Tag: பெண்
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு
கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு
உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்
- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு
இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறைபிடித்து செல்ல பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி மரணம் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு .
கடந்த ஐப்பசி மாதம் 7 ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ,இஸ்ரேல் இராணுவ முகாமில் பணியாற்ற கொண்டிருந்த 19 வயதுடைய மார்சியானோ, இருந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இவர் கம்பாட் இன்டலிஜென்ஸ் கலெக்ஷன் கார்ப்ஸ் 414 வது பிரிவைச் சேர்ந்த 19 வயதான மார்சியானோ, என தெரிவிக்க பட்டுள்ளது .
சிறை பிடித்து செல்ல பட்ட இவர் தங்கி இருந்த பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் இவர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் டெஹ்ரிவித்தது .
அவ்வாறான அறிவிப்பு வெளியான நிலையில் ,அதனை உறுதி படுத்தி இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இவரே ஹமாஸ் போராட்ட காரர்களை கட்டி கொடுப்பதிலும் ,பல இன்னல்களை அவர்களுக்கு விளைவிப்பதில் அதிக பணியாற்றிய ஒருவராக காணப்பட்டுள்ளார் .
அவ்வாறான பெண் சிப்பாய் எதிர்பாராத விதமாக ஹமாஸ் அமைப்பின் முற்றுகையில் சிக்கினார் .
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்
- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
பெண்ணுக்கு எமனாக வந்த ரயில்
பெண்ணுக்கு எமனாக வந்த ரயில்
புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் இன்று பிற்பகல் 1: 30 மணியளவில் பாமஸ்டன் – கிரேட்வெஸ்றன் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது
பெண்ணுக்கு எமனாக வந்த ரயில்
புகையிரத நிலைய அதிகாரிகள் 1990 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புகையிரதத்தின் மோதி உயிரிழந்தவர் நானுஓயா உடரதல்ல தோட்டத்தை சேர்ந்த சண்முகம் சந்திரமதி (வயது-40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற உள்ளது
காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01) காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சடலத்தை பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களுக்கு இரவுப் பணி அமைச்சரவை அங்கீகாரம்
பெண்களுக்கு இரவுப் பணி அமைச்சரவை அங்கீகாரம்
தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனங்கள், அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து வழங்கும் நிறுவனங்கள், வியாபாரச் செயன்மறையை வெளியிலிருந்து நிறுவனங்கள் மற்றும் வேறு நாடுகளில் அமைந்துள்ள
வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாகம் மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அலுவலகங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கு இரவு வேளைகளில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கான இயலுமை கிட்டும் வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள்
முறைப்படுத்தல்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2023.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இரவுப் பணி அமைச்சரவை அங்கீகாரம்
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள் முறைப்படுத்தல்) சட்டமூலத்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
குருநாகல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற இளம் பெண்ணொருவர் மோதர பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் வேவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளம் பெண் சந்தேகநபர் ஒருவர், குருநாகல் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று மோதரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பொலிஸாரால் சுமார் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர் மோதர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குருநாகல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்
- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்
பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.
இதன்போது அங்கு பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பின்னர், குறித்த பெண்ணும் குறித்த இரு இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
“19ஆம் திகதி நள்ளிரவில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் இரண்டு பேரை கைது செய்தது. அவர்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் என பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.”
பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்
“இருவரும் மதுபோதையில் இருந்ததால், பொலிஸ் அதிகாரிகளால் சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகும்.
கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல்நிலையத்துக்கு வந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரிகளை மிக மோசமான வார்த்தைகளாலும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.
எனினும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோதும், அவர் செல்லவில்லை.
“இதையடுத்து, குறித்த பெண்ணை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னரும், இந்த பெண் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு அவர்களை துன்புறுத்தியுள்ளார், கடித்துள்ளார்.”
“ஒருவாறு பெண்ணைக் கட்டுப்படுத்தி, அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.” என்றார்.
இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்
இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்
லெபனானில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக, ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்
லெபனானில் உள்ள பெரூப் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இலங்கை பெண் உள்ளிட்ட 5 பேர் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெண் கம்பஹா, மிரிஸ்வத்தையில் வசிக்கும் 65 வயதுடையவர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தூதரகத்திடம் இருந்து தகவல்
கிடைத்தவுடன், உரிய தரப்பினருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்
பொரளை காசல் வைத்தியசாலையில், தாயொருவர் ஆறு சிசுக்களை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசவித்த ஆறு சிசுக்களும் ஆண் குழந்தைகள் என்பது சிறப்பு அம்சம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்
ஆறு குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் காசல் மருத்துவமனையின் சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு குழந்தை கொழும்பு
குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு
கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்துள்ளனர்.
பின்னர் சடலம் தொடர்பில் மீனவர்கள் உடனடியாக உடப்பு பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு
சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.
குறித்த சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த பெண் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மேலும், நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதிவான் விசாரனையை மேற்கொண்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்
- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை
தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அவர் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் காரணமாக, தனுஷ்க குணதிலக இலங்கை திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை
அத்துடன், இந்த தீர்ப்பினால் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கம் விதித்திருந்த தடையும் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இதேவேளை, தனுஷ்க குணதிலகவின் வழக்குக்காக செலவிடப்பட்ட பணம் அனைத்தும் அவரிடமிருந்து தற்போது வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
வழக்கின் தீர்ப்பை அறிவித்த நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட், சர்வதேச கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவதூறு செய்யும் வகையில் மனுதாரருக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருந்துள்ளதாக தெரிவித்தார்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்
சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்
பொருளாதாரச் சிக்கல் காரணமாக, பணமின்றி தவிக்கும் பல பெண்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர்.
இவ்வாறு சவூதி அரேபியாவிற்கு வீட்டுச் சேவைக்காகச் சென்ற இந்நாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உணவுக்கு பதிலாக ஐந்து இரும்பு கொங்கிரீட் ஆணிகள் மற்றும் துணி உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்பிரிங் ஒன்றை விழுங்கி, வயிற்றில் ஆணியுடன் இலங்கைக்கு வந்துள்ள சம்பவமொன்று மாத்தளை எல்கடுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சவூதி அரேபியாவின் தைட் பிரதேசத்தில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த, மாத்தளை எல்கடுவ தேயிலைத் தோட்டத்தில் வசித்து வந்த எம்.எஸ் தியாகா செல்வி என்ற 21 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு ஆணிகளை விழுங்கியுள்ளார்.
சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்
சவூதி வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரின் நேரடித் தலையீட்டினால் சில தினங்களுக்கு முன்னர் தூதரகத்தின் ஊடாக குறித்த பெண்ணை இலங்கைக்கு அழைத்துவர முடிந்தது.
தனது மகளுக்கு நடந்த கொடுமை தொடர்பில் அவரது தாயார் தியாகு குமாரியும் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் ஊடாக வீட்டு வேலைக்காக சென்றதாகவும், அங்கு உணவின்றி கடும் அழுத்தத்திற்கு உள்ளான போது, தனது தாயாரிடம் தொலைபேசியில் தெரிவித்ததை தொடர்ந்து அது குறித்து வௌிநாட்டு முகவர் நிறுவனத்திற்கு தெரிவித்ததால் கோபமடைந்த வீட்டு உரிமையாளர்களான மகளும் தாயும் சேர்ந்து தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், 5 கொங்கிரீட் ஆணிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
உணவுக்கு பதிலாக இரும்பு ஆணியை விழுங்க மறுத்ததால் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், தாங்க முடியாமல் ஆணியை விழுங்கியதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் வெள்ளை இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிரிங்கினை விழுங்கியதாகவும், அது தனது தொண்டையில் சிக்கியதாகவும் அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
பல நாட்களுக்குப் பிறகு வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத் தொடங்கியபோது, வீட்டு உரிமையாளர்கள் உள்ளூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக செல்வி கூறினார்.
எனினும், அங்கிருந்த வைத்தியர்கள் பெண்ணின் வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகளைப் பார்த்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்
பின்னர் அந்நாட்டு பொலிசார் வந்து அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் முன்வந்து பொலிஸாரின் ஊடாக தூதரக அலுவலகத்திற்கு அறிவித்து அவரை சவூதி வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வந்து கண்டி வைத்தியசாலையில் பரிசோதித்த போது தனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது எக்ஸ்ரேயில் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர்களால் ஒரு ஆணி எடுக்கப்பட்டதாகவும், மற்றொரு ஆணி தனது வயிற்றின் பின்புறத்தில் இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய முறையில் பதிலளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளுடன் வத்தேகம பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்ததாக தாய் குறிப்பிட்டுள்ளார்.
கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழும் தனது மகள், குழந்தையின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்றதாக கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் வேறு எவருக்கும் நடக்க இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
சந்திவெளி மற்றும் கடுவெல பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பெண்ணொருவரும் இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடுவெல ஹன்வெல்ல – கொழும்பு வீதியில் கடுவெல நகருக்கு அருகில், பாதசாரி கடவையில் நடந்து சென்ற பெண் மீது லொறி ஒன்று மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
ரணால பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
பெண் ஒருவர் சடலமாக மீட்பு
பெண் ஒருவர் சடலமாக மீட்பு
களுத்துறை வடக்கில் வீடொன்றின் பின்புறம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு கெலிடோ வீதியை வசிப்பிடமாகக் கொண்ட விக்கிரமராட்சி பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (27) காலை வீட்டின் பின்புறம் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் கிடப்பதைப் பார்த்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கனடா தமிழர் காதை அடித்து கிழித்த பெண்
கனடா தமிழர் காதை அடித்து கிழித்த பெண்
யாழ்ப்பாணத்தில் கனடாவில் இருந்து சென்ற ஆண் ஒருவரது காதை அடித்து கிழித்துள்ளார் ,அங்கிருந்த பெண் ஒருவர் .
காரைநகர் கசூரினா பீச்சில் குளித்து கொண்டிருந்த கனடா நபர் போதையில் ,இளம் பெண் ஒருவரிடம் தகாத வார்த்தைகளை பேசி சீண்டியுள்ளார் .
ஆத்திரமுற்ற பெண் அவர் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை காத்திருந்து அவரது கன்னத்தில் ஓங்கி விட்ட அறையில் ,அவரது காது கிழிந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார் .
வீர மங்கைக்கு வாழ்த்துக்கள் என நெட்டிசன்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பறக்க விட்ட வண்ணம் உள்ளனர்.
லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை
லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை
தெற்கு லண்டன் பகுதியில் கடந்த 29 ஆம் திகதியில் இருந்து 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் .
இந்த சிறுமியை கண்ணுற்றால் தமக்கு தகவல் தரும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
இதுவரை இந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை .
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
காவல்துறை தேடுதல் வேட்டைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது
போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸாரினால் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது , 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் என தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மல்லாகம் பகுதிக்கு விரைந்த பொலிஸார் , போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்
பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ,ஸ்கூட்டர் வண்டியில் , வளர்ப்பு நோயினை கழுத்தில் கட்டி இழுத்து சென்றுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அவ்வழியே பயணித்தவர்கள் நாயை கழுத்தில் கட்டி இழுத்து செல்லும் காட்சியை ,காணொளி பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் .
அதுவே மக்கள் மத்தியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
சமபவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ,நாயினை மீட்டு சென்றுள்ளதுடன் மூதாட்டி மீதான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
பிரிட்டன் மக்கள் விலங்குகள் மீது அதிகம் மதிக்க கூடியவர்கள் .நாய்களை தமது செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் .
அவ்வாறு இருந்தும் இவ்விதமான சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன .
முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்
முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்
இளம் பெண் ஒருவர் வீதியில் முதலையுடன் நடக்கும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த பெண் முதலையை ,கழுத்தில் கட்டி வீதியால் நடந்து செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.
மனிதர்களை வேட்டையாடும் கொடிய விலங்கான , முதலையுடன் பெண்
இவ்வாறு வீதியில் நடந்து செல்லும் காட்சிகள் ,தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .
பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்
பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பேரூந்து ஒன்றில் பயணித்த பெண் ,ஒருவர் அந்த நடத்துனரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
பேரூந்தில் பயணித்த பெண் பயணி ,நடத்துனர் டிக்கட் எடுக்கும் படி கூறிய போது , அவரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இந்த பெண்ணின் தாக்குதலில், காயமடைந்த நடத்துனர் ,ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண் நடத்துனரை தாக்கிய பொழுது ,மக்கள் அந்த பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக ,நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன.
தாக்குதலை நடத்திய பெண், மனநலம் பாதிக்க பட்டவர் என, அந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .
















































