Posted in மருத்துவம்

விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents

விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents

விபத்தின் பொழுது பாதிக்க பட்டவர்கள் உடனே செய்யக்கூடாத விடயம் என்ன என்பதை நாங்கள் இங்கே பார்த்துக்கொள்ளுவோம் .

நமது மக்கள் விபத்தில் காயங்கள் ஏற்பட்டால் உடனே செய்து கொள்ளும் தவறான முறைமைகள் என்ன என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம் .

விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents

விபத்தின் பொழுது உடல் உறுப்புக்கள் துண்டிக்க பட்டால் அதனை தூய்மையான பொழித்தீன் பையுக்குள் வைத்து அதனை ஐஸ் கட்டிக்குள் வைத்து மருத்துவ மனைக்கு எடுத்து சென்றால் அதனை பொருத்த முடியும் என்கின்ற விடயம் இங்கே முதன்மை பெறுகிறது .

மேலும் வாய் ,மூக்கு ,கை கால்களில் காயங்கள் ஏற்படும் பொழுது அதில் ஓடும் இரத்த போக்கை கட்டு படுத்த நாம் என்ன செய்யவேண்டும் என்கின்ற விடயமும் இங்கே முதன்மை பெறுகிறது .

மிக முக்கியமான மருத்துவ குறிப்பாக இந்த விபத்தின் பொழுது நாம் செய்திட கூடாத விடயங்கள் விளக்க படுகின்றன .

மக்கள் உதாசீனமாக செய்து கொள்ளாது இதனை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

    Posted in பிரித்தானிய செய்தி

    லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

    லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

    லண்டன் Albert Road, Ashford. பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

    தலைகீழாக கவிழ்ந்த காரில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

    இந்த கார் விபத்தினால் அந்த வழி சாலை போக்குவரத்து சில மணி நேரம் தடை பட்டது.

    சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன பாதிக்க பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .

    குத்துகரணம் அடித்து கவிழ்ந்த கார் விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

    லண்டனில் கார்கள் இப்படியும் குத்துகாரணம் அடிக்கும் என்பது இதன் மூலம் காணமுடிகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து

      எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து

      மட்டக்களப்பு ; மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வாங்கிட கடத்திருந்த மக்கள் மீது பேரூந்து ஒன்று மோதியுள்ளது.


      பேரூந்து சாரதியின் காட்டு பாட்டை இழந்த பேரூந்து மக்கள் மீது மோதி விப்பதுக்குள்ளானது .

      இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,

      இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

      Posted in உலக செய்திகள்

      ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

      ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

      ஈரான் நாட்டில் Mashhad-Yazd பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பதினேழு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்

      மேலும் முப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த ரயில் விபத்து இடம்பெறும் பொழுது 380 பயணிகள் அவ்வேளை பயணம் செய்துள்ளனர்

      எனினும் ஏனைய மக்கள் உயிரை சேதங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்,இந்த ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டெடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன

      அந்த உலங்குவானூர்திகள் மூலம் காயமடைந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டனர்


      இந்த மனிதாபிமான உதவிகளை ஈரானிய இராணுவத்தினர் மேற்கொண்ட செயல் ஈரான் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது

      ஈரான் நாட்டில் இடம்பெற்ற இந்த திடீர் ரயில் விபத்து சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      ஈரானில் இதுபோன்ற மிக பெரும் ரயில் விபத்து இடம் பெற்று பலநூறு மக்கள் பலியாகினர் ,

      அதுபோல இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலா அல்லது தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இடம்பெற்ற சம்பவமா என்பது தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

      ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்


      ஈரானின் உள்ளக கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்கள் புரட்சியை கிளறி ஈரான் ஆளும் அரசை ஆட்சியில் இருந்து துரத்திட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சதிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

      அவ்வாறான அபாயகாரமான நிலைகள் உள்ள நிலையில், இவ்விதம் மக்கள் உயிர்களோடு விளையாடியுள்ள இந்த ரயில் விபத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

      இந்த ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது

      ஈரானில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து அதில் இடம்பெற்ற மக்கள் பலி மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை வெளியாகும் பொழுதே இந்த விபத்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்

        விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்

        குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்துடன் தொடர்புடைய

        டிபெண்டர் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்றவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

        அவர்களில், 14 வயதான சிறுவனும் அடங்குகின்றார். இந்த விபத்து சம்பவத்தை

        அடுத்து, டிபெண்டர் ஜீப் வண்டி இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்து

        கொளுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,


        சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

          Posted in இலங்கை செய்திகள்

          பஸ் ஆட்டோ மோதல் – மூவர் மரணம்

          பஸ் ஆட்டோ மோதல் – மூவர் மரணம்

          மன்னம் பிட்டிய பகுதியில் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ மோதி விபத்தில் சிக்கியதில்


          மூவர் சம்பவ இடத்தில பலியாகினர்

          பலியானவர்களில் இரு பெண்கள் என தெரிவிக்க படுகிறது


          இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகிறது.

            Posted in Uncategorized

            அகதிகள் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம் – 34 பேரை காணவில்லை

            அகதிகள் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம் – 34 பேரை காணவில்லை

            அட்லாட்ன்டிக் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று

            திடிரென விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் முப்பத்தி நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்

            இவ்விதம் காணாமல் போன் யாவரும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

            தொடர்ந்து கடற்படையினர் தேடுதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,ஐரோப்பாவிற்குள் நுழையும் முகமாக பாதுகாப்பற்ற


            கடல் வழியூடாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              யாழில் தாயுடன் சென்ற மகன் – லொறி சக்கரத்தில் நசிந்து மரணம்

              யாழில் தாயுடன் சென்ற மகன் – லொறி சக்கரத்தில் நசிந்து மரணம்

              யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த

              ஏழுவயது சிறுவன் ஒருவன் வேகமாக வந்த லொறி மோதியதில் அதன் சக்கரத்தில்

              நசிந்து பலியாகியுள்ள சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது

              இலங்கையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாது வாகன ஓட்டிகள் செல்வதால்

              இவ்விதமான விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது

                Posted in இலங்கை செய்திகள்

                விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழப்பு

                விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழப்பு

                நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

                தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்வத்தை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                உயிரிழந்தவர் கரந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                இதேவேளை, மீகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலமுல்ல – லெனகல வீதியின் நாவலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                லெனகல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                இதேவேளை, திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வர்நாத்தின் மேல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                இந்த விபத்து நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                இதேவேளை, வெலிகேபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கபுகல ரஜவக வீதியில் டிப்பர் வாகனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

                விபத்தில் பலாங்கொடை, மகுனமலை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்

                  இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்

                  இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்து அதிகரித்து செல்கிறது ,நாடளாவிய ஈதியில் ஏற்பட்ட

                  இந்த விபத்துகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்

                  மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர் .சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த

                  விபத்துக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

                    லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

                    எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்

                    மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்

                    விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி

                    மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                    லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                    லண்டன் கென்ட் Canterbury பகுதியில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து


                    தலைகீழாக கவிழ்ந்தது ,இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வண்டி பலத்த சேதமடைந்துள்ளது

                    வீதி ஈரப்பதமான நிலையில் காணப்பட்டதால் சறுக்கி சென்று விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    ஒரு வாரத்தில் இதே பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

                      இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

                      இலங்கை இயக்கச்சி பகுதியில்15-12-2021 வீதியின் ஓரத்தில் மிதிவண்டியுடன் நின்றவரை

                      வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி ,தள்ளியது இதன் பொழுது இயக்கச்சி

                      சங்கத்தார் வயலை சேர்ந்தவரும் , தற்போது உசனில் வசித்து வருபவருமான செல்லத்தம்பி-

                      செல்வகுமார் என அழைக்க படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த விபத்தில் சிக்கினார்

                      பலத்த காயமான நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் அவசர

                      சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இதுவரை அவர் கண் விழிக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

                      சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கை

                      வீதி நடை முறைகளை பின்பற்ற தவறி சாரதிகள் வேகமாக பயணிப்பதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        யாழில் விபத்து =- மூவர் காயம்

                        யாழில் விபத்து =- மூவர் காயம்

                        யாழ்ப்பாணம் வரணிபகுதியில் பயணிகள் சிற்றூர்தியும் டிப்பர் வாகனமும் நேரெதிர்


                        மோதி சிதறியது ,இதனை பொது மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் அரச

                        மருத்துவமனையில் அனுமதிக்க பத்துல்க்ளனர்

                          Posted in Uncategorized

                          வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்

                          வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்

                          அமெரிக்கா கலிபோனியா பகுதியில் பறந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று


                          திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த நால்வரும் பலியாகியுள்ளனர்

                          இதுவரை இந்த விமான விபத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,குறித்த விபத்து

                          தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                            Posted in Uncategorized

                            படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

                            படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

                            நையீரியாவில் படகு கவிழ்ந்து 29 பேர் பலியாகியுள்ளனர் ,அதிக எண்ணிக்கையில் பயணிகளை

                            ஏற்றியதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                            காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன ,மீட்க பட்ட பலர்

                            தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

                            மேற்படி விபத்து தொடர்பிலான புலன் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

                              பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

                              பிரிட்டன் Bybrook Sainsbury’s க்குள் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து

                              அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறிகளை மோதி தள்ளியது ,இதன் பொழுது மேலும் சில

                              கார்கள் சேதமடைந்ததுடன் லொறிகளும் சேதமாகின

                              இதனால் அந்த கடை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                பிரிட்டன் Luton Road, Chatham பகுதியில் பாதைசாரி ஒருவரை வேகமாக வந்த வான் ஒன்று இடித்து

                                கொன்றுள்ளது ,சாரதியின் வேகமான வண்டி ஓடுதலே இந்த உயிர் பலிக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

                                இந்த சம்பவத்திடன் தொடர்புடைய மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்

                                  பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்

                                  யாழில் இருந்து பளைநோக்கி பாயணித்து கொண்டிருந்த வண்டி ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                  காலநிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்

                                    Posted in Uncategorized

                                    யாழில் விபத்து – மூவர் காயம் – வண்டி சேதம்

                                    யாழில் விபத்து – மூவர் காயம் – வண்டி சேதம்

                                    வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                    அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பேரூந்தில் செல்லும்போது அரச மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.

                                    இதில் அறுவர் பயணித்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றைய இருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர்.

                                    காயமடைந்த மூவரும் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                    பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமையே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது