செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள், செம்மணி மனித புதைகுழியில் கடந்த தினம் இரண்டு மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள்

செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இரண்டாவது நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணியின் பொழுது இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி

இதுவரை இந்தசெம்மணி மனித புதைகுழியில் இருந்து 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . முதல் கட்டமாக 15 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பணிகளில் இந்த எலும்பு கூடுகள் மீட்ககப்பட்டுள்ளன.

இதுவரை 26க்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக புதிய சுயாதீன தகவல் தெரிவிக்கின்றன.

சந்திரிகா காலத்தில் இடம்பெற்ற ராணுவ நடவடிக்கையின் போது, புதைக்கப்பட்ட சடலங்கே தற்பொழுது தோண்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கட்டிப் பிடித்தபடி இறந்த நிலையில் தாயின் உடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சிங்கள ராணுவ காட்டினால் மிக கொடூரமாக குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குடும்பங்களுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த படுகொலைகள் இப்பொழுது மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகின்றது .

இவ்வாறான நிலையில் இந்த செம்மணி விவகாரம் உலக அரங்கில் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.