Tag: கால்
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு
கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு
உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன
- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்
- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு
- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை
- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை
- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்
- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை
- மகிந்த மகன் யோஷிதா கைது

















