Tag: சொகுசு பேரூந்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து ,மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று அதிகாலை
பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம்
இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று காத்தான்குடி
பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அதே நேரம் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி
வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதன் காரணமாக பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில்
குறித்து விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் பஸ் மீது மோதியுள்ளது இதனால் பஸ்ஸில் நடத்துனர் படுகாயமடைந்தார்.
அதே நேரம் பஸ்ஸின் சாரதி முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் பஸ்ஸின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.மற்றும் சொகுசு பஸ் ஆட்டோ என்பது பெரிதும் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 02 ஆம் திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது.
பேரூந்து புத்தளம் பகுதியை வந்தடைந்த பொழுது 4 பெண்கள் 2 ஆண்களுமாக 6 பேர் பேரூந்தில் பயணிகள் போர்வையில் ஏறியிருந்தனர்.
இதேவேளை கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிக்கொண்ட ஒரு குடும்பத்தின் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மேற்கூறிய ஆறு பேர்கொண்ட குழுவினால் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் பேரூந்தில் வைத்து களவாடப்பட்டிருந்தது.
சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
மேற்கூறிய பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக் கொண்டதாக பேரூந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை இழந்த குறித்த குடும்பத்தினர் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் இறங்க முற்படும்போதே குறித்த கும்பலில் பெண் ஒருவர் பேரூந்தில்
பொருத்தப்பட்டிருந்த இரகசிய காமராவினை தனது கை பாய்க்கினால் மறைக்கும் போது மற்றைய பெண் கொண்டாளில் பகுதியிலிருந்து ஏறிய பெண்ணின் கைபாய்க்கினுள் பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவினுள் பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த யாழ். குடும்பத்தினருக்கு பேரூந்து நடத்துனர் பணம் களவாடப்பட்டு முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேரூந்தில் பயனித்திருந்ததாகவும், அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் பேரூந்து நடத்துனர்களினால் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ரகசிய கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண்
என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டகேனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி
- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை



















