Tag: கைது
லசந்த கொலை துப்பாக்கிதாரி உட்பட 9 பேர் கைது
லசந்த கொலை துப்பாக்கிதாரி உட்பட 9 பேர் கைது
லசந்த கொலை துப்பாக்கிதாரி உட்பட 9 பேர் கைது ,வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக்கொலை செய்த சம்பவம்
9 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில்
தொடர்பில், துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 9 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர்.
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகர தனது அலுவலகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி, மோட்டார்
சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 9 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், துப்பாக்கிதாரியின் மனைவி, கெக்கிராவையில் மறைந்திருக்க உதவியவர்,
பொரளை சஹஸ்புர பகுதியில் துப்பாக்கிதாரிக்கு உதவிய இரண்டு நபர்கள் உட்பட 6 பேர் தற்போது பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, கொலைக்கு முன்னரும் பின்னரும் துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய காலி அகுலுகஹவைச் சேர்ந்த
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும், கொலை
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தி கொடுத்த வலானையில் உள்ள ஒரு வாகன திருத்தும் இடத்தின் உரிமையாளரும், அந்த மோட்டார்
சைக்கிளை கொலையாளியிடம் ஒப்படைத்த இளைஞனும் வெலிகம மற்றும் மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி உட்பட சிலர் நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன் பின்னர், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 6 சந்தேக
நபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் உதவி ஒத்தாசைகளை வழங்கியமைக்காக மாத்தறை மற்றும் காலியில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அப்போது, அந்த 3 சந்தேக நபர்களிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அதற்கு அனுமதி வழங்குமாறு வெலிகம பொலிஸ் தலைமையகம் நீதிமன்றத்திடம் கோரியது.
அந்த கோரிக்கையை பரிசீலித்த மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க, அந்த மூன்று சந்தேக நபர்களையும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.
அதன்படி, அந்த மூன்று சந்தேக நபர்களும் மீண்டும் வெலிகம பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ‘அத தெரண’ செய்தியாளர் குறிப்பிட்டார்.
கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்
கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்
கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ் ,வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
வெலிகம பிரதேச சபை
கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்ற
சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு) மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பல பொலிஸ் குழுக்கள் இணைந்து துரித விசாரணைகளை ஆரம்பித்தன.
அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரம் – கெகிராவ பொலிஸ் பிரிவின் 50 வீட்டு தொகுதியில், இக்
குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்டனர்.
இதன்போது, பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அதில் காயமடைந்த பொலிஸ்
அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில்
அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ்
போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அப்பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்ற, அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக
என்பவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.
இந்த சந்தேகநபரின் புகைப்படங்கள் உங்களுடன் பகிரப்படுகின்றன.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) – 071 859 8888 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு – 011 233 7162 / 071 859 2087
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும்
அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேற்குக் கரையில் 44பேர் கைது
மேற்குக் கரையில் 44பேர் கைது
மேற்குக் கரையில் 44பேர் கைது ,கடந்த வாரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 44 பேர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ அறிக்கை
இராணுவ அறிக்கையின்படி, பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்,
கைது செய்யப்பட்ட அனைவரும் இஸ்ரேலால் தேடப்படுபவர்கள் என்றும் கூறுகிறது.
துருப்புக்கள் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை
நடவடிக்கைகளின் போது துருப்புக்கள் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அது மேலும் கூறியது.
ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது ,கர்நாடகாவின் மங்களூரில், இளைஞர்களை குறிவைத்து ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பி பணம் பறித்து வந்த 25 வயது இளம்பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண்ணின் செயலால் உடுப்பியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல் தெரிவிக்கிறது.
சைபர் கிரைம்
இந்த சம்பவம், சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் சைபர் கிரைம்களின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.
பொலிஸ் வழக்குப் பதிவு படி, கைது செய்யப்பட்ட பெண், சமூக ஊடகங்களில் இளைஞர்களை அணுகி அவர்களுடன் நெருக்கமான படங்கள் எடுத்து வைத்திருந்தார்.
அந்தப் படங்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றி, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ” நானும் உங்க பையனும் தனிமையில் இருக்கும் போது.. ஆணுறையில் ஓட்டை போட்டேன்.. உங்க பையனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்..
நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என்று போலியான கூற்றுகளைப் பயன்படுத்தி, இளைஞர்களின் குடும்பங்களை அச்சுறுத்தி பணம் வசூலித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெண்ணுடன் தங்கியிருந்த தோழிகளின் குளியலறை காட்சி
இந்தச் சதியில், பெண்ணுடன் தங்கியிருந்த தோழிகளின் குளியலறை காட்சிகளையும் அவர் வீடியோவாகப் பதிவு செய்திருந்ததாக பொலிஸ் கண்டுபிடித்துள்ளது.
இந்த வீடியோக்களும் அவரது பண வசூல் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கைப்பிடியில் இருந்து பல ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.உடுப்பியைச் சேர்ந்த 28 வயது இளைஞர்,
தனது சமூக ஊடக கணக்கில் பெண்ணால் பகிரப்பட்ட ஆபாச படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கடந்த வாரம் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்ததன் அடிப்படையில், மங்களூர் சைபர் கிரைம் பொலிஸ் அணுகல் பொலிஸ் நிலையம் விசாரணைத் தொடங்கியது.
மங்களூர் சைபர் கிரைம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், “இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அந்நியர்களுடன் பழகும் போது
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற சதிகள் அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பொலிஸை அணுக வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
கைது செய்யப்பட்ட பெண், மங்களூரைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது மேலும் வழக்குகள் பதிவாகலாம் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், இளைஞர்களிடையே சமூக ஊடக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ், இதுபோன்ற கிரைம்களுக்கு எதிராக விரிவான விசாரணையைத் தொடர்ந்து நடத்தும் என அறிவித்துள்ளது.
முகநூல் ஊடாக கப்பம் கோரிய இருவர் கைது
முகநூல் ஊடாக கப்பம் கோரிய இருவர் கைது
முகநூல் ஊடாக கப்பம் கோரிய இருவர் கைது .மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக அச்சுறுத்தி 70 ஆயிரம் ரூபாய் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24,
மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் இருவரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (15) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் கையடக்க தொலைபேசி வாட்ஸ்அப் செயலிக்கு புகைப்படம் ஒன்றை
சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை
சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (14) அனுப்பி, உனது முகநூல் பக்கத்தை ஹேக் செய்து அதில் உள்ள
வீடியோக்களை புகைப்படங்களை தரவு இறக்கம் செய்துள்ளதாகவும் 70 ஆயிரம் ரூபாய் பணம் தருமாறு கப்பம் கோரியதுடன் பணம் தர மறுத்தால்
அந்த வீடியோக்களை புகைப்படங்களை முகநூல் ஒன்றில் தரவேற்றம் செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் பணம் தருவதாகவும் தற்போது கையில் பணம் இல்லை சீலாமுனையில் உள்ள வங்கியிலுள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் எடுத்து தருவதாக தெரிவித்துள்ளார்
இதனை தொடர்ந்து கப்பம் கோரியவர் தான் ஒரு இளைஞன் ஒருவரை அனுப்புவதாகவும் அவரிடம் ஒன்றும் பேசக்கூடாது பணத்தை வழங்கி வைக்குமாறு தெரிவித்த நிலையில் குறித்த வங்கியிலுள்ள ஏ.ரி.எம்.
கப்பம் கோரியவரால் அனுப்பப்பட்ட இளைஞனை அடையாளம் கண்டு கொண்டார்
இயந்திரத்துக்கு சென்று காத்திருந்தபோது கப்பம் கோரியவரால் அனுப்பப்பட்ட இளைஞனை அடையாளம் கண்டு கொண்டார்
இதையடுத்து அந்த இளைஞரிடம் நீ இன்னாரது சகோதரர் தானே என வினவி உறுதிபடுத்திக் கொண்டு அவரிடம் பணம் ஏ.ரி.எம். இயந்திரத்தில் இருந்து
எடுக்க முடியவில்லை நாளைக்கு எடுத்து தருவதாக தெரிவித்து அந்த இளைஞனை அங்கிருந்து அனுப்பிவிட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க
தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 24 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்ததுடன் ஒருவர் தலைமறைவாகியுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்வதைத் தடுக்ககோரி வழக்கறிஞர் மனு
கைது செய்வதைத் தடுக்ககோரி வழக்கறிஞர் மனு
கைது செய்வதைத் தடுக்ககோரி வழக்கறிஞர் மனு ,தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் குணரத்ன
வன்னிநாயக்க தனது வழக்கறிஞர்கள் மூலம் மேல்முறையீட்டு
வன்னிநாயக்க தனது வழக்கறிஞர்கள் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தனது கடமைகளின் போது ஒரு பொலிஸ் அதிகாரியைத் தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸார்
தன்னை சட்டவிரோதமாக கைது செய்யத் தயாராகி வருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சிவ கொலையின் செவ்வந்தி கைது
சஞ்சிவ கொலையின் செவ்வந்தி கைது
சஞ்சிவ கொலையின் செவ்வந்தி கைது ,சஞ்சிவ கொலையின் மிக முக்கியமான சந்தேகமாக தேடப்பட்டு வந்த செவ்வந்தி என்கின்ற பெண்மணி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் குற்றத்தடுப்பு தெரிவித்துள்ளனர் .
சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்தில்
சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்தில் செவ்வந்தி உள்ளிட்டவர்கள் ஈடுபட்டவர்கள் என்கின்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன .
நீண்ட நாளாக இடம்பெற்று வந்த இந்த விசாரணை பின்னர் தற்பொழுது அவர் நேபாளம் அதில் வைத்து
இலங்கையினுடைய குற்றத்திறப்புகளுடன் கைது செய்யப்பட்டுள்ள்ளார் .
கைது செய்யப்பட்டவர் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது .
இவர் நேபாளத்தில் தங்கி இருக்கிறார்கள் என்ற விடயம் எவ்வாறு இலங்கை உளவுத்துறை மோப்பம் பிடித்தார்கள் .
இலங்கைனுடைய உளவுத்துறை விளையாடல்கள் அம்பலமாகி இருக்கிறது
நீச்சல்குளத்தில் உயிரிழந்த சிறுவன் 7பேர் அதிரடியாககைது
நீச்சல்குளத்தில் உயிரிழந்த சிறுவன் 7பேர் அதிரடியாககைது
நீச்சல்குளத்தில் உயிரிழந்த சிறுவன் 7பேர் அதிரடியாககைது ,நுகேகொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த சிறுவன் படித்து வந்த பாலர்
பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது
பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவாகியுள்ளது.
குறித்த தினத்தன்று இறந்த சிறுவன் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கினார்.
இதில் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் இறந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் மீதான் பிரேத பரிசோதனை
சிறுவனின் சடலம் மீதான் பிரேத பரிசோதனை நேற்று (9) நடைபெற்ற நிலையில், சம்பவம் தொடர்பாக பாலர் பாடசாலையின் அதிகாரி, விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, சிறுவர்களுக்குப் பொறுப்பான
இரண்டு ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஊழியர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிட்னியில் நடந்த துப்பாக்கிச் சூடு துப்பாக்கிதாரி கைது
சிட்னியில் நடந்த துப்பாக்கிச் சூடு துப்பாக்கிதாரி கைது
சிட்னியில் நடந்த துப்பாக்கிச் சூடு துப்பாக்கிதாரி கைது ,சிட்னியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு துப்பாக்கிதாரி கைது
சிட்னியின் உள்-மேற்கில் உள்ள ஒரு தெருவில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக்
60 வயது நபர் மீது தொடர்ச்சியான குற்றச் செயல்
குற்றம் சாட்டப்பட்ட 60 வயது நபர் மீது தொடர்ச்சியான குற்றச் செயல்களைச் சுமத்தவுள்ளதாக NSW போலீசார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணி முதல் இரவு 9.30 மணி வரை குரோய்டன் பூங்காவில் உள்ள ஒரு பிரிவில் இருந்து துப்பாக்கிச் சூடுகள் ஒலித்தன.
பார்வையாளர்கள், கார்கள் மற்றும் போலீசார் மீது 50 முறை வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, இதன் விளைவாக ஏராளமானோர் காயமடைந்தனர் மற்றும் வளாகங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.
ஜார்ஜஸ் நதி சாலையில் பயணித்த காவல்துறை கார்கள் உட்பட வாகன ஓட்டிகள் மீது ஒரு நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வந்த
புகாரைத் தொடர்ந்து, போலீசார் ஒரு பெரிய நடவடிக்கையைத் தொடங்கியதால், தெருக்கள் மூடப்பட்டு, அந்தப் பகுதி பூட்டப்பட்டது.
துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு, பரபரப்பான சாலையில் உள்ள ஒரு வணிகத்திற்கு மேலே உள்ள அவரது பிரிவில், தந்திரோபாய போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரைக் கைது செய்தனர்.
திங்கட்கிழமை காலை
திங்கட்கிழமை காலை, சிறிய ஷாப்பிங் பகுதியில் குண்டு துளைத்த கண்ணாடிகள் மற்றும் ஜன்னல்கள் உடைந்தன, ஏராளமான வாகனங்கள்
மற்றும் வளாகங்கள் சேதமடைந்தன. துப்புகளுக்காக போலீசார் சம்பவ இடத்திலேயே இருந்தனர், அந்தப் பகுதியைத் தேடினர்.
சிறிய காயங்களுக்கு சம்பவ இடத்திலேயே 16 பேருக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர், அவர்களில் சிலர் கண்ணாடி உடைந்து
காயமடைந்தனர், அவர்களின் ஜன்னல்கள் தோட்டாக்களால் தாக்கப்பட்டன, மற்றவர்கள் அதிர்ச்சிக்கு சிகிச்சை பெற்றனர்.
திங்கட்கிழமை பிற்பகல், ராயல் பிரின்ஸ் ஆல்ஃபிரட் மருத்துவமனையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், மொத்தம் இரண்டு பேர்
சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் செயல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் பாரி தெரிவித்தார்.
கை வைத்த ஜோடி கைது
கை வைத்த ஜோடி கைது
கை வைத்த ஜோடி கைது ,கண்டியில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்குவதாகக் கூறி உள்ளே நுழைந்து உண்மையான நகைகளைத்
திருடியதாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, கண்டி காவல் தலைமையகத்தின் குற்றப்பிரிவு உடனடியாக அந்த
அழைப்பை ஏற்று, அதிகாரிகள் நகைக் கடைக்குச் சென்று, திருடப்பட்ட நகைகளை மறைத்து வைத்திருந்தபோது சந்தேகத்திற்கிடமான தம்பதியினரைக் கைது செய்தனர்.
தலத்துஓயா எதுல்கம பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதியினர் 20-22 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, கண்டி பகுதியில் உள்ள முக்கிய வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட நகைகளின் ஒரு பங்கு
மீட்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஜோடி வேறு ஏதேனும் நகைக் கடைகளுக்கு சென்றுள்ளதா என்பதைக் கண்டறிய பொலிஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
ஆயுதங்களுடன் இளைஞன் கைது
ஆயுதங்களுடன் இளைஞன் கைது
ஆயுதங்களுடன் இளைஞன் கைது ,கொட்டாவை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) போதைப்பொருள் தொகை மற்றும் பெருமளவிலான ஆயுதங்களுடன் 24 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் சிறப்புப் படை (STF) நடத்திய சோதனை
பொலிஸாரின் கூற்றுப்படி, பொலிஸ் சிறப்புப் படை (STF) நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது
செய்யப்பட்டார், இதன் போது அவரிடம் 75.4 கிராம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபரிடமிருந்து 458 உயிருள்ள வெடிமருந்துகள், ஒரு T-56 மகசின், 30 போலி வாகன எண் தகடுகள், 15 வருவாய்
உரிமங்கள், 15 காப்பீட்டு ஆவணங்கள்
உரிமங்கள், 15 காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
சந்தேக நபர் மொரட்டுவை, அங்குலானையில் வசிக்கும் 24 வயதுடையவர்.
அவர் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார், அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இராணுவ சிப்பாய் கைது
இலங்கை இராணுவ சிப்பாய் கைது
இலங்கை இராணுவ சிப்பாய் கைது ,ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் .
பாடசாலையின் நிர்வாகக் குழு
துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 62 வயதுடைய மாற்றுத்திறனாளி.
பாடசாலையில் செவித்திறன் குறைபாடுள்ள மாணவனை அவருடைய தாயார் அழைத்துச் செல்ல வந்தபோது
குழந்தையை காணவில்லை, பின்னர் அவர் பாடசாலையில் கிணற்று இருக்கும் பக்கத்தில் இருந்து ஓடிவந்துள்ளார்.
அதுதொடர்பில் மகனிடம் தாயார் வினவியுள்ளார்.
அதன்பின்னர், அந்த தாயார் அளித்த புகாரில் சந்தேக நபர் பல கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள இந்தக் குழந்தைகளிடமிருந்து வாக்குமூலங்களை எடுக்கும்போது,
சைகை மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும், பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராகச்
செயல்படும் நபர் இந்த மைனர் சிறுவர்கள் மீது பல சந்தர்ப்பங்களில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் அடிக்கடி பாடசாலைக்கு வருவார், இருட்டிய பிறகு திரும்புவார், கூடுதலாக, அவர் தங்குமிடங்களுக்கு வந்து,
கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு விளக்குகளை அணைப்பார் என்று வாக்குமூலங்கள் மேலும் கூறுகின்றன.
கொலைச் சம்பவம் மூவர் கைது
கொலைச் சம்பவம் மூவர் கைது
கொலைச் சம்பவம் மூவர் கைது ,இரட்டை கொலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
புலனாய்வுப் பணியக அதிகாரிகள்
இது தொடர்பான விசாரணையை தகுற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று (08) விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பகுதியில் குறித்த 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்கள் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பின்வரும் ஆதங்கள் மற்றும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட துப்பாக்கிச் சூட்டில் உஷி வகை துப்பாக்கி 09 மிமீ
அளவிலான கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது
09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கி
09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கிக்கு பயன்படும் 53 தோட்டாக்கள்
T56 ரக 19 தோட்டாக்கள்
T56 ரக 2 வெற்று தோட்டாக்கள்
ஒரு ஜோடி கைவிலங்கு
300 கிராம் ஹெராயின் என்பனவற்றை தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது
லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது
லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது ,லண்டனில் 800 பலஸ்தீன ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன ஆதரவு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன .800 Palestinians arrested in London
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டம் Protest in support of the Palestinian people
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகிற இந்த யுத்தத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது .
800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு 14 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய அந்த பாலஸ்தீன ஆதரவு அமைப்பும் இந்த பிரித்தானிய மண்ணில் தடை செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது Arrest under the Terrorism Act
இவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கப்பெறும் என தெரிவிக்க படுகிறது .
இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இராணுவ விமான தளங்களின் தாக்கி இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதாகும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக 1500க்கு மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் செய்ததால் இந்த கட்சி பயங்கரவாத தடை சட்டத்த்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது .
மனிதாபிமானிகள் நீதி சட்டம் பேசுகிற உலகம் இந்த கைது சரியா என்ற கேள்விக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது .
இலஞ்சம் பெற்ற 49பேர் கைது
இலஞ்சம் பெற்ற 49பேர் கைது
இலஞ்சம் பெற்ற 49பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது.49 people arrested for accepting bribes .
கடந்த ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 49 கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 சுற்றி வளைப்பு நடவடிக்கை 72 Roundup operation
72 சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ,அவற்றில் 39 சுற்றி வளைப்புக்கள் வெற்றி அழித்துள்ளதாகவும்
அவ்வாறு வெற்றியடைந்து சுற்றிவழிப்புக்குள்ளேயே 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்பு நடவடிக்கையின் பொழுது 17 போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய நிலையில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 27 பேர் நீதிமன்ற குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு Bribery Commission to eradicate corruption
இலங்கையில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு மேற்கொள்கிற இந்த விடயங்கள் வரவேற்பு பெற்றுள்ளது.
நாடு திவால ஆவதற்கு காரணமாக இருக்கின்ற காரணிகள் இந்த லஞ்சம் வருவதே காரணமாகிறது.
ஆகவே இந்த லஞ்சோலை ஒழித்தால் மட்டுமே நாடு முழுவதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் 3937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
ஆனால் அவற்றில் 49 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளது என்கிறது இந்த ஆணைக்குழு.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

- நாட்டின் பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை
- மாத்தறையில் நேருக்கு நேர் பேருந்து மோதல் விபத்தில் குறைந்தது 40 பேர் காயம்

- 1000 கோடி அமெரிக்கா டொலர் இறக்குமதி மோசடி

ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். Woman arrested for stealing money from temple
திருவிழாவில் கொள்ளையடித்த பெண் கைது
மட்டக்களப்பு மண்டூர் முருகன ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் பெண் ஒருவர் 20000 பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாடு
பணப்பை திருடப்பட்டுள்ளதாக காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.
குறித்த 39 வயது பெண்ணிடமிருந்து மேலதிகமாக 65 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு சொற்ப நேரத்திற்குள் குறித்த பெண் பணத்தோடு கைது செய்யப்படுகிறார் என்றால் ,இவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது திட்டமிடப்பட்ட காவல்துறையின் நாடகமா அல்லது உண்மையில் திருட்டில் ஈடுபட்ட பெண் விசாரணையின் மூலம் தான் கைது செய்ய பட்டாரா என பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

ரணில் கைது நாடகம் முடிந்தது
ரணில் கைது நாடகம் முடிந்தது
ரணில் கைது நாடகம் முடிந்தது , இப்பொழுது ரணில் நிம்மதியாக உலாவி வருகிறார். அனுரா அரசின் அரசியல் கபட நாடகமாக இது வெளிப்பட்டுள்ளதுஎன்பதே அப்பட்டமாக தெரிகிறது .Ranil’s arrest drama is over
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்கா
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்காவின் ஆட்சியில் ,லஞ்ச ஊழல்களை ஒழிக்க வந்ததாக கூறுகிறது.
அவிதம் கூறியே முன்னாள் ஜனாதிபதி ரணில் ரனில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கா கைது
ரணில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 72 மணித்தியாலத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மிகப்பெரும் லஞ்ச ஊழல் குற்றச்செயலை புரிந்தவர் எவ்வாறு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்கின்ற கேள்வி மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.
ஆகவே இது ஓட்டு அரசியலாக மாற்றி மக்களை தமது ஆதரவாளர்களை குஷிப்படுத்துகிற நடவடிக்கையின், அரசியல் கபட நாடகமாக காணப்படுகிறது.
ஆக மொத்தம் அனுரா அரசு மீளவும் இலங்கை வாழ் மக்களை ஏமாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
முன்னாள் அரசியல்வாதிகளுடன் கூட்டிணைந்து நாடகமாடி வருகிறது என்பதை, இந்த கைது நடவடிக்கையும் ,ரணில் விக்கிரமசிங்காவின் விடுதலை நடவடிக்கையும் காண்பிக்கிறது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

- நாட்டின் பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை
- மாத்தறையில் நேருக்கு நேர் பேருந்து மோதல் விபத்தில் குறைந்தது 40 பேர் காயம்

- 1000 கோடி அமெரிக்கா டொலர் இறக்குமதி மோசடி

பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது
பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது
பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது
இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை,
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்
அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் காவலில் எடுத்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மேலதிக
கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு
விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை 5:50 மணியளவில் அவர்கள் இலங்கை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குற்றக் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்
சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள்
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில்
மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி
விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது
பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது
பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது ,டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக 2 மாணவர்கள் கைது: காவல்துறை.
டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கிளெமென்ஸ் உயர்நிலைப் பள்ளி பள்ளி வள அதிகாரியை வியாழக்கிழமை பள்ளி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு,
மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல்
இரண்டு ஆண் மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல் விடுத்ததாக ஷெர்ட்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது, ஒரு மாணவர் “பள்ளியைச் சுடுவேன்” என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தெரியவந்தது, இருப்பினும் அவரிடம் எந்த துப்பாக்கிகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இரண்டாவது மாணவர் “ஆயுதங்களை வழங்க முடியும்” என்று கூறினார்.
ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்றாவது மாணவர் இந்த மிரட்டல்களை பள்ளி நிர்வாகிகளிடம் தெரிவித்தார், மேலும் பயங்கரவாத மிரட்டல் குற்றச்சாட்டை ஆதரிக்க வீடியோ ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத மிரட்டல் விடுத்ததற்காக இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர், இது டெக்சாஸில் மூன்றாம் நிலை குற்றமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.













































