கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை

கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை

கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை ,வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , ராஜகல, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (06) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் இனந்தெரியாத நபர்கள் சிலர் புகுந்துள்ள நிலையில், வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைகால்கள் கட்டப்பட்டு கொலை

பின்னர், வீட்டில் வைத்து பெண்ணின் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 78 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் வசித்து வருவதுடன், இருவரும் இரவில் சிகிச்சைக்காக வெலிகம நகருக்குச்

சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை

வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை

கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த வீட்டில் வசித்து வந்த 81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (05) பிற்பகல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பூஜை செய்து விட்டு வீடு திரும்பியது தெரியவந்துள்ளது.

வீட்டில் உள்ள பொருட்களை திருட வந்த நபர் அல்லது குழுவால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அம்பலாந்தோட்டை 100 அடி வீதியில் பல்லகஸ்வெவ சந்திக்கு அருகாமையில் நேற்று படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் பாரகம, அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸில் இவரின் சகோதரர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காணாமல் போனவரை தேடியபோது, ​​அந்த இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு

கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு

உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு

மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞன், கை, கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் இருந்து

மீட்கப்பட்டு பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று (30) இரவு 11 மணியளவில் பருத்தித்துறை வல்புரம் குறிச்சிப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தன்னை குழுவொன்று கடத்திச் சென்று தாக்கியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கைநகர் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞனின் குடும்பத்தினருக்கு சொந்தமான வயல்

காணியில் ஒரு குழுவினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்

இந்த நிலையில், மணல் கடத்தல்காரர்களுக்கும் காணி உரிமையாளருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதுடன், மணல் கடத்தல் குழுவினர் கடந்த சனிக்கிழமை மாலை காணி

உரிமையாளரின் வீட்டிற்கு வாள்களுடன் சென்று மிரட்டிச் சென்றுள்ளனர்.

அதுதொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், பொலிஸார் உடனடி நடவடிக்கையை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அன்றைய தினம் நள்ளிரவு மீண்டும் வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியது.

இதன்போது, குறித்த வீட்டார் தஞ்சமடைந்திருந்த அயல் வீட்டுக்கு சென்ற குழுவினர், அவர்களை தாக்க முற்பட்ட நிலையில் தஞ்சமடைந்த வீட்டை சேர்ந்த நபர் அதனை தடுக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த குழுவினரின் தாக்குதலில் காயமடைந்த சின்னத்துரை துரைராசா (வயது 68) என்ற நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், காணிக்கு சொந்தமான குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பிரதீபன் (வயது 24) என்ற இளைஞன் சனிக்கிழமை மாலை குடிதண்ணீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வடமராட்சி முராவில் பகுதியில் சேதங்களுக்கு உள்ளான நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

இந்த நிலையிலேயே காணாமல்போன இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.