பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது
Posted in இலங்கை செய்திகள்

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பஸ் கட்டணங்கள் தொடர்பான தேசிய கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு டீசல் விலை 4 வீதத்திற்கு மேல் குறைக்கப்பட

வேண்டும் எனவும், இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் பஸ்

சங்கங்கள் தெரிவித்துள்ளன. இம்முறை பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மூலம் முதலாம் இடம் பெற்ற பாடசாலை
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் மொழி மூலம் முதலாம் இடம் பெற்ற பாடசாலை

தமிழ் மொழி மூலம் முதலாம் இடம் பெற்ற பாடசாலை

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

இதேவேளை, சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தையும், மூன்றாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் பெற்றுக் கொண்டுள்ளது.

video

பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்

பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்

பேருந்து ஒன்றில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரிவி காட்சிகள் எமக்கு கிடைத்துள்ளது.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் திக்வெல்ல பிரதேசத்தில் பேருந்தில் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் வைத்து மூன்று பெண்கள் ஏறியுள்ளனர்.

தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் கூறுகையில், குறித்த மூவரே இந்த திருட்டை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

video

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற முயற்சித்த OIC கைது

இலஞ்சம் பெற முயற்சித்த OIC கைது

75 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்ற கந்தானை பொலிஸ் துணைப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவக உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெறும் போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

video

சீன எரிபொருள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருட்களின் விலைகுறைக்கப் பட்டுள்ளது

எரிபொருட்களின் விலைகுறைக்கப் பட்டுள்ளது

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகுறைக்கப் பட்டுள்ளது

ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் 02 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 247 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ பேருந்து விபத்தில் இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தில் பலர் காயம்

பேருந்து விபத்தில் பலர் காயம்

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

வெலிகந்த சிங்கபுர வீதியில் 8 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து சாரதிக்கு பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 75 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து விபத்தில் பலர் காயம்

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

video

இலங்கை தொடர்பில் IMF விசேட அறிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தொடர்பில் IMF விசேட அறிக்கை

இலங்கை தொடர்பில் IMF விசேட அறிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்காக வெளிநாட்டு கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட கொள்கை ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, இரண்டாவது தவணையை வெளியிடுவதற்கு வழி வகுக்கும் என

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

video

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தம்பதி வெட்டிக்கொலை

வவுனியாவில் தம்பதி வெட்டிக்கொலை

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

செட்டிகுளம் பிரதானவீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்றயதினம் (29) இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த தம்பதிகள் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று (30) காலை வியாபாரநிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வவுனியாவில் தம்பதி வெட்டிக்கொலை

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் வயது72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என திருட்டில் ஈடுபடும் போது இடம்பெற்றதா என்ற கோணத்திலும் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

video

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் டுபாய் விஜயம்

ஜனாதிபதி ரணில் டுபாய் விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெறவுள்ள COP28 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2023 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (UNFCCC COP28) நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை, அழுத்தமான காலநிலை மாற்ற சிக்கல்களைச் சமாளிக்கும் மற்றும் முக்கியமான முடிவுகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் நடைபெறும்.

ஜனாதிபதி ரணில் டுபாய் விஜயம்

டுபாயில் நடைபெறும் இந்த முக்கிய மாநாட்டில் இலங்கைத் தலைவர், 3 அமைச்சர்கள், 2 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் சுற்றுச்சூழல் அக்கறையில் ஆர்வமுள்ள 20 இளம் பங்கேற்பாளர்களுடன் கலந்து கொள்கிறார்.

இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் முதன்மை நோக்கம், உலக அளவில் கொள்கைகளை உருவாக்கும் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள நாடுகளின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பயன்படுத்துவதாகும்.

UNFCCC இன் கட்சிகளின் 28வது மாநாட்டில் உலகத் தலைவர்கள், பொது-தனியார் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த நிகழ்வில் 3 முக்கிய மைய புள்ளிகளை கற்பனை செய்வார்: காலநிலை நீதி மன்றம், வெப்ப மண்டல பெல்ட் முன்முயற்சி மற்றும் காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.

காலநிலை நீதி மன்றத்தின் பின்னணியில் உள்ள கருத்து, காலநிலை மாற்றம் மற்றும் குறிப்பாக உலகளாவிய வடக்கில் செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றின் அழுத்தமான பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

COP 28 மாநாட்டின் போது முன்வைக்கப்படும் மற்றும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்ச்சி நிரல்களில், பசுமை ஹைட்ரஜன் மற்றும் நிலைபேறான ஆற்றல் தொடர்பான இலங்கையின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாலை வரைபடங்களும் அடங்கும்.

நிலையான நடைமுறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வளர்ப்பதற்கான அதன் அர்ப்பணிப்பைக் காட்டி, காலநிலை மாற்றப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நாடு ஒப்புதல் கோருகிறது.

video

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த 47 வயதுடைய ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த கைதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (29) உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

குறித்த நபர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராகாத நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து கட்டளைக்கமைய கடந்த 22 ம் திகதி கொக்கட்டிச்சோலை

பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் அவரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (28) மயங்கி வீழ்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடமான சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை

(29) சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை
Posted in இலங்கை செய்திகள்

மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை

மண்மேடு சரிந்து போக்குவரத்து தடை

இராவணா எல்ல மேல் பகுதியில் இருந்து மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் வாகனங்களை செலுத்திய வாகன சாரதிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் தற்போது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

video

புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை

புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை

மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும்

குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை (27) நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள்

புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை

போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் , எவரையும் இது வரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

video

புலிகளின் சின்னத்துடன் வந்த இளைஞனுக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் சின்னத்துடன் வந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

புலிகளின் சின்னத்துடன் வந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

மாவீரர் நாள் நினைவேந்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள்

பொறித்த ஆடை அணிந்து பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புலிகளின் சின்னத்துடன் வந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த

ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்றார் என்ற

சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் நேற்று கொடிகாமம் பொலிஸாரால் கைது

செய்யப்பட்டு இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடுப்பு விதிகளின் கீழும் குறித்த இளைஞன் மீது பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

video

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்

உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்

சடலம் அடக்கம் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர்

மரண விசாரணை அதிகாரி நளின் மெதவக முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்

அதன்படி இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பஸ் நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், கம்பளை, மேரிவில வத்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் சிலர் வந்து, குறித்த சடலமானது தனது 59 வயதுடைய மகன் லாசர் மைக்கேலின் சடலம் என கூறி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினர் மதச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர்.

எவ்வாறாயினும், இறுதிச் சடங்கு நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நபர் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இறந்தாக தெரிவிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் சம்பவம் குறித்து மரண விசாரணை அலுவலகத்திற்கு அறிவிக்க அலுவலகத்தில் ஆஜரானார்கள்.

குறித்த மர்ம சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
Posted in இலங்கை செய்திகள்

வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது

வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது

பேலியகொடையில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறில் ஏற்பட்ட மோதலின் போது போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, நான்கு வாள்களை வைத்திருந்த 23-35 வயதுடைய எட்டு ஆண்களும், 26, 46 மற்றும் 47 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது

தகவல்களின்படி, கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளில், வெளிநாட்டில் மறைந்திருந்து வியாபாரி ஒருவரால் நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

video

தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய இரண்டு கிலோ தங்கம்
Posted in இலங்கை செய்திகள்

2 20 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

2 20 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

நாட்டில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் ரூ.2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கிராம் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டபோது இன்று புதன்கிழமை (29)

அதிகாலை 4 மணியளவில் ஒரு நாட்டுப் படகு சந்தேகத்திற்கிடமாக இந்தியா பாம்பன் அருகே நின்றது.

பிரபஞ்ச அழகி துறவியாக இலங்கைக்கு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

பிரபஞ்ச அழகி துறவியாக இலங்கைக்கு விஜயம்

பிரபஞ்ச அழகி துறவியாக இலங்கைக்கு விஜயம்

பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா, துறவு வாழ்க்கையில் நுழைந்து 15வது வருட பூர்தியை முன்னிட்டு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

துறவியாகுவதற்கு முன்பு, எலிசபெத் நான்கு முறை வியட்நாம் அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளதுடன் மிஸ் யுனிவர்ஸாகவும் பட்டம் பெற்றுள்ளார்.

பின்னர் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து துறவு வாழ்க்கையில் நுழைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் சுஜாதா பிக்குனி இலங்கைக்கு விஜயம் செய்து வரலாற்று வழிபாட்டுத் தலங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் மிஹிந்தலா ரஜமஹா விகாரைக்கு

திங்கட்கிழமை (27) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

video

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து
Posted in இலங்கை செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து

அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்

கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது. விரைவில் இந்த பதவி நியமனம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார்.

அடுத்த பொலிஸ் மா அதிபராக முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு

காரணமாகவே பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதமானதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து

ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியவுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். அத்துடன், சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட பத்து உறுப்பினர்களைக் கொண்டதாக அரசியலமைப்பு சபை காணப்படுகின்றது.

இந்த நிலையில், உத்தேச நியமனத்துக்கு ஜனாதிபதியும் அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

அத்துடன், அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகிறது.

ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மாரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயிலுடன் மோதியது சுற்றுலா பஸ்

ரயிலுடன் மோதியது சுற்றுலா பஸ்

இன்று அதிகாலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று

புகையிரதத்துடன் மோதியதில் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கமவில் இருந்து சிலாபத்தை நோக்கி பயணித்த பவர் செட் புகையிரதமே இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளது.

video

முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு

முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று (28) மீட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை விமானப் படையில் விமானப் படை வீரராக பணிபுரிந்த நிலையில், அதிலிருந்து விலகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றதுடன், முதற்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு

இதன்போது புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை முன்னெடுத்தனர்.

மேலும், பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கு பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளையும், முறைப்பாடுகளையும் பதிவுசெய்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் , சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.