துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றவும்
Posted in இலங்கை செய்திகள்

துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றவும்

துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றவும்

துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கோரியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் அதன் வளாகத்துள் தங்குமிடங்கள் அமைத்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால்

மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவு தின நாட்களிலும் பொது நினைவேந்தல் தினத்திலும் தங்களின் கவலைகள் தீர நினைவு கொள்ள முடியாது துன்பப்படுகின்றனர்.

யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்தும் நினைவேந்தலில் பூரண சுதந்திரம் கிடைக்காமல் பல்வேறு இராணுவ கெடுபிடிகளுக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவதியுறுகின்றனர்.

துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றவும்

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கிருந்தாலும் பூரண சுதந்திரம் உண்டு என கூறுகின்ற போதும் இலங்கையில் வடக்கு கிழக்கு

மாகாணங்களில் வாழும் தமிழர்கள் நினைவேந்தல்கள் செய்ய பல்வேறு வடிவங்களில் இராணுவமும் பொலிஸாரும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் நினைவேந்தலை உரிய இடத்தில் தங்களது பிள்ளைகள் அல்லது உறவினர்களின் உடல்கள் விதைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடங்களில் அனுஷ்டிப்பதற்கு கோப்பாய் , கொடிகாமம் ,

எல்லங்குளம் போன்ற மாவீரர் துயிலுமில்லங்களில் தங்குமிடங்கள் அமைத்து இருக்கின்ற இராணுவத்தினரை வெளியேற்றி மக்களின் நினைவேந்தலுக்கு

வழிவிட மாவட்ட செயலாளர் விரைந்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தீர்மானமாக எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

பட்ஜெட்டுக்கு அமைச்சரவை அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

பட்ஜெட்டுக்கு அமைச்சரவை அனுமதி

பட்ஜெட்டுக்கு அமைச்சரவை அனுமதி

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில், அதில்

ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி மோகன்ராஜ் (42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த பாலமாணிக்கம் பிரேம்குமார் (51) என்பவரே காணாமல் போயுள்ளார்.

இவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும், கடந்த 11 ஆம் திகதி மாலை ஆறு மணியளவில் மதுபானம் வாங்க சென்றனர் எனவும், அவர்கள் திருப்பி

வராததால் 12 ஆம் திகதி அவர்களது உறவினர்கள், பொலிஸில் முறையிட்டனர் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இதனை அடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு

இவர்கள் இருவரும் தாம் வசிக்கும் தோட்டத்தில் இருந்து மதுபான சாலைக்கு செல்வதற்காக பத்தனை ஆறு ஊடாக உள்ள சிறிய அணையைக் கடக்க முற்பட்ட போது, இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மீட்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, காணாமல்போனவரை தேடும் பணி இடம்பெறுகின்றது.

வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு மூவருக்கு காயம்

புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு மூவருக்கு காயம்

மாரவில வடக்கு மூதுகடுவ கடற்கரையில் இன்று (12) குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடற் பிரதேசத்தில் கரைவலை மீன் வாங்கச் சென்ற சிலருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அங்கு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அந்த நபரின் தாய் வெட்டுக்காயங்களுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபரும், வெட்டுக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோதல் நடந்ததாக கூறப்படும் கடற்கரையில் தோட்டா, துப்பாக்கி ஒன்றும், இரண்டு வெற்று தோட்டாக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மாரவில தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கந்தளாயில் நில அதிர்வு

கந்தளாயில் நில அதிர்வு

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் இன்று (12) மதியம் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக கந்தளாய் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்

கந்தளாய் குளத்திற்கு அருகேயுள்ள கோயில் கிராமம்,முள்ளிப்பொத்தானை அண்டிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டபோதிலும் சேதங்கள் இல்லை என்று அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர் என்றாலும் அப்பிரதேச மக்களிடையே அச்ச உணர்வு காணப்படுவது குறிப்பிடத்தக்கது

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

மூளைசாலியால் எந்தப் பயனும் இல்லை

மூளைசாலியால் எந்தப் பயனும் இல்லை

நல்ல மூளைசாலி, சிறந்த சர்வதேச தொடர்புள்ளவர் என நியமித்த நாட்டின் தலைவரால் சர்வதேசத்திலிருந்து ஒரு டொலரைக் கூட மேலதிகமாக நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை,, சகல பொருட்களும் கடனாகவே பெறப்பட்டது ,மனிதாபிமான உதவிகளாகவே கிடைத்தன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

”அஸ்வெசும திட்டத்தைக்கூட முட்டாள்தனமான முறையில் செயல்படுத்தினார்கள்.குடும்ப அலகின் வருமான செலவினம் அடங்கலான சனத்தொகை கணக்கெடுப்பே முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் அது அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை,

இதன் காரணமாக உலக வங்கியில் இருந்து பெறப்பட்ட பணம் எந்த அறிவியல் பின்புலமும் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட்டது .இதன் பின்னரே தற்போது சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மூளைசாலியால் எந்தப் பயனும் இல்லை

”இந்நாடு நல்ல பாதையில் செல்ல முடியும் என்றாலும்,எடுக்கும் ஒவ்வொரு எட்டும் ஆதாரம் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக செய்யப்பட வேண்டும், அவ்வாறின்றி நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது, மாற்று அணி என்று கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் உலகம் பூராகவும் திரிந்து, ஐக்கிய மக்கள் சக்தி செயல்படுத்தும் நேர்மறையான திட்டங்களுக்கு சேறு பூசும் நடவடிக்கையை மட்டும்தான் செய்து வருகின்றனர்,

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது நாட்டிற்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் நிலையான வேலைத்திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

”ஸ்மார்ட் வகுப்பறை என்பது மனித மூலதனத்தை கட்டியெழுப்புவதற்கான முதலீடு ,நாட்டின் 41 இலட்சம் மாணவர் தலைமுறை அறிவாற்றலுடன்,நல்ல திறன்கள் மற்றும் ஆளுமைகள் கொண்ட மனித வளக் குழுவாக இதனால் உருவாக்கப்படும். உலகத் தரத்திலான திறன்களை வழங்குவதன் மூலம், தேசிய மற்றும் சர்வதேச தொழிலாளர் சந்தையில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைக்குச் செல்ல முடியும் .

சில அரசியல்வாதிகளுக்கு ஸ்மார்ட் நாடு என்பது வெறும் வார்த்தையாகவே மட்டும் உள்ளது,ஸ்மார்ட் நாடு என்றால் ஸ்மார்ட் கல்வி,ஸ்மார்ட் மாணவர்கள், ஸ்மார்ட் இளைஞர்கள் மற்றும் ஸ்மார்ட் குடிமக்கள் இருக்க வேண்டும் என்றும், இதனால் குறுகிய மனப்பான்மை உள்ள குடிமகனே உருவாகுவான்” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

புதுடெல்லியில் நிலநடுக்கம்

புதுடெல்லியில் நிலநடுக்கம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் சிறிய அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று (11) பிற்பகல் 3.36 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு வடக்கில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

கட்டு நாயக்காவில் துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கட்டு நாயக்காவில் துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது

கட்டு நாயக்காவில் துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது

இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடக மாலைதீவு நோக்கி பயணிக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

இவரது கைப்பையில் கைதுப்பாக்கி காணப்பட்டத்தை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது .

.விசாரணிகளின் பின்னர் தற்போது அவர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளார் .

பண மழையில் குளிக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

பண மழையில் குளிக்கும் இலங்கை

பண மழையில் குளிக்கும் இலங்கை

இலங்கையை விட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ,
தமது தாய்நாடு நோக்கி அனுப்பும் பணம் (வெளிநாட்டுப் பணம்)
கடந்த ஆணடான 2022 ஆம் ஆண்டை விட இந்த வருடம் (2023) 75 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக
இலங்கை தெரிவித்துள்ளது .

பண மழையில் குளிக்கும் இலங்கை

உல்லாச பய பயணம் கடுமையாக வீழ்ச்சி உற்ற நிலையில் ,தற்போது வெளிநாடு வேலைவாய்ப்பை
பெற்றவர்கள் அனுப்பிய பணத்தில் இலங்கை திறைசேரி உச்சம் அடைந்துள்ளது .

இவ்வாறே சென்றால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா
நெருக்கடி தணிந்து நாடு மீள் நிலைக்கு
திரும்பி செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற முக்கிய நபர் கைது

இலஞ்சம் பெற்ற முக்கிய நபர் கைது

இலங்கையில் 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு தொடேன்ற்து விளக்கமறியல் வைக்க நீதிமன்றம்,உத்தரவு .

வீடியோ

தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்
Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா

பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா

பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது.

அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

வீடியோ

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி புர இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டியில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்

வீடியோ

வீதியில் வினோத போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் வினோத போராட்டம்

வீதியில் வினோத போராட்டம்

வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்து மூளாயில் மக்கள் நேற்று (10) வினோத போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வீதியில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும் மற்றும் உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதியில் வினோத போராட்டம்

இப் போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரணில் அரசாங்கமே எங்கள் மீது ஏன் இந்தப் பாரபட்சம், R.D.A அதிகாரிகளே உங்களுக்கு கண் இல்லையா?,

வழக்கம்பரை தொடக்கம் பொன்னாலை வரை வாழும் மக்கள் மந்தைகளா?, வெள்ளத்தில் நீந்தியா நாம் பள்ளிக்கு வருவது போன்ற பல பதாகைகளைத் தாங்கியிருந்தனர்

வீடியோ

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கூலர் வாகன சாரதி படு காயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்

வீடியோ

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 54 பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையில் 54 பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் எட்டு மாவட்டங்கள் உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, கொழும்பு, கேகாலை, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை (11) பிற்பகல் 3 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது

வீடியோ

12 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அழிவு
Posted in இலங்கை செய்திகள்

12 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அழிவு

12 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அழிவு

அறுவடைக்கு தயாராகவிருந்த 12 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை மழையினால் அழிவடைந்துள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் ஒன்றரை மாதங்களாக பெய்து வரும் மழையினால், சில பகுதிகளில் வயல் நிலங்களுக்கு பாரியளவு சேதமேற்பட்டுள்ளதாகவும் வௌ்ள நிலைமையால் நெற்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இதற்கு முன்னர் நிலவிய வறட்சியினால் 64,088 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது

வீடியோ

வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in

வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in

நாட்டில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிக்கோயா பகுதியில் 10 இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் – டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மலையகப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. ஆறுகளும் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், அந்தப் குதியில் தொடர்ச்சியாக மழைக்காலங்களில் ஆற்று நீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in
வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in
மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Posted in இலங்கை செய்திகள்

131 சிறுமிகள் துஷ்பிரயோகம் 10 பேர் கர்ப்பம்

131 சிறுமிகள் துஷ்பிரயோகம் 10 பேர் கர்ப்பம்

நாட்டில் கடந்த ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

இவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளதாக அவர் மே்லும் தெரிவித்தார்.

அதேபோல், செப்டம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர்களில் 22 பேர் கர்ப்பம் தரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மூதாட்டி படுகொலை இரு பெண்கள் உட்பட மூவர் கைது

மூதாட்டி படுகொலை இரு பெண்கள் உட்பட மூவர் கைது

மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால், வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) எனும் மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

அவரது உடற்கூற்று பரிசோதனையின் போது சந்தேகங்கள் இருந்தமையால் அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

மூதாட்டி படுகொலை இரு பெண்கள் உட்பட மூவர் கைது

அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் 32 மற்றும் 28 வயதுடைய தம்பதியினரையும் , மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 19 வயது யுவதியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூதாட்டியின் காணிக்குள் இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும் , ஒரு வீட்டினை தம்பதியினருக்கு வாடகைக்கு வழங்கி விட்டு மற்றைய வீட்டில்

மூதாட்டி வசித்து வந்ததுடன் , மூதாட்டியை பராமரிப்பதற்காக 19 வயது யுவதி ஒருவர் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக தங்கி இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை இடம்பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுமுறை அளிக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ