உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு

உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு

உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு ,வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக மொத்தம் 57 சுயேச்சைக் குழுக்களும் 18 அரசியல் கட்சிகளும் இதுவரையிலும் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

168 உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதுடன், செலுத்தும் காலம் மார்ச் 3 ஆம் திகதி தொடங்கி மார்ச் 19 ஆம் திகதியுடன் முடிவடையும்.

உள்ளூட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகும்.

மேலும், தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க தேசிய தேர்தல் ஆணைக்குழு ஒரு சிறப்பு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அமைச்சக செயலாளர்கள், மாகாண சபைகள், கட்சி பொதுச் செயலாளர்கள், ஆணைக்குழுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில்
Posted in இலங்கை செய்திகள்

ஐந்து சபைகளுக்கு தேர்தல் நடக்காது

ஐந்து சபைகளுக்கு தேர்தல் நடக்காது

ஐந்து சபைகளுக்கு தேர்தல் நடக்காது ,எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இறுதி நாளான மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் திங்கள் கிழமை (03) அறிவித்துள்ளது. இதேவேளை கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை முதல் நாளான மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மே மாதம் முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரருக்கு பேட்டியளித்த தேர்தல் ஆணைக்குழுவின்‌ தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, வாக்களிப்புக்கான திகதி குறித்து விவாதித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவை எட்ட சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

“நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திற்கு ஏற்ப தொடர்புடைய திகதி அறிவிக்கப்படும்,” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.

2025 பட்ஜெட் விவாதம் முடியும் வரை வேட்புமனுக்களை கோருவதில் தாமதம் செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள, அதே நேரத்தில் அரசாங்கம் முந்தைய அறிவிப்பை வலியுறுத்தி வருகிறது.

தேசிய மக்கள் சக்தி (NPP) இந்த செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து குறிப்பாக குரல் கொடுத்து வருகிறது.

2023 ஆம் ஆண்டுக்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தல், வேட்புமனுக்கள் ஏற்கனவே தொடங்கிய பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. பல அரசியல் கட்சிகள் இந்த தாமதத்தை நீதிமன்றத்தில் எதிர்த்தன, 2025 தேர்தலுக்கு அதே வேட்புமனு பட்டியலைப் பயன்படுத்துவது நியாயமற்றது என்று வாதிட்டன.

புதிய நியமன செயல்முறைக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் தேவைப்படும் என்று நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

2025 வரவு -செலவு திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக, திங்கட்கிழமை (03) மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ள காணொளியில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க,உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களுக்கான விண்ணப்பங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் 25 மாவட்டங்களிலும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். கல்முனை மாநகர சபை, தெஹியத்த கண்டிய பிரதேச சபை , மன்னார் பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறாது என்றார்

அவற்றை தவிர்த்து, 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடைபெறும். மார்ச் 17ஆம் திகதி முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கட்டுப்பணம் முதல் நாளான 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அத்துடன், அந்த நாட்களுக்குள் வரும் போயா, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது.

இந்நிலையில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் மீள செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையிலும் 93 மில்லியன் ரூபாய் மீள கையளிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெற்றுக் கொள்ளாதவர்கள் இருந்தால், அதற்கான விண்ணப்பத்துடன், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.

இம்முறை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் கட்டுப்பணமாக 5000 ரூபாயையும் அரசியல் கட்சியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா 1500 ரூபாவையும் செலுத்த வேண்டும். அந்தந்த பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளுக்கு தேர்ந்தெடுக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை வேறுபடும்.

இதேவேளை, புதிய அரசியல் கட்சிகளை பதியும் நடவடிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 28ஆம் திகதி வரையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் அரசியல் கட்சி பதிவும் வெவ்வேறான செயற்பாடுகளாகும். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னரே, புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு இடம் பெறும் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில், இந்த வாரத்திற்குள் திகதி குறித்து கலந்துரையாடவும் இறுதி முடிவை எட்டவும் ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார்.

“அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

“நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு

இணங்க திகதி அறிவிக்கப்படும்,” என்று ஆணைக்குழுத் தலைவர் வலியுறுத்தினார்.

வரவு செலவுத் திட்ட விவாதம் முடியும் வரை வேட்புமனுக்களை தாக்கலைத் தாமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன, அதே நேரத்தில் அரசாங்கம் முன்கூட்டியே அறிவிக்க வலியுறுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) இந்த செயல்முறையை விரைவுபடுத்துவது தொடர்பில் குரல் கொடுத்து வருகிறது.

முதலில் 2023 இல் திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கிய பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

பல அரசியல் கட்சிகள் இந்த தாமதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன, 2025 தேர்தலுக்கும் அதே வேட்புமனுப் பட்டியலைப் பயன்படுத்துவது நியாயமற்றது என்று வாதிட்டன.

புதிய நியமன செயல்முறைக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் தேவைப்படும் என்று நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு ,உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரிவு 12 (பி), அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த சபாநாயகர், எஞ்சிய சரத்துகள் அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதாக, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர், பாராளுமன்றதலதில் தெரிவித்தார்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ,கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக

நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர்

நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இக்குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் பங்குபற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு ,2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும்.

புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச்

செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்படக்கூடும்.

அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பில் வைப்பிலிடப்பட்ட கட்டுப்பணத்தையும் மீள செலுத்தவும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.

வீடியோ

அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் குறித்த திகதி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

திகதியில் இருந்து 3 மாத காலத்திற்கு இடைப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்


அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்

அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் செலவு செய்த விடயம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,எங்கே மீதி பணம் ,கணக்கு காண்பிக்க மறுக்கும் அர்ச்சுனா |money

வீடியோ

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு

ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
Posted in இலங்கை செய்திகள்

மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு

மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு

மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு ,பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூட உள்ளது.

இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதெனவும் தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும்

வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும் தெரிவித்துள்ளது

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் முறைப்பாடுகள் அதிகரிப்பு ,அமைதியான முறையில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் இந்த காலப்பகுதியில், சமூக ஊடகங்கள் ஊடாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டமை தொடர்பில் 1,388 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதியில், 747 சமூக ஊடக இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், ஒக்டோபர் 11 முதல் இதுவரையில் மொத்தமாக 2,033 சமூக ஊடகங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள், இனம், மதம், ஆளுமை மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில், 385 பதிவாகியுள்ளன.

மேலும், வெறுப்பு பேச்சு தொடர்பாக 203 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு செலவு அதிகம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவிற்கு செலவு அதிகம்

தேர்தல் ஆணைக்குழுவிற்கு செலவு அதிகம்

தேர்தல் ஆணைக்குழுவிற்கு செலவு அதிகம் ,இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதால், கூடுதல் வாக்கு எண்ணும் மையங்கள்,

ஆவணப் பணிகள், வாக்குச் சீட்டு அச்சிடுதல் போன்றவற்றில் கூடுதல் செலவுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நேற்று (13) தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்ததாவது, வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் ஏற்ப வாக்குச்சீட்டுகளில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.

கடந்த முறை 1713 ஆக இருந்த வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை இம்முறை 2034 ஆக அதிகரித்துள்ளது என்றார்.

“இவை அனைத்தும் தேர்தல் அலுவலகத்திற்கு கூடுதல் செலவாகும். இருப்பினும், வாக்குப்பதிவைத் தொடர்ந்து சரியான மதிப்பீடுகள் செய்யப்பட்ட பின்னரே துல்லியமான செலவு உயர்வை அறிய முடியும்,” என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் நாளை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

‘கடின பிங்காமா’ (போயா தின பௌத்த வழிபாடு), வெள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் ஊனமுற்ற வாக்காளர்களுக்கான அணுகல் பிரச்சினைகள் காரணமாக

முன்பு பெரும்பாலும் பௌத்த விகாரைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட 60 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

நாடு முழுவதும் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இம்முறை, 225 பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்த, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5,464 வேட்பாளர்களும்,
3,357 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு ,நவம்பர் 14 ஆம் திகதியன்று நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு புதன்கிழமை (12) நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் 5 அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒரு கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிராக பதிவிடப்படும் தவறான பிரச்சாரங்கள்

தொடர்பில் கண்காணிபடவுள்ளது. பொய்ப் பிரசாரங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 50 பேர் ஈடுபடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் நாட்களில் வருகைதரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க மேலும் 08 நாடுகளின் தேர்தல்

கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார். சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.

இதேவேளை, இம்முறை பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயும் வகையிலேயே மேற்படி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (06) இடம்பெறவுள்ள மேற்படி பேச்சுவார்த்தையில் அனைவரும்

பங்கேற்கவேண்டுமென, ஆணைக்குழுவினால் அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது
Posted in இலங்கை செய்திகள்

வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது

வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது

வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது ,ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுதந்திரமானதும்

நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

கபே அமைப்பின் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளிலும், 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களிற்கான

தெளிவூட்டும் நிகழ்வும் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (03) இடம்பெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரமும் தற்போது இருக்கின்ற நிலவரத்தினையும் பார்க்கும் போது ஜனநாயகத்தை மதிக்கின்ற

வன்முறைகள் அற்ற ஒரு சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.

அதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிடலாம். அதேபோல இந்த பொதுத் தேர்தலிலும் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.

சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கினை வழங்குகின்றது.

இவற்றை நாம் கண்காணிக்கும் போது அபேட்சகர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய போலிப்பிரச்சாரங்கள், நாளுக்குநாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகின்றது.

எனவே, அனைத்து அரசியல் கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தக் கூடியவர்களை வரவழைத்து அமைதியான தேர்தலுக்காக ஒத்துழைப்போம் என்ற வகையில் சத்தியபிரமானம் ஒன்றை பெறுகின்றோம்.

எனவே, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும்.

வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும், ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என கபே அமைப்பு கேட்டுக்கொள்கின்றது என்றார்.

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் தேர்தல் திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான பெரும்பாலான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில்

ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதிக்காக சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

தேர்தல் திகதியில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் திகதியில் மாற்றம்

தேர்தல் திகதியில் மாற்றம்

தேர்தல் திகதியில் மாற்றம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும், அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது மக்களின் இறையாண்மையை மீறுவதாக, அறிஞர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையகமும் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

சட்ட ஆலோசனைக்கு பின்னர், நாடாளுமன்ற தேர்தல் திகதி மாற்றப்படும் என, அரச வட்டாரத் தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிய திகதியைக் குறிப்பிட்டு புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

முன்னாள் போராளி யசோதினி தேர்தல் பிரச்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் போராளி யசோதினி தேர்தல் பிரச்சாரம்

முன்னாள் போராளி யசோதினி தேர்தல் பிரச்சாரம்

முன்னாள் போராளி யசோதினி தேர்தல் பிரச்சாரம் ,வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் முன்னாள் போராளி யசோதினி இன்றைய தினம் (21) மன்னாரில் பல பகுதிகளிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார்.

அவருக்கு ஆதரவாக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மன்னார் நகர பஜார் பகுதியில் ஆதரவாளர்களுடன் சந்திப்பிலும் ஈடுபட்டார்.

மேலும் மன்னார் சாந்திபுரம் பேசாலை, நானாட்டான் பகுதியிலும் சந்திப்புகளை மேற்கொண்டார்.

இதில் மன்னார் மாவட்ட சங்க உறுப்பினர்கள், போராளி நலம்புரிச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல் தற்போது வெளியிட பட்டுள்ளது .இந்த பாடல் தற்பொழுது சமூக வாலித்தலங்களில் வேகமாக பரவி வருகிறது .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் வெற்றியை பறை சாற்றும் வகையில் இந்த பாடல்கள் உருவாக்கம் பெற்றுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக இந்த பாடல் அறிமுகம் செய்யப்பட்டது .இந்த பாடலை பாடியுள்ளார் – பாவேந்தன் இளங்கோவன் – இசை – இளங்கோ செல்லப்பா – பாடல்வரிகள் வன்னி மைந்தன் – இந்த பாடல் உருவாக்கம் பெறுவதற்கு பின்தளத்தில் நிதி அளித்து உதவி புரிந்துள்ளார் மயூரன் கனடாவில் இருந்து .

இந்த பாடல் அர்ச்சுனா தேர்தல் களத்தில் வெற்றி பெற உழைத்த உங்கள் அனைவருக்கும் எதிரி இணையத்தின் சார்ப்பில் மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

30 மணித்தியால இடைவெளியில் இரண்டாவதாக ….ஓடி வாடா தமிழா ..என்ற இந்த பாடலை உருவாக்கி வழங்கிய இசை அமைப்பாளர் அண்ணன் இளங்கோ செல்லாப்பாவிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் .

மக்களே இந்த பாடலை எடுத்து பரப்புங்கள் ,மருத்துவர் அர்ச்சுனா வெற்றி பெற உங்கள் ஆதரவை நீட்டுங்கள் .

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் அதிரடியாக வெளியிட பட்டுள்ளது .மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை ஆதரிக்கும் அன்புகொண்ட உறவுகள் இணைந்து வேகமாக உருவாக்கிய வெளியிட பட்ட முதலாவது தேர்தல் பாடல் .

இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கிய வண்ணம் உள்ளது .

வேட்டை காரன் வாறான் என்கின்ற இந்த பாடலுக்கு இசையமைப்பு – இளங்கோ செல்லப்பா – பாடியவர் பாவேந்தன் – இளங்கோவன் – பாடல் வரிகள் -வன்னி மைந்தன் –

இந்த பாடல் வெளியாக நிதி உதவி அளித்தவர் சோதரி டயானி ,ஆகியோர் கூட்டு முயற்சியில் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் பரப்புரை பாடல் வெளியாகியுள்ளது .

இந்த பாடலை 48 மணித்தியாலத்தில் உருவாக்கி வழங்கிய அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு ,நிதி உதவி வழங்கிய சோதரி டயானிக்கும் விஷேட நன்றிகளையும் பாராட்டையும் நாம் தெரிவித்து கொள்கிறோம் .

வெல்லட்டும் அர்ச்சுனா சுயேட்சை குழு ,உங்களோடு நாங்கள் ,ஆறு பேரை வெல்லவைப்போம் ,அரியணையில் ஏற்றுவோம் .

எம் தமிழா எழுந்து வா ,ஏற்றடா அரியணை .

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார்
Posted in இலங்கை செய்திகள்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார் .,புதிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அந்தந்த அரசியல் கட்சிகள் தனித்தனியாக கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் நான்கு தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

பொதுத் தேர்தல், எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகிய நான்கு தேர்தல்கள் ஆகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை ரத்து செய்யுமாறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக சட்டத் துறைகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்து.