Tag: கிராம சேவகர்
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர்
கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவாய கிராம சேவையாளர் பிரிவில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய்
அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய் பெறுமதியான பற்றுச்சீட்டை பெற்றுக் கொண்டிருந்தபோது, குறித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் கிராம சேவகர் சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிராம சேவகர் கைது
கிராம சேவகர் சிக்கினார்
லஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது ,இலங்கையில் பெண் ஒருவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரை கைது செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது . .
குறித்த கிராமத்தில் வசித்து வந்த பெண் தனது வீட்டுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனுமதியினை பெற்று கொள்வதற்காக கிராம சேவகருக்கு 25 ஆயிரம் ரூபாய்கள் இலஞ்சமாக வழங்கியுள்ளார் .
லஞ்சம் வழங்கிய பெண்
இவ்வாறு லஞ்சம் வழங்கியதை தெரிவித்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு திணைக்களத்தினர் அங்கு வருகை தந்து கிராம சேவை ஊழியரை கைது செய்தனர் .
குறித்த பெண் தனிப்பட்ட ரீதியில் தாக்குதலை நடத்தும் முகமாக இவ்வாறு கிராம சேவகரை திட்டமிட்டு மாட்டி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
இலங்கையில் லஞ்ச ஊழல் அதிகரித்து காணப்படுவதும் அதனூடாக இவ்வாறான அதிகாரிகள் தொடராக கைது செய்யப்பட்ட வருவதும் லஞ்ச ஊழலில் ஊறி போய் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கிராம சேவகர்கள் இவ்வாறு லஞ்சம் பெற்று பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது இதன் ஊடாக மீளவும் அம்பலப்பட்டுள்ளது .
கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்
குறித்த கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதிராக அந்த கிராமத்தில் பலர் புகார்களை எழுப்பி வருகின்றனர்.
எதிர் வரும் காலங்களில் பெண் மீது தாக்குதல் அல்லது வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ள கூடும் என்கின்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கிராம சேவகர் தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .
விசாரணை முடிவில் கிராம சேவகர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.














