மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு பயகல துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ரப்பர் தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது

துப்பாக்கிச் சூட்டில்

நேற்று இரவு பயகலவின் கொஷேனா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார்

சைக்கிள், இன்று காலை (01) டொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலடுவ பகுதியில் உள்ள ஒரு ரப்பர்

தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக டொடங்கொட பொலிஸ் தெரிவித்துள்ளது.

நாகோடா மருத்துவமனையில்

நேற்று இரவு (31) பயகல பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து நாகோடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் “பனதுர நிலங்கா” என்பவரின் மைத்துனரான “தில” என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம் ,யாழ்ப்பாணத்தில் பாகம் ஒன்றுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து புற்றாக எரித்துள்ளது .

யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வாகனத்தினை வீட்டில் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வேளையிலேயே ,அந்த வாகனத்திற்கு மர்ம நபர்கள் அவர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த தீ வாய்ப்பு சம்பவத்தில் வாகனம் முற்றாக தீயில் எரிந்து அழிந்து உள்ளது .

இந்த தீவப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பாகவும் அவர்களை கைது செய்திடும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கூலிக்கு இயங்கி வரும் குழுக்கள் வாழ்வெட்டு மற்றும் மக்கள் மீது தாக்குதல் கொள்ளையில் ஈடுபடுதல், கடத்தல், வாகனங்கள் எரித்தல், போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இயங்குகின்ற சில குழுக்களினால் இவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு ,அதனால் அவர்கள் அங்கு வைத்து பழிவாங்கப்பட்டு வருவதற்கான தகவல்கள் தற்போது பொலிவாகி வருகின்றன.

இந்த தீ வைப்பு சம்பவத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இந்த வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது ஏன் என்பதற்கான விசாரணைகளை ,தாங்கள் தொடர்ந்து நடத்தி வருவதாக தற்பொழுது இலங்கை காவல்துறை தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அரங்கேரி வரும் இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.