கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
Spread the love

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது கஹவத்தை துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இரத்தினபுரி பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவின் யாயின்ன பகுதியில் ஒருவரை சுட்டுக் கொல்ல உதவிய சந்தேக நபர் நேற்று (26) பெல்வாடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு முயற்சிக்கு உதவிய ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவின் ரயில் நிலைய வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஒருவரைச் சுட்டுக்

கொல்ல முயன்ற குற்றம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று காலை பொரலஸ்கமுவ பகுதியில் 12 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக

குற்றத்திற்கு உதவிய பெண்

நபர் கைது செய்யப்பட்ட, அதே நேரத்தில் குற்றத்திற்கு உதவிய பெண் சந்தேகநபர், தெல்கஹாவத்தை – ஹல்பிட்ட பகுதியில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதானவருடன், பெண் சந்தேக நபர் கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.