Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
பிரிட்டனில் takeaways கடைகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் – புது சட்டம் அமூல்
பிரிட்டனில் takeaways கடைகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் – புது சட்டம் அமூல்
பிரிட்டனில் வேகமாக மீள பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை
தடுத்திட கண்டிப்பாக takeaways உணவகங்களுக்கு ,கடைகளுக்கு ,செல்பவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் ,
அவ்வாறு மீறி செயல் பட்டால் உங்கள் மீது சட்டம் பாயும் என தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இதே உணவகங்களில் குந்தி இருந்து சாப்பிட்டால் அதற்கு முக கவசம் தேவை இல்லை என அறிவிக்க பட்டுள்ளது
இதனை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் ,இவ்வேளை மேற்படி
விதிகளை கடைபிடிக்காது செயல் பட்டால் உங்களுக்கு தண்டம் அறிவிட படும் என்பதாக தெரிவிக்க படுகிறது
எனவே பிரிட்டன் மக்களே உசார் ,இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி காப்பாற்றி கொள்ளுங்கள்
உணவகங்கள் மட்டும் அல்லாது கடைகளுக்கும் இது பொருந்தும் என்பதாகும்

லண்டனில் 2 மில்லியன் இலாப பணத்தை மடக்கிய போலீஸ் – சிக்கிய மாபியா கும்பல்
லண்டனில் 2 மில்லியன் இலாப பணத்தை மடக்கிய போலீஸ் – சிக்கிய மாபியா கும்பல்
லண்டனில் நிறுவனம் ஒன்றை திறந்து அதன்ஊடாக வியாபார
நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இத்தாலியை சேர்ந்த மாபியா
கும்பல் ஒன்று லண்டன் குற்றவியல் காவல்துறையினரால் மாடக்கி பிடிக்க பட்டுள்ளது
லியோட்ஸ் வங்கியில் கணகை திறந்து அதன் ஊடாக இடம்பெற்று
வந்த வியாபார நடவடிக்கையின் ஊடாக பெற பட்ட இரண்டு
மில்லியன் இலாப பணத்திற்கு வரி செலுதாது மேற்படி கும்பல் அந்த
பணத்தை இத்தாலிக்கு மாற்றிட முயன்ற பொழுது சிக்கினர்
மேற்படி விடயம் தொடர்பாக இடம் பெற்று வந்த நீண்ட விசாரணைகளின்
பின்னர் குறித்த நிறுவனம் பிரிட்டனில் போலியான முகவரியில் இயங்கியதும் அம்பலமாகியுள்ளது
அதாவது குறித்த முகவரியில் எவ்வித பயன் பாடும் அற்று காணப்பட்டுள்ளது
இத்தாலிய காவல்துறையினர் இணைந்து வழங்கிய ஆதரவுடன் இந்த நபர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான் என்பதை இதைத்தான் போலும் .
40 மணித்தியாலமாக எரியும் அமெரிக்கா விமான தாங்கி கப்பல் -59 பேர் பாதிப்பு – வீடியோ
Diego கடல் படை தளத்தில் தரித்து நின்ற Bonhomme Richard, என்ற கப்பல் திடீரென பற்றி எரிகிறது ,.40 மணித்தியாலமாக எரியும் அமெரிக்கா விமான தங்கி கப்பல் -59 பேர் பாதிப்பு – வீடியோ
அமெரிக்காவின் மிதக்கும் விமான தாங்கி கப்பல் ஒன்று கடந்த
நாப்பது மணித்தியாலங்காக பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
விமானத்தின் இரண்டாவது உள்ளடுக்கு மாடியில் பற்றி பிடித்த
தீயினை அணைக்க முடியாது கடற்படையினர் தினறிய வண்ணம் உள்ளனர் .
இதில் நச்சு வாயுக்கள் எதுவும் கசிவு ஏற்படவிலை எனவும் அவ்விதமாக ஏதுவும் இந்த கப்பலில் ஏற்படுத்த படவில்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்த கப்பலில் இவ்வேளை பணியில் இருந்து 59 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
அதிக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் இவர்கள் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேலும் ஐந்து பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கப்பலில் இருந்து வெடி பொருட்களும் வெடித்து சிதறியுள்ளதாக எதிரி நாடுகள் சூளுரைத்துள்ளன
ஈரான் கப்பல் மீது இவ்விதமான சம்பவம் நிகழ்ந்து இரு மாதத்தில் அமெரிக்கா கப்பல் இவ்விதமான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது
இது லேசர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
பிரிட்டனில் நான்கு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரிட்டனில் நான்கு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரிட்டனில் பெரும் குண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகளிலே
ஈடுபட்ட வந்த நான்கு தீரவாதிகள் உளவுத்துறையின் நீண்ட கண்காணிப்பின் கீழ் கைது செய்ய பட்டுள்ளனர்
கிழக்கு லண்டன் மற்றும் Leicestershire. பகுதியில் வைத்து 31 ,27,17 ,32 வயதுடைய
நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
பிரிட்டனில் பல்வேறு பட்ட நாசகார தாக்குதல்களை நடத்த முயன்ற பொழுதும்
அவை இறுதி நிமிடங்களில் முறியடிக்க பட்டு மக்கள் காப்பாற்ற பட்டனர் .
அதி திறன் சார்ந்து இயங்கும் பிரிட்டன் உளவுத்துறையின் திறன் பாராட்டுதலுக்கு உரியது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

லண்டனில் வேலை இல்லாதவர்களுக்கு பணம் ,தொழில் தொடங்க பண உதவி – ஊழியர்களுக்கு 8 ஆயிரம் போனஸ் video
லண்டனில் வேலை இல்லாதவர்களுக்கு பணம் ,தொழில் தொடங்க பண உதவி – ஊழியர்களுக்கு 8 ஆயிரம் போனஸ் video
பிரிட்டனில் கொரனோ நோயலால் நாடு பெரும் பொருளாதார சந்திப்பை சந்தித்தது ,இதனை
அடுத்து தற்போது அதிரடி திட்டங்களை ஒன்று புதன்கிழமை அரசு அறிவித்துள்ளது
அதன் படி நீங்கள்வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு 520 போனஸ் வழங்க படுகிறது ,அது தவிர
தொழில் தருனர் ,ஒருவரை அறிமுகம் செய்து இருப்பின் அவருக்கு 8,000 போனஸாக வழங்க படுகிறது
அது தவிர வீடு வாங்குபவர்களுக்கு ,வரி இல்லாது ,முத்திரை ,வீடுகள் வாங்கிட முடியும் ,இவை இரண்டு முதல் ஐந்து லட்சம் வரையிலான வீடுகளுக்கு உள்ளடக்க பட்டுள்ளது,அப்டி என்றால் 15 ஆயிரத்துக்கு மேல் மிச்சம்
மேலும் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் கடன் வழங்க படவுள்ளது ,இந்த பணம் வங்கி வழங்கும் ஆனால் அரசே இந்த கடன்
உதவிக்கு பொறுப்பாக நிற்கும்,அதாவது கடனைபெற்று விட்டு சுத்த முடியாது காட்டியே தீர வேண்டும் .
வங்கி ரெப்பசி அடிக்க முடியாது ,வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட அரசு பல்வேறு பட்ட வழிகளை செய்து வருகிறது ,அதன்
பிரகாரம் இந்த அதிரடி அறிவிப்பை நிதி அமைச்சர் பாரளுமன்றில் அறிவித்தார் .
குடி பாணங்கள் ,மற்றும் சூடான உணவுகளுக்கு வரி கழிவு வழங்க படுகிறது .ஐந்து வீதமாக குறைக்க படுகிறது
இவை குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லும் படியாகும் நிலையில் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது ,அது தவிர அனைவரும் வேலைக்கு
செல்லும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுக படுத்த படுவதுடன் ,புதிய தொழில் தொடங்குனர்களை அறிமுகம் செய்து வைக்கிறது அரசு
இதோ காணொளியில் மேலதிக முழுமையான விபரங்கள் அப்புறம் என்ன குஷி தான்
இந்த நல்ல விஷத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ,யாவரும் பயன் பெறட்டும் ,தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்
வெளிநாட்டில் இருந்து வந்து வாலிபரை – கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை
வெளிநாட்டில் இருந்து வந்து வாலிபரை – கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை
வெளிநாட்டில் இருந்து வந்து ஜாலியாக ஊர் சுற்றிய வாலிபர்: கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை
முகக்கவசத்தை முறையாக அணியாமல் சாலையில் சுற்றித்திரிந்த நபரை சுகாதாரத்துறையினர் கட்டி ஆம்புலன்ஸில் தூக்கிச்சென்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்து ஜாலியாக ஊர் சுற்றிய வாலிபர்: கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை
விதிமுறை மீறிய நபரை தூக்கிச் செல்லும் சுகாதாரத்துறை ஊழியர்கள்
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முடக்கத்திற்குப் பின்னர் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா
காலத்தில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று கேரள மாநிலம் பத்தனம்திட்டா புனித பீட்டர்ஸ் சந்திப்பு பகுதியில் ஒருவர் முகக் கவசத்தை முழுமையாக
அணியாமல் சுற்றிதிரிவதாகவும், சொன்னாலும் அவர் கேட்க மறுப்பதாகவும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 43 வயதுடைய அந்த நபர் கடந்த 4 நாட்களுக்கு முன் குவைத்தில்
இருந்து வந்தது தெரியவந்தது. அத்துடன் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் திரிந்தது அறியப்பட்டது.
இதையடுத்து போலீஸார் கொடுத்த தகவலின்படி கவச உடையுடன் வந்த சுகாதாரத்துறையினர், தப்பிக்க முயன்ற அந்த நபரை விரட்டிப்பிடித்து கைகால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றிக்
கொண்டு சென்றனர். தற்போது அந்த நபர் எர்ணாகுளம் கோளஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர்மீது பத்தனம்திட்டா போலீஸார் கொரோனா ஒழிப்பு தனிமைப்படுத்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவத்தால் உருவாக்க பட்டுள்ள புதிய Unit 9900 என்ற உளவு படை
இஸ்ரேலிய இராணுவத்தால் உருவாக்க பட்டுள்ள புதிய Unit 9900 என்ற உளவு படை
இஸ்ரேலிய பாதுகாப்பு அமிச்சினால் தற்போது புதிய Unit 9900 என்ற குறியீட்டு
பெயர் கொண்ட புதிய சிறப்பு உளவுத்துறை படை ஒன்று உருவாக்க பட்டுள்ளது
உலகில் மொசாட் என அழைக்க படும் இஸ்ரேல் உளவுத்துறையினர் மிக சிறந்த புலனாய்வாளர்கள் என பெயர் பெற்று இருக்கும்
பொழுது தற்பொழுது இந்த விசேட படையினர் உருவாக்க பட்டுள்ளனர்
இவர்கள் நாட்டுக்குள் நிலவும் ,எதிரி நாடுகளின் ஊடுருவல் மற்றும் அதன் தற்காப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தும்
மேலும் தமது நாட்டின் மீது மேற்கொள்ள படவுள்ள எதிரி நாடுகளின் தாக்குதல்களை
இந்த அணியினர் முறியடித்து நாட்டை காப்பாற்றி கொள்வார்கள் என தெரிவிக்க படுகிறது
இஸ்ரல் கூறுவது போல ஈரான் ,கிஸ் புல்லாக்கள் நகர்வினையும் தாக்குதல்களையும்
முறியடிக்க முடியுமா என்ற கேள்வியே பரவலாக முன் வைக்க படுகிறது
வரும் காலங்களில் இந்த புதிய உளவுத்துறையினர் நடவடிக்கை உலக நாடுகள் முன் விரித்து வைக்க படும் என்பதில் சந்தேகம் இல்லை

லண்டன் கட்போர்ட்டில் ஐயர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே
இன்று சனிக்கிழமை லண்டன் கட்போர்ட்டில் இந்துமத குருக்கள் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை புரிந்துள்ளார்
தற்போது லண்டன் கார்போர்ட் CATFORD பகுதி ஆலயத்தில்
பணியாற்றி வந்த குருக்களே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்
தீபன் என அழைக்க படும் குருக்கலான இவர் குடும்பத்தில் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளதால் .
பெரும் மன அமைதி குன்றிய நிலையில் காணப்பட்டார் ,அவ்விதமான நிலையில் குடும்பத்தில் எழுந்த அதிக முரண்பாடுகள் காரணமாகவும் ,இவரது தனி நபர் போக்கின் விளைவாகவும் பெரும்
மன அழுத்தத்தில் இருந்த இவர் இவ்விதம் லண்டன் கட்போர்ட் பகுதியியல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்
மேலும் இவரது தற்கொலையை அடுத்து பண சேகரிப்பில் சில குழுக்கள் ஈடு பட்டுள்ளனவாம் ,
லூசியம் சிவன் ஆலயத்தில் கடந்த எட்டு வாரங்களுக்கு முன்னதாக கோபி குருக்கள் தூக்கு மாட்டி தற்கொலை புரிந்தார் ,அவரது
அண்ணன் முறையானவரே இவர் என தெரிவிக்க படுகிறது ,இவர் முன்னர் கெவின்றி பகுதி ஆலயம் பணியாற்றியவர்
அங்கிருந்து பணியில் இருந்து விலக்க பட்ட பின்னர் கட்போர்ட் பகுதியில் பணிபுரிந்து வசித்து வந்துள்ளாராம்
அவ்விதமான ஒருவரே இந்த திடீர் துன்பியல் நிகழ்வை மேற்கொண்டுள்ளார்
ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பி இவ்விதம் இறந்துள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,இதற்குள் நிலவும் மர்மத்தை
கண்டறிய வேண்டிய கடப்பாட்டில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
இவரது மரணம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லூசியம் பகுதியில் இடம்பெற்ற இரு
குருக்கள் தற்கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,கொரனோ காலத்தில் கடும் மன அழுத்தம்
காரணமாக இடம்பெற்ற நான்காவது தற்கொலை இதுவாக தமிழர்கள் மத்தியில் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது


பிரிட்டனில்
லண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை
லண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல்
நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை
மேற்கு லண்டனைச் சேர்ந்த 37 வயதான சஃபியா ஷேக் (25.05.83) பிரிட்டனில்
உள்ள தேவலாயங்கள் ,மற்றும் நிலக்கீழ் சுரங்க நிலையங்கள் ,உணவகங்கள்
என்பனவற்றின் மீது தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திட முயன்ற
முஸ்லீம் பெண் ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டார்
இவ்வாறு கைது செய்ய பட்டவர் தனது குற்றத்தை ஒப்பு கொண்ட நிலையில்
பதின் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இவ்வாறு இந்த தாக்குதல் நிகழ்த்த பட்டிருந்தால் பல நூறு மக்கள் பலியாகி
இருப்பார்கள் என தெரிவிக்க படுகிறது ,பிரிட்டன் உளவுத்துறையின்
இந்த செயல் பாடுகள் காரணமாக இவ்விதமான தாக்குதல்கள் முறியடிக்க பட்டு மக்கள் காப்பாற்ற பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

ஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்
ஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்
ஈரான் தலைநகர் அருகில் மிக இரகசியமாக இயங்கி வந்த அணு உலை
யுரேனியம் தயாரிக்க பட்டு வரும் அனுகூட உலைமீது அமெரிக்கா ,இஸ்ரேல்
கைக்கர்கள் இணைந்து தாக்குதல் நடாத்தி வெடிக்க வைத்துள்ளனர் ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது
இந்த வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் பிழையாகி இருந்தனர்
மேற்படி நாடுகளே இந்த நாசகார வேலையினை செய்துள்ளதாக நாம் நன்கறிவோம் .
இவர்களின் இந்த செயலுக்குரிய விளைவுகளை அவர்கள் விரைவில் சந்திக்க நேரிடும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது
ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் புரட்சி காவல் படையின் தளபதியுமாக
விளங்கிய சோலைமானியின் படு கொலையை அடுத்து அமெரிக்கா ,
இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் பலத்த முறுகல் எழுந்துள்ளது ,அவை ஏவுகணை தாக்குதல் போரில் முடிவடைந்தது .
அந்த படுகொலை சம்பவத்திற்கு எதிராக ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதலை
அமெரிக்கா இராணுவம் மீது நடத்தி வருகிறது ,அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுளளது மேலும் முறுகளை அதிகரித்துள்ளது
இவை பெரும் போர் ஒன்றை ஏற்படுத்த கூடும் என அஞ்ச படுகிறது

லண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது
லண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது
லண்டன் மிச்சம் பகுதியில் ஐந்து வயது சாயாகி என்ற அழகிய அப்பாவி சிறுமியை 35 வயதுடைய தாயார் கத்தியால் கழுத்து பகுதியில் குத்தி வெட்டி கொலை செய்தார் என மக்கள் பேசி கொள்கின்றனர் .
அவ்வாறன அந்த சம்பவத்தை போலீசார் இன்று உறுதி படுத்தினர் ,சடலம் மரண பரிசோதனை அறிக்கையில் பலமான கத்தி வெட்டு
தாக்குதலுக்கு இலக்காகி இந்த அப்பாவி சிறுமி பலியாகியுள்ளார் , Great Ormond Street Children’s Hospital மேற்கொள்ள பட்ட பிரேத
பரிசோதனை அறிக்கையை மையமாக வைத்து காவல்துறையினர் முதன் முதலாக இதனை அறிவித்துள்ளனர்
மேலும் இறந்து போன சிறுமியின் குடும்பத்தினருக்கு தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் ,உதவிகளையும் செய்து வருவதாக
மேலும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன் ,இந்த சம்பவம் தமிழர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் மிக முக்கியமான ஒரு சொல்லாடலை அவர்கள் பயன் படுத்தி வருகின்றனர்,அவை கீழே தர படுகிறது
Great Ormond Street Children’s Hospital ,,,,,It is believed that all parties involved were known to each other.
( சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது)
This is a tragic incident and we are working very hard to fully understand what has happened. Whilst I know the effects of this incident will,
understandably, shock and sadden the local community, please be reassured that we are not seeking anyone else in connection with Sayagi’s death and there is no cause for the community to be fearful or alarmed.
இது ஒரு சோகமான சம்பவம், என்ன நடந்தது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். இந்த சம்பவத்தின் விளைவுகள் உள்ளூர்
சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் என்று எனக்குத் தெரியும், சயகியின் மரணம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை என்பதையும், சமூகம் பயப்படவோ அல்லது
எச்சரிக்கையாகவோ இருக்க எந்த காரணமும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.என காவல்துறை அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது
தற்போது தயார் கத்தி குத்துக்கு உள்ளான நிலையில் மிக ஆபத்தான நிலையிலேயே உள்ளதாகவும் அவர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது ,
( A 35-year-old woman had also suffered a knife injury. She was also taken to hospital where she remains in a critical condition at this time )
அவர் உயிர் தப்பி வந்தால் மட்டுமே மேலதிக விபரங்கள் தெரிய வரும் என வேற்று நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
மேலும் இந்த கொலை தொடர்பாக யாரவது கண்ணுற்றாலோ அலல்து தெரிந்தாலோ தமக்கு தெரிவிக்கும் படியும் இரகசியம் பேன படும் எனவும் காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்
மேற்படி துயர சம்பவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாது ,மீளா துயரில் உள்ளதை அவதானிக்க முடிகிறது

லண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது
லண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது
லண்டன் Gander Green Lane, Sutton பகுதியில் ஆயுத சோதனை காவல்துறையினர்
மேற்கொண்ட திடீர் சுற்று காவல் முற்றுகை சோதனை நடவடிக்கையில்
கார் ஒன்றில் பயணித்து கொண்டிருந்த
40 வயது ஆண் மற்றும் 39 வயது பெண் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் மீது சநதேகம் கொண்ட காவல்துறையினர் அவர்களது காரினை சோதனை
செய்த பொழுது அதற்குள் இருந்து கைதுப்பாக்கி ,மற்றும் கத்தி போதைவஸ்து என்பன மீட்க பட்டன
தொடர்ந்து அவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்த பொழுது அங்கிருந்த
நான்கு துப்பாக்கிகள் ,பத்து கத்திகள் மற்றும் போதைவஸ்துக்கள் என்பன மீட்க பட்டுள்ளது
கைதான இருவரும் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமனரில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
இவர்கள் துப்பாக்கி ஒன்றினை போதை வாஸ்து கடத்தலர் காரர்களுக்கு
வினியோகிக்கும் நகர்வில் ஈடுபட வேளையே இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு
லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு
பிரித்தானிய உளவு துறையினருக்கு தண்ணி காட்டி வந்த மிக பெரும் மாபியா கும்பல் ஒன்று பிரிட்டன் நாட்டு உளவு துறையின் உதவியுடன் மடக்கி பிடிக்க பட்டனர்
தொலைபேசிகள் ஒட்டு கேட்க முடியாத படி புதிய EncroChat, an encrypted வலையமைப்பை பயன் படுத்தி போதைவஸ்து கடத்தல்
,மற்றும் இரகசிய தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ள வசதி செய்து கொடுத்து பல மில்லியன் பணத்தை சம்பாதித்து வந்த
மிக பெரும் மாபியாக்களை நீண்ட நாள் உளவுத்துறை தகவல் தேடுதலின் பின்னர் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர்களது இரசகிய மென்பொருளை உடைத்து அக்குவேறாக ஆராய்ந்த உளவுத்துறை தொழில்நுப்ட நிபுணர்கள் ,அதனை ஒட்டு
கேட்க்கும் வழிமுறைகளை சரியாக கணக்கிட்டு அந்த நகர்வை மேற்கொண்டனர்
இதன் வாயிலாக 750 கைது செய்ய பட்டுள்ளனர்
எண்ணூறு மில்லியன் பணம் மீட்க பட்டது அவற்றில் 54 மில்லியன் பணமாக பைகளில் கட்டி வைக்க பட்ட நிலையில் மீட்க பட்டது
77 துப்பாக்கிகள்,நூறுக்கு மேற்பட்ட தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளது ,இவற்றுடன் போதைவஸ்துக்களும் மீட்க பட்டுள்ளது
இவர்கள் இந்த கருவியை வாடிக்கையாளர்களுக்கு ஆறுமாத வாடகை அடிப்படையில் 1500 பவுண்டுகள் வசூல் செய்ய பட்டுள்ளது
,இவ்விதம் இதனை அறுபதாயிரம் பேர் பாவித்து வந்துள்ளனர் ,இதில் பிரிட்டனில் இருந்து மட்டும் பத்தாயிரம் பேர் பாவித்துள்ளனர் ,இதில் சில எம்பிகளுக்கும் அடங்கும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது
இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த பட்டு தண்டிக்க பட வேண்டும் என பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது ,
தொடர்ந்தும் ஓடி கொண்டிருப்பவர்களை கைது செய்யும் நகர்வில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
ஐரோப்பா எங்கும் இயங்கிய மிக பெரும் வலையமைப்பு இதன் ஊடாக மடக்கி பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு தொடர்ந்தும் ஓடி 


பிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்
பிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்
பிரிட்டன் Waltham பகுதி காட்டு பகுதியில் நடை பயில சென்ற 23
வயதுடைய Pardeep Kaur Plaha என்கின்ற இந்திய பெண்மணி காணாமல் போயுள்ளார்
இவர் வெள்ளை நிற சட்டை அணிந்த படியும் ,கையில் கைபேசியுடனும் நடந்து சென்றுள்ளார்
ஆனல் இதுவரை அவர் வீடு வரவில்லை ,நேற்று இவர் காணமல் போயுள்ளார் ,
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவரை கண்ணுற்றால்
தமக்கு அறியத் தரும்படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .இவர் என்ன ஆனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை
காட்டுக்குள் திசை மாறி சென்றாரா அல்லது இவரை கடத்தி சென்றனரா ..?
,கொலை செய்தனரா அல்லது இவர் வேறு எங்காவது சென்றாரா என்பது
தொடர்பாக எதுவித தகவலும் இதுவரை கிடைக்க பெறவில்லை ,சிறப்பு குற்ற தடுப்பு
பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்,இவரை தெரிந்தால் தமக்கு அறியத்தரும் படி மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது

லண்டன் மிச்சம் தமிழ் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்
லண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்
நேற்று பிரிட்டன் மிச்சம் பகுதியில் 35 வயது தாய் மற்றும் ஐந்து வயது மகள் சாயாகி உள்ளிட்ட தமிழர்கள் பலத்த கத்தி வெட்டு
காயங்களுக்கு உள்ளான நிலையில்
தொடர் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து மீட்க பட்டனர்
இவ்வாறு மீட்க பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் இருந்தமையால் உலங்குவானூர்தி மூலம் எடுத்து செல்ல பட்டு
சிகிச்சை அளிக்க பட்டது ,ஆனாலும் அழகிய அப்பாவி ஐந்து வயது சாயாகி பரிதாபகரமாக பலியானார்
தற்போது 35 வயதுடைய தாயார் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்
மேலும் இவரது இந்த கொலை,தற்கொலை முயற்சி , தொடர்பாக அறிந்து கொள்வதில் மிக சிரமங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் ,இந்த
கொலைக்கான பின்புலம் ,மற்றும் அதற்குரிய காரணங்கள் ,புறசூழல் தொடர்பாக தற்போது சிறப்பு குற்ற தடுப்பு துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
இந்த கொலை அல்லது தாயாரது செயல் பாடுகள் தொடர்பில் ஏதாவது தெரிந்தால் ,தமிழ் பேசும் மக்கள் தமக்கு தெரிவிக்கும் படி காவலதுறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்
மேற்படி விடயம் தொடர்பில் பல்வேறு பட்ட முறைகளில் விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக்கள் இடம்பெற்ற வண்ணம்
உள்ளது ,குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வெகுவாக கண்காணிக்க படுவதை மறைமுக சொல்லாடல்கள் மூலம் கணிக்க முடிகிறது
Sayagi Sivanantham.சாயகி சிவனானந்தம் இறப்பு உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது ,இரு
பிள்ளைகளின் தயாரின் இந்த மன அழுத்தமே, இந்த கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது
மிகவும் பண்பான ,நட்பான பெண் எனவும் ,அமைதியாக உள்ள அவர் தான் தனது பெண் பிள்ளை தொடர்பாக அதிகம் யோசிப்பதாக கூறியதாக மக்கள் மத்தியில் பரவலான பேச்சு உலவுகிறது
தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல் வழங்கினார் என்ற செய்திகளும் கசிகிறது
மிக சிறந்த குடும்ப பெண்மணி ,சிறந்த படித்த பண்பான குடும்பத்தில் ,அன்பு செலுத்த தவறாத அழகிய உறவினர்கள்
,சொந்த பந்தம் உள்ள குடும்பத்தில் இடம்பெற்றுள்ள இந்த செயல் நம்மை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழர் சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற இருந்த முதல் நாள் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்க மத்தியில் பேச படுகிறது
அன்பு மகளின் ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது ,விடுதலையின் நேசமானவள் ,ஈழ விடுதலை போருக்கு
தம்மை அர்ப்பணித்த அழகிய குடும்பம் ,அறம் நின்று செயல் படும் வீரம் செறிந்த தமிழ் குடும்பத்தில் நிகழ்ந்த செயல் கண்ணீரால் குளிக்க வைக்கிறது
மக்களே இவ்வாறானவர்களை கண்டால் ஆறுதல் கூறுங்கள் ,அரவணையுங்கள் ,எம்மால் முடிந்தஉதவிகளை செய்வோம்
,தேவை அற்ற விடயங்களை ,கூறை கூறுதல்,என்பனவற்றை இவ்வேளை தவிர்ப்பம் ,அவர்கள் நிலையில் இருந்து நாம் கொஞ்சம் சிந்திப்போம்
கணவன் மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறுங்கள் ,இவ்வேளை நாம் அதை தான் செய்திட முடியும் ,கண்ணுறக்கம் தொலைத்து அவர்களின் போலவே நாமும் வாடுகிறோம்
போலீசார் விரைவில் இது தொடர்பான முழுமையான விடயங்களை அறிய தருவார்கள் என்பது தெளிவாகிறது
அந்த அழகிய சிறுமிக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
சின்ன சிரிப்பழகி
சிவந்த உடல் அழகி
ஆளுமை பேரழகை
அவனியில் இழந்தோமே
பெற்ற தாயவளே
பெரும் துயர் தந்திடவே
கண்ணீர் உடைகிறது
கத்தி விழி அழுகிறது
ஒப்பாரி சத்தங்கள்
ஓயா ஒலிக்கிறது
வேரை அறுத்த செயல்
வேதனை கொதிக்கிறது
தப்பான சிந்தையால்
தவறாகி போனது
அப்பாக்கள் உழைப்பெல்லாம்
அலங்கோலம் ஆனது
என்ன நினைத்தாளோ ..
ஏன் இதை செய்தாளோ ..?
தாங்கி பெற்றவளோ
தாயே எமன் ஆனாள்
நெருக்கடி உனை வாட்ட
நொறுங்கி நீ வாட
கொங்கை பால் தந்தாள்
கொலையது செய்தாளோ …?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01-07-2020

லண்டனில் தமிழ் சிறுமி பலி – ஆபத்தான நிலையில் தாய் – நடந்தது என்ன ..?
லண்டனில் தமிழ் சிறுமி பலி – ஆபத்தான நிலையில் தாய் – நடந்தது என்ன ..?
பிரிட்டன் லண்டன் மிச்சம் பகுதியில் 35 வயதுடைய தாய் ஒருவரும் நான்கு வயது அழகிய மகளும் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் ,
பலமான காயங்களுக்கு உள்ளான நிலையில் ,நான்கு வயது மகள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
The woman, who is 35, was taken to hospital where her injuries are deemed to be life-threatening, police say.
30 ஜூன் Monarch Parade at around 4pm on Tuesday (June 30 இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கிளிநொச்சியை நெருங்கிய உறவினர்கள் உறவினர்களை கொண்ட இவர்கள் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது ,ஆபத்தான நிலையில் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை
பலனின்றி தற்பொழுது அழகிய அப்பாவி சிறுமி பலியாகியுள்ளார் என தெரிவிக்க படுகிறது
மேற்படி படுகொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது,இந்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்ய படவில்லை
மேற்படி சம்பவம் லண்டன் மிச்சம் மக்கள் ,மற்றும் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்வாறான நிகழ்வுகள் தமிழர்கள் மத்தியில் தற்பொழுது அதிகரித்து செல்வது மன வேதனையை அளிக்கிறது
இறந்த சிறுமியின் சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,சடல பரிசோதனையில் ஏதாவது தடயம் கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
An investigation is underway following an incident in Mitcham.
Police were called to an address on Monarch Parade in Mitcham at 16:00hrs on Tuesday, 30 June to a report of a two people injured.
Officers and London Ambulance Service attended and a woman and a child were inside a property suffering injuries.
The woman, aged 35, has been taken to hospital where her injuries are deemed life-threatening.
The child, a four-year-old girl, was also taken to hospital however was pronounced dead shortly after. Next of kin have been informed.
A post-mortem examination will take place in due course.
Officers remain in the area and a crime scene is in place.
At this early stage, police are not looking for anyone else in connection with this incident.
No arrests; enquiries into the incident continue
ரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா – தோல்வியில் முடிந்த சமர்
ரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா – தோல்வியில் முடிந்த சமர்
ரசியாவின் அதி உயர் ரக விமானமாக விளங்கும் Russian Su-27 fighter விமானங்களை
சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்காவின் முயற்சி தோல்வியில் முடிந்துளளது
கருங்கடல் மேலாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்கா கப்பல்கள் மேலாக பறந்து சென்று ,அமெரிக்கா விமானங்களை இடைமறித்து மிரட்டி சென்றது
மேற்படி விமானங்களின் உள் நுழைதலை முன்னரே அறிவிக்க அமெரிக்கா உளவு துறை தவறியது ,தகவல்கள் சேகரிப்பு கிடைக்காத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது எனவும்
அதனாலேயே அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தவோ ,அல்லது இடைமறித்து
விரட்டியடிக்கவோ முடியாது போனதாக அமெரிக்கா உளவுத்துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
தொடர்ந்து இவ்வாறான சம்பவங்களினால் இரு நாடுகளுக்கு இடையில் இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது
லண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ
வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ
லண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்தால் என்ன நடக்கும் – பெரும் ஆப்பு தமிழர்கள் சிக்கினர்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை அடுத்து
தற்பொழுது வியாபார நடவடிக்கைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன
இதனால் அரசு அந்த வியாபாரத்தை ஊக்குவிக்கும் முகமாக ஐம்பதாயிரம் வரை கடன் உதவி வழங்குகிறது
இந்த கடனை பொய் சொல்லி பெற்று கொண்ட தமிழர்கள் உள்ளிட்டவர்கள்
எதிர் நோக்கும் பெரும் பிரச்சனை தொடர்பாக எக்கவுண்டன் ஒருவர் விளக்குகிறார்
தமக்கு தாமே புதை குழி தோண்டிய தமிழ் வியாபாரிகளில் சிலர் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர் ,
கோவணத்தை உருவி ரோட்டில் விட்ட நிலையாக இது அமைந்துள்ளது
பொய் கூறி பெற்று கொண்ட பல்லாயிரம் பேர் சிக்கிய அபாயம் இதில் அழுத்தி படிக்க
இதோ இதில் அழுத்தி இந்த வங்கி கடனுக்கு கேட்க படும் கேள்விகள் என்ன என்பதும் இதனை பார்க்க ,பொய்யாக போலியாக செய்த தமிழர்களுக்கு ஆப்பு தான்

இந்த வங்கி கடனை எடுத்து சிக்கலில் மாட்டியுள்ள தமிழர்கள் இதோ இதனை பாருங்கள் ,நீங்கள் பெற்ற பணம் முழுவதும்
இரண்டரை வீத வட்டியுடன் மீள செலுத்த வேண்டும் ,வங்கி ரெப்ஸி அடிக்கவோ,சுத்தவோ முடியாது ,இதற்கு அரசே பொறுப்பு தெளிவாக உள்ளது
Bounce Back Loan scheme
Supporting UK businesses during coronavirus
See if you’re eligible for a government-guaranteed loan of £2,000 to £50,000 if your business has been affected by coronavirus (COVID-19).
- Businesses from all sectors can apply for a facility1
- Interest rate fixed at 2.5%
- No principle repayments for the first 12 months
- No set up or application fees
- No early repayment fees
- No personal guarantees are allowed, and no recovery action can be taken over a principal private residence or principal private vehicle
- You’re responsible for repaying 100% of the loan. Where default occurs, we follow our standard commercial recovery procedures (including the realisation of security) before we make a claim against the government’s guarantee for any shortfall. Loans are available to most business sectors, but restrictions apply
எவ்வாறு விண்ணப்பம் செய்வது …என்ன கேள்விகள் ,தொகை எவ்வளவு ,அதாவது ஐம்பதாயிரம் வங்கி கடனை எடுத்து 80 ஆயிரம் வரி செலுத்தும் நிலைக்கு தள்ள பட்டுள்ள மக்கள்
மேலும் இந்த வங்கி கடனை பெற்றவர்கள் மனைவியை ,அல்லது குடும்பத்தை கூப்பிட முடியா நிலை
மேலும் கிரிமினல் குற்றமாக உள்ளது ,மேலும் பெரும் மோசடி செய்தார்கள் என்ற குற்ற சாட்டில் விசாரணை இடம்பெறும் , தயவு
செய்து நண்பர்களே இதனை அதிகம் பகிருங்கள் ,ஆபத்தில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்
இதில் அழுத்தி முழுமையான விபரங்கள் பார்க்க

லண்டனில் மக்கள் போலீசார் மோதல் – 22 போலீசார் காயம்
லண்டனில் மக்கள் போலீசார் மோதல் – 22 போலீசார் காயம்
லண்டன் Angell Town estate in Brixton.பகுதியில் அனுமதியின்றி நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி ஒன்றை தடுக்க சென்ற காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்துள்ளது
இந்த மோதலில் 22 காவல்துறை ஊழியர்கள் படு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் காவல்த்துறையினர் வாகனங்களும் சேத படுத்த பட்டுள்ளது,மேற்படி கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
வைரஸ் நோயானது பரவி வரும் வேளையில் இந்த பாட்டு இசை நிகழ்ச்சி நடத்த படவிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் கொரனோவால் 55 பேர் பலியாம் – உண்மை தகவல் மூடி மறைப்பா ..?
பிரிட்டனில் கொரனோவால் 55 பேர் பலியாம் – உண்மை தகவல் மூடி மறைப்பா ..?
பிரிட்டனில் பரவி வந்த கொரனோ நோயினது தாக்குதல் தற்போது குறைவடைந்து
உள்ளதாக அரசு தனது மக்கள் இழப்பு புள்ளி விபரங்கள் ஊடாக காண்பித்து வருகிறது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 55 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் இது உண்மைக்கு புறம்பானது எனவும் ,அரசு உண்மை தகவலை மூடி மறைத்து வருவதாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருவது இங்கே குறிப்பிட தக்கது









