Tag: ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்கவின் அறுவை சிகிச்சை வெற்றி
ரணில் விக்ரமசிங்கவின் அறுவை சிகிச்சை வெற்றி
ரணில் விக்ரமசிங்கவின் அறுவை சிகிச்சை வெற்றி: ரவி கே
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி விரைவில் குணமடைய நாம் பிரார்த்திப்போம்
“முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய நாம் பிரார்த்திப்போம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார்
ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார்
ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார் .பொது சொத்துச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக
ஆஜராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன என்பது தொடர்பாக இந்த காணொளி வாயிலாக நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
இன்றைய இலங்கை அரசியல்
இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் ,கொழும்பில் நடத்துகிற இந்த அரசியல் கபட நாடகமும் ,தமிழுக்கு மட்டுமல்லாது சிங்கள மக்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது.
அரசியல் சதுரங்க ஆட்டத்தில்
இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சாணக்கிய அரசியல்வாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற முன்னாள் ஜனாதிபதிகள் இந்நாள்
ஜனாதிபதிகள் என்பன தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஒன்றாக பார்க்க படுகிறது .
தொடராக மேற்கொண்டு வருகின்ற சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே ரனில் விக்கிரமசிங்காவின் காகிதம் மருத்துவ சிகிச்சைக்காக அவர்
சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட வேண்டிய தேவை என்கின்ற, கோட்பாடும் அதற்கு நீதிமன்றம் அதற்கு அனுமதி அளிக்கிற நடவடிக்கையும் காணப்படுகிறது.
இந்த விடயங்களை கூட்டி கழுத்து பெருக்கி பார்த்தால் எங்கோ ஏதோ ஒரு மூலையில் ஒற்றுமை காணப்படுவதையும் பின்னால் இருக்கிற பல்வேறுபட்ட முடிச்சுகள் அவிழ்க்க படுவதையும் காணப்படுகிறது.
ஆகவே இந்த காணொளியில் முழுமையான விடயங்களை காணொளியில் பாருங்கள்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

13ஐ அமுல்படுத்துவது அவசியம் ஜனாதிபதி
13ஐ அமுல்படுத்துவது அவசியம் ஜனாதிபதி
நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (09) ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.
இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும் என்று
கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, முடிவெடுப்பதில் எதிர்க்கட்சிகளைக் கருத்தில் கொண்டு, சமத்துவமானதும், ஒத்துழைப்புடனான அரசியல் சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நம்பகத்தன்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
13ஐ அமுல்படுத்துவது அவசியம் ஜனாதிபதி
இந்த புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் புதிய பயணத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளிலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களின் தனிப்பட்ட வாத,விவாதங்களை தவிர்த்து நாட்டின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய
விசேட உரையில் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் நீண்ட கால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவுகளை கூட்டாக எடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேர்மையான ஒற்றுமை தேவை என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகைby நிருபர் காவலன்
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்புby நிருபர் காவலன்
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடுby நிருபர் காவலன்
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவைby நிருபர் காவலன்
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலிby நிருபர் காவலன்
இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி
இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி
இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம்
குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும்
ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வியாழக்கிழமை (30) முற்பகல் நடைபெற்ற IMF மற்றும் அதற்கு
அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்
விடயத்தைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
டி.எஸ். சேனாநாயக்கவின் முன்மொழிவுகளுக்கு அமைய செயற்படாதது மற்றும் 1965 ஆம் ஆண்டு
ஷெனோய் அறிக்கையை அமுல்படுத்தாதது உட்பட அபிவிருத்தியை அடைவதற்கான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டதை நினைவுகூர்ந்தார்.
1978 இனப்பிரச்சினையால் நாட்டின் முன்னேற்றம் மந்தமடைந்ததாகவும், அதன் மூலம் நாட்டில்
மீண்டும் அபிவிருத்திக்கான அடித்தளத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்ததாகவும்
தெரிவித்தார்.
இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி
பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளதாகவும், நாடு அதனை நோக்கிச் செல்வதுடன், விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன
ஏற்கனவே நாட்டின் வளங்களை அதிகம் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும்
பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவைப்படுவதாகவும் இங்கு ஜனாதிபதி தெரிவித்தார்.
Featured
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நாளை விசேட உரை
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நாளை விசேட உரை
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நாளை (22) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையையும் ஜனாதிபதி இதன்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.



















