Posted in இலங்கை செய்திகள்

பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை

பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை

இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் சகோதரன் பசில் ராஜபக்சே இலங்கை பாராளும்னற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

சிறிலங்கா பொது ஜென பெரமுன மொட்டு கட்சியில் அங்கம் வகித்த பசில் ராஜபக்சே எம்பி பதவி விலகல் ராஜினமா தொடர்பில் இன்று அறிவித்துள்ளார்

இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே விற்கு எதிராக காலிமுக திடலில் மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

அந்த போராட்டத்தில் பசில் ராஜபக்சே,கோத்தபாய ராஜபக்சே,மகிந்த ராஜபக்சே, பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்தனர்

காலிமுக திடல் போராட்ட காரர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகல் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது

இலங்கை நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே குடும்பம் இலங்கையை விட்டு ஓட வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது

பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை

தற்போது இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே வும் பதவி விலக வேண்டிய நிலையில் உள்ளார்
அந்த பதவி விலகல் நெருக்கடியை ரணில் ஏற்படுத்துவார் என எதிர் பார்க்கலாம்

பசில் பதவி விலகல் -உக்கிரம் பெற்ற குடும்ப சண்டை

பசில் ராஜபக்சே பதவி விலகல் ,ராஜபக்சே குடும்பத்திற்குள் உள்ளே நடந்து குடும்ப சண்டையாக பார்க்க படுகிறது

ஆட்சியில் அமர்ந்து நாட்டை கொள்ளையடிக்கும் இவர்களுக்குள் பின்னர் குத்து சண்டைகள் இடம்பெறும் ,இவ்வாறே மகிந்த ராஜபக்சே ஆட்சியிலும் இடம்பெற்று பசில் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்

அது போன்றே கோத்தபாய ராஜபக்சே ஆட்சியிலும் பசிலுக்கு இடம்பெற்றுள்ளது

இந்த பதவி விலகலை அடுத்து பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பி செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

ராஜபக்சே குடும்பங்களுக்குள் உள்ளே நடக்கும் குடும்ப சண்டை தற்போது உக்கிரம் பெற்றுள்ளது ,

மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவி விலக்குவதற்கு தான் மேற்கொண்ட நடவடிக்கை தனது வாழ் நாளில் தனக்கு ஏற்பட்ட கடினமான ஒன்றாக அமைய பெற்றதாக கோத்தபாய ராஜபக்சே தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

    இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

    இலங்கையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த பதின் ஐந்து இலங்கையர்கள் அவுஸ்ரேலியா அரசினால் இலங்கைக்கு மீள நாடு கடத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

    இலங்கையில் இருந்து படகுமூலம் பயணித்த இலங்கை அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்கரையில் இயந்திரக்கோளாறால் பழுதடைந்த நிலையில் அவுஸ்ரேலியா கடல் படையினரால கைது செய்ய பட்டு நாடு கடத்த பட்டுள்ளனர்

    இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரசுடன் அவுஸ்ரேலியா அரசு மிக நெருங்கிய உறவை பேணி வருகிறது ,அதன் ஊடாக இவ்வாறான நாடு கடத்தலை துரித படுத்தியும் வருகிறது

    அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக செல்பவர்களை கிறிஸ்ம்ஸ தீவில் அடைத்து வைத்து கொடுமை படுத்தும் அவுஸ்ரேலியா அரசின் மனித உரிமை மீறல் நிலை தொடர்கிறது

    அவுஸ்ரேலியா அரசின் இந்த கொடுமை படுத்தல் விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இலங்கை மக்கள் தொடராக ஆபத்து நிறைந்த கடல் வழி ஊடாக பயணித்து வருகின்றமை தொடர்கிறது

    இலங்கையில் உள் நாட்டு போர் முடிவடைந்த பின்னர் வெளி நாடுகளில்அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்க பட்டு வருகிறது

    இலங்கையில் இலங்கையர்களுக்கு பிரச்சனை இல்லை நீங்கள் நாட்டுக்கு செல்லுங்கள் என அரசுகள் கையை விரித்து விடுகின்றன ,இதனால் விசா இன்றி மக்கள் அவதி படுகினறனர்

    வந்த நாடுகளில் விசா இன்றி வேலை செய்ய முடியாது இலங்கையர்கள் அவதியுறும் சொல்லென்னா துயரை புரிந்து கொள்ளாமல் இவ்வாறான சட்டவிரோத பயணங்கள் தொடந்த வண்ணம் உள்ளது

    இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

    இலங்கையர்கள் நாடு கடத்திய அவுஸ்ரேலியா அரசின் இந்த செயலுக்கு மனித உரிமை மையங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

    அவுஸ்ரேலியா அரசினால் இலங்கையர்கள் கைகள் கட்ட பட்டு விமானம் மூலம் கிரிமினல் குற்றவாளிகள் போல மக்கள் நாடு கடத்த பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன

    வெளிநாடு நோக்கி செல்லும் இலங்கையர்கள் ஏன் இங்கு செல்கிறோம் போலீசாரிடம் சிக்கிய பொழுது பணம் உழைக்க வருகை தந்தாக ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கினர்

    இவர்கள் செயல் தம்மை தாமே கேவல படுத்தி கொண்ட செயலினால் இவர்களுக்கு நாட்டில் உயிர் ஆபத்து இல்லை அதனால் வேலை தேடியும் நல்ல வாழ்க்கை தேடியும் வந்தனர் என கூறி காட்சிகளை ஊடகங்கள் இழிநிலையோடு ஒளிபரப்பி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    ஆள் வளர்ந்தது தான் மிச்சம் அறிவு இல்லை என்பது இதைத்தான் போலும் .

    • வன்னி மைந்தன் –
      Posted in இலங்கை செய்திகள்

      வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

      வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

      இலங்கையில் வாடகைக்கு வாகனத்தை கொள்வனவு செய்து அந்த வாகனங்களை திருப்பி கொடுக்காது கொள்ளையடித்து வந்த திருட்டு கும்பல் ஒன்று கைது செய்ய பட்டுள்ளது

      இவ்வாறு வாடகைக்கு பெற படும் வானங்களை கொள்ளையடித்து அதனை பல்வேறு பகுதியில் விற்பனை புரிந்து வந்துள்ளனர்

      இவர்களினால் வாடகைக்கு பெறப்பட்ட ஐந்து மகிழுந்துகள் ,இரண்டு சிற்றூர்திகள் ,ஜீப் ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

      காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து நடத்திய தேடுதலின் பொழுது வாடகை வானங்களை கொள்ளையடித்த குழு சிக்கியது

      இலங்கையில் இவ்வாறு வாடகைக்கு பெறப்படும் வானங்களை கொள்ளையடித்து வந்த குழுக்கள் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டனர்

      இலங்கையில் பெருகிவரும் குற்ற செயல்களில் இந்த வகையான வாடகை வாகனங்கள் கொள்ளையடித்தல் முதன்மை பெறுகிறது

      தற்காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காலத்திலும் வாடகை வாகனங்கள் கொள்ளையடிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      கைதான வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      கைது செய்ய பட்ட நபர்கள் வாயிலாகவே மேலும் பல திடுக்கிக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

      வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

      போலீசாரின் நீண்ட நாள் தேடுதல் வலைக்குள் கொண்துவரப்பட்ட பின்னர் இந்த நபர்கள் கைது இடம்பெற்றுள்ளது

      தற்போது வீதியெங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவ் வ்வேளை குற்றவாளிகள் கைது வேட்டையும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      வாடகை வாகனங்களை கொள்ளையடித்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக இவர்கள் பெற்று வந்துள்ளனர்

      வாடகை வானங்களை கொள்ளையடித்து விற்பனை புரிந்த இவர்களோடு கூட்டு வைத்து செயல் பட்ட வாகன திருத்தும் நபர்கள் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      வாடகைக்கு ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்து அதன் ஊடக தம்மை செல்வந்தர்களாக காண்பிக்கும் சிலர் இவ்வாறான நூன த முறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

      விடயம் அறியாத மக்கள் சிலரும் இவ்வாறான வடக்கை வாகனங்களை பெற்று திருட்டு குற்றத்தில் அவர்களும் சிக்கி விடுகின்ற சம்பவங்களும் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

      • வன்னி மைந்தன் –
        Posted in இலங்கை செய்திகள்

        யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு

        யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு

        யாழ்ப்பாண ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது

        இவ்வாறு ரயில் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

        இவ்வாறான பொதுவான கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால், பயணிக்கும் ரயில் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

        மேலும், டீசல் விலை உயர்வால் ரயில் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு ரயிலை இயக்குவதற்கு அதிக செலவாகிறது

        எரிபொருளுக்காக 13 இலட்சம் ரூபா செலவாகும். இந்த ரயிலில் சுமார் 500 பயணிகள் பயணித்தாலும்கூட 10 இலட்சம் ரூபாவே வருமானமாகக் கிடைக்கும்.

        இதன்படி யாழ்ப்பாண ஒரு ரயில் பயணத்தில் 3 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

        ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.
        தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

        யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு ஏற்படும்கிரது என்ற இவரது பேச்சு ரயில் கட்டணம் அதிகரிக்க பட போவதை எடுத்து காட்டுகியது

        கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி யாழ் தேவி ரயில் பயணிக்கிறது ,இந்த சேவை தடை படும் அபாயம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது

        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ரயில் சேவைகள் நிறுத்த பட்டால் மக்கள் போக்குவரத்து பாதிக்க படும்

        யாழ்ப்பாண ரயில் பயணத்தை நம்பியே அதிக மக்கள் உள்ளனர் ,மக்களை தேவையின்றி வெளியில் செல்லாதீர்கள் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு இந்த ரயில் போக்குவரத்து தடைகள் வருவதற்கான முன் எச்சரிக்காயாக விளக்குகிறது

        இலங்கையை ஆள்பவர்களின் திட்டமில்லா கொள்கையும் நாட்டை கொள்ளையடித்ததுமே வடக்கு பகுதி யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு இழப்பு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது

        நாடளாவிய ரீதியில் ரயில் மற்றும் பேரூந்துகள் சேவைகளும் முடக்க படும் அபாயம் எழுந்துள்ளது .

          Posted in இலங்கை செய்திகள்

          அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்

          அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்

          இலங்கையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சே தனது பாராளுமன்ற எம்பி பதவியை இராஜினாமா செய்திட உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

          கொழும்பு மேற்கொள்ளும் இந்த முக்கிய அதிரடி நடவடிக்கை மூலம் பசில் பதவி விலகும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது

          இலங்கையை ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, மற்றும் மகிந்த ராஜபக்சே ,இவருடன் பசில் ராஜபக்சே உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் கோட்டா கோ கம போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

          அதன் எதிரொலியாக பசில் ராஜபக்சே பதவி விலகும் நடவடிக்கை அமைய பெறுவதாக கொழும்பு எதிரி செய்திகள் கோடிட்டு காட்டுகின்றன

          மக்கள் மனதில் தாம் நல்லவர்கள் என்பதை காண்பிக்க ராஜபக்சே குடும்பம் மேற்கொள்ளும் இந்த சதுரங்க அரசியல் ஆட்டம் அவர்களை மேலும் படு பாதாளத்திற்கு அழைத்து செல்ல போவதை காண்பிக்கிறது

          மக்கள் உணர்வுகளிற்கு மதிப்பு அளிக்காது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிட மறுக்கும் கோத்தபாயவின் செயல் பாடு இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளுக்கு நெருக்கடியாக உள்ளது

          அதனால் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிடும் காலம் கனிந்து வருகிறது ,எதிர் வரும் மூன்று மாத்தில் இலங்கை மிக பெரும் நெருக்கடி மற்றும் பஞ்ச நிலையில் தவிக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்

          அவரதுஅந்த பேச்சின் முன்னோட்டம் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிட வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருந்தார்

          அதனை கருத்தில் வைத்தே ராஜபக்சே குடும்பத்தினர்
          முக்கிய அங்கமாக விளங்கியவரும் சர்ச்சைகளின் நாயகனாக விளங்கிய பசில் ராஜபக்சே பதவி விலகும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

          இலங்கை அரசியலில் நடை பெறும் இந்த நேர்மறை தலைகீழ் அதிரடி நடவடிக்கை பதவி விலகும் நிலைக்கும் பசில் ராஜபக்சே மற்றும் ராஜபக்சே குடும்பத்தை அழைத்து செல்கிறது

          ஐம்பது ஆண்டுகால ஆட்சி கனவும் ,இலங்கை ராஜபக்சே குடும்பத்தில் மூன்றாவது ஜனாதிபதி பசில் ராஜபக்சே தான் என்ற வரலாற்று புகழையும் இழந்து தவிக்கிறது ஆளும் ராஜபக்சே குடும்பம்

          மக்களினால் விரட்டி பதவி விலகும் நிலையில் தமது அரசியல் ஆடுகளத்தை ஆட்டி சென்றதே இன்றைய இந்த கண்ணீர் நிலைக்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .

          • வன்னி மைந்தன் –
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை கடவுசீட்டில் 190 நாடுகள் பயணிக்க நடவடிக்கை

            இலங்கை கடவுசீட்டில் 190 நாடுகள் பயணிக்க நடவடிக்கை

            இலங்கை கடவுசீட்டின் மூலம் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் அதிகாரத்தை இலங்கை பாராளுமன்றம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்க பட்டுள்ளது

            இலங்கையின் கடவுசீட்டில் 190 நாடுகள் விசா இன்றி பயணிக்க நடவடிக்கை துரித படுத்த பட்டால் அதன் ஊடாக இலங்கை தேசம் பலத்த வருமானத்தை பெற்று கொள்ளும் என நம்ப படுகிறது

            இலங்கை மக்கள் வெளிநாடுகள் சென்று வேலை வாய்ப்பை மேற்கொள்ளும் அரிய சந்தர்பம் இதனால் அமைய பெறும் என வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது

            ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டில் 190 நாடுகள் விசா இன்றி பயணிக்க முடியும்

            ,ஆனால் உலக நாடுகளின் கடவு சீட்டுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை கடவுசீட்டு மட்டுமே மிகவும் கீழ் தங்கிய நிலையில் காணப்படுகிறது

            எனவே இலங்கையை ஆள்பவர்கள் இலங்கை கடவுசீட்டின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முதன்மையாக விடுக்க பட்டுள்ளது

            பாராளுமன்றில் இலங்கை கடவுசீட்டின் மூலம் விசா இன்றி பயணிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்த பட்டால் அது இலங்கையருக்கு கிடைக்க பெற்ற அதிஷ்டம் என அடித்து கூறலாம்

            இலங்கை ஆளும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்கள மன நிலையில் இவ்விதமான

            மாற்றங்கள் ஏற்படுத்த பட்டால் மட்டுமே நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது

            இலங்கை குடிவரவு குடியகழ்வு அமைச்சில் இந்த மற்றம் ஏற்படுத்த படும் என மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

            இவ்வாறான கடவுசீட்டில் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள படும் சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன

            இலங்கையில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,அந்த இலங்கை மக்களின் மனதில் நன் பதிப்பை பெற்று கொள்ள

            இலங்கையை ஆட்சி செய்பவர்கள் இவ்விதம் பயணிக்க வேண்டிய நிலை அதிகம் காணப்படுகிறது

            அவ்விதம் நோக்கின் இலங்கை கடவுசீட்டில் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள படும் என்ற மகிழ்ச்சி செய்தி ,மக்கள் மத்தியில் மகிழ்ச்சி பொங்க ஓங்கி ஒலிக்கிறது .

            • வன்னி மைந்தன் –

              Posted in இலங்கை செய்திகள்

              யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த திருடர்கள்

              யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த திருடர்கள்

              யாழ்ப்பாணம் மீசாலை டச்சு வீதி ஊடாக பயணித்த பெண் ஒருவரது தங்க சங்கிலியை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்த திருடர்கள் அறுத்து கொண்டு தப்பித்து சென்றுள்ளனர்

              தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த பெண்ணை அவதானித்து பின் தொடர்ந்த மோட்டர் சைக்கிளில் பயணித்த திருடர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர்


              சங்கிலியை பறி கொடுத்த தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்ட பொலிசார் குறித்த திருடர்கள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

              யாழ்ப்பாணத்தில் நாள் தோறும் இவ்விதமான மக்களை அச்சுறுத்தும் வழிப்பறி தங்க சங்கிலி அறுப்பு கொள்ளைகள் அதிகரித்துள்ளன ,

              காவல்துறையினருக்கு இவ்வாறான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கின்ற பொழுதும் அதனை தடுத்திடாது மேலும் திருட்டுகளை ஊக்குவிக்கின்றார் என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

              யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த தப்பிய திருடர்கள் தொடர்பான செய்தி காட்டு தீயாகி பரவியதால் மக்கள் குழு ஒன்று திடீர் வீதி சுற்று காவல் பணிய ஈடுபட்டது ,ஆனால் அங்கு சந்தேங்கத்திற்கு இடமான முறையில் எவரும் தென்படவில்லை

              யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இவ்வாறான அச்சுறுத்தும் தங்க நகை கொள்ளை சம்பவங்கள் திருடர்களினால் மேற்கொள்ள பட்டு வருகிறது என்கின்ற குற்றவியல் தொடர்பு புள்ளி விபரங்கள் அதிகரித்து காணப்படுகிறது

              யாழ்ப்பாணத்தில் பெருகி வரும் இவ்விதமான திருட்டு சம்பவங்களை கட்டு படுத்த பொலிசார் மற்றும் மக்கள் விழிப்புற்று முன் வந்தால் மட்டுமே இந்த திருடர்கள் வசம் இருந்து தமது பொருட்களையும் ,மனித உயிரையும் பாதுகாத்து கொள்ள முடியும் என்பது பொது விதியாக உள்ளது

              நாள் தோறும் இடம் பெறும் இவ்வாறான வழிப்பறி கொள்ளைகளில் சிக்கி பல மக்கள் தமது உடமைகளை பறிகொடுத்து துயர் தோய்ந்த நிலையோடு வீடு சென்றமை துன்பியல் வரலாறாக தொடர்கிறது

              போதை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி காரணமாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,

              மக்கள் வெளியில் உலாவும் போது அல்லது செல்லும் பொழுது தங்க நகைகள் அணிந்து செல்லாது செல்வதே தற்கால நிலையில் சிறப்பான ஒன்று என்பது பொலிசாரின் வேண்டுதலாகும் .

              • வன்னி மைந்தன் –
                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

                கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

                இலங்கையில் கடந்த தினம் கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

                இவ்வாறு கத்தி குத்துக்கு உள்ளானவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்

                கத்தியால் குத்திய நபர் படுகொலை செய்ய பட்ட நபராது கைபேசியை திருடிய

                நிலையில் அது தொடர்பாக அவரது இரு மகனுடன் சென்று விசாரிக்க சென்ற பொழுது அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

                கத்தியால் கோரமாக குத்தி படுகொலையை புரிந்து விட்டு கொலை குற்றவாளி தப்பி

                ஓடியுள்ளார் ,இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளியை கைது செய்யும் நோக்குடன் விசேட காவல்துறையினர் செயலாற்றி வருகின்றனர்

                இலங்கையில் நாள் தோறும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலைவாசி போல எகிறிய வண்ணம் உள்ளது

                மக்கள் மத்தியில் இவ்விதமான கொடூர குற்றவியல் மனோ நிலையை இவ்வாறான படுகொலை சம்பவங்களுக்கு காரணமாக அமைய பெறுகிறது

                கடந்த சில காலங்களாக நீர் நிலைகளில் படுகொலை செய்யப்பட்டு வீச பட்ட

                நிலையில் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன ,அதுபோலவே இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளை

                தடுக்க போலீசார் தவறி வருகின்றனர் ,மேலும் இந்த படுகொலை குற்ற செயல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் மக்கள் தவறி வருகின்றனர்

                திருட பட்ட ஒரு கைபேசியை திருடன் என்கின்ற முறையில் வன்முறையோடு திருடியவர் வீடு சென்று விசாரிக்க சென்ற போதே

                வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த திருட்டு பழிக்குற்றத்தில் இருந்து தப்பிக்க திடீர் கத்தி குத்து படுகொலை தாக்குதலை நடத்தியுள்ளார்

                வாய் தர்க்கம் முற்றிய நிலையில் அதனை சமாதான முறையில் அணுகிட தவறியதன் விளைவே அப்பாவி உயிர் ஒன்று படு கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படும் நிலைக்கு சென்றுள்ளது


                அறிவார்ந்த நிலையில் பிரச்சனைகளை கையாள மறுத்ததன் விளைவே இந்த கத்தி குத்து படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

                • வன்னி மைந்தன் –
                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                  இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                  இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயன்ற 91 பேர் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

                  இவர் யாவரும் புத்தளம் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மீன் பிடி படகு ஒன்றை சோதனை செய்தபொழுதே மேற்படி நபர்கள் சிக்கினார்

                  ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையும் முகமாக கடல் வழியாக பல லட்சம் ரூபாய்களை செலுத்தி ஆபத்தான கடல் வழியூடாக பயணிக்க முனைந்தவர்களே இவ்வாறு சிக்கினார்

                  இவர்கள் அனைவரும் இலங்கை சிலாபம் ,மாரவில,முல்லைத்தீவு ,கிளிநொச்சி,திருகோணமலை ஆகிய பகுத்தியை சேர்ந்தவர்களாகும் ,இந்த படகில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 91 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  வெளிநாடுகளுக்கு சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என ஆசை வார்த்தையை கேட்டு பல லட்சம் பணத்தை செலவு செய்து பயணிக்கும் இவர்கள், வெளி நாடுகளில் எவ்விதம் சூழல் உள்ளது அங்கு சென்றால் போரின் பின்னரான காலப்பகுதிகியில் எமக்கு விசா கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய்வதில்லை

                  ஆனாலும் இலங்கையை விட்டு தப்பி சென்றால் நாங்கள் செல்வந்தராகிவிடலாம் என எண்ணுகின்ற சிந்தனை பிழைகளின் செயல்பாடுகள் ஒன்றாக இது உள்ளது

                  ஆபத்தான கடல் வாழி பயணங்கள் மனித உயிரை கூட மாய்க்கும் நிலையில் உள்ளது ,உணவு குடிநீர் இன்றி கடலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் ,

                  இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                  இவ்வாறு இலங்கையை விட்டு தப்பி கடலில் பயணித்த பல நூறு இலங்கையர்கள் கடலில் காணாமல் போன நிலையில் உள்ளமை கவனிக்க தக்கது

                  இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற அனைவரும் கடற்படையால் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்

                  இலங்கையை விட்டு தப்பியோட பல நூறு மக்கள் தற்கால சூழலில் தயாராகி
                  வருகினற்னர் ,

                  அவ்விதம் இலங்கையை விட்டு தப்பிக்க முனையும் பல மக்கள் இந்தியாவுக்கு
                  உயிர் பாதுகாப்பு தஞ்சம் தேடி செல்கின்றனர்

                  ஆனால் இவர்கள் அது தாண்டி உயிரோடு விளையாடி பெரும் கடல்களில் சிறு படகில் பயணிக்க முயல்வது மிக பெரும் ஆபத்தான ஒன்றாகும் என்பது இங்கே சுட்டி கட்ட தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் காயம்

                  கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் காயம்

                  கடந்த தினம் கிளிநொச்சி பாடாசலையில் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி இருபத்தி ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,

                  இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளான மாணவர்களில் பதினொரு பேர் கிளிநொச்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                  கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலையில் குளவி கூடு ஒன்றை குரங்குகள் கலைக்க முற்பட்ட நிலையில் சிதறி பரவிய குளவிகள் பாடசாலை மாணவர் மீது தாக்குதலை நடத்தியது

                  இந்த குளவிகள் வகுப்பறை எங்கும் பரவிய நிலையில் ,கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது ,அவ்வேளை மாணவர்கள் சிதறி ஓடிய நிலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது

                  சில நிமிடங்கள் அங்கு என்ன தான் இடம்பெறுகிறது என்பதை அறியாது மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர் ,மேலும் கிளிநொச்சி பாடசாலையின் பிரதான வாயிலை உரிய முறையில் திறந்து விடமுடியாத நிலை ஏற்பட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளது

                  அனர்த்தம் ஒன்று நிகழ்கின்ற பொழுது அவ்வேளை அங்கு காவலுக்கு உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்ற உரிய கொள்கை விளக்க விதிகள் வழங்கப்படாத நிலையை இங்கு அவதானிக்க முடிந்ததாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன

                  பிரபலமாக விளங்கும் கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் படு காயம் அடைந்த இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


                  படுகாயமடைந்த மாணவர்கள் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பொழுது மருத்துவர்கள் உரிய முறையில் அணுகி சிகிச்சை அளித்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

                  கிளிநொச்சி பாடசாலை வளாகத்தில் குளவிகள் நீண்ட நாளாக கூடு அமைத்திருந்த பொழுதும் மாணவர்கள் இல்லாத வேளை பார்த்து அந்த குளவி கூட்டினை அகற்றி இருந்தால்

                  கிளிநொச்சி பாடசாலை மாணவர்கள் இவ்விதம் காயங்களுக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என்ற கருத்து பெற்றோர்கள் வாயிலாக வெளியாகியுள்ளது

                  பாடசாலைக்கு பிள்ளைகளை கற்றால் நெறிக்கு அனுப்பி வைத்தோம் ஆனால் பாடசாலையின் அசமந்த போக்கின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சில பெற்றோர்கள் குமுறியுள்ளனர் .

                  • வன்னி மைந்தன்
                    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                    12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

                    12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

                    முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்

                    இவர் தமது வீட்டை விட்டு காதலனுடன் தப்பி போக முன்னர் ,அங்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்

                    காதலனுடன் ஓட்டம்
                    அதில் என்னை தேட வேண்டாம் நான் வீடு வரமாட்டேன் என அதில் குறிப்பிட்ட பட்டிருந்தது
                    அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை கடிதத்துடன் காவல்துறை நிலையம் சென்று முறையிட்டுள்ளார்
                    அப்போது சிறுமியான மகள் தந்தையின் பணம் ,மற்றும் கைபேசி என்பனவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளது தெரியவந்துள்ளது

                    சிறுமி கண்டு பிடிப்பு
                    போலீசார் சிறுமியின் கைபேசியில் தொடர்பு கொண்டு
                    வினவிய பொழுது அவர் கட்டனில் உள்ளது கண்டு
                    பிடிக்க பட்டுள்ளது ,சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்ற சாட்டில் காதலன் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    காதல் புரிந்த அலங்கோலம்

                    அறியா பருவத்தில் புரியா வந்த காதல் மோகத்தினால் தனது எதிர்கால வாழ்வினை குழி தோண்டி புதைத்துள்ளளார் இந்த சிறுமி ,பெற்றவர்களை மறந்து அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை திருடி கொண்டு காதலனுடன் ஓடிய மகளின் செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

                    12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

                    பட்டினி கிடந்தது பகலிரவாய் பிள்ளைகளுக்கு என உழைத்த தந்தை , தயார் இவருடன் கூடி பிறந்தவர்கள் வாழ்வில் மண்ணை தூவி இன பால் கவர்ச்சியில் சிக்கி சீரழிந்து போகும் இந்த சிறிசுகளை என்னவென்று சொல்ல

                    பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்

                    குறித்த காதலனுடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி சிறுமி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் ,அவரது இனிப்பான பேச்சும் அந்தரங்க உரையாடல்களும் இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது

                    பிள்ளைகள் விரும்பும் கைபேசியை அவர்களுக்கு வழங்கியதன் ஊடாக அவர்கள் பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்கி குடும்ப மானத்தை ரோட்டில் விற்றுள்ளனர் ,

                    இந்த விடயங்கள் அனைத்திற்கும் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் , பாசமுமே காரணம் ,அதனை புரியாது பிள்ளைகள் பெற்றவர்களை ஏமாற்றியதாக கருதி தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் இழி செயல்களே இவையாகும்

                    இளைய சமுதாயமே கொஞ்சம் சிந்தியுங்கள் ,அழகான வாழ்வை அறியா பருவத்தில் தொலைத்து விடாதீர்கள் ,வாழ்க்கை வாழ்வதற்கே ,இடையில் கண்ணீரில் அலைவதற்க்கு அல்ல ,ஒன்றை செய்திட முன்னர் கொஞ்சம் யோசியுங்கள் .

                    12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் எங்கே செல்கிறது எமது தேசம் ..?

                    • வன்னி மைந்தன் –
                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                      மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி

                      மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி

                      இலங்கை மொனராகலை எதிமலே பொலிஸ் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் அதே குடும்பத்தை சேர்ந்த மூவரால் கற்பழிக்க பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது

                      வயிற்று வலியால் துடித்த சிறுமி மொனராகல மருத்துவ மனைக்கு அழைத்து சென்று நடத்திய சோதனையில் கூட்டாக கற்பழிக்க பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

                      நடந்தது என்ன
                      பதின் மூன்று வயதான சிறுமியை அவரது மூத்த சகோதரன் ,மற்றும் தாத்தா,மற்றும் தாயின் தம்பி ,மாமா கூட்டாக இணைந்து கற்பழித்துள்ளனர்

                      இந்த கூட்டு கற்பழிப்பு சம்பவம் பல மாதங்காளாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் இருந்துள்ளது ,சம்பவ தினம் கடுமையான வயிற்று வலியால் துடித்த சிறுமியை பெற்றவர்கல் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது

                      மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சாந்தேகத்தை அடுத்து பொலிசாருக்கு அறிவிக்க பட்ட நிலையில் ,பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விடயம் அம்பலமாகியுள்ளது

                      போலீஸ் விசாரணை

                      போலீசாரை மேற்கொண்ட தீவிர விசாரணையில் சிறுமி கற்பழிக்க பட்ட சம்பவம் உறுதியானது ,அந்த பாலியல் சம்பவத்தில் அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்திய

                      செயல் உறுதியான நிலையில் தாத்தா,மாமா ,சகோதரன் ஆகியோரை கைது செய்யும் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்

                      பெற்றவர்களின் அசமந்த போக்கும் சிறுமியின் தெளிவில்லா நிலையும் இந்த கூட்டு கற்பழிப்பு நடந்தேறியமைக்கு காரணமாக அமைந்துள்ளது

                      மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி

                      குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரலாம் என எதிர் பார்க்க படுகிறது,இதைவிட மேலும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது

                      அதிர்ச்சியில் குடும்பம்

                      தமது சிறு வயது மகள் தாத்தா,மாமா,சகோதரனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ள செயல் குடும்பத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                      சிறுமியை கற்பழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என அவர்கள் உரத்த குரலில் தெரிவித்து வருகின்றனர்

                      இந்த செய்தி காட்டு தீயாக அந்த கிராமத்தில் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்

                      பதின் மூன்று வயது பாடசாலை மாணவி கற்பழிக்க பட்ட செய்தி ஊடகங்கள் வாயிலாக பரவிய நிலையில் ,சிறுமிகள் மீது அதிக கவனத்துடன் அவர்களை பராமரிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் மட்டுமல்லாது இந்த செய்திகள் அறிந்த அனைவரும் உறுதி நிலை எடுத்துள்ளனர்

                      சினிமா காட்சிகளில் வருகின்ற சம்பவம் போல இந்த கற்பழிப்பு குற்ற செயல் இடம்பெற்றுள்ளது,சிறுமியை சீரழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என்பது மக்களின் கொதிப்பாக உள்ளது .

                      • வன்னி மைந்தன் –
                        Posted in இலங்கை செய்திகள்

                        விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு

                        விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு

                        இலங்கையில் விவசாயிகளின் கடன் முற்று முழுதாக தள்ளுபடி செய்படுவதாக இலங்கை ஆளும் பிரதமர் பாரளுமன்றில் தெரிவித்துள்ளார்

                        இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக பெருமளவு விவசாய மக்கள் பாதிக்க ப்பட்டுள்ளனர் ,

                        அவர்கள் விவசாயம் மேற் கொள்ள பெற பட்ட வங்கி கடன்கள் தள்ளுபடி செய்ய படுகிறது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

                        இலங்கையில் ஆளும் பிரதமரின் இந்த அறிவிப்பு விவசாய பெருங்குடிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        சிலோன் மக்களில் அதிகம் பேர் விவசாயத்தை நம்பியே தமது வாழ்வை ஒட்டி செல்கின்றனர்

                        அவ்வாறான மக்களது உற்பத்தி பாதிக்க பட்ட நிலையில் மக்கள் பொறுப்பு வாய்ந்த பிரதமரால் ரணில் விக்கிரம சிங்கா இவ்வாறு அறிவிக்க பட்டுள்ளது நொந்து போயிருந்த விவசாயம் மேற்கொள்ளும் மக்களுக்கு உயிர்ப்பு ஒளியை கொடுத்துள்ளது

                        இலங்கைவாழ் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை உயர்வு என்பனவற்றை விரைந்து தம் தீர்த்து வைப்போம் என

                        பாராளுமன்றில் முழங்கிய ரணில் விக்கிரம சிங்கா அறிவிப்பு நிலைத்து நிற்குமா என்ற சந்தேகத்தி எழுப்பியுள்ளது

                        விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு

                        மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து நிற்கும் பொழுது வெளியாகியுள்ள இந்த அறிவித்தல் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியை மீளவும் அரியணையில் அமர்த்தும் அரசியல் விளையாட்டை ரணிலில் விக்கிரம சிங்கா ஆரம்பிக்க பட்டுள்ளது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன

                        இரண்டு வருடங்களில் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தமது தோல்விகளை சீர் செய்து மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்று

                        கட்சியை காப்பற்ற வேண்டிய நிலையில் ரணிலது தந்திர விளையாட்டுக்கள் நகர்த்த பட்டு கொண்டுள்ளன


                        எதிர் வரும் ஒன்றரை வருடத்திற்குள் கோட்டா ஆட்சியும் கவிழ்த்து தனது சதுரங்க விளையாட்டை ஆரம்பிக்க முனைவார்,அதற்கு முன்னதாக இந்த மக்கள் அபிலாசைகளை நிறைவு செய்வதான தோற்ற பாட்டில் காய்களை நகர்த்துகிறார்

                        விவசாயிகளின் கடன் தள்ளுபடியானாது இதன் நிலை சார்ந்த ஒன்றாக பார்க்க பாடுகிறது

                        • வன்னி மைந்தன் –
                          Posted in இலங்கை செய்திகள்

                          ரணில் மனோ கணேசன் பாரளுமன்றில் மோதல்

                          ரணில் மனோ கணேசன் பாரளுமன்றில் மோதல்

                          • ரணில் மனோ கணேசன் பாரளுமன்றில் மோதல்

                          “நாட்டில் உணவு நெருக்கடி பற்றி பேசுகிறீர்கள். உணவுப்பஞ்சம் பற்றி பேசுகிறீர்கள். உணவு பயிரிடுவது பற்றி பேசுகிறீர்கள்.

                          அதற்காக பன்சலைகளில், பாடசாலைகளில், வீடுகளில் உள்ள காணிகளில் உணவு பயிரிட்டு தோட்டம் செய்வது பற்றி பேசுகிறீர்கள்.

                          மலையக தோட்டங்களில் பயன் படுத்தப்படாமல் இருக்கும் வெற்று காணிகளில் உணவு, கிழங்கு பயிரிட தோட்ட தொழிலாளருக்கு அனுமதி வழங்குவது பற்றி பேச மாட்டீர்களா? இது பற்றி நான் பிரதமருக்கு கடந்த வாரமே கடிதம் எழுதினேன்.

                          இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய மக்களாக, இன்று ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்ணும் நிலைமையில் வாழும் தோட்ட மக்களை பற்றி உங்களுக்கு கரிசனை இல்லையா?

                          அவர்களுக்கு பயிரிட காணிகள் வழங்கி, உதவினால் அவர்கள் உணவு பயிர் பயிரிட்டு, தங்களுக்கும் உணவை பெற்றுகொண்டு, நாட்டுக்கும் வழங்குவார்களே?” என மனோ கணேசன் எம்பி இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

                          தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரின் இந்த கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் உடனடியாக எழுந்து பதில் கூறினர்.

                          பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில், “தோட்டப்புற வெற்று காணிகளில் பயிரிட தொழிலாளருக்கு வாய்ப்பு வழங்குவோம்.

                          உங்கள் ஆலோசனை கடிதம் கிடைத்தது. விவசாய அமைச்சருக்கு இதுபற்றி கூறியுள்ளேன். ‘

                          மனோ கணேசன் திட்டம்’ என்று பெயரிட்டே இதை செய்வோம். கவலை வேண்டாம். இது தொடர்பான கலந்துரையாடல்களில் நீங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

                          விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளிக்கையில், “இதுபற்றி நேற்று
                          நடந்த கலந்துரையாடலின் போதுகூட, பிரதமர் என்னிடம் கூறினார்.

                          எம்பி மனோ கணேசனின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள் என்றார்.
                          இதை நாம் செய்வோம்.

                          இதுபற்றிய கலந்துரையாடலை உடன் நடத்துவோம்.
                          உங்களை அதில் கலந்துக்கொள்ள அழைக்கிறேன்.” என்று கூறினார்

                          இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரபல தமிழ் அரசியல்வாதியாகி விளங்கும் மனோ கணேசனுக்கு இடையில் பாராளுமன்றில் இடம்பெற்ற இந்த தர்க்கம் மக்கள் மத்தியில் பாராட்டு பெறுகிறது

                          மனோ கணேசன் மக்களின் காவலனாக மலையகத்தில் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

                            முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

                            இலங்கை டவடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலம்பில் கிராம பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர்,

                            அவ் வீட்டிலிருந்தவரை கோரமாக தாக்கி படு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                            குறித்த வீட்டிற்கு நேற்று இரவு வந்தவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஏற்பட்ட கை கலப்பு இந்த கொலையில் முடிவடைந்துள்ளது

                            குறித்த சம்பவத்தில், உயிரிழந்தவர் அலம்பில் தெற்கு, அலம்பில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

                            சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

                            முல்லைத்தீவு அளம்பில் கிராம பகுதியில் இடம் பெற்ற இந்த அடித்து கொன்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது
                            செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

                            முல்லைத்தீவு அளம்பில் கிராமத்தில் அத்துமீறி வீடு புகுந்து குறித்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                            முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

                            குறித்த நபரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபர்களை கைது செய்யும் வேட்டையில் விசேட காவல்துறை அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்

                            இலங்கை நாட்டில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்களினால் தினம் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                            பெருகி வரும் இவ்விதமான குற்ற செயல்களை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை என்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது

                            பெருகிவரும் இவ்வாறான படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செய்யல் பட வேண்டும் என சமூக நல ஆரவாளர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்

                            முல்லைத்தீவு ஆகுதியில் இவ்விதமான கொலைகள் அதற்க்கு முன்னரும் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                            இலங்கையில் இந்தியாவை போன்று மக்கள் அடித்து கொலை செய்யப்படும் சம்பங்கள் மகிந்த ராஜபக்சே ஆட்சியில் ஆரம்பித்து வைக்க பட்டது ,போதைவஸ்து மற்றும் வன்ம செயல்பாடுகளினால் இந்த படுகொலை களம் திறக்க பட்டு வருகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              இரு பெண்களை காணவில்லை

                              இரு பெண்களை காணவில்லை

                              இலங்கையில் விறகு தேடச் சென்ற இரண்டு இளம் பெண்கள் கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என மட்டக்களப்பு அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது

                              இவ்வாறு காணாமல் போன இரு பெண்கள் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் துரிதமாக ஆரம்பித்துள்ளனர்

                              கடந்த இரண்டாம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை

                              உறவினர்களினால் தேட பட்ட பொழுதும் இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்க படுகிறது

                              காணாமல் போன இரண்டு பெண்களும் தோட்டத்தில் கூலி தொழில் செய்து வந்தவர்கள் என்றும் அவ்விதமான இரு யுவதிகளும் காணாமல் போன சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                              இவர்களைத் தேடும் பணியில் அக்கரப்பத்தனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும் இதுவரை அவர்கள் தொடர்பான எவ்வித தகவலும் தெரியவரவில்லை

                              இலங்கையில் நாள் தோறும் காணாமல் போவார்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்ல படுகிறது

                              இரு பெண்களை காணவில்லை

                              இவ்விதம் காணாமல் போன அணைத்து பெண்களும் பெண்கள் சில நாட்கள் கழிந்த நிலையில் நீர் நிலைகள் மற்றும் ஆறுகள் பற்றைக்குள் இருந்து சடலங்கலக மீட்க பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது

                              அப்பாவி கூலி வேலைக்கு சென்று தமது குடும்பத்தை காத்து வந்த இரு யுவதிகள் காணவில்லை என்ற செய்தி காட்டு தீயாக பரவிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது

                              இலங்கையில் அப்பாவி மக்கள் பட்டினி சாவின் விளிம்பில் தவித்து கொண்டிருக்கும் பொழுது நாட்டில் இவ்வாறு காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை பாமர மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                              இவர்கள் கடத்த பட்டு கற்பழிக்க பட்டு கொலை செய்ய பட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது

                              கடந்த காலங்களில் இவ்வாறான நிலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் சடலங்களாக மீட்க பட்டு வரும் நிலையில் இவ்விதமான அச்ச நிலை ஏற்பட்டுள்ளது

                              கிராம மக்கள் மாற்றுக போலீசார் காட்டுப்புற பகுதியில் தொடர்ந்து தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                              தொடரு மர்மக் கொலைகளுக்கும் காணவில்லை பட்டியலில் காணாமலாக்கப்படும் இந்த நிலை என்று நீங்கும்

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் இருவர் வெட்டி கொலை

                                இலங்கையில் இருவர் வெட்டி கொலை

                                இலங்கை அனுராதபுரம், எப்பாவல பகுதியில் மர்ம நபர்களினாலே இருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .இரத்த வெள்ளத்தில் மிதந்த மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                                இந்த இருவரும் வெட்டி கொலை செய்யப் பட்டதற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,பகைமை காரணமாக இந்த இருவரும் வெட்டி படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது

                                இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் மீட்க பட்டு சடலங்கள் சடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது


                                நாள் தோறும் இலங்கையில் வெட்டி படுகொலை செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது

                                பெருகி வரும் இந்த கத்தி வெட்டு படுகொலைகளை தடுக்க பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதான குற்ற சாட்டு மக்கள் மத்தியில் வைக்க படுகிறது

                                இலங்கையில் ஆளும் கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் தொடராக நீர் ஏரிகள் மர்மமான முறையில் மக்கள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றனர்

                                மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஜனாதிபதி என்றவகையில் கோத்தபாயாவினால் நாட்டில் தொடராக இடம் பெற்று வரும் இந்த கொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை

                                இதனால் இந்த குற்ற செயல்களின் பின் புலத்தில் கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                                முடிவில்லா தொடரும் கொலைகள் நிறுத்த பட்டு மக்கள் அச்சம் இன்றி வாழும் காலம் என்று உருவாகும் என்பதே மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

                                தமது ஒட்டு பெற்று வென்ற பின்னர் மக்களை மறந்து தமது லஞ்ச ஊழல் கொலையில் மிதக்கும் இலங்கை வாழ் அரசியல் வாதிகள்

                                சமுகம் மற்றும் அதன் வளர்ச்சி நாட்டின் உள் கட்டு மானங்களில் அக்கறை செலுத்துவதில்லை என்பது இவ்வாறான சம்பவங்கள் மூலம் மீளவும் எடுத்து காட்டுகிறது

                                இலங்கையின் மக்கள் பலத்த பொருளாத நெருங்கடியில் சிக்கி ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கொதித்து வரும் நிலையில் இவ்விதமான முறையில்மனித சடலங்கள் வீதிகளில் மீட்க பட்டு வருகின்றன

                                இவை போராடும் மக்களின் உணர்வுகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ள படும் தனிநபர் பகைமை கொலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

                                  புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

                                  வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை ,வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நேற்று (06) திறக்கப்பட்டுள்ளது.

                                  பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக சுமார் 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வைத்தியசாலைக்கான கட்டிடம் அமைக்கப்பட்டது.

                                  தற்போதைய நாட்டு சூழலும் பொருளாதார நெருக்கடியும் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதில் மருத்துவம் சார் தேவைகளும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் பாதிப்புகளை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலை காணப்படுகின்றது.

                                  இந்நிலையில் எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு குட்பட்ட பகுதியான புங்குடுதிவில் குறித்த வைத்தியசாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்த

                                  நிலையில் அதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக 16 இலட்சம் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

                                  இதனடிப்படையில் இந்த ஆயுர்வேத வைத்தியசாலை இப்பகுதி மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

                                  ஆயுர்வேத மருத்துவத்தை அதிகளவில் எதிர்பார்க்கும் முதியோரின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் ஏனையவர்களின் நலன்களை முன்னிறுத்தியும் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.

                                  புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

                                  இதேநேரம் புங்குடுதீவு பகுதியானது பரந்தளவிலான பகுதியாகவும் பல கிராமங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும் நிலையில் சில பகுதிகளில் இருந்து மக்கள் தமது

                                  மருத்துவ தேவையை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளும் நிலையும் குறைவாகவே காணப்படுகின்றது.

                                  இதனால் மாதாந்தம் 15 நாட்களுக்கு ஒருதடவை நடமாடும் சேவையை பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் மக்கள் நலன்பெறும் வகையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது தவிசாளரால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                                  இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

                                  மக்கள் நலன் புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைக்க பட்டுள்ள நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

                                  நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் அதிகரித்து செல்கின்ற பொழுதும் மக்கள் இயற்கை முறை மருத்துவத்தை தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர்

                                  இங்கே பாம்பு கடி மற்றும் விசா ஜந்துக்கள் தீண்டுதலுக்கும் முறையான சிகிச்சைகள் வழங்க பட்டு வருகின்றன

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு

                                    இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு

                                    இலங்கை நட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரம சின்கா தெரிவித்துள்ளார்

                                    இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

                                    நாட்டின் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் ரணில் விக்கிரம சின்கா இவ்வாறு குறிப்பிட்டார்


                                    இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணங்களை வரையறுக்துக் கெகாள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

                                    புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறி கொடுத்து போனஸ் ஆசனம் மூலம் தெரிவான ரணில் இன்று இலங்கையில் பிரதமராக பதவி ஏற்றார்

                                    இவரை ஆட்சியில் அமர்ந்த பின்னரும் நாட்டை மீள் இயல்பு நிலைக்கு எடுத்து செல்ல முடியவில்லை வீர வசனம் பேசி வரும் ரணில் தற்போது மக்கள் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பதில் படு தோல்வியை சந்தித்துள்ளார்

                                    மக்களின் அத்தியாவசிய பொருள்கள் முதல் அனைத்தும் விலையும் அதிகரிக்க பட்ட நிலையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தொடராக போராட்டம் நடத்தி வருகின்றனர்

                                    இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைக்கு ராஜபக்சே குடும்பமே கரணம் என அனைத்து மக்கள் கூட்டாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்

                                    தான் தோற்று போன ஜனாதிபதியாக பதவி விளக்க மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே அரியணையில் அமர்ந்துள்ளார்

                                    இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு

                                    மக்களின் போர் கீரோவாக வலம் வந்து இன்று அதே மக்கள் மத்தியில் ஸீரோவான கோத்தபாய ஆட்சியில் பிரதமராக விளங்கி வரும் ரணிலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

                                    மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பான தலைவர் மக்களை வீடுகளில் உட்க்காரும் படி தெரிவித்துள்ள செயல்பாடு கொதிப்புக்கு நிலைக்கு எடுத்து சென்றுள்ளது

                                    இவரது இந்த செய்தி மக்களை சீண்டும் தந்திரோபாய தாக்குதல் நகர்வு என அரசியல் நோக்கர்கள் தெரி க்கின்ற்னர்

                                    அனுதாப அலையின் ஊடக மக்களை தனது வச படுத்தி தனது கட்சியை பலப் படுத்துவதில் அக்கறை கொண்டுள்ள ரணிலின் இந்த நகர்வு கோத்தாபாயாவையும் கடுப்பில் உறைய வைத்துள்ளதுள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      எம்பி மகன் மருமகள் கைது

                                      எம்பி மகன் மருமகள் கைது

                                      ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                      அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலுக்கு அருகில் வைத்து அண்மையில்

                                      பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                      இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.