யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம் ,யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது.

உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று

சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி
Posted in உலக செய்திகள்

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி ,இந்தியாவின் பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் (22) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

அந்த இளைஞரை அவரது குடும்பத்தினர் மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து அவருக்கு வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட உலோகப் பொருட்களை வைத்தியர்கள் அகற்றினர்.

அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள் குழுவின் தலைவர் வைத்தியர் அமித் குமார் கூறுகையில்,

நாங்கள் இளைஞரிடம் கேட்டபோது, அவர் சமீபத்தில் உலோக பொருட்களை விழுங்க தொடங்கியது தெரிய வந்தது.

சிகிச்சைக்கு பின்னர் இளைஞர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு சில மனநலப் பிரச்சனைகள் உள்ளன, அதற்காக அவர் மருந்து உட்கொண்டு வருகிறார். இளைஞர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார்.