Tag: கைது
லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது
லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது
லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது ,லண்டனில் 800 பலஸ்தீன ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன ஆதரவு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன .800 Palestinians arrested in London
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டம் Protest in support of the Palestinian people
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகிற இந்த யுத்தத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது .
800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு 14 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய அந்த பாலஸ்தீன ஆதரவு அமைப்பும் இந்த பிரித்தானிய மண்ணில் தடை செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது Arrest under the Terrorism Act
இவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கப்பெறும் என தெரிவிக்க படுகிறது .
இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இராணுவ விமான தளங்களின் தாக்கி இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதாகும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக 1500க்கு மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் செய்ததால் இந்த கட்சி பயங்கரவாத தடை சட்டத்த்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது .
மனிதாபிமானிகள் நீதி சட்டம் பேசுகிற உலகம் இந்த கைது சரியா என்ற கேள்விக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது .
இலஞ்சம் பெற்ற 49பேர் கைது
இலஞ்சம் பெற்ற 49பேர் கைது
இலஞ்சம் பெற்ற 49பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது.49 people arrested for accepting bribes .
கடந்த ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 49 கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 சுற்றி வளைப்பு நடவடிக்கை 72 Roundup operation
72 சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ,அவற்றில் 39 சுற்றி வளைப்புக்கள் வெற்றி அழித்துள்ளதாகவும்
அவ்வாறு வெற்றியடைந்து சுற்றிவழிப்புக்குள்ளேயே 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்பு நடவடிக்கையின் பொழுது 17 போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய நிலையில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 27 பேர் நீதிமன்ற குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு Bribery Commission to eradicate corruption
இலங்கையில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு மேற்கொள்கிற இந்த விடயங்கள் வரவேற்பு பெற்றுள்ளது.
நாடு திவால ஆவதற்கு காரணமாக இருக்கின்ற காரணிகள் இந்த லஞ்சம் வருவதே காரணமாகிறது.
ஆகவே இந்த லஞ்சோலை ஒழித்தால் மட்டுமே நாடு முழுவதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் 3937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
ஆனால் அவற்றில் 49 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளது என்கிறது இந்த ஆணைக்குழு.
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு

- டெங்கு பாதிப்புகள் 76000-ஐத் தாண்டியுள்ளது

- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ

- காட்டுத்தீயைத் தொடர்ந்து பாறைச்சரிவு அபாயம்

- 305 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

- லாரி மோட்டார் சைக்கிள் மோதல் இருவர் பலி

ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். Woman arrested for stealing money from temple
திருவிழாவில் கொள்ளையடித்த பெண் கைது
மட்டக்களப்பு மண்டூர் முருகன ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் பெண் ஒருவர் 20000 பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாடு
பணப்பை திருடப்பட்டுள்ளதாக காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.
குறித்த 39 வயது பெண்ணிடமிருந்து மேலதிகமாக 65 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு சொற்ப நேரத்திற்குள் குறித்த பெண் பணத்தோடு கைது செய்யப்படுகிறார் என்றால் ,இவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது திட்டமிடப்பட்ட காவல்துறையின் நாடகமா அல்லது உண்மையில் திருட்டில் ஈடுபட்ட பெண் விசாரணையின் மூலம் தான் கைது செய்ய பட்டாரா என பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது .
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு

- டெங்கு பாதிப்புகள் 76000-ஐத் தாண்டியுள்ளது

- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ

ரணில் கைது நாடகம் முடிந்தது
ரணில் கைது நாடகம் முடிந்தது
ரணில் கைது நாடகம் முடிந்தது , இப்பொழுது ரணில் நிம்மதியாக உலாவி வருகிறார். அனுரா அரசின் அரசியல் கபட நாடகமாக இது வெளிப்பட்டுள்ளதுஎன்பதே அப்பட்டமாக தெரிகிறது .Ranil’s arrest drama is over
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்கா
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்காவின் ஆட்சியில் ,லஞ்ச ஊழல்களை ஒழிக்க வந்ததாக கூறுகிறது.
அவிதம் கூறியே முன்னாள் ஜனாதிபதி ரணில் ரனில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கா கைது
ரணில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 72 மணித்தியாலத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மிகப்பெரும் லஞ்ச ஊழல் குற்றச்செயலை புரிந்தவர் எவ்வாறு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்கின்ற கேள்வி மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.
ஆகவே இது ஓட்டு அரசியலாக மாற்றி மக்களை தமது ஆதரவாளர்களை குஷிப்படுத்துகிற நடவடிக்கையின், அரசியல் கபட நாடகமாக காணப்படுகிறது.
ஆக மொத்தம் அனுரா அரசு மீளவும் இலங்கை வாழ் மக்களை ஏமாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
முன்னாள் அரசியல்வாதிகளுடன் கூட்டிணைந்து நாடகமாடி வருகிறது என்பதை, இந்த கைது நடவடிக்கையும் ,ரணில் விக்கிரமசிங்காவின் விடுதலை நடவடிக்கையும் காண்பிக்கிறது .
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு

- டெங்கு பாதிப்புகள் 76000-ஐத் தாண்டியுள்ளது

- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ

- காட்டுத்தீயைத் தொடர்ந்து பாறைச்சரிவு அபாயம்

- 305 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

- லாரி மோட்டார் சைக்கிள் மோதல் இருவர் பலி

பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது
பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது
பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது
இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை,
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்
அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் காவலில் எடுத்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மேலதிக
கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு
விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை 5:50 மணியளவில் அவர்கள் இலங்கை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குற்றக் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்
சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள்
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில்
மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி
விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது
பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது
பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது ,டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக 2 மாணவர்கள் கைது: காவல்துறை.
டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கிளெமென்ஸ் உயர்நிலைப் பள்ளி பள்ளி வள அதிகாரியை வியாழக்கிழமை பள்ளி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு,
மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல்
இரண்டு ஆண் மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல் விடுத்ததாக ஷெர்ட்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது, ஒரு மாணவர் “பள்ளியைச் சுடுவேன்” என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தெரியவந்தது, இருப்பினும் அவரிடம் எந்த துப்பாக்கிகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இரண்டாவது மாணவர் “ஆயுதங்களை வழங்க முடியும்” என்று கூறினார்.
ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்றாவது மாணவர் இந்த மிரட்டல்களை பள்ளி நிர்வாகிகளிடம் தெரிவித்தார், மேலும் பயங்கரவாத மிரட்டல் குற்றச்சாட்டை ஆதரிக்க வீடியோ ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத மிரட்டல் விடுத்ததற்காக இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர், இது டெக்சாஸில் மூன்றாம் நிலை குற்றமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ரணில் கைது: வீடியோ எடுத்தவர்களை கைது
ரணில் கைது: வீடியோ எடுத்தவர்களை கைது
ரணில் கைது: வீடியோ எடுத்தவர்களை கைது ,நிதி முறைகேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அன்றிரவு நீதிமன்ற அறையில்
நடந்த சில நிகழ்வுகளை வீடியோ எடுத்த நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி
வழக்கு விசாரணையின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சந்தேக
நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா ஆகியோருடன் வழக்கு விசாரணையின் சார்பில் ஆஜரான மேலதிக
சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி வழக்கறிஞர் திலீப பீரிஸ், சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்த வந்த சில வழக்கறிஞர்கள்
தொடர்ந்து தடைகளை விதித்ததால் தனது வாதத்தை முன்வைக்க சிரமங்கள் ஏற்பட்டது என்றும், நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்க தனக்கு
வாய்ப்பளிக்க நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தலையிட வேண்டியிருந்தது என்றும் நீதிமன்றத்திற்கு நினைவூட்டினார்.
ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அறிவித்தபோது
சந்தேகநபர் ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அறிவித்தபோது நீதிமன்ற அறையில் இருந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்ப நடவடிக்கை எடுத்ததாகவும், நீதிமன்ற
அறையில் உள்ள இருக்கையில் சந்தேகநபர் அமர்ந்திருந்தபோது அவரை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பவும் நடவடிக்கை எடுத்ததாகவும்
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதியிடம், “வழக்கை விசாரித்த நீதிபதிகள்
‘பெலவத்தையிலிருந்து பெறப்பட்ட தீர்ப்புகள்’ என்று கூறினால் என்ன செய்வது? அதன் நிலை என்ன?” என்று கேட்டார்.
வழக்கு முடிவடைந்த பிறகு இரவு 11.00 மணி வரை தான் உட்பட விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற அறையில் இருக்க வேண்டியிருந்தால் சட்டப் பாதுகாப்பு எங்கே என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், வழக்கை
ஏனோதானோவென்று தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். சட்ட தேவதையின் கைகளில் தண்டனை வழங்க வாள்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ், நீதி செயல்முறையைப் பாதுகாக்க அந்த வாளைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்.
வழக்கு குறித்து வாய்வீச்சு அறிக்கைகளை வெளியிட்ட யூடியூபர்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில்
வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், , நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்களை
உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டார்.
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர்
கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவாய கிராம சேவையாளர் பிரிவில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய்
அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய் பெறுமதியான பற்றுச்சீட்டை பெற்றுக் கொண்டிருந்தபோது, குறித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் கிராம சேவகர் சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது கஹவத்தை துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இரத்தினபுரி பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவின் யாயின்ன பகுதியில் ஒருவரை சுட்டுக் கொல்ல உதவிய சந்தேக நபர் நேற்று (26) பெல்வாடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு முயற்சிக்கு உதவிய ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவின் ரயில் நிலைய வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஒருவரைச் சுட்டுக்
கொல்ல முயன்ற குற்றம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று காலை பொரலஸ்கமுவ பகுதியில் 12 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக
குற்றத்திற்கு உதவிய பெண்
நபர் கைது செய்யப்பட்ட, அதே நேரத்தில் குற்றத்திற்கு உதவிய பெண் சந்தேகநபர், தெல்கஹாவத்தை – ஹல்பிட்ட பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதானவருடன், பெண் சந்தேக நபர் கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு இருவர் கைது
துப்பாக்கிச் சூடு இருவர் கைது
துப்பாக்கிச் சூடு இருவர் கைது பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களுடன் துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொரளை பொலிஸார்
சந்தேக நபர்களை பொரளை பொலிஸார் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்
ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்
ரணில் கைது ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள் ஊடகச் சந்திப்பை மேற்கொண்டு தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு மக்கள் ஓட்டுக்கள் இன்றி இலங்கையின் ஜனாதிபதியாக மாற்றம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கா கைது
செய்யப்பட்டதை கண்டித்து, ஊடகவியல்களை சந்தித்து எதிர்க்கட்சியினர் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர் .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையில்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஒன்று கூடிய தமிழ் சிங்கள கட்சிகள் இணைந்து தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்த கண்டனத்தில் மனோ கணேசன் மற்றும் றவு கக்கீம் இணைந்து தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .
மனோ கணேசன், இப்பொழுது அந்தர் பெல்டி
தமிழருக்கு அரசியல் தீர்வு தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த மனோ கணேசன், இப்பொழுது அந்தர் பெல்டி அடித்து ரணில் ரொம்ப நல்லவர் அவர் கைது செய்தது தவறு என நாடகமாடி இருக்கிறார்.
இவர்களெல்லாம் கூலி குலுக்கல் தான் என்பதை இந்த சம்பவங்கள் எடுத்து காண்பித்துள்ளது.
16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
16பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது ,மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது
பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை
அத்துடன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும் திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தாய் தந்தையை இழந்த நிலையில், அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்கவைத்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினார்கள்
முறைப்பாடு செய்ததற்கு அமைய முன்னெடுத்த விசாரணையில் குறித்த இளைஞனே அதனை திருடியுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.
தங்க ஆபரண விற்பனை நிலையம்
இதனையடுத்து குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் திருடிய தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க காப்புக்களை திருடி எடுத்துக் கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து அதனை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைகடை
ஒன்றில் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலச்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஸ்மாட் ரக கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன்,
ஏனைய பணத்தில் உடைகளை வாங்கியுள்ள அதேநேரத்தில், உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன என்பது தொடர்பாக இந்த காணொளி வாயிலாக நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
இன்றைய இலங்கை அரசியல்
இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் ,கொழும்பில் நடத்துகிற இந்த அரசியல் கபட நாடகமும் ,தமிழுக்கு மட்டுமல்லாது சிங்கள மக்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது.
அரசியல் சதுரங்க ஆட்டத்தில்
இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சாணக்கிய அரசியல்வாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற முன்னாள் ஜனாதிபதிகள் இந்நாள்
ஜனாதிபதிகள் என்பன தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஒன்றாக பார்க்க படுகிறது .
தொடராக மேற்கொண்டு வருகின்ற சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே ரனில் விக்கிரமசிங்காவின் காகிதம் மருத்துவ சிகிச்சைக்காக அவர்
சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட வேண்டிய தேவை என்கின்ற, கோட்பாடும் அதற்கு நீதிமன்றம் அதற்கு அனுமதி அளிக்கிற நடவடிக்கையும் காணப்படுகிறது.
இந்த விடயங்களை கூட்டி கழுத்து பெருக்கி பார்த்தால் எங்கோ ஏதோ ஒரு மூலையில் ஒற்றுமை காணப்படுவதையும் பின்னால் இருக்கிற பல்வேறுபட்ட முடிச்சுகள் அவிழ்க்க படுவதையும் காணப்படுகிறது.
ஆகவே இந்த காணொளியில் முழுமையான விடயங்களை காணொளியில் பாருங்கள்.
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு

- டெங்கு பாதிப்புகள் 76000-ஐத் தாண்டியுள்ளது

- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ

மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது
மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது
மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேரடியாக தொடர்புடைய
குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, பகிரங்க பிடியாணை பிறப்பட்டிருந்த 158 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது அருந்தி வாகனம் செலுத்திய 100 பேர் கைது
அத்துடன் மது அருந்தி வாகனம் செலுத்திய 100 பேர் கைது செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 3,635 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது
கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது
கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர்.
தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது
தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவிடமிருந்து மூன்று மன்னா கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 17, 18, 21, 25, 27, மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள்
சந்தேக நபர்கள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 12 அன்று இரவு, ஈரியகஹலிந்த பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக சீதுவை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
தாக்குதலில் படுகாயமடைந்த 40 வயது நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சீதுவை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது
பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது
பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக இங்கிலாந்து போலீசார் 150 பேரை கைது செய்தனர், காசாவில்
பாலஸ்தீன நடவடிக்கை குழுவை
பாலஸ்தீன நடவடிக்கை குழுவை தடை செய்வதற்கான பிரிட்டனின் முடிவுக்கு எதிரான போராட்டத்தில் 150 பேரை கைது செய்ததாக லண்டன் பெருநகர
காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது, மேலும் அது மேலும் கைதுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற சதுக்கத்தில் குழுவிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் பதாகைகளை அசைத்து, கூட்டத்தினர் கூடியதை அடுத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக படை X இல் தெரிவித்துள்ளது.
கருப்பு மற்றும் வெள்ளை
கருப்பு மற்றும் வெள்ளை பாலஸ்தீன ஸ்கார்ஃப்களை அணிந்திருந்த போராட்டக்காரர்கள், சிலர் “உங்களுக்கு அவமானம்” மற்றும் “காசாவை விட்டு வெளியேறு” என்று கோஷமிட்டனர், மேலும் “இனப்படுகொலையை நான்
எதிர்க்கிறேன். பாலஸ்தீன நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்” போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர், சம்பவ இடத்தில் ராய்ட்டர்ஸ் எடுத்த வீடியோ காட்டியது.
இந்தத் தடை குழுவில் உறுப்பினராக இருப்பது குற்றமாகும், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
பாலஸ்தீன நடவடிக்கையின் இணை நிறுவனர் ஹுடா அம்மோரி கடந்த வாரம் தடைக்கு எதிராக சட்டப்பூர்வ சவாலை முன்வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார்.
4 இந்திய மீனவர்கள் கைது
4 இந்திய மீனவர்கள் கைது
4 இந்திய மீனவர்கள் கைது நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடி படகு
அவர்களுடன் ஒரு மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற கடற்படையினர், அவர்களை மேலதிக சட்ட
நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
22 பேர் கடற்படையினரால் கைது
22 பேர் கடற்படையினரால் கைது
22 பேர் கடற்படையினரால் கைது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி
முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது செய்துள்ளது.
கடற்படை, பொலிஸார்
கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை ஜூலை 23 முதல் 31 வரை நாட்டின் கடல் எல்லைகளை உள்ளடக்கியதாக இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 210 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
திருகோணமலையின் கோட்பே, கும்புறுப்பிட்டி, கிண்ணியா, மூதூர் மற்றும் மன்னாரின் கக்கரதீவு
ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சொத்துக்களை குவித்த நபர் கைது
சொத்துக்களை குவித்த நபர் கைது
சொத்துக்களை குவித்த நபர் கைது ,பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய
பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள்
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபரின் முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாவைக் கொண்டு வாங்கிய பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டது. இது
தொடர்பாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர், இந்த முடக்கம் தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும்
தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.















































