Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
பிரிட்டனில் 30,000′ பாசல்களை காணவில்லை – மோசடி அம்பலம்
பிரிட்டனில் 30,000′ பாசல்களை காணவில்லை – மோசடி அம்பலம்
பிரிட்டனில் கொரனோ வைரஸ் நோயானது பரவி வரும் வேளையில்
பொதி சேவைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்விதம் 30,000′ Hermes parcels காணாமல் போயுள்ளது ,தவறான போஸ்ட்
கோட்டுக்கு இந்த பொதிகள் விநியோகிக்க பட்டுள்ளன ,அதனை பெற்று
கொண்டவர்கள் திருப்பி வழங்காததுடன் ,அதனை வினியோகித்த நபர் பெற்று கொண்ட விநியோக பணத்தில் அடி வீழ்ந்துள்ளது
மேற்படி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் மேற்படி பொதிகளை மீளவு அதே வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்துள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
துருக்கியை ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைக்க முடியாது – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு
துருக்கியை ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைக்க முடியாது – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு
துருக்கிய நாட்டினை ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைத்து கொள்ள
முடியாதது என பிரான்ஸ் மீளவும் திட்டவட்டடமாகி அறிவித்துள்ளது
முஸ்லீம் நாடு ஒன்று ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைத்து கொள்ள முயன்றால் அது பெரும் பிளவுகளை ஏற்படுத்தும்
என்பதுடன் ஐரோப்பா முஸ்லீம் நாடாக மாற்றம் பெறுவதை தடுத்திட முடியாது என்ற கொள்கை வலுத்து வருகிறது
அதனால் இந்த கருத்தில் முக்கிய நாடுகள் உறுதியாக உள்ளன ,ஆனால்
துருக்கி இணைந்தால் ஐரோப்பா வர்த்தக ரீதியில் பலம் பெரும் என்ற கோரிக்கை பிரகடன முன் வைக்க படுகிறது ,
துருக்கி இணையவுள்ளது என்கின்ற காரணத்தால் பிரிட்டன் ஐரோப்பாவில்
இருந்து பிரிந்து செல்ல முக்கிய காரணமாக அமைந்தமை இங்கே குறிப்பிடலாம்
யாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு
யாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு
யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
யாழ்.சுன்னாகம் பகுதியை சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இடையில்
தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட் கோல்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்கள் பழக்கத்தின் பின் நால்வரும் சந்திப்பதற்கு விரும்பியுள்ளனர். அதடனடிப்படையில் கடந்த 8 ஆம் திகதி சுன்னாகத்தில் இருந்து பெண்கள் இருவரும் யாழ்.நகருக்கு
பேருந்தில் சென்று அங்கிருந்து கொடிகாமத்திற்கு பேருந்தில் சென்றுள்ளனர். கொடிகாமம் பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்களும் அவர்களுக்காக காத்திருந்து, இரு பெண்களும்
பேருந்தால் இறங்கியவுடன் அவர்களை தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொடிகாமம் பருத்தித்துறை வீதியூடாக வரணி மாசார் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் நான்கு பேரும் அங்கு இருந்த வேளை அப்பகுதிக்கு வந்த மேலும் சில இளைஞர்கள் இரு பெண்களிடமும் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளனர். அவ்வேளை அங்கிருந்து ஒரு பெண் தப்பி ஓடி
வீதிக்கு வந்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, இளைஞர்கள் குழு ஒன்று தம்மை கடத்தி செல்ல முற்பட்டதாகவும், அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடி
வந்துள்ளதாகவும், தனது நண்பியையும், நண்பர்களான இரு இளைஞர்களையும் காப்பற்றுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை, சம்பவம் இடம்பெற்றது பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
பகுதியாக இருந்தமையால், பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்து இரண்டு பொலிஸ் பிரிவினரும் அன்றைய தினம் (8 ஆம்
திகதி) கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணையும், பெண்களுடன் சென்ற இரு ஆண்களையும் தேடினார்கள்.
அந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அன்றைய தினம் மாலையே வீடு திரும்பியுள்ளார். அதனை அறிந்து கொண்ட பருத்தித்துறை பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்று சம்பவம்
தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் வாக்கு மூலம் அளிக்க வருமாறு கேட்டனர். அதற்கு குறித்த பெண்
நான்கு நாட்களாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலம் அளித்தார்.
குறித்த வாக்கு மூலத்தில், தொலைபேசி ஊடாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், இரு இளைஞர்களையும் தானும் தனது
நண்பியும் சந்திக்க சென்றோம். அப்போது அவர்கள் தம்மை வரணி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் தமது நண்பர்களை அழைத்து எம்முடன் தவறாக நடக்க முற்பட்ட வேளையே நண்பி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். என்னால் தப்பி செல்ல முடியவில்லை.
நாம் நம்பி சென்ற இளைஞர்களும் அவர்களின் நண்பர் ஒருவருமான மூன்று பேர் என்னை பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்திய பின்னர் அங்கிருந்து என்னை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டார்கள் என வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அந்த இளைஞர்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தொலைபேசி ஊடான பழக்கம் மாத்திரம் எனவும்
தெரிவித்துள்ளார். அதனால் அவர்களின் தொலைபேசி இலக்கத்தினை கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Manchester பகுதியில் கோடாலி முனையில் மக்களை மிரட்டிய நபர் – சுற்றி வளைத்த பொலிஸ்
Manchester பகுதியில் கோடாலி முனையில் மக்களை மிரட்டிய நபர் – சுற்றி வளைத்த பொலிஸ்
பிரிட்டன் Manchester பகுதியில் உள்ள காட்டுப்புற பகுதி ஒன்றுக்குள் மக்களை
கோடாலி முனையில் பணயமாக வைத்து மிரட்டிய நபர் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சம்பவத்தை அறிந்து விரைந்து சென்ற போலீசார் திடீரென சுற்றி வளைத்தனர்
நாய் அணியினர் ,மற்றும் ஆயுத போலீசார் வரவழைக்க பட்டு நபர் முற்றுகைக்கு உள்ளானார்
இதில் கோடாலி எறிந்த நபர் தப்பி ஓடாது காவலதுறையில் சரண் அடைந்தார்
இந்த செயலுக்கு உரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
,காயமடைந்த நிலையில்
மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
மேலதிகமாக எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்
லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்
லண்டன் குறைடன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றில் பிறந்த சிசுவுக்கு முப்பத்தி ஓராம் நாள் விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது
இதன் பொழுது அங்கு முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கெடுத்தனர் ,
இங்கு மக்கள் திடீரென கூடியதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அயல் வீட்டார், காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்
விரைந்து வந்த காவல்துறை அணியினர் அங்கு பங்கு கொண்ட மக்களை சுற்றிவளைத்தனர்
கொரனோ நோயின் பொழுது அத்துமீறி சட்டவிரோதமாக அரசின் அறிவுறு த்தலை மதியாது பாட்டி வைத்தமையாலும்
,அவ்வேளை அங்கு சமுக இடைவெளியை பின்பற்ற மறுத்து பெரும் திரளாக மக்கள் கூடியதாலும் கடுப்பான போலீசார்
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு வருக்கும் தலா ஆயிரம் பவுண்டுகள் தண்ட பணம் அறவிட்டுள்ளனர் ,இலங்கை ரூபாயில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்களாகும்
மேற்படி பணத்தினை எதிர்வரும் பதின் நான்கு நாட்களுக்குள் இவர்கள் செலுத்த வேண்டும்
தவறின் அது இரட்டிப்பாகும் ,அவற்றையும் ,செலுத்த தவறினால் அவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தும் விதியுள்ளது
நாடு கடந்து அகதிகளாக வந்த தமிழர்கள் இந்த இழி நிலை செயல் கண்டு ஒட்டு மொத்த தமிழினமும் வெட்கி தலை குனிகிறது
எவ் வேளை யார் இறப்பார்கள் என்ற பீதி நிலை தொடரும் வேளை ,முட்டாள்கள் போல இந்த செயலை அந்த குடும்பத்தினர் புரிந்துள்ளனர்
பிரிட்டனில் நாள்தோறும் 400 க்கு மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் இதுவரை 38,489 பேர் பலியாகியுள்ளனர்
ஒருவர் எடுத்த முடிவினால் பலர் பாதிக்க பட்டுள்ளனர்இதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட இதனை சிந்திக்கவில்லையா ..?
லண்டன் காவல்துறையின் இந்த அளப்பரிய சேவைக்கு தமிழர் மானுட சமூகம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது
இது போன்ற செயல் இத்தாலியிலும் இடம்பெற்றமை குறிப்பிட தக்கது ,
மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என்ற கொட்டு வாசம் அனைத்து பகுதியிலும் வெளியிட பட்டு வரும் நிலையிலும் அதையும் மீறி இப்படி ஒரு நிகழ்வா …?
நட்டத்தில் ஓடும் அரசுக்கு பல்லாயிரம் பவுண்டுகளை வருமானமாக வழங்கிய மாண்பு மிகு தமிழர்கள்
எங்கே செல்கிறது எம் தமிழர் சமூகம் ..?பிரிட்டனில் இதுவரை 140 தமிழர்கள் இந்த நோயினால் பலியானதாக தகவல் ஒன்று வலம் வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் மலேரியா தடுப்பு மருந்துகள் கொரானாவுக்கு சோதனை
பிரிட்டனில் மலேரியா தடுப்பு மருந்துகள் கொரானாவுக்கு
சோதனைபிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ
நோயினைம் தடுக்கும்
முகமாக தற்பொழுது anti-malaria drugs
மலேரியாவுக்கு ,பயன் படுத்த படும் தடுப்பு மருந்துகள்
சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகிறது
முன் அரணில் பணி புரியும் சுகாதர் பிரிவினர் மற்றும் ,முக்கிய நபர்களுக்கு
இந்த மருந்துகள் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டு வருகின்றன
பிருத்தானியாவில் இரண்டு மருத்துவ மனைகளில் இந்த சோதனை தொடர்ந்து
இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,எனினும் இதனால் பூரண குணம் ஏற்படுமா என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை
உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் 9 பேர் பலி -40 பேர் காயம்
உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்கல் 9 பேர் பலி -40 பேர் காயம்
ஆப் கானிஸ்தான் Ghazni மாகாணத்தில் அரச இராணுவ உளவுத்துறை மையம் மீது கார் மனித வெடிகுண்டு
தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் அரச இராணுவ உளவுத்துறையை சேர்ந்த ஏழு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் நாப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,கடந்த மாதம் அரச இராணுவ
உளவுத்துறை தலைவர் படு கொலை செய்ய பட்டார் ,,அதனை அடுத்தும்
தற்பொழுது இன்று இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை
தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் உள்ள அமெரிக்கா கிரீன் சூன்
பகுதி மீது திடீரென Katyusha rocket தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பெரும் புகை மூட்டம் காணபடுகிறது
ஆனால் ,வழமை போல தமக்கு எதுவித பாதிப்புக்களும்
ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது
ஈரான் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டு இருபத்தி
நான்கு மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது
மேலும் ஈரான் இராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என
அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக அறிவித்த தன் பின்னர் மேற்கொள்ள பட்ட தாக்குதலாகவும் இதனை பார்க்க முடிகிறது
அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக வெளியேற
வேண்டும் என ஈரான் தொடராக கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
ஈரான் ஆதரவு படைகள் இந்த தாக்குதலை
மேற்கொண்டுள்ளளதாக தெரிவிக்க படுகிறது

ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு
ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு
உலக நாடுகளை மிரள வைத்து வரும் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக
ரசியா தற்போது கண்டு பிடித்துள்ள புதியவகை cruise missile, air defense ,
வான் காப்பு ஏவுகணை திட்டம் அடங்கிய ஆயுத கப்பல்கள் நான்கு இணைக்க பட்டுள்ளது
ரசியாவின் போர் கப்பல்களில் இவை மாறுபட்ட செயல் பாட்டையும் ,புதிய தொழில் நுட்பத்துடன் கொண்டவையாக உள்ளன
முதல் கட்டமாக இந்த அனைத்து கப்பல்கள் இணைக்க பட்டுள்ளன ,
எதிர்
வரும் ஆண்டுகளில் மேலும் பல டசின் இது போன்ற கப்பல்களை இணைப்பதற்கு ரசியா முயன்று வருகிறது
உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக இது பார்க்க படுகிறது

சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு
சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு
ஈராக்,மற்றும் சிரியாவில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள்
,உடனோ அன்றி கட்டம் கட்டமாகவோ வெளியேற வேண்டும் ,அவ்வாறு
வெளியேற மறுத்தால் அவர்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்
என ஈரான் அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல்
கூட்டாக தாக்குதல் நடத்துவோம் என அறிவிப்பு விடுக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ஈரான் சுப்ரீம் லீடர் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா இராணுவம் தமது மண்ணில் இருந்து
விலக வேண்டும் என்ற அறிவிப்பு பிரகடனம் செய்த நிலையில் ,அங்கிருந்து
விலக மறுத்து அமெரிக்கா தொடர்ந்து நிலை கொண்டுள்ள
நிலையில்
இவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஏதோ மிக பெரும் விடயத்தை ஈரான் நடத்த தயாராகி வருவதனை இது காண்பிக்கிறது

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்
Gulf of Aden கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல் ஒன்றின்
மீது நீரூந்து விசைப்படகுகளில் இடைமறித்த அமெரிக்கா இராணுவத்தினர் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர்
இவர்களின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குறித்த கப்பலில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவலர்களும் திருப்பி தாக்கினர் .இதனால்
அமெரிக்கா அகப்பல்கள் பின்வாங்கின .இதில் கப்பலில் பலத்த துப்பாக்கி குண்டுகள் பட்டு சேதமடைந்ததது
இந்த தகவல் கடல்படைகளுக்கு வழங்க பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்
ஏமான் நாட்டுக்கு அருகில் உள்ள கடல்வழியாக நுழைந்த கடல் கொள்ளையர்கள்
ஈரான் கப்பல் வெனிசுவிலோ நாட்டுக்கு பத்து மில்லியன் எண்ணெய்களை
ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுதே அமெரிக்கா கடல் படைகள் சட்ட விரோத தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

சீனாவின் புதிய ஏவுகணை சோதனை – கொதிக்கும் அமெரிக்கா – வீடியோ
சீனாவின் புதிய ஏவுகணை சோதனை – கொதிக்கும் அமெரிக்கா – வீடியோ
தற்போது பரிசோதனைகள் முடிந்து இராணுவ பாவனைக்கு அனுமதிக்க பட்டுள்ளது
அமெரிக்காவின் புதிய ஏவுகணைகளை அப்படியே காப்பி அடித்து சீனா தற் பொழுது தமது தயாரிப்பில் புதிய ஏவுகணையாக்களை தயாரித்துள்ளது
130 கிலோ மீட்டார் சென்று தாக்கவல்ல கூறும் தூர ஏவுகணைகளே இவை
இதுபோலவே அமெரிக்காவின் மிக உயர்ரக விமானத்தையும் அப்படியே
காப்பி அடித்து சீனா வெளியிட்டுள்ளது ,இதனால் அமெரிக்கா பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது
காப்பி அடிப்பதில் சீனாவை மிஞ்சிட எவராலும் முடியாது என்பதற்கு இவைகள் சிறந்த உதாரணம்

ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு
ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு
சிரியாவில் உள்ள தெற்கு ,மேற்கு ,மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ஈரான் இராணுவ நிலைகள் மீது தொடர் தாக்குதலை
மேற்கொள்வோம் என அமெரிக்கா ,இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளன
கடந்த சில வாரங்களாக ஈரானிய இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தது .
இவ்வாறான சூழலில் தற்பொழுது இரு நாடுகள் கூட்டு தக்குதல் அறிவிப்பு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது
சிரியா கடந்து அரேபிய நாடுகளில் பரவி தரித்து நிற்கும் அமெரிக்கா படைகள் பெரும் விலையினை கொடுக்க வேண்டி
வரும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது இஸ்ரேல் அமெரிக்கா இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
சிரியா களமுனையில் ரசியா வழங்கிய எஸ் 400 ரா வான் இடைமறிப்பு ஏவுகணைகள் செயல் இழந்துள்ள நிலையில் ,சிரியா
கள முனையில் பாரிய சரிவு நிலயை அரச இராணுவம் சந்தித்து வருகிறது ,
இதற்கு மாற்றீடாக ரசியா என்ன செய்ய போகிறது ..? ஈரான் இராணுவம் சிரியாவின் மூன்று முக்கிய பகுதிகளில் நிலை
கொண்டுளள்து ,சிரியா போரினை ஈரான் வழிநடத்தி செல்வதாக இஸ்ரேல் ,அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டனில் கொரனோவால் 61,200 பேர் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டனை வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
இதுவரை 61,200 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது
திடீரென இந்த மரண தொகை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து வயதானவர்கள் பிளே பலியாகி வருகின்றனர் .
பலியானவர்களில் எழுபது வீதமானவர்கள் கறுப்பின மக்களாவர்
வயோதிப மடங்களில் தங்க வைக்க பட்ட வயோதிபர்களில் 80 வீதமானவர்கள் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டிருந்தது
முக்கிய நிபானர் ஒருவர் இந்த விடயத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுளளார் பிரிட்டன் அரசு தனது மக்கள் பலி எண்ணிக்கையை
மறைத்து வருவதனை குற்ற சட்டு முன்வைக்க பட்ட நிலையில் இந்த விடயம் வெளிவந்துள்ளமை குறிப்பிட தக்கது


உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்
உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்
சிரியாவின் இட்லி குதிக்கு மேலாக பறந்து உளவு பார்ப்பதில் ஈடுபட்ட ,
சிரிய அரச இராணுவத்தின் உளவு விமானம் ஒன்றை கிளர்ச்சி படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த பகுதியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று உளவு விமானங்களில்
ஒன்றின் மீது இலக்கு வைத்து மேற்கொள்ள பட்ட தாக்குதலில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது
தொடர்ந்து குறித்த பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்ற உள்ளன .
பிறி தொரு சம்பவத்தில் பத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை தாம்
கொன்று குவித்துள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது

வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வட கொரியா அதிபர் கிங் யோங் உன் மிகவும் கொடியவர் என்கின்ற பரப்புரை உலக அரங்கில் மேற்கொள்ள பட்டு வருகிறது
அவர் மரணமானார் என்ற செய்தி பரவிய நிலையில் தற்பொழுது ,அதிரடி வேட்டையை ஆரம்பித்துள்ளார்
இராணுவத்திற்கு உரிய முறையில் உணவுகள் வழங்குவதில்லை எனவும் ,
அதற்கு ஒதுக்க பட்ட நிதிகளில் முக்கிய மேல் நிலை அதிகாரிகள் ஊழல் புரிந்துள்ளனர்
என்ற குற்ற சாட்டு எழுந்துள்ள நிலையில் ,தற்போது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
புலனாய்வு துறை தலைவராக அவரது நெருங்கிய மெய்ப் பாதுகாவலர்
ஒருவரை நியமித்த இரண்டு நாட்களுக்குள் இந்த அதிரடி முடிவு அறிவிக்க பட்டுள்ளது
அப்படி என்றால் மிக முக்கிய இராணுவ தளபதிகள் இலக்கு வைக்க படுகின்றனர் ,
லஞ்ச ஊழல் மோசடி உறுதி படுத்த பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை உறுதி என அடித்து கூறலாம்
யார் அந்த தளபதிகள் என்பதை அறிந்திட உலகம் எதிர்பார்த்தது காத்துள்ளது

சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரித்தானியா English-Welsh பகுதியில் எல்லையில் சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்க பட்டுள்ளது
Dean, Gloucestershire. குறித்த காட்டுப்புற பகுதியில் உலவிய கார் ஒன்றை போலீசார் மறித்து சோதனை செய்தனர் ,
அதில் துண்டுகளாக வெட்ட பட நிலையில் மனித சடலம் கண்டு பிடிக்க பட்டது
இந்த கொலை ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை
ஆண் ,பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர் ,தொடர்ந்து தேடுத்தல்கள் நடத்த பட்டு வருகின்றன
ஒன்றுக்கு மேற்பட்ட மனித சடலங்கள் என தெரிவிக்க பட்டுகிறது
உலங்குவானூர்தி மூலம் தேடுத்தல்கள் முடுக்கி விட பட்டுள்ளன ,வீதிகள் மக்கள் செல்லவும் ,வெளியேறவும் தடை விதிக்க பட்டுளள்து ,மேற்படி
சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா
ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா
ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி படு கொலை செய்ய பட்ட தன்
பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் முறுகளும் ,மோதல்களும் தீவிரம் பெற்றுள்ளன
இரு நாட்களுக்கு முன்னர் பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு
கொண்டிருந்த ஈரானின் மிக சக்தி வாய்ந்த இரு நீரூந்து வேக விசை போர் கலங்கள்
மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,இதில் 19 பேர் பலியாகியும் ,15 பேர் படு காயமடைந்துள்ளனர்
ஈரானோ இது தவறுதலான ஏவுகணை தாக்குதல் என விளக்கம் அளித்தது ,
ஆனால் தற்போது ஈரான் நாட்டின் அதிபருக்கு நெருங்கிய ஊடகம் ஒன்று திகில் செய்தியை வெளியிட்டுள்ளது
அந்த ஊடக குறிப்பில் அமெரிக்காவே மின்சார தாக்குதல் ,அல்லது கதிரியக்க ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த இருகலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது
சேதமான நிலையில் மீட்க பட்ட போர் கலங்கள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது ,
இது அமெரிக்கா இவ்வகையான புதிய தொழில் நுப்டம் மூலம் தாக்கி இருந்தால், ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என அந்த ஊடகத்தில் தெரிவிக்க பட்டுள்ளது
எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இந்த ஏவுகணைகள் தாங்கிய நீரூந்து
விசை படகுகள் வந்தால் தாக்குங்கள் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன
இதனை அடுத்தே ஈரான் இந்த விடயத்தில் மிக கோபத்தில் ,உள்ளது அப்படி என்றால் கடல் படை கப்பல்கள் மீதோ அல்லது ஏவுகணை
தாக்குதல்களோ அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

9 இராணுவத்தினர் கடத்தி கழுத்து வெட்டி கொலை – குவிக்க படும் இராணுவம்
9 இராணுவத்தினர் கடத்தி கழுத்து வெட்டி கொலை – குவிக்க படும் இராணுவம்
சிரியாவில் தொடர்ந்து வரும் போர் தற்பொழுது உக்கிரம் பெற்றுள்ளது .
சிரியா அரச இராணுவத்தினர் ஒன்பது பேர் கிளர்ச்சி படைகளினால் கடத்த பட்டு ,
கழுத்து வெட்டி படு கொலை செய்ய பட்ட நிலையில் தற்பொழுது சிரியா அரச இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்
சிரியாவின் முன்னரங்க நிலையான Tafas. பகுதியில் இந்த முக்கிய தாக்குதல்கள் படைகள் ,கனரக ஆயுத வண்டிகளுடன் குவிக்க பட்டு வருகின்றனர்
வரும் மணித்தியாங்களில் இங்கு கடும் சண்டை இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
மக்கள் அச்சத்தின் காரணமாக இந்த நகர் பகுதியில் இருந்து அகதிகளாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்
எப்பொழுதும் எதுவும் இங்கு இடம்பெறலாம் என்ற அச்சம் நிலவுகிறது
இதுவரை மூன்று லட்சம் மக்கள் பலியாகியும் முப்பது லட்சம் பேர் அகதிகளாகி உள்ளமை குறிப்பிட தக்கது

சிரியாவில் ஏவுகணை மையங்களை அழிக்கும் – இஸ்ரேல்
சிரியாவில் ஏவுகணை மையங்களை அழிக்கும் – இஸ்ரேல்
சிரியாவில் உள்ள அரச இராணுவ ஏவுகணை தொழில் சாலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது
துல்லியமான உளவு தகவல்களை மைய படுத்தி இஸ்ரேல் சிரியா மீது இந்த ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
இங்கு ஈரான் ,ரஷியா இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடுக்க கூடும் என என்ற நிலையில் இந்த வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது
இஸ்ரேலின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் செயல் திறன் அற்றதாக ரசியாவின் எஸ் 400 ரக ஏவுகணைகள் உள்ளன ,
அதுபோலவே ரசியாவின் புதிய வகை டாங்கிகளும் செயல் இழந்து காணப்படுகின்றன
இவ்வாறான நிலையிலேயே இஸ்ரேல் தொடர்ச்சியாக தனது தொடர் தாக்குதல்களை மேற் கொண்டு வருகிறது
விரைவில் ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லாக்கள் தமது தாக்குதல்களை இஸ்ரேல்,மற்றும் அமெரிக்கா மீது நடத்தலாம் என எதிர் பார்க்க படுவதுடன் ,ஹிபுல்ல்லாவின் சமிக்கைகள் தமது தாக்குதல்கள் தொடரும் என்பதை அறிவிப்பதாக உள்ளது
வரும் நாட்களில் இந்த எதிரொலிகள் தெரிய வரலாம் என்பதை அடித்து கூறலாம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்








