பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்

Spread the love

பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பேரூந்து ஒன்றில் பயணித்த பெண் ,ஒருவர் அந்த நடத்துனரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

பேரூந்தில் பயணித்த பெண் பயணி ,நடத்துனர் டிக்கட் எடுக்கும் படி கூறிய போது , அவரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இந்த பெண்ணின் தாக்குதலில், காயமடைந்த நடத்துனர் ,ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண் நடத்துனரை தாக்கிய பொழுது ,மக்கள் அந்த பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக ,நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன.


தாக்குதலை நடத்திய பெண், மனநலம் பாதிக்க பட்டவர் என, அந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply