Tag: சந்தேக நபர்கள்
கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது
கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது
கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர்.
தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது
தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவிடமிருந்து மூன்று மன்னா கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 17, 18, 21, 25, 27, மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள்
சந்தேக நபர்கள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 12 அன்று இரவு, ஈரியகஹலிந்த பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக சீதுவை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
தாக்குதலில் படுகாயமடைந்த 40 வயது நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சீதுவை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது
கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது
கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது ,கொலை சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் அண்மையில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









