர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்யுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். வங்குரோத்து பொருளாதாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும்,
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஞர்களுக்கு வழங்கிய உறுதி



















































