Tag: இளைஞன் பலி
துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி
துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி
துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி ,அநுராதபுரம் – ஸ்ரீபுர, கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரி – 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான்.
கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
மின்னல் தாக்கி இளைஞன் பலி
மின்னல் தாக்கி இளைஞன் பலி
மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது
குறித்த சம்பவம் இன்றைய தினம் (08) கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கி இளைஞன் பலி
உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
சந்திவெளி மற்றும் கடுவெல பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பெண்ணொருவரும் இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடுவெல ஹன்வெல்ல – கொழும்பு வீதியில் கடுவெல நகருக்கு அருகில், பாதசாரி கடவையில் நடந்து சென்ற பெண் மீது லொறி ஒன்று மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
ரணால பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- ஈரான் மீதான புதிய வியூகம்by நிருபர் காவலன்
- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்by நிருபர் காவலன்
- ரசியா டிரம்ப் பேச்சுby நிருபர் காவலன்
- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறதுby நிருபர் காவலன்
- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்by நிருபர் காவலன்
ரயில் மோதி 26 வயது இளைஞன் பலி
ரயில் மோதி 26 வயது இளைஞன் பலி
அனுராதபுரத்தில் இருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (15) இரவு 11.15 மணியளவில் மஹவ மடபொகுன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
உயிரிழந்தவர் மஹவ மடபொகுன பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என பொலிஸார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- ஈரான் மீதான புதிய வியூகம்
by நிருபர் காவலன் - காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
by நிருபர் காவலன் - தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்
by நிருபர் காவலன் - ரசியா டிரம்ப் பேச்சு
by நிருபர் காவலன் - காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
by நிருபர் காவலன்
கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி
கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி
கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறியொன்றும் கற்பிட்டி பள்ளிவாசல்துறை கண்டல்குடா பாலத்திற்கு அருகே மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி
எனினும், புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த இளைஞன், கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டியில் நேற்று (07) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியை பார்வையிட்ட பின் தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் இளைஞன் பலி
உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் இளைஞன் பலி
மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் இளைஞன் பலி
குறித்த வயலில் சம்பவதினமான இன்று பிற்பகல் உழவு இயந்திரத்தால் உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வயலில் உழவு இயந்திரத்தின் பின்பக்க ரயர்கள் புதைந்ததையடுத்து உழவு இயந்திர
முன்பகுதி மேல் எழுந்து தலைகீழக கவிழ்ந்ததில் அவர் கீழ் விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டு படுகாயமடைந்ததையடுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரை பொலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






















