Tag: விபத்து
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நேற்றிரவு (01) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன் ஒன்று, கொட்டகலை பகுதியிலிருந்து கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுடன் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன், முச்சக்கரவண்டியுடன் மோதிய பின், முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கற்பாறையுடன் மோதி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
வேன் சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீதி விபத்துக்களில் 75 பேர் மரணம் – அதிகரிக்கு விபத்துக்கள்
வீதி விபத்துக்களில் 75 பேர் மரணம் – அதிகரிக்கு விபத்துக்கள்
இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் வீதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி சுமார் 75 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர் ,சாலை விதிகளை கடைபிடிக்காது சாரதிகள்
செல்வதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்
இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்
இலங்கையில் கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி இதுவரை ஐம்பத்தி இரண்டு பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
சாரதிகள் அலட்சியமும் ,வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்ற தவறியதன் காரணமாக இந்த உயிர்பலிகள் இடம்பெற்றுள்ளன
பல்லாயிரம் போலீசார் குவிக்க பட்டுள்ள பொழுதும் இந்த மனித உயிர் பலிகளை தடுக்க முடியாது போலீசார் திணறி வருகின்றனர்
வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்
வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்
இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் இடம் பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி நாற்பது பேர் பலியாகியுள்ளனர்
நாள்தோறும் விபத்துக்களில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர்
இவ்விதம் ஏற்படுகின்ற
விபத்துக்களை தடுத்து மக்களை காப்பற்ற வேண்டிய போலீசார் அவர் தம் கடமையில் இருந்து
செயல் பட தவறியதன் விளைவே இந்த விபத்துகளுக்கு ன்காரணம் என தெரிவிக்க படுகிறது
யாழில் நடந்த கோரவிபத்து – கண்முன்னே இறந்த சகோதரன்
யாழில் நடந்த கோரவிபத்து – கண்முன்னே இறந்த சகோதரன்
யாழ்ப்பாண நாவலர் வீதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த இரு சகோதரர்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது
இதில் சம்பவ இடத்தில எட்டு வயது சிறுவன் பலியாகியும் 12 வயது சிறுவன் படுகாயமடைந்த
நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது ,மேற்படி விபத்து
தொடர்பான விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்
பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்
பளை பகுதியில் கடந்த தினம் இரவு 9.30 மணியளவில் நடந்த பாரிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்
கார்,மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது
காரில் பயணித்த தந்தை ,மற்றும் அவரது 11 மற்றும் 14 வயது மகன்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்
கார் பலத்த சேதமடைந்துள்ளது ,விபத்தினை ஏற்படுத்திய லொறி சாரதி அங்கிருந்து தப்பி
ஓடியுள்ளார் ,சாரதிகளின் அலட்சி போக்கின் காரணமாக நாள்தோறும் நாடு தழுவிய ரீதியில் நால்வர் இவ்விதம் விபத்துக்களில் பலியாகி வருகின்றனர்
இந்த உயிர்பலிகளை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
கார்-மினிபஸ் மோதல் -16 பேர் காயம்
கார்-மினிபஸ் மோதல் -16 பேர் காயம்
அவுஸ்ரேலியயாகுயின்லாநாத் பகுதியில் தக்காளி தோட்டம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை காவிய படி
பயணித்த மினிபஸ் ஒன்று கார் ஒன்றுடன் மதி சிதறியதில் அதில் பயணித்த பதின் நான்கு பேர் படுகாயமடைந்தனர் ,
இவர்களுடன் மொத்தமாக 16 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,அதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா Mexico எல்லையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் சிக்கி ,சம்பவ இடத்தில்பதின் மூன்று பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதே பகுதியில் சட்டவிரோத ஆள் கடத்தல்கள் இடம் பெற்று வருகிறது ,
இதனை அடுத்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டிருந்த பொழுதும் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
அமெரிக்காவில் புகழ்பெற்ற Yellowstone நதி அருகில் முப்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின
,இதன்பொழுது பல பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதிக சினோ பொழிவு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்
பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்
இன்று Katupotha வீதியில் காவல்துறை ஜீப் வான் ஒன்று ஆட்டோ
ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன் பலியாகியுள்ளனர்
இறந்தவருடைய மனைவி மற்றும் இரு பிள்ளைகள் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த ஜீப் வண்டியை செலுத்தி சென்ற கான்ஸ்டபிள் ரக அதிகாரி
காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
சந்தேக நபர் ஒருவரை துரத்தி சென்ற ஜீப் வண்டியே இவ்வாறு விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க படுகிறது
வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்
வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்
அமெரிக்கா யோர்ஜியா பகுதியில் இலகுரக பயணிகள் விமானம்
ஒன்று வீழ்ந்து சிதறியது ,இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து
இடம்பெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்க படுகிறது
தொடர்நது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
,சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன
மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்
மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்
இலங்கை நுவரெலியா நானு ஓயா பகுதியில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று
சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில்சிக்கியது ,இதன்பொழுது
அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
இன்று சற்று முன்னர் நையீரியா நாட்டில் Air B350i என்ற இலகுரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வானில் தீப்பிடித்த படி எரிந்து
வீழ்ந்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணம் செய்த ஏழுபேர் தீயில் கருகி பலியாகினர்
விமான பாகங்கள்
விமானத்தின் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகிறது ,குறித்த விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இயந்திர கோளாறு
குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
இந்தியாவில் ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – 37 பேர் மரணம்
ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – இந்தியா மத்திய பிரதேஸ் பகுதியில் நடந்த கோர சம்பவம் – கண்ணீரில் குடும்பம்
ஆற்றுக்குள் பாய்ந்த பஸ்
இந்திய மத்திய பிரதேச பகுதியில் பயணிகளை காவியபடி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை
இழந்து ஆற்றுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்த முப்பத்தி ஏழு பயணிகளும் மூச்சடக்கி பலியாகினர்
நீரில் மூழ்கிய தொடரூந்து கனரக பாரம் தூக்கிகள் வரவழைக்க பட்டு மீட்க பட்டன
விபத்துக்காண காரணம்
சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
ஐம்பது பேருடன் பயணித்த பேரூந்தில் 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ஏனையவர்கள் மீட்க பட்டுள்ளனர்
முதல்வர் உதவி
இறந்த குடும்பத்தினர் ஒருவருக்கும் ஐந்து லட்சம் வழங்க படும் என ஆளும் முதல்வர் அறிவித்துள்ளார்
உலக செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்
இலங்கை செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்
வவுனியா ஓமந்தையில் விபத்து20 பேர் காயம்
வவுனியா ஓமந்தையில் விபத்து20 பேர் காயம்
வவுனியா ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (27) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 15 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் ஏனைய 5 பேரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video
இன்று காலை 10,15 மணியளவில் அவுஸ்ரேலியா Maitland பகுதியில் ,தனியாருக்கு
சொந்தமான இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது
இதன் பொழுது 44 வயதுடைய விமானி சம்பவ இடத்திலேயே பலியானார் .
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது,எனினும் தொடர்ந்து குறித்த விபத்து
தொடர்பான விசாரணைக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி
கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி
கனடா Scarborough பகுதியில் பிரதான வீதி ஒன்றில் நடை பாதை வழியாக
நடந்து சென்ற சிறுவன் ஒருவரை அவ்வழியே வேகமாக வந்த லொறி ஒன்று மோதி விட்டு தப்பி சென்றது
தலையில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிறுவன் ஆபத்தான நிலையில்,தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்
தப்பி ஓடிய லொறி சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

காரில் இருந்து வீதியில் விழும் பெண் – திகில் – வீடியோ
காரில் இருந்து வீதியில் விழும் பெண் – திகில் – வீடியோ
சீனா பெண் ஒருவர் தனது காரில் இருந்து கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன ,
இவர் காரை துரத்துகிறார் ,அதுவோ இவரை விட்டு தாறுமாறாக ஓடி மோதிக்கொள்கிறது
இந்த காட்சியினை ஒருவர் படம் பிடித்து அப்படியே போட்டுள்ளார் ,
அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்
இவ்வாறான வேளை உடனே கதவை வேகமாக திறந்து துள்ளி குதித்து ஏறிவிட வேண்டும் .
அல்லது விபத்து ஏற்படும் போகிறது என தெரிந்தால் கியாரால் காரைமறிக்க
தெரிய வேண்டும் ஒருதடவை பலமாக குலுக்கும் ,அவ்வளவு தான் கார் சொன்ன இடத்தில நிற்கும் .
இதனை இந்த பெண் இங்கே கையாளவில்லை

கார் விபத்தில் நடிகர் பலி
கார் விபத்தில் நடிகர் பலி
எர்ணாகுளம் அருகே பள்ளி சுவரில் கார் மோதிய விபத்தில் மலையாள நடிகர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் விபத்தில் நடிகர் உள்பட 3 பேர் பலி
விபத்துக்குள்ளான கார்- உயிரிழந்த பேசில் ஜார்ஜ் .
கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் முபாட்டு புழாவை சேர்ந்தவர் பேசில் ஜார்ஜ் (வயது30).
இவர் மலையாள படமான உவல்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவரது நண்பர்கள் சதீஷ்(30), அஷ்வின்(20), ராகவ்(19), சமர்(30), எமோன்(30).
இவர்கள் 6 பேரும் நேற்று காரில் முபாட்டு புழாவில் இருந்து வளாகம் நோக்கி சென்றனர்.
இவர்களது கார் வளாகம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்ற போது கட்டுப்
பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது.
பின்னர் அங்கிருந்த பள்ளி சுவரின் மீது வேகமாக மோதி நின்றது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதால் காரில் இருந்த 6 பேரும்
பலத்த காயத்துடன் வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முபாட்டு புழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த முபாட்டு புழா போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கி
இருந்தவர்களை மீட்டு கோலன்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் பேசில் ஜார்ஜ், சதீஷ், அஷ்வின் ஆகிய 3 பேர்
பரிதாபமாக உயிரிழந்தனர். ராகவ், அமர், எமோன் ஆகியோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி
கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி
கடற்படை தலைமையக்கத்திற்கு சிப்பாய்களை ஏற்றிய படி பயணித்த
பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் காயமடைந்தனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் வீதி விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் .
விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கடற்படை வாகன விபத்து இதுவாக பதியம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது








