முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு
Posted in இலங்கை செய்திகள்

முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு

முரசுமோட்டையில் கத்தியால் குத்திவாலிபர் வடலிக்குள் வீச்சு

முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு சம்பவ பெரும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

முகநூல் வாயிலாக பரவிய காணொளி

முகநூல் வாயிலாக பரவிய காணொளியில் பலத்த கத்தி குத்துக்கு உள்ளான நிலையில் வாலிபர் ஒருவர் வடலிக்குள் உயிருடன் துடித்து கொண்டிருக்கும் காட்சி காணப்படுகிறது .

இறந்து விட்டதாக மக்கள் நினைத்திருக்கும் பொழுது அவர் உயிருடன் உள்ளது தெரியவந்த நிலையில் ஆட்டோ பிடித்து அவர் காப்பாற்ற படுகின்றார் .

ஆன் பெண்கள் இணைந்து அந்த வாலிபரை காப்பாற்றியுள்ளனர் .

முரசு மோட்டை மூன்றாம் யூனிட்டைஸ் இருந்த நபர் என தெரிவிக்க பட்டுளள்து .

முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு
முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு

கொலை வெறி தாக்குதலை நடத்தியது யார்

இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

தற்போது அனுரா ஆட்சியில் மலிந்து கிடக்கிறது வன்முறைகள்.

25மிதிவண்டி வழங்கி சாதனை முரசுமோட்டை
Posted in இலங்கை செய்திகள்

25மிதிவண்டி வழங்கி சாதனை முரசுமோட்டை

25மிதிவண்டி வழங்கி சாதனை முரசுமோட்டை

25 மிதிவண்டி வழங்கி சாதனை முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி| காரை சேனாதி 20 | தயாகரன் 05

முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் உதவி திட்டத்தின் கீழ் லண்டனை சேர்ந்த காரை சேனாதி 20 மிதிவண்டிகள் மற்றும்

|வன்னி மைந்தன் சகோதரனான தயாகரன் 05 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார் .இவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

வன்னிமைந்தன் டிக் டாக் தளம்

வன்னிமைந்தன் டிக் டாக் தளம் வழங்கிய ஒரே நேரத்திலான மிக பெரும் எண்ணிக்கை ,உதவி திட்டம் இதுவாகும் .

அள்ளி அள்ளி பெரும் உதவிகளை வழங்குவதில் காரை சேனாதி அவர்கள் முதலிடம் பிடித்து நிற்கிறார் .அதே போன்று எனது சகோதரன் அவர்களும் அவ்விதமான செயல்பாட்டில் விளங்குகிறார் .

மிக பெரும் உதவிகளை வழங்கிய காரை சேனாதி

எனவே இந்த மிக பெரும் உதவிகளை வழங்கிய காரை சேனாதி மற்றும் சகோதரன் தாயகரன் ஆகியோருக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மற்றும் எதிரி இணையம் என்பன நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .

இந்த மிதிவண்டியை கடையில் பெற்று பாடசாலையில் வழங்கிய நண்ப்ர்களான செந்தீபன் ,மற்றும் நிபுணன் ஆகியோருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

மேலும் இந்த நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்து செயலாற்றிய செயல் வீரர் முரசு மோட்டை முருகானந்த கல்லூரியின் அதிபர் பங்கய செல்வன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

முரசுமோட்டை முத்தழகி பாடல்
Posted in பாடல்கள்

முரசுமோட்டை முத்தழகி பாடல்

முரசுமோட்டை முத்தழகி பாடல்

முரசுமோட்டை முத்தழகி பாடல் |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா

|8வது பாடலாசிரியர் |new tamil songs

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்

இசை – இளங்கோ செல்லப்பா

பாடல்வரிகள் – சங்கர் லண்டன்

-தயாரிப்பு – சந்தன் லண்டன்

வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 8வது பாடலாசிரியர்இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்
Posted in இலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்

கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்

கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்

கடந்த திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கனடா Toronto பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் முரசுமோட்டையை சேர்ந்த நபர் பலியாகியுள்ளார்

சம்பவம் இடம் பெற்ற தினம் பர பரப்பான Dufferin Street and Eglinton Avenue West பகுதி சாலையை
கடக்கும் பொழுது ​​டர்ன் டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கினார் .

பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்க பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிசை பிரிவில்அனுமதிக்க பட்டார் .

கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்

ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணித்தியாலங்கள் பின்னர் இறந்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இவ்வாறு இறந்தவர் இலங்கை கிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த 53 வயதுடைய,மூன்று பிள்ளைகளின் தந்தையான தெய்வேந்திரன் தெய்வரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இந்த ஆண்டு இடம்பெற்ற 21 வது வீதி விபத்து மரணமாக
இது காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இடப்புறமாக டிரக் சாரதி வண்டியை திருப்பியதாக தெரிவிக்க ,படுகிறது இவ்வாறு அந்த பகுதியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது ,அதனால் அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகிறது .

இந்த விபத்தில் தமது உறவை இழந்து தவிக்கும் குடும்பத்தார் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது ,
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலி கவிதை

இந்த விபத்து காணொளி எமது வைபர் குழுவில் இணைக்க பட்டுள்ளது .இதில் அழுத்துவதன் ஊடக அதனை பார்க்க முடியும்

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!

எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!

கண்டாவளை திருவையாறு
கனக ராயன் குளமும்
முட்டி மோதி ஓடி வரும்
முல்லைத்தீவு தேடி வரும்

வட்டக்கச்சி கொம்படியும்
வளைந்து செல்லும் ஊரியானும்
தட்டி மறிக்கும் தட்டுவன் கொட்டியும்
தண்ணீர் ஊற்றும் வழிமறிக்கும்

முரசுமோட்டை சேற்றுக்கண்டி
மூன்றாம் கட்டை நான்காம் கட்டை
வெலிகண்டன் சந்தியில
வேகம் பிடிக்கும் வேலி பிரிக்கும்

இரணை மடுவும் இன்று வரவும்
இளைப்பாறும் இளம் வாய்க்காலும்
ஊர் சுற்றி பார்க்கும்
ஊர்ந்து வரும் நீரும்

இயற்கை வாழும் ஊரு வன்னி மண்ணு
இளைப்பாற நீயும் வா கண்ணு
எங்க ஊரை போல எந்த ஊரு வருமோ
எங்கள் வாழ்வு எங்கு கூடுமோ

கட்டி வைத்த குளமும்
கட்டு டைத்து பாயும்
வந்து பார்த்து ஆடு
வயல் இறங்கி ஓடு

கிரவல் வீதியெல்லாம்
கிழிந்து போச்சுது
தாரு போட்ட வீதியில
தவழ்ந்து பார்த்து ஓடுது

வளர்ச்சி இங்கே நல்லாய் இருக்கு
வாழும் மனிதர் வறண்டிருக்கு
அறியாமை ஓட அறிந்த கொள்ளா வாடா
ஏற்றம் இங்கு ஏறவில்லை
ஏழ்மை இன்னும் ஓடவில்லை

வீட்டுக்குள்ள உழைப்பை வைத்து
வீதியில ஏங்கி நிற்கு
புத்தி கெட்ட மனிதராலே – தேசம்
நித்திரையாய் கிடக்கு

தன்னில் தான் தங்கி வாழும்
தன்னிறைவு வருமா
வெள்ளையர் நாடு போல – வாழும்
வெற்றி முளைக்குமா

அகதி தமிழன் பணத்தில் வாழும்
அழிதல் ஒழியுமா
தன் உழைப்பில் தான் வாழும்
தலை நிமிர்வு ஓங்குமா

உனக்குள் இன்று உன்னை தேடு
உலகை இன்று புரட்டி போடு
புரட்சி வெடிக்கும் புழுதி உழவடிக்கும்
எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-03-2022

    Posted in மரண அறிவித்தல்

    நாகலிங்கம் – இரசாரட்ணம் முரசுமோட்டை

    நாகலிங்கம் – இரசாரட்ணம் முரசுமோட்டை

    யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, உதயநகர் 30 வீட்டுத்திட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ தற்போதைய வசிப்பிடமாகவும்

    கொண்ட நாகலிங்கம் இராசரட்ணம் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

    காலஞ்சென்ற சூசைமுத்து(மணியம்), ரோசலின்(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஆன் புஸ்பகாந்தி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,புஸ்பவதனா(அமுதா), இன்பவதனா(கவிதா), இரட்ணவதனா(கீதா- இலங்கை), இரட்ணகுமார்(குமார்), ஜெயக்குமார்(குட்டி),

    ஜெயவதனா(பிள்ளை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,மதன், திருநாகரன்(கர்ணன்), அருள்வண்ணன்(பாபு) கௌரி, ரௌத்திரி, றமேஸ்குமார்(ரமேஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மதுஷன், நிதுஷன், யதுஷா, துவாரகன், துவாரகா, சகானா, அட்சயா, அபினயா

    , சாருகா, டெய்சி, சரண், சணா, பரத், அனொஷ்கா, வரன், தரன், அக்‌ஷரா, ரித்திகா, அனுஷ், ஆருயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,இராஜலட்சுமி, சொர்ணலட்சுமி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பாலசுப்பிரமணியம், வில்வரத்தினம், சிவஞானம் மற்றும் இராஜேஸ்வரி,

    பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பேனார்ட், யறாட், பேபி, பபி மற்றும் ஜெயந்தி, எட்வெட் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின்

    இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்


    தொடர்புகளுக்கு
    குமார் – மகன்Mobile : +33651453725 குட்டி – மகன்Mobile : +33762053450 அமுதா – மகள்Mobile : +33652417007 கவிதா – மகள்Mobile : +31644923334 கீதா – மகள்Mobile : +94764148654 வதனா – மகள்Mobile : +33651217037 பாலச்சந்திரன் – சகோதரன்Mobile : +33662365007 இராஜேஸ்வரி – சகோதரிMobile : +33668726928

      Posted in Uncategorized

      முரசுமோட்டையில் மாணவனை தாக்கி சங்கிலியை அறுத்து சென்ற திருடர்கள்

      முரசுமோட்டையில் மாணவனை தாக்கி சங்கிலியை அறுத்துசென்ற திருடர்கள்

      கிளிநொச்சி ஏ-35 வீதி முரசுமோட்டை பகுதியில் பொங்கல் சாமான் வாங்கச் சென்ற பாடசாலை மாணவன் உட்பட மூவர் மீது மதுபோதையில் இருந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு

      அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து சென்று சென்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ்

      நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த மாணவன்உட்பட இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

      கிளிநொச்சி. ஏ- 35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் பொங்கல் சாமான் வாங்க கடைக்கு சென்ற பாடசாலை மாணவனும்

      அவரது சகோதரும் சாமான் வாங்க கடைக்குச் சென்று திரும்பிய சமயம் மது போதையில் இருந்தவர்களால் குறித்த

      மாணவன் மீதும் அவரது சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதேவேளை குறித்த சம்பவத்தின் போது அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றும் அறுத்து செல்லப்பட்டுள்ளது.

      இதே வேளை தனது பிள்ளைகள் தாக்கப்பட்டது தொடர்பாக கேட்பதற்கு விரும்புகிறார்கள் சென்ற அவர்களது தாய் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவத்தில்

      காயமடைந்த பாடசாலை மாணவன் உட்பட 2 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


      இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனர்

      நமது நிருபர் – சங்கிலியன்