கழிவறையில் மனித சடலம்
Posted in இலங்கை செய்திகள்

கழிவறையில் மனித சடலம்

கழிவறையில் மனித சடலம்

கழிவறையில் மனித சடலம் மீட்பு நுரையாவின் பொது கழிப்பறை ஒன்றில் இறந்த நிலையில் மனித சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற அவசர எண்ணின் மூலமாக தகவலை அடுத்து அங்கு விரைந்து போலீசார் கழிப்பறையில் இறந்த நிலையில் காணப்பட்ட சடலத்தினை மீட்டனர் .

இறந்த நிலையில் சடலம் மீட்பு

இந்த சடலம் உண்மையில் இயற்கையின் காரணமாக மரணமடைந்தாரா அல்லது அடித்து படுகொலை செய்யப்பட்டு அங்கு வீசி எறியப்பட்டு செல்லப்பட்டாரா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு பல மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையை தொடராக உலுப்பி வரும் இந்த படுகொலை மின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை.

இலங்கை மிகவும் அபாயமான நாடாக தற்பொழுது வெளியாகி வரும் சடலம் மீட்பு சம்பவங்கள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் வடபகுதி மற்றும் தென்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ,மர்ம மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

படு கொலை செய்யப் பட்டாரா ..?

இந்த படுகொலைகள் பின் பின்புலத்தில் உள்ள மனிதர்கள் யார் ,என்பது தொடர்பாக இதுவரை இலங்கை குற்றபிரிவு எதனையும் வெளியிடவில்லை .

நாள்தோறும் வீதிகள் ,பற்றைக்காடுகள் , காடுகள் நீரேறிகள் என்பனவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மீட்கப்படுகின்ற மனித சடலங்கள் எவ்வாறு மீட்கப்படுகிறது என்பது தொடர்பாக இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பதை இதுவரை இலங்கையின் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.

மக்களது குற்றச் சாட்டுக்கள் காணப்படுகிறது .

தொடராக இடம் பெற்று வரும் இந்த படுகொலையின் பின்புலத்தில் அரசியல்வாதிகள்,உள்ளதாக சந்தேகம் பலமாக எழுவதாக மக்கள் மன்றம் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகிறது.

கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு ஒன்று விழுந்ததில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலிய காட்மோர் தோட்டத்தில் வசிக்கும் அந்தப் பாடசாலையில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். அனிஷான் என்ற 11 வயது மாணவனே இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் இன்று (04) பிற்பகல் 1.30 மணி அளவில் கழிவறைக்குச் செல்ல வந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு மாணவனின் உடல் மீது உருண்டுவந்து விழுந்ததில் மாணவன் கழிவறை சுவரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் பாடசாலையின் ஆசிரியர்களும் அயலவர்களும் ஒன்றிணைந்து காயமடைந்த மாணவனை அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேயிலை தோட்டம் ஒன்றின் அபிவிருத்தி நோக்கத்திற்காக குறித்த கொங்கிரீட் அமைப்பு கொண்டுவரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

Featured

Loading...
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வலயக் கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்

வலயக் கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்

கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் நேற்று (13) மாலை முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ