Tag: சொகுசு பேரூந்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து ,மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று அதிகாலை
பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம்
இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று காத்தான்குடி
பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அதே நேரம் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி
வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதன் காரணமாக பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில்
குறித்து விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் பஸ் மீது மோதியுள்ளது இதனால் பஸ்ஸில் நடத்துனர் படுகாயமடைந்தார்.
அதே நேரம் பஸ்ஸின் சாரதி முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் பஸ்ஸின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.மற்றும் சொகுசு பஸ் ஆட்டோ என்பது பெரிதும் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 02 ஆம் திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது.
பேரூந்து புத்தளம் பகுதியை வந்தடைந்த பொழுது 4 பெண்கள் 2 ஆண்களுமாக 6 பேர் பேரூந்தில் பயணிகள் போர்வையில் ஏறியிருந்தனர்.
இதேவேளை கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிக்கொண்ட ஒரு குடும்பத்தின் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மேற்கூறிய ஆறு பேர்கொண்ட குழுவினால் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் பேரூந்தில் வைத்து களவாடப்பட்டிருந்தது.
சொகுசு பேரூந்துகளில் திருடர்களின் கைவரிசை
மேற்கூறிய பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக் கொண்டதாக பேரூந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை இழந்த குறித்த குடும்பத்தினர் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் இறங்க முற்படும்போதே குறித்த கும்பலில் பெண் ஒருவர் பேரூந்தில்
பொருத்தப்பட்டிருந்த இரகசிய காமராவினை தனது கை பாய்க்கினால் மறைக்கும் போது மற்றைய பெண் கொண்டாளில் பகுதியிலிருந்து ஏறிய பெண்ணின் கைபாய்க்கினுள் பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவினுள் பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த யாழ். குடும்பத்தினருக்கு பேரூந்து நடத்துனர் பணம் களவாடப்பட்டு முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேரூந்தில் பயனித்திருந்ததாகவும், அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் பேரூந்து நடத்துனர்களினால் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ரகசிய கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண்
என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டகேனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதய அறுவை சிகிச்சைகளுக்காக 10 000 பேர் காத்திருப்பு
- இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய போர் கப்பல்
- மூளைக்காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது சுகாதார அதிகாரிகள்
- தில்வின் சில்வாவால் எப்படி முடிவை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும்
- புத்தளத்தில் 24 மணி நேரத்தில் 250 மி.மீ-க்கு மேல் அதிகபட்ச மழை
- பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்
- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா
- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்
- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை



















