இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு மஹிந்த

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு மஹிந்த

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு

தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு

காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும்

மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக, சிறிய ரக வேனும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வர்த்தகரான தந்தை இன்று காலை பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி கப்பலை பரிசோதிப்பதற்காக பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு

சென்ற போது பேருவளையில் இருந்து வந்த மகன் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எதிரில் வந்த கார் தனது தந்தையுடையது என அடையாளம் காண்டுள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு

பின்னர், மகன் தன்னுடைய வாகனத்தால், தந்தையின் வாகனத்தை மோதி சேதப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மகனின் வேனும் சேதமடைந்துள்ளது, ஆனால் மகனுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய கார் மற்றும் வேன் தற்போது பேருவளை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு

கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு

உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு

வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால்,

குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள் வான் பாய்கின்றன. மேலும் பல குளங்கள் வான் பாயும் கட்டத்தை அடைந்துள்ளன.

வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 15 குளங்கள் சிறு உடைப்பெடுத்த நிலையில் அவை தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இளைஞர் கொலை நால்வர் கைது

இளைஞர் கொலை நால்வர் கைது

தலவாக்கலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொலிரூட் தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் கொலை நால்வர் கைது

இந்த சம்பவம் தொடர்பில் 21 முதல் 24 வயதுகளுக்கிடைப்பட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவருக்கு வெட்டுக் காயங்கள் காணப்பட்டமையினால் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தந்தையின் மரணச் சான்றிதழுக்காகச் சென்ற மகனும் மரணம்

தந்தையின் மரணச் சான்றிதழுக்காகச் சென்ற மகனும் மரணம்

உயிரிழந்த தந்தையின் இறுதிக் கிரியைகளுக்காக மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகனும் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளத்சிங்கல – பஹல நாரகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற ரந்திக பியூமல் கமகே என்ற (21) வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவர் உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக வேகமாக புலத்சிங்களவில் இருந்து ஹொரணைக்கு பயணித்துள்ளார்.

தந்தையின் மரணச் சான்றிதழுக்காகச் சென்ற மகனும் மரணம்

இவ்வாறு பயணித்த போது கீழ் நரகல பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகேவின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வீடியோ

மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு

மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
Posted in இலங்கை செய்திகள்

சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை

சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை


சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 02 ஆம் திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது.

பேரூந்து புத்தளம் பகுதியை வந்தடைந்த பொழுது 4 பெண்கள் 2 ஆண்களுமாக 6 பேர் பேரூந்தில் பயணிகள் போர்வையில் ஏறியிருந்தனர்.

இதேவேளை கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிக்கொண்ட ஒரு குடும்பத்தின் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மேற்கூறிய ஆறு பேர்கொண்ட குழுவினால் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் பேரூந்தில் வைத்து களவாடப்பட்டிருந்தது.

சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை

மேற்கூறிய பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக் கொண்டதாக பேரூந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தெரிவித்திருந்தனர்.

பணத்தினை இழந்த குறித்த குடும்பத்தினர் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் இறங்க முற்படும்போதே குறித்த கும்பலில் பெண் ஒருவர் பேரூந்தில்

பொருத்தப்பட்டிருந்த இரகசிய காமராவினை தனது கை பாய்க்கினால் மறைக்கும் போது மற்றைய பெண் கொண்டாளில் பகுதியிலிருந்து ஏறிய பெண்ணின் கைபாய்க்கினுள் பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவினுள் பதிவாகியுள்ளது.

இதேவேளை குறித்த யாழ். குடும்பத்தினருக்கு பேரூந்து நடத்துனர் பணம் களவாடப்பட்டு முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேரூந்தில் பயனித்திருந்ததாகவும், அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் பேரூந்து நடத்துனர்களினால் வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ரகசிய கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண்

என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டகேனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மூவர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் நேற்று (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

பழைய பகைமை காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் தலவாக்கலை நகரில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனவும், அதன்பின்னர் உயிரிழந்தவரும், அவரது நண்பர்களும் ஆட்டோவில் வீடு நோக்கி

பயணித்துள்ளனர் எனவும், இவர்களை மற்றுமொரு ஆட்டோவில் துரத்தி வந்த குழுவினர், ஹொலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வைத்து வழி

மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர்.

குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

விக்கெட் கம்புகள், கூரிய ஆயுதங்களைக்கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை லிந்துலை பிரதேசத்தில் வைத்து லிந்துலை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன், இருவரும் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் பயணித்த ஆட்டோக்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம் சஞீவன் (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்
Posted in இலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்

கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்

கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்

கடந்த திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கனடா Toronto பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் முரசுமோட்டையை சேர்ந்த நபர் பலியாகியுள்ளார்

சம்பவம் இடம் பெற்ற தினம் பர பரப்பான Dufferin Street and Eglinton Avenue West பகுதி சாலையை
கடக்கும் பொழுது ​​டர்ன் டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கினார் .

பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்க பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிசை பிரிவில்அனுமதிக்க பட்டார் .

கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்

ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணித்தியாலங்கள் பின்னர் இறந்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இவ்வாறு இறந்தவர் இலங்கை கிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த 53 வயதுடைய,மூன்று பிள்ளைகளின் தந்தையான தெய்வேந்திரன் தெய்வரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இந்த ஆண்டு இடம்பெற்ற 21 வது வீதி விபத்து மரணமாக
இது காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இடப்புறமாக டிரக் சாரதி வண்டியை திருப்பியதாக தெரிவிக்க ,படுகிறது இவ்வாறு அந்த பகுதியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது ,அதனால் அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகிறது .

இந்த விபத்தில் தமது உறவை இழந்து தவிக்கும் குடும்பத்தார் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது ,
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலி கவிதை

இந்த விபத்து காணொளி எமது வைபர் குழுவில் இணைக்க பட்டுள்ளது .இதில் அழுத்துவதன் ஊடக அதனை பார்க்க முடியும்

பெற்றோல் குண்டுத் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பெற்றோல் குண்டுத் தாக்குதல்

பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டு தாக்குதல் ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

நேற்று இரவு இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

தீயில் சிக்கி உயிரிழந்த தாய்

தீயில் சிக்கி உயிரிழந்த தாய்

கம்பளை – பன்விலதென்ன, லொராவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 94 வயதுடைய தாய் தனது அறையில் தீப்பிடித்த

நிலையில் படுகாயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புப்புரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாயின் 5 பிள்ளைகளும் அதே கிராமத்தில் வசிக்கின்ற போதிலும், தாய் தனது வீட்டில் தனியாக வசித்து வருவதாக பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளே உணவு மற்றும் தேவையானவற்றை வழங்கியுள்ளனர், மேலும் அவர் வயதாகிவிட்டாலும் தனியாகவே தனது வேலைகளைச் செய்வார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தீயில் சிக்கி உயிரிழந்த தாய்

மதியம் மூன்று மணியளவில், அவரது மருமகளில் ஒருவர், அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார், இந்த

வீட்டின் திசையில் இருந்து புகை வருவதைக் கண்ட அவர், உடனடியாக வந்து தாய் இருந்த அறையைப் பார்த்தார்.

அங்கு தீப்பரவியுள்ள நிலையில், தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்.

கம்பளை பதில் நீதவான் திருமதி நந்தனி காந்திலதா இந்த இடத்திற்கு வந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்

மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை மகசின் வீதியில் வசிக்கும் 16 வயது சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சிறுவன் வீட்டில் இல்லாததை அறிந்து சிறுவனின் தாய் அவரைக் தேடியுள்ளார்.

பின்னர், குறித்த சிறுவன் அடிக்கடி செல்லும் இடமான அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று அழைத்த போது வீட்டுக்குள் இருந்த சிறுவன் தாய்க்கு தெரியாமல் பின் ஜன்னல் வழியாக கீழே இறங்க முற்பட்டுள்ளார்.

மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்

அப்போது, ​​அவர் விபத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவன் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், வீட்டின் பின்புறம் ஓடிச் சென்று சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிமென்ட் கிரில் மீது ஏறி தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

ஆதரிக்கும் ஆனால் ஆதரிக்காது மஹிந்த பதில்

ஆதரிக்கும் ஆனால் ஆதரிக்காது மஹிந்த பதில்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)


இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,கட்சி இது குறித்து விரைவில் முடிவெடுக்கும் என நேற்று (13) தெரிவித்தார்.

SLPP தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரேரணைகளை ஆதரிக்கும் என்றும்,
ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை ஆதரிக்காது என்றும் ஊடகங்களுக்கு நேற்று (13)கருத்து தெரிவித்த போது கூறினார்.

ஆதரிக்கும் ஆனால் ஆதரிக்காது மஹிந்த பதில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் வரவு- செலவு திட்ட முன்மொழிவுகள்
பற்றி கலந்துரையாடியதா என வினவியபோது,

​​தான் அவ்வாறு எந்தவொரு கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவில்லை என்றும்,


கட்சியில் உள்ள மற்றவர்கள் அத்தகைய கலந்துரையாடலில் கலந்து கொண்டார்களா? என்பது தனக்கு தெரியாது என்றும் மஹிந்த மேலும் தெரிவித்தார்

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வலயக் கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்

வலயக் கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்

கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் நேற்று (13) மாலை முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் வந்த விமானம் சென்னைக்கே திரும்பியது

யாழ் வந்த விமானம் சென்னைக்கே திரும்பியது

யாழ்ப்பாணம் வந்த விமானம், மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி திங்கட்கிழமை ( 13) புறப்பட்டது .

இந்த பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானம் இன்று (14) காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவில் நால்வரை காணவில்லை

மண்சரிவில் நால்வரை காணவில்லை

பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

மண்சரிவில் அவர்கள் சிக்கியுள்ளார்களா அல்லது ஏற்கனவே வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை, தாய் மற்றும் அவர்களது இரு மகள்கள் எங்கிருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் காணாமல் போயுள்ளதாக நம்பப்படுகின்றது.

மண்சரிவில் நால்வரை காணவில்லை

மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை 08 ஆவது கெமுனு ஹேவா படைப்பிரிவின் இராணுவப் படையினர் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்

மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்

பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) இரவு பெய்த மழையுடன் கூடிய இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடு ஒன்றில் இருந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இவர்கள் மண் மேட்டின் கீழ் புதையுண்டுள்ளார்களா அல்லது மண்சரிவுடன் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்களா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்

இச்சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாகவும், கடும் மழை காரணமாக அப்பகுதிக்கு செல்வது சிரமமாக இருந்ததால், அவர்கள் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான பிரதேசம் என்பதுடன் மேலும் பல வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்ற பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஆபத்தான மழை நிலைமை தொடர்பில் சர்வதேச வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்

வெளிநாடு ஒன்றில் சிக்கித்தவிக்கும் 200 இலங்கையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடு ஒன்றில் சிக்கித்தவிக்கும் 200 இலங்கையர்கள்

வெளிநாடு ஒன்றில் சிக்கித்தவிக்கும் 200 இலங்கையர்கள்

ஜோர்தானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 200 இலங்கையர்கள் விசா நீடிக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது ஜோர்டானின் சஹாப், அல் ஜுமாத் இண்டஸ்ட்ரியல் சிட்டியில் உள்ள அசீல் என்ற தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

விசா நீடிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாம் தற்போது எதிர்நோக்கி வருவதாக இலங்கையர்கள் ஊடகத்திற்கு தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது

தோப்பூரில் மிதிவெடி மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தோப்பூரில் மிதிவெடி மீட்பு

தோப்பூரில் மிதிவெடி மீட்பு

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்பான்குளம் கட்டுக்கு அருகில் மிதிவெடியொன்று காணப்படுவதாக தோப்பூர் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று திங்கட்கிழமை காட்டுக்கு மாடு மேய்ப்பதற்காகச் சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதை கண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த இடத்திலேயே மிதிவெடி காணப்படுவதோடு, மிதிவெடியை அகற்வதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.