சொத்துக்களை குவித்த நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சொத்துக்களை குவித்த நபர் கைது

சொத்துக்களை குவித்த நபர் கைது

சொத்துக்களை குவித்த நபர் கைது ,பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய

பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள்

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார்.

சந்தேக நபரின் முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாவைக் கொண்டு வாங்கிய பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டது. இது

தொடர்பாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர், இந்த முடக்கம் தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும்

தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ

பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ

பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ ,பிள்ளையானின் பலநூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களின் விபரங்கள் இதோ..!


மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும்

சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர்.


அறிக்கையில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள்:-
இலங்கையில் உள்ள சொத்துக்கள்.

  1. வீடு – 01, மட்டக்களப்பு பூம்புகார் என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 2 கோடி.
  2. வீடு – 02, கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் றோயல் அப்பார்ட்மென்டில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 6.5 கோடி.
  3. வீடு – 03, கொழும்பு கறுவாத்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 23 கோடி.
  4. வீடு – 04, மட்டக்களப்பு வாவிக்கரை வீதி – 01 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 12 கோடி.
  5. சுற்றுலாவிடுதி – 01, திருகோணமலை உப்புவெளி என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 5 கோடி.
  6. சுற்றுலாவிடுதி – 02, நுவரெலியா, நுவரெலியா நகர் என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 17 கோடி.
  7. 12 ஏக்கர் நிலம், மட்டக்களப்பு பாசிக்குடா என்ற இடத்தில் இந்த 12ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 25 கோடி.
  8. 50 ஏக்கர் நிலம், திருகோணமலை, கும்புறுப்பிட்டி என்ற இடத்தில் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 20 கோடி.
  9. நிலத்தொகுதி, மட்டக்களப்பு திராய்மடு என்னும் இடத்தில் இந்த நிலத்தொகுதி காணப்படுகிறது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
  10. 115ஏக்கர் வயற்காணி, மட்டக்களப்பு புளுட்டுமானோடை என்ற இடத்தில் இந்த வயற்காணி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
  11. 10ஏக்கர் நிலம், மட்டக்களப்பு மாங்கேணி என்ற இடத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
  12. ஆழ்கடல் மீன்பிடி இழுவைப்படகுகள் 12, கொழும்பு டிக்கோவிட்ட என்னும் இடத்தில் இந்த இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி: 20 கோடி.
    வெளிநாட்டு சொத்துக்கள்:-
  13. சிங்கப்பூர் Orchard Road இல் அமைந்துள்ள Alfred Tower என்ற இடத்தில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் வீடு – 01. இதன் பெறுமதி: 7.5 கோடி.
  14. நகைக்கடையும் கட்டடமும், சுவிட்சர்லாந்து சூரிச் என்ற இடத்தில் இந்த நகைக்கடையும் கட்டடமும் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 150 கோடி.
  15. வெளிநாட்டு வங்கிகளிலுள்ள மொத்த பணத்தொகை 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 10ஆம் திகதி லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம், 7 பவுண் தங்கம் மற்றும் 2 பொம்மை கைத்துப்பாக்கிகள், கத்தி மற்றும் வேன் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது.

சந்தேகநபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருநாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக்

கொண்ட 38 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

இவர்கள் தற்போது மக்கள் பார்வையிட இணையம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது .

அதன் அடிப்படையில் இந்த விடயம் முன் நகர்த்த பட்டு வருகிறது .

வெள்ளை வேட்டிகள் சொத்துக்களை பார்வையிட இந்த இணையதளம் செல்லுங்கள் .மக்களே .

இணையம் பார்வையிட இதில் அழுத்துங்கள்

https://ads.ciaboc.lk