Tag: எலும்பு கூடுகள்
செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு
செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு
செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு ,யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 39ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய அகழ்வில் அருகருகே
காணப்பட்ட இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் உள்ளிட்ட 13 எலும்பு கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
அத்துடன், சில எலும்பு கூடுகள் குவியல் நிலையில் காணப்பட்டதுடன், சில எலும்பு கூடுகள் மண்டையோடுகள் இல்லாத நிலையிலும் அடையாளம் வெளிப்பட்டுள்ளன.
குவியல் நிலையில் காணப்பட்ட எலும்பு கூடுகளுக்குள் மண்டையோடுகளும் காணப்படுவதால், மேலதிக ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பான
முழுமையான தகவல்களை வெளியிட முடியும் என சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஏற்கனவே வெளிப்பட்ட எலும்பு கூடுகளில் 3 சிறுவர்களுக்குரியவை உட்பட 4 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 93 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 467 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 444 எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் நடைபெற்றபோதே இவை அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.
8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்
8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்
8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில் மீட்க பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .8 Bones in the semmani
செம்மணி மயானத்தின் அருகில் தமிழர் சடலங்கள் Tamil corpses near the Semmani cemetery
இதய நாதமாக விளங்கும் செம்மணி மயானத்தின் அருகில் தமிழர் சடலங்கள் மீட்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கட்டி பிடித்தவாறு இரு சடலங்கள் காணப்பட்டுள்ளது .
இதில் தாயும் சேயும் ஆக சடலம் இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது Arrested on suspicion of being a member of the Liberation Tigers of Tamil Eelam
தமிழீழ விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே இவ்விதம் மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட பின்னர் இங்கு கொலை செய்ய பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதியில் கொடுமைகள் அனுபவித்து செய்ய படு கொலை செய்ய பட்ட மக்களே இவ்விதம் கொன்று வீசபட்டுள்ளனர் .
இவ்விதம் வெளிவரும் பிந்தி வரும் செய்திகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
















