Tag: இலங்கை
பாகிஸ்தானில் எரித்துக்கொலை செய்யப்பட்டவர் சடலம் இலங்கை வருகை
பாகிஸ்தானில் எரித்துக்கொலை செய்யப்பட்டவர் சடலம் இலங்கை வருகை
பாகிஸ்தானில் நிறுவனம் ஒன்றில் மனேஜராக பணிபுரிந்த நபர் ஒருவர் 120 க்கு மேற்பட்ட நபர்கள்
ஒன்று கூடி எரித்து கொன்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ,
இவ்வாறு எரித்து கொன்றவரது சடலம் இன்று இலங்கைக்கு எடுத்து செல்ல படுகிறது ,இலங்கை
எயார் லங்கா விமானத்தின் ஊடக இந்த் சடலம் எடுத்து செல்ல படுவதாக தெரிவிக்க படுகிறது
மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை
மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை
இலங்கை பாசறை பகுதியில் தந்தது மற்றும் உறவினருடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்
ஒருவரின் தங்க சங்கிலி அறுத்து செல்ல பட்டுள்ளது
இவர்களை வழிமறித்த மர்ம திருடர்கள் கண்களுக்கு மிளகாய் தூளை வீசிவிட்டு இந்த் சங்கிலியை
திருடி சென்றுள்ள செயல்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்
குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்
கிளிநொச்சியில் வீடொன்றில் காணப்பட்ட எறிகணை ஒன்றை இரு சகோதரர்கள் இணைந்து
வெட்டியுள்ளனர் ,அப்பொழுது அந்த குண்டு வெடித்து சிதறியதில்
சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
3வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு
3 வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு
வவுனியாவில் இருந்து முல்லைதீவிவு கடலில் குளிக்க சென்ற மூன்று வாலிபர்கள் நீரில் அடித்து
செல்ல பட்ட நிலையில் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளனர்
காணமல் போயிருந்த இவர்களை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டனர் ,தற்போது சடலமாக
மீட்க பட்டுள்ள நிலையில் உறவுகள் கண்ணீரில் உறைந்துள்ளனர்
விழிப்புணர்வு அற்று நமது மக்கள் இவ்விதம் செல்வதும் ,இறந்த நிலையில் கடலில் மிதப்பதும்
தொடர் துயர நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது
கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு
கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு
இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 746 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று பதிவான இந்தத்
தொற்றாளர்களுடன் இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின்
எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.Covid TOTALஇதேவேளை,
கொவிட் வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த மேலும் 316 பேர் முழுமையாகக்
குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, முழுமையாகக் குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை ஐந்து லட்சத்து 42 ஆயிரத்து 326 ஆகும். மேலும் 21 கொவிட் மரணங்களை சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 461 ஆகும்.
இதுவரை உலகம் முழுவதிலும் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 கோடி
61 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 70 ஆயிரத்திற்கும்
அதிகமாகும். நேற்றைய தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து
பத்தாயிரத்திற்கும் அதிகமாகும். இவர்களில் இரண்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, 13 லட்சத்து 43 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் பறந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று
திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த நால்வரும் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த விமான விபத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,குறித்த விபத்து
தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்
விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்
உலகில் மனிதர்கள் ஊடக விலங்குகளுக்கு கொரனோ நோயானது பரவி வருகிறது ,மேற்படி
நோயினால் பாதிக்க பட்ட விலங்குகளிடம் இருந்து புதியவகை கொரனோ நோயானது பரவி வரும்
அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் சிங்கம் ,பூனை ,நாய்களுக்கு இந்த நோயானது பரவி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
சிலிண்டர் வெடித்து எரிந்த உணவகம் – ஓடிய மக்கள்
சிலிண்டர் வெடித்து எரிந்த உணவகம் – ஓடிய மக்கள்
இலங்கை அனுராதபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பயன்படுத்த பட்டு வந்த
காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் அந்த உணவகம் முற்றாக எரிந்து அளித்துள்ளது
இலங்கையில் தொடராக சிலிண்டர்கள் வெடித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன
காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன
இலங்கை மாத்தளை பகுதி காடு ஒன்றுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்க பட்டுள்ளது ,மேற்படி
சடலங்களை காட்டுக்கு விறகு வெட்ட சென்றவர்கள் கண்ணுற்று பொலிஸாருக்கு தெரிவித்த
நிலையில் இரு சடலங்களும் மீட்க பட்டுள்ளன
மேற்படி இருவர் மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
5 பிள்ளைகளை காட்டில் விட்டு காதலனுடன் ஓடிய தாய்
5 பிள்ளைகளை காட்டில் விட்டு காதலனுடன் ஓடிய தாய்
தனது ஐந்து பிள்ளைகளையும் காட்டில் தவிக்கவிட்டுவிட்டு, முறையற்ற காதலனுடன் தாயொருவர் தலைமறைவான சம்பவம் வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
காட்டில் ஓரிடத்திலிருந்து பிள்ளைகள் அழும் சத்தம் கேட்பதாக, பொலிஸாருக்கு தகவல்
கிடைத்துள்ளது. அதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே, அந்த ஐந்து பிள்ளைகளும் மீட்கப்பட்டனர்.
அந்த பிள்ளைகள் ஐவரும் கடந்த இரண்டு நாட்களாக எவ்விதமான உணவுமின்றி இருந்துள்ளனர்
என அறியமுடிகின்றது. அந்த பிள்ளைகளில் சிறியவருக்கு 2 வயதெனவும் பெரிய பிள்ளைக்கு 12 வயதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிள்ளைகளின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர். அன்றையநாள் மதுபோதையில்
வந்திருந்த கணவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதன்போதே, தன்னுடைய ஐந்து
பிள்ளைகளையும் அழைத்துச் சென்ற 35 வயதான தாய், காட்டில் தவிக்க பிட்டுவிட்டு, முறையற்ற காதலுடன் தப்பியோடிவிட்டார்.
பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பிள்ளைகள் ஐவரும் நன்னடத்தை
நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் வரையிலும் அப்பிள்ளைகளின் பெரிய தாயாரின்
பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தன
நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்
நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை குச்சாவெளி மற்றும் ,ஈச்சிலம்பற்று பகுதிகளில் நால்வர் நீரில் மூழ்கி மரணமாகினர்
,மேற்படி மரண சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மேற்படி மரணங்கள் படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள்
ஆரம்பிக்க பட்டுள்ளன
1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை
1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை
இந்தியாவிடம் இருந்து இலங்கை 1,4 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது
இந்தியா சென்றிருந்த நீதியமைச்சர் இந்த கடன் உதவி தொகை தொடர்பில் பேசி இருந்த
நிலையில் இந்த உதவி தொகை வழங்க படுகிறது
ஆளும் கொள்ளையர்கள் ஆட்சியில் நாடு பெரும் கடன் சுமையை சுமந்து வருகிறது குறிப்பிட தக்கது
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக்
கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு இரண்டு சிறுவர்களினதும்
சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்று (03) இரவு 10.40
மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடியுள்ளனர். இதில்
இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது உயிர் தப்பிய
மற்றைய இரண்டு சிறுவர்கள் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில்
தேடியபோது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்
முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்
இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளன
மேற்படி சம்வத்தில்க் பல வீடுகள் சேதமாகின
இவ்விதம் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் வீடொன்றில் சிலிண்டர் வெடித்து சிதறியது
எனினும் சேதங்கள் இன்றி குடும்பத்தினர் தப்பித்துள்ளனர்
போதையில் தாக்குதல் – நால்வர் கைது
போதையில் தாக்குதல் – நால்வர் கைது
மல்லாவி பகுதியில் போதை அருந்திவிட்டு வீட்டின் முன்பாக நின்ற குடும்பஸ்தர் மீது நால்வர்
அடங்கியா குழு தாக்குதல் நடத்தியுள்ளது
மேற்படி தாக்குதலை நடத்திய குழுவினர் கைது செய்ய பட்டுள்ளனர் .
போதைக்கு அடிமையாகி எமது சமுதாயம் சீரழிந்து செல்வதனை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கின்றன
மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை
மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை
காணாமலாக்கிய சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14
கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.
இந்த வழக்கு நேற்று சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள்
கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன.
இவ்வழக்கில் வசந்த கரண்ணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர்
தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 8 ஆம் திகதி ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
அந்த ரிட் மனுவின் தீர்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான
விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது
பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை
பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை
பாகிஸ்தானில் சிங்களவர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரையோ உயிரோடு எரித்து கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவரது கொலையுடன் தொடர்புடைய ஐம்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கடும் தணடனை வழங்க படும் என
ஆளும் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்
35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்
35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்
இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து
வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார்.
35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்
புதுமண தம்பதியை படத்தில் காணலாம்.
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 65). இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு வந்து கூலி வேலை பார்த்தார். அப்போது இவருக்கும்
மைசூருவை சேர்ந்த அவரது அத்தை மகளான ஜெயம்மா (60) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு ஜெயம்மாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரது பெற்றோர் ஜெயம்மாவுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். சிக்கண்ணாவை
மனதில் நினைத்து கொண்டு கல்நெஞ்சுடன் வேறு வழியின்றி வேறொருவருக்கு ஜெயம்மா கழுத்தை நீட்டினார்.
ஆனால் காதலன் சிக்கண்ணா நினைவிலேயே இருந்ததால் ஜெயம்மாவால் கணவருடன் சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. சில ஆண்டுகள் கணவருடன் குடும்பம் நடத்திய ஜெயம்மா, 4 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார்.
புதுமண தம்பதியை படத்தில் காணலாம்.
ஆனால் ஜெயம்மாவின் காதலன் சிக்கண்ணவோ, திருமணம் எதுவும் செய்யாமல் ஜெயம்மாவின் நினைவிலேயே வாழ்ந்து வந்தார். இவ்வாறாக 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
இந்த நிலையில், சமீபத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் சந்தித்து உள்ளனர். அப்போது தான் சிக்கண்ணா திருமணம் செய்யாமல் இருப்பது ஜெயம்மாவுக்கும்,
ஜெயம்மா கணவரை பிரிந்தது சிக்கண்ணாவுக்கும் தெரியவந்தது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் இருவரும் கண்ணீர் சிந்தி பரஸ்பரம் விசாரித்து கொண்டனர்.
இதையடுத்து கடந்த கால நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்ட சிக்கண்ணாவும், ஜெயம்மாவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் மண்டியா மாவட்டம்
மேல்கோட்டைக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களை நண்பர்கள் வாழ்த்தினர்.
இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு
இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு
இலங்கையில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி
ஒருவர் பாதிக்க பட்டுள்ள்ளார் , மேலும் இந்த நோயானது பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள்
மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது
உலக நாடுகளில் இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது
புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் புலிகள் புதைத்து வைக்க பட்ட தங்கத்தை தோண்டியவர்கள்
கைது செய்ய பட்டுள்ளனர்
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது
இடம் பெற்றுள்ளது












