மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை மகசின் வீதியில் வசிக்கும் 16 வயது சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சிறுவன் வீட்டில் இல்லாததை அறிந்து சிறுவனின் தாய் அவரைக் தேடியுள்ளார்.
பின்னர், குறித்த சிறுவன் அடிக்கடி செல்லும் இடமான அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று அழைத்த போது வீட்டுக்குள் இருந்த சிறுவன் தாய்க்கு தெரியாமல் பின் ஜன்னல் வழியாக கீழே இறங்க முற்பட்டுள்ளார்.
மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்
அப்போது, அவர் விபத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவன் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தாயின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், வீட்டின் பின்புறம் ஓடிச் சென்று சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிமென்ட் கிரில் மீது ஏறி தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
















