Posted in இலங்கை செய்திகள்

வியாபாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்

வியாபாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்

இலங்கையில் -38 வயதான மாணிக்க கல் வியாபாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .

இவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

ராமர் பிள்ளையின் மூலிகை பெற்றல் விற்பனை – குஷியில் மக்கள் – video

ராமர் பிள்ளையின் மூலிகை பெற்றல் விற்பனை – குஷியில் மக்கள் – video

தமிழகத்தின் ராமர் பிள்ளை கண்டு பிடித்த மூலிகை பெற்றோல் வீரப்பனை செய்ய படுகிறது .


தமிழகம் முழுவதும் முதல் முறையாக ஒரு கோடி லீட்ட்ற மூலிகளி பெட்ரோல் விற்பனை செய்ய படுகிறது

கழிவு நீரை பயன் படுத்தி பெற்றோல்

அந்த செய்தியை நீங்கள் பாருங்கள்

Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன தமிழ் மாணவன் சடலமாக மீட்பு

காணாமல் போன தமிழ் மாணவன் சடலமாக மீட்பு

இலங்கை – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் ,இவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்

மலையகத்தை சேர்ந்த 21 வயது தமிழ் வாலிபரே இவ்வாறு சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .

இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிகளை 12 திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் – அரசு

துப்பாக்கிகளை 12 திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் – அரசு

இலங்கையில் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்கள்,துப்பாக்கிகளை ,எதிரி வரும் மாசி மாதம் 5

முதல் 12 அம திகதிக்கு முன்னர் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரச படைகள் வேண்டுதல் விடுத்துள்ளனர் .

அவ்வாறு தவறும் பட்ஷத்தில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

கட்டு துவக்கு கூட நீங்கள் வைத்திருக்க முடியாதாம் .

Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

இலங்கை – புத்தளம் -இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்

இலங்கை இராணுவத்தில் இருந்து புலிகளின் கோர தாக்குதலினால் தப்பி ஓடிய சுமார் ஐம்பது லடசத்திற்கு

மேற்பட்ட இராணுவத்தை மீளவும் ,இராணுவத்தில் இணையும் படி சிங்கள அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .

மகிந்த ஆட்சியில் இதே கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்க பட்டு வருகிறது .

பல பொது மன்னிப்பு வழங்க பட்ட பொழுதும் இவ்வாறு தப்பி ஓடிய சிப்பாய்கள் மீளவும் இராணுவத்தில் இணைந்து கொள்ள பின்னடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை
தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை
Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்

முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்

இலங்கையில் போர் முடிவடைந்து சுமார் பத்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல்

பாலத்தின் அருகில் மிதி வெடிகள் மீட்க பட்டுள்ளதாக சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது .

மீள் குடியேற்றம் குறித்த பகுதியில் நிறுவ பட்ட பொழுது இந்த அபாயகரமான வெடிகள் அகற்ற பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது .

ஆனால் இப்பொழுது மீண்டும் குண்டுகள் மீட்பின் ஊடாக புலி பீதியை சிங்கள அரசு கிளப்பி வருவதை காண முடிகிறது .

மகிந்த ஆட்சியில் கூட இவ்விதமான ஆயுதங்கள் மீட்க பட்டு வந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பாவில் விடுதலை புலிகள் மீது தொடர்ந்தும் தடை

ஐரோப்பாவில் விடுதலை புலிகள் மீது தொடர்ந்தும் தடை

ஐரோப்பிய நாடு இந்தியாவின் வேண்டுதலுக்கு இணங்க தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது ,அந்த தடையை மீளவும் அது நீடித்துள்ளது .

ஐரோப்பிய நீதிம்னறங்கள் சில தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கிட கோரிய போதும் ஐரோப்பிய யூனியன் அதனை தளர்த்த மறுத்து வருகிறது

இலங்கையில் விடுதலை புலிகள் முற்றாக அழிக்க பட்ட பின்னரும் இல்லாத புலிகளுக்கு இந்த ஐரோப்பா தடையை

விதித்துள்ளது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது

ஐரோப்பாவில் விடுதலை புலிகள்
ஐரோப்பாவில் விடுதலை புலிகள்
Posted in இலங்கை செய்திகள்

ஜேர்மனியில் தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஜேர்மனியில் தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஜேர்மன் – தலைநகர் பெர்லின் பகுதியில் மிக பெரும் தாக்குதலை மேற்கொள்ளும் , நோக்குடன் பதுங்கி இருந்த

ஐ எஸ் தீவிரவாதிங்களை சேர்ந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

உளவுத் துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

இவர்கள் இவ்வருடத்தில் பெர்லினில் மிக பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தது விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தொடர்பில் அந்த விசாரணைகள் நகர்கின்றன .

மேலும் பலர் கைது செய்ய படலாம் என நம்ப படுகிறது

ஜேர்மனியில் தீவிரவாதிகள்
ஜேர்மனியில் தீவிரவாதிகள்
Posted in இலங்கை செய்திகள்

தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி

தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி

இலங்கை -வரக்காபொல, தொரவக்க பகுதியில் தாய் முன்னே மக்களை சுட்டு கொன்று விட்டு மரம் ஆயுத தறி தப்பி சென்றுள்ளார் .

தாய் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

மாமியை வெட்டி கொன்ற மருமகன்

மாமியை வெட்டி கொன்ற மருமகன்

இலங்கை -ஜாஎல பகுதியில் குடும்பமா சண்டை காரணமா மனைவியின் தாயாரை மருமகன் வெட்டி கொன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மாமியாரை கொன்று விட்டு மருமகன் தப்பி சென்றுள்ளார் ,இவரை கைது செய்யும் தீவிர பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

இப்பொழுது மாமியும் உயிரோடு இல்லை, மகளுக்கு கணவனும் இல்லை .

குடும்பத்தில் அதிக மாமியார் மார் பிரச்சனைகளுக்கு மூலமாக விளங்கி வருவது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சியினால் விலை அதிகரிப்பு நடபாதை விற்பனையாளர்கள் பாதிப்பு

நுவரெலியாவில் மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சியினால்
விலை அதிகரிப்பு நடபாதை விற்பனையாளர்கள் பாதிப்பு

மலையகத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களாக பெய்து வந்த மழை காரணமாக மரக்கரி உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

நுவரெலியா விஷேட பொருளாதார மத்திய நிலைய மொத்த விலையில் இன்று (14) கோவா 125.00 – 130.00 சலாது 110.00 கொத்தமல்லி 320.00 கரட் 420.00 லீக்;ஸ் 290.00 – 180.00 பீட்ருட்

110.00 கிழங்கு 160.00 தொடக்கம் முள்ளங்கி (இராபு) 70.00 பூ.கோவா 1100.00 போன்ற மொத்த விலையில் காணப்படுகின்றது.

இதனை கொழும்பு தம்புல பிரதேசங்களில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து அவை நுகர்வோருக்கு சில்லரை

விலையில் கிடைக்கும் சந்தர்பத்தில் மரக்கரிகளின் விலை எவ்வாறு இருக்கும் என்பதை கொள்வனவாளர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அன்மையில் பெய்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தினால் மரக்கரிகள் பாதிப்பிற்கு உள்ளானது. மரக்கரி தோட்ட தொழிலாளர்களுக்கும்

தோட்டங்களில் தொழில் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய மண் கழிதன்மை அடைந்தமையினால் மரக்கரிகளின் வளர்;ச்சி விகிதம்

நுவரெலியாவில் மரக்கரி உற்பத்தியில் வீழ்ச்சியினால் விலை அதிகரிப்பு நடபாதை விற்பனையாளர்கள் பாதிப்பு

குறைவடைந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு போடப்பட்ட சேதன மற்றும் அசேதன உரங்கள் வெள்ளத்தில் அடித்து

செல்லபட்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்ட சில மரக்கரிகள் மழை கராணமாக அழுகியுள்ளன.

இதனால் தற்போது வங்க கடன் பெற்று விவசாய நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டோர் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனை நம்பி வாழும் ஆயிரகரக்காண

தொழிலாளர்களும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக மரக்கரி உற்பத்தியில் சிறிய நடுத்தர மற்றும் பாரிய தோட்டங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம்

செய்பவர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். இவர்களின் நிலை தற்போது கேள்வி குறியாகி உள்ளது. விவசாத்தை நம்பி

வட்டிக்கு பணம் வாங்கியவர்களும் வாகனங்களை வாடகைக்கும் தவணை கட்டண முறையில் கொள்வனவு செய்தவர்களும் பாதித்து உள்ளனர்.

இந் நிலையில் மரக்கரி உற்பத்தியில் ஈடுப்பட்டோரும் விற்பனைகளில் ஈடுப்பட்டோரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். நுவரெலியா விஷேட பொருளாதார

மத்திய நிலையத்திற்கும் போதுமான அளவில் மரக்கரிகள் வராததினால் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்ப முடியாமலும் இருக்கின்றது. மரக்கரி உற்பத்தியாளர்களின்

வருகையும் குறைந்துள்ளது. இந்துறையில் வீதியோரங்களிலும் சிறிய கடைகளிலும் சுயதொழிலாக மரக்கரி விற்பனையில் ஈடுபட்டவர்களும்

பாதிப்படைந்துள்ளனர். வாகனங்களில் வருவோர் விலையை கேட்டதும் வாங்காமல் சென்றுவிடுகின்றனர்.

இதனால் இவர்கள் கொள்வனவு செய்த மரக்கரிகளும் பழுதடைந்து வருகின்றது.

தற்போது இந்த காலநிலை மாற்றதினால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு என்ன தான் தீர்வு. இவர்களுக்கு உரிய

நிவாரணங்கள் கிடைக்குமா அல்லது மானியங்கள் கிடைக்குமா பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நுவரெலியாவில் மரக்கரி
நுவரெலியாவில் மரக்கரி
Posted in இலங்கை செய்திகள்

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

குடியுரிமைச் சட்டத் திருத்தமாக (CAB) முன்மொழியப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு சென்ற திசெம்பர் 11ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவரின்

ஒப்பத்துடன் சட்டமாகியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாரபட்ச வழிவகைகள் குறித்து வேதனை

தெரிவித்துள்ளவர்களின் ஆழ்ந்த கவலையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனமாரப் பகிர்ந்து கொள்கிறது.

மேற்சொன்ன குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்களதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய

அண்டை நாடுகளில் அடக்கியொடுக்கப்பட்டவர்கள் முகம் கொடுத்து வரும் சிக்கல்களில் கவனம் செலுத்துவதாகக்

கூறிக் கொண்டாலும், அது ரோகிங்யா மக்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதற்குக் காரணம் விளங்கவில்லை. ரோகிங்யா மக்கள் வங்கதேசத்தில்

பாகுபாடான விதத்தில் நடத்தப்பட்டார்கள். உள்ளபடியே மியான்மாரில் இனவழிப்புக்கு ஆளானார்கள். இந்த இனவழிப்பை ஐநா மனிதவுரிமைப் பேரவை அறிக்கைகள்

கவனத்தில் கொண்டுள்ளன. இவ்வகையில் துன்புறுத்தலுக்கு ஆளான ரோகிங்யா போன்ற மக்களுக்கெதிராக மதத்தின் அடிப்படையில் பாகுபாடு

காட்டுவது முறையன்று. மாபெரும் இந்திய நாட்டினை இவ்வாறான மதப்பாகுபாட்டைக் கடந்து உயர்ந்து நிற்குமாறு வேண்டுகிறோம். அரசுகள் ஒடுக்குவதும் அதன்

விளைவாக மக்கள் கூட்டங்கள் பெருமளவில் புலம்பெயர்வதுமான சிக்கல்கள் மலிந்துள்ள தெற்காசிய

வட்டாரத்தில் இதுபோன்ற மதச் சகிப்பின்மை மனிதவுரிமைச் சூழலின் வருங்காலத்துக்கு நல்லதல்ல.

சிறிலங்காவின் ஈழத்தமிழர்கள் சார்பில் இந்திய அரசின் கவனத்துக்கு ஒன்றைக் கொண்டுவர விரும்புகிறோம். அதாவது, 1980களின் தொடக்கத்திலிருந்து எம் மக்கள்

ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் இந்தியாவில் அடைக்கலமாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் அகதி முகாம் எனப்படும் முகாம்களிலும்,

மிகுதியினர் வெளியிலும் வசிக்கின்றனர். நிர்க்கதியாகத் தவித்துக் கிடக்கும் இம்மக்கள் பன்னாட்டுச் சட்டங்களின் படி ஏதிலியராகக் கூட நடத்தப்படுவதில்லை. ஏனெனில்

இந்திய நாடு ஏதிலியர் தகுநிலை பற்றிய 1951ஆம் ஆண்டின் ஐநா ஒப்பந்தத்திலோ, அடுத்து வந்த 1967ஆம் ஆண்டின் வகைமுறை உடன்படிக்கையிலோ ஒப்பமிடவில்லை.

ஆனால் 1948ஆம் ஆண்டின் அனைத்துலக மனிதவுரிமைப் பிரகடனத்தில் இந்தியா ஒப்பமிட்டிருப்பது உண்மை. இந்தப் பிரகடனம் குடிமக்களானாலும் அகதிகளானாலும்

அனைத்து மனிதர்களின் மனிதவுரிமைகளுக்கும் உத்தரவாதமளிக்கிறது. குடியுரிமைகள் இல்லாத போது மனிதர்கள் நாடற்றவர்களாகி விடுகின்றார்கள்.

நாகரிக உலகில் நாடற்றவராயிருப்பது அடிப்படை மனிதவுரிமைகள் இல்லாத நிலையைத்தான் குறிக்கும்.

இந்தியாவில் எம் மக்கள் இத்தனை ஆண்டுகள் நாடற்றவர்களாயிருந்து, இந்தியக் குடியுரிமை பெற முடியாமல் அல்லலுற்று வருகின்றார்கள். அதே வேளை

உலகின் நாடுகள் வேறுபலவற்றில் ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடைத்ததோடு இந்த உரிமையின் துணைக்கொண்டு அவர்கள் அனைத்து அடிப்படை

மனிதவுரிமைகளையும் பெற்று தாம் ஏற்றுக் கொண்ட அந்தந்த நாடுகளின் திறன்மிகு குடிமக்களாகியுள்ளனர்.

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் போர்க்குற்றங்களாலும் மானிடத்துக்கெதிரான குற்றங்களாலும் பாதிப்புற்றிருப்பதைக் குறைந்தது மூன்று ஐநா

அறிக்கைகள் தெளிவாகக் காட்டியுள்ளன. 2009 முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலையில் உச்சம் கண்ட இந்நூற்றாண்டின் முதல் இனவழிப்புக்கு நாம்

இரையாகியுள்ளோம். இப்படிப்பட்ட கடுங்குற்றங்களுக்குப்பின் தேவைப்படும் நிலைமாற்ற நீதியைக் கொஞ்ச நஞ்சமாவது பெற்றுத்தருவதில் ஐநாவும்

பன்னாட்டுச் சமுதாயமும் இதுவரை வெற்றி பெறவேயில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் சண்டித்தனமும், அந்நாடு தானளித்த உறுதிகளைத் தானே

மதிக்கும் நிலையைப் பன்னாட்டுச் சமுதாயம் ஏற்படுத்தத் தவறிவிட்டதுமே காரணமாயுள்ளன.
எம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இத்தனை

ஆண்டுகளாய்ப் பாதுகாப்பான புகலிடமாகவும் அரவணைக்கும் தாய்வீடாகவும் இந்தியா இருந்துள்ளது என்று நன்றியுணர்கின்றோம். எம் மக்கள் புலம்பெயரவும்,

அவர்களில் பலர் உலகெங்கும் சிதறவும் சிலர் பாக்கு நீரிணையைக் கடக்கவும் காரணமாகிய நிலைமை உருவானதில் இந்தியாவுக்கும் பங்குண்டு. தமிழ்நாட்டுத்

தமிழர்களுக்கும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் குறிப்பாக மொழியிலும் பண்பாட்டிலும் மத நம்பிக்கையிலும் நிறையவே பொதுத்தன்மை உண்டு.

ஆக, அவர்கள் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

பரந்து பட்ட சிக்கல்களின் பால் கவனம் செலுத்தும் போது அறஞ்சார்ந்த ஒரு நிலையை எடுங்கள் என இந்திய அரசை நாம் வேண்டுகிறோம்! சிறிலங்காவிலிருந்து புறப்பட்டு வந்த

தமிழர்களுக்கு, குடியுரிமை வேண்டும் எனக் கேட்பவர்களுக்கும், இந்தியாவிலேயே பிறந்து

வளர்ந்தவர்களுக்கும் மட்டுமாவது குடியுரிமை வழங்குங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம்!

Posted in இலங்கை செய்திகள்

புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்கௌரவிப்பு

புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்கௌரவிப்பு

புஸ்ஸல்லாவ ஸ்ரீ கல்கி மாணவ சேவா சமித்தியின் ஏற்பாட்டில் மத்திய மாகாணம் கம்பளை கல்வி வலையம் கொத்மலை கல்வி வலையங்களில் 2019 தரம் ஐந்து புலமை

பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் 2019 க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற

மாணவர்களையும்; பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இம்பொடை தொண்டமான் கலாசார நிலையத்தில் நடைபெற்றது (12)


காரியவான் ஐ.வி.எஸ். விஜயன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் 52 பாடசாலைகளை சேர்ந்த 580 தரம் 05 மாணவர்களும் 26 பாடசாலைகளை சேர்ந்த க.பொ.த

சாதாரண தரம் மற்றும் உயர்தர 380 மாணவர்களும் 26 பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கபட்டதுடன் இவர்களுக்கான கற்றல்

உபகரணங்களும் பல்கலைகழக மாணவர்களுக்கான உதவு தொகையும் வழங்கபட்டதுடன் இந்த மாணவர்களின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள்

புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்கௌரவிப்பு

பாடசாலைகளின் அதிபர்களும் கௌரவிக்கபட்டனர். இதன் போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற பாடசாலைகளுக்கு கல்விக்கான கல்கி விருதுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அதிதிகளின் உரைகள் சொற்பொழிவுகள் அதிதிகள் கௌரவிப்புகள் ஆகிய நடைபெற்றன.

இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந் நிகழ்வில் முதல் அமர்வான 2019 தரம் ஐந்து புலமைபரிசில்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை

கௌரவிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தகர் திரு தி.இராமநாதனும் இரண்டாம் அமர்வான 2019 க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சிறந்த

பெறுபேறுகளை பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் ஒருங்கினைப்பாளர் இரா.இராதாகிருஸ்ணன்

அவர்களும் கலந்துக் கொண்டனர். இந் நிகழ்வுகளுக்கு சிறப்பு அதிதிகளாக கம்பளை மற்றும் கொத்மலை கல்வி வலையங்களின் கல்வி அதிகாரிகள் பாடசாலைகளின்

அதிபர்கள் கொழும்பு தேசிய மக்கள கழகம் உட்பட சமூக ஆவலர்கள்¸ புத்தி ஜீவிகளும் கலந்துக் கொண்டதுடன்

நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துக் கொண்டார்கள்.

புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த
புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த
Posted in இலங்கை செய்திகள்

நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்

நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்

இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸும் கினிகத்தேனை,

தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை

மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேரெதிர் மோதிய பேரூந்து
நேரெதிர் மோதிய பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

சித்த மருத்துவம் விழிப்புணர்வு

சித்த மருத்துவம் வெறும் மூலிகை மருத்துவமல்ல. மக்களிடையே சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இம்மருத்துவ முறையை தொடர்ந்து

பின்பற்றச் செய்வதும்தான் சித்த மருத்துவமாகும் என்று கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள

ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் கூறினார்.

அகத்தியர் பிறந்த மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு இலங்கையில் நேற்று (13)

திருகோணமலை மாவட்ட மூதூர் கங்குவேலி பிரதேசத்தில் அகஸ்தியர் வழிபட்ட சிவன் கோவிலில் மத வழிபாட்டுடன் இடம்பெற்றது.

இதனை கிழக்கு மாகாண சுதேச திணைக்களம், கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவு, கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியன

இணைந்து இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடமாடும் இலவச சித்த மருத்துவ முகாம், சித்தர் யாகம் மற்றும் அன்னதான நிகழ்வுகளையும் நடாத்தி வைத்தது.

சித்த மருத்துவம் விழிப்புணர்வு

இத்தினத்தையொட்டி கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

மனித இனம் பெற்ற அறிவுத்திறனில் முக்கியமானது மருத்துவ அறிவாகும். பிற அறிவுகள் யாவும் மனிதனைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி ஆராய்ந்து பெற்றவையாகும்.

மருத்துவ அறிவானது மனிதன் தன்னைப்பற்றி ஆராய்ந்து கண்டதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகிலுள்ள ஒவ்வொரு நாகரிகத்துக்கும் தனித்தனி மருத்துவ முறைகள் உள்ளன. தமிழர்களுக்கான தனித்துவமிக்க, சிறப்புமிக்க மருத்துவ முறைதான் சித்த

மருத்துவமாகும். சமூகத்தில் சித்த மருத்துவத்தை ஒரு மூலிகை மருத்துவமாக எடுத்துச் செல்வதைக்காட்டிலும்,

வாழ்வியல் முறைகளைக் கூறும் மருத்துவமாக எடுத்துச் செல்வதுதான் சிறப்பானதாகும்.

ஒரு துறை வளர வேண்டுமானால் அத்துறையைச் சார்ந்த கல்வியாளர்கள், தொழில்முனைவோர், அத்துறையில் ஆராய்ச்சி செய்வோர் ஆகியோர் ஓரிடத்தில் கூடிக்

சித்த மருத்துவம் விழிப்புணர்வு

கலந்துரையாடுவது அவசியமாகும். அவ்வாறு கலந்துரையாடுவதன் மூலம் அத்துறையின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும், சமூகத்தில் அத்துறையை எளிதில்கொண்டு

சேர்க்கவும் இவ்வாறான செயற்பாடுகள் பாரிய முன்னெற்றத்தைக் கொண்டுவர வழி வகுக்கும் என்றும் அவர் கூட்டிக்காட்டினார்.

சித்த மருத்துவ மாணவர்கள், சித்த மருத்துவத்தை மட்டுமே பயிலாது, சித்த மருத்துவம் சார்ந்த பிற துறை அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள், படிக்கும்

காலத்திலிருந்தே சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தங்களைத்

தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே, பிற்காலத்தில் பெரிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

சித்த மருத்துவம் விழிப்புணர்வு
சித்த மருத்துவம்  விழிப்புணர்வு
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த சிங்கள காவல்துறை முகாம்

தீயில் எரிந்த சிங்கள காவல்துறை முகாம்

இலங்கை -களுத்துறை பகுதியில் உள்ள சிங்கள விசேட அதிரடிப்படையினரின் முகாம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது .

படையினர் தங்கி இருந்த இரண்டாவது அடுக்கு மாடியில் இந்த தீ பரவியுள்ளது ,எனினும் எவருக்கும் உயிர் சேதம்

இன்றி தப்பித்து கொண்டதாக படைத்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

யாழில் தீக்குளித்து தமிழர் தற்கொலை

யாழில் தீக்குளித்து தமிழர் தற்கொலை

இலங்கை – யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் வலைவிரித்து தேடியுள்ளனர்

இந்த போலீசார் தேடுதலினால் அச்சம் கொண்ட அவர் – தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு ரயிலில் முன்பாக

பாய்ந்து தற்கொலை புரிந்துள்ளார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரனைகளை நடத்திய வண்ணம் உள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

நான் துரோகி என பிரபாகரன் கூறவேண்டும் -கருணா

என்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது. அது எங்களுடைய தேசிய தலைவர் அவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி

என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி

அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வெதமுல்லை தோட்டத்தின் பஸ் நிலையம் எங்கே..?

வெதமுல்லை தோட்டத்தின்
பஸ் நிலையம் எங்கே

கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட லெதமுல்லை தோட்;டத்தில் காணப்பட்ட பஸ் நிலையத்தின் செயற்பாடுகள் இடை

நிருத்தப்பட்டு இருந்த பதாதையும் காணாமல் போய் உள்ளது. நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள் நிருத்துவதற்காகவே இந்த பஸ் நிலையம்

அமைக்கபட்டது. இதற்கான உரிய கட்டடம் இல்லாத போதும் பஸ் நிருத்துவதற்கான பதாதை காணப்பட்டது. பஸ்களும் நிறுத்தபட்டு வந்தன. தற்போது அது அகற்றப்பட்டு உள்ளது.

அன்மையில் இந்த தோட்டத்தை பெண் ஒருவர் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற பஸ்ஸில் வந்து வெதமுல்ல பிரதேசத்தில் இறங்கி பாதையை கடக்கும்

போது எதிரே வந்த லொரி ஒன்றில் மோதி ஸ்தலத்திலேயே மரணமானார். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டு லொரி சாரதி வன்மையாக தாக்கபட்டு லொரியும்

சேதமாக்கபட்டது. இதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்கள் தோட்ட மக்களே. இனி இவ்வாறு நடக்க கூடாது என்பதற்காகவே இந்த பஸ் நிலையம்

அமைக்கப்பட்டது. தற்போது இதன் செயற்பாடுகள் பூச்சிய நிலையை அடைந்துள்ளது. இந் நிலை தொடருமானால் எதிர்காலத்தில் பல விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள்

உள்ளன. எனவே இதனை கருத்திற் கொண்டு இந்;த இடத்தில் முறையான பஸ் நிலையத்தை அமைத்து

மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தபட்டவர்கள் மேற்க் கொள்ள வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்படுகின்றது.வெதமுல்லை தோட்டத்தின்

வெதமுல்லை தோட்டத்தின் பஸ்
வெதமுல்லை தோட்டத்தின்   பஸ்