Tag: இடைநிறுத்தம்
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் தற்போதைக்கு இடைநிறுத்தம்
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் தற்போதைக்கு இடைநிறுத்தம்
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் தற்போதைக்கு இடைநிறுத்தம் கருத்து வேறுபாடுகள் நீடிப்பதால்

21 மணி நேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் ஈரானுடன் ஒரு உடன்பாடு எட்டப்படாததால், தனது பேச்சுவார்த்தைக் குழு பாகிஸ்தானை விட்டு
வெளியேறுவதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வேன்ஸ், அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்பது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டதாகக் கூறினார்.
“கெட்ட செய்தி என்னவென்றால், நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை. இது அமெரிக்காவிற்கு கெட்ட செய்தியாக இருப்பதை விட ஈரானுக்கு மிகவும் கெட்ட செய்தி என்று நான் நினைக்கிறேன்,” என்று வேன்ஸ் கூறினார்.
“ஆகவே, அமெரிக்கா ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்ற விஷயத்திற்கு மீண்டும் வருகிறோம். எங்களின் சிவப்பு கோடுகள் என்ன என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறிவிட்டோம்.”
பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஆறு முறை பேசியதாக வேன்ஸ் கூறினார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகள், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடந்த முதல் நேரடி அமெரிக்க-ஈரான் சந்திப்பாகும். மேலும், 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடந்த மிக உயர்ந்த மட்டத்திலான
கலந்துரையாடல்களும் இதுவே ஆகும். இந்த முடிவானது, நிலையற்ற இரண்டு வார கால போர் நிறுத்தத்தின் தலைவிதியையும், போர் தொடங்கியதிலிருந்து
ஈரான் தடுத்துள்ள, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20%-க்கு ஒரு முக்கியத் தடையாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையும் தீர்மானிக்கக்கூடும்.
இந்த மோதல் உலகளாவிய எண்ணெய் விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்களையும் கொன்றுள்ளது.
X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகவும்,
இரு தரப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வார்கள் என்றும் ஈரான் அரசாங்கம் கூறியுள்ளது.
“சில வேறுபாடுகள் எஞ்சியிருந்தாலும் பேச்சுவார்த்தைகள் தொடரும்,” என்று அந்தப் பதிவில் மேலும் கூறப்பட்டிருந்தாலும், அவை எப்போது மீண்டும் தொடங்கும் என்று அது குறிப்பிடவில்லை.
மத்தியஸ்த நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தகவலின்படி, வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர்
ஆகியோர், ஓய்வெடுப்பதற்கு முன்பு ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரை இரண்டு மணி நேரம் சந்தித்தனர்.
ஈரானிய தூதுக்குழுவினர், மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் போரில் கொல்லப்பட்ட மற்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கருப்பு உடை அணிந்து வெள்ளிக்கிழமை வந்தடைந்தனர்.
இராணுவ வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பள்ளியின் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட சில மாணவர்களின் காலணிகளையும் பைகளையும் அவர்கள் கொண்டு வந்ததாக ஈரானிய அரசாங்கம் கூறியது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பென்டகன் கூறியுள்ள நிலையில்,
இதற்கு அமெரிக்காவே காரணமாக இருக்கக்கூடும் என இராணுவ புலனாய்வாளர்கள் நம்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம் ,தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான
அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம் ,காணி நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், வடக்கு மாகாணத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக 28.03.2025
திகதியிட்ட 2430/25 இலக்க வர்த்தமானியை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு நேற்று (27) விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக
வலுவிழக்கச் செய்யும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூலை 2, 2025 அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர், அரசாங்கம் குறித்த வர்த்தமானியை மீளப்பெறுவதற்கான புதிய வர்த்தமானியை வெளியிட்டால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை உரிமை மீறல் வழக்கு
இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC/FR/112/25) இல், மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின்
பேரில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா, மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம் ,கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ஆராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டி நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்போரா காரணமாக இந்த ரயில்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சீர் செய்யப்பட்ட பின்னர் வளமை போன்று ரயில்வே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த துணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த திடீர் சாலை தடைப்பட்டதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்..
தமது தொழில் பற்றி வேகமாக ஈடுபட்டு வருவதாக விரைவில் இந்த சேவைகள் நிகழும் வழமைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கஞ்சி கடையில் இடம் பெற்று வருகின்ற ரயில் சேவை அதிகமான மக்கள் பயணித்து வருவதும் கண்டு கொழும்பு கடையிலான சேவைகளும் பலமான பாதிப்புக்கு உள்ளாக கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கு குளிர்ந்த பயணிகள் பெரும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

கணேசபுரத்தில் எல்லை கல் நடுதல் இடைநிறுத்தம்
கணேசபுரத்தில் எல்லை கல் நடுதல் இடைநிறுத்தம்
கணேசபுரத்தில் எல்லை கல் நடுதல் இடைநிறுத்தம் ,வன இலாகா திணைக்களத்தால் வவுனியா கணேசபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட எல்லை கற்களை நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
வன இலாக திணைக்களத்தால் அந்தப் பகுதியில் கல் நடப்படுவதாக தெரிவித்தே வவுனியா கணேசபுரம் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் அந்த விடயங்களை கையாளுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். எவருக்கும் கூறாது கல் நாட்டப்படக் கூடாது என்றே அபிவிருத்திக் குழுவில்
தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் கூறாது அது நடைபெறும் நிலையில் மக்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் உடனடிய அந்த நடவடிக்கைகளை நிறுத்த அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என செல்வம் எம்.பி, கோரிநின்றார்.
இதன்போது பதிலளித்த வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க கூறுகையில்,
இது தொடர்பில் காலையில் எங்களுக்கு அறியக் கிடைத்தது. அதனை அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதாவது தேர்தல் காலம் முடிவடையும் வரையிலும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அதனை செயற்படுத்தும் வரையில் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இடைநிறுத்தம் ரயில் சேவைகள்
இடைநிறுத்தம் ரயில் சேவைகள்
இடைநிறுத்தம் ரயில் சேவைகள் ,இன்று (17) அதிகாலை இடம்பெற்ற விபத்தை அடுத்து மட்டக்களப்புக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் தினசரி ஆறு ரயில்கள் இயக்கப்படுகின்றன, ஆனால் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் மோதியதால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மின்னேரியா மற்றும் ஹிகுராக்கொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் கொலன்னாவ பெற்றோலிய
சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் காட்டு யானைகள் மீது மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயிலின் நான்கு எரிபொருள் தாங்கிகள் சேதமடைந்துள்ளதுடன், அவற்றில் இரண்டு தாக்கத்தினால் கவிழ்ந்துள்ளன.
ரயில்வே அதிகாரிகள் நிலைமையை மதிப்பிடுவதற்கும், தண்டவாளங்களை அகற்றுவதற்கும் பணியாற்றி வருகின்றனர், அதே நேரத்தில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

மருந்து முன்பதிவு இடைநிறுத்தம்
மருந்து முன்பதிவு இடைநிறுத்தம்
நாட்டில் மருந்து விநியோகம் தொடர்பில், பாரிய நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல முன்பதிவுகளையும் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், குறித்த முன்பதிகளை இரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு இடைநிறுத்தம்
பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு இடைநிறுத்தம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு தொழில் பிரிவுகளுக்கு தொழிலாளர்களாக இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வீட்டு பணிப்பெண்கள் மற்றும் துப்புரவு சேவைகள் தொடர்பான பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.



























