வெதமுல்லை தோட்டத்தின் பஸ் நிலையம் எங்கே..?

Spread the love

வெதமுல்லை தோட்டத்தின்
பஸ் நிலையம் எங்கே

கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட லெதமுல்லை தோட்;டத்தில் காணப்பட்ட பஸ் நிலையத்தின் செயற்பாடுகள் இடை

நிருத்தப்பட்டு இருந்த பதாதையும் காணாமல் போய் உள்ளது. நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள் நிருத்துவதற்காகவே இந்த பஸ் நிலையம்

அமைக்கபட்டது. இதற்கான உரிய கட்டடம் இல்லாத போதும் பஸ் நிருத்துவதற்கான பதாதை காணப்பட்டது. பஸ்களும் நிறுத்தபட்டு வந்தன. தற்போது அது அகற்றப்பட்டு உள்ளது.

அன்மையில் இந்த தோட்டத்தை பெண் ஒருவர் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற பஸ்ஸில் வந்து வெதமுல்ல பிரதேசத்தில் இறங்கி பாதையை கடக்கும்

போது எதிரே வந்த லொரி ஒன்றில் மோதி ஸ்தலத்திலேயே மரணமானார். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டு லொரி சாரதி வன்மையாக தாக்கபட்டு லொரியும்

சேதமாக்கபட்டது. இதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்கள் தோட்ட மக்களே. இனி இவ்வாறு நடக்க கூடாது என்பதற்காகவே இந்த பஸ் நிலையம்

அமைக்கப்பட்டது. தற்போது இதன் செயற்பாடுகள் பூச்சிய நிலையை அடைந்துள்ளது. இந் நிலை தொடருமானால் எதிர்காலத்தில் பல விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள்

உள்ளன. எனவே இதனை கருத்திற் கொண்டு இந்;த இடத்தில் முறையான பஸ் நிலையத்தை அமைத்து

மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தபட்டவர்கள் மேற்க் கொள்ள வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்படுகின்றது.வெதமுல்லை தோட்டத்தின்

வெதமுல்லை தோட்டத்தின் பஸ்
வெதமுல்லை தோட்டத்தின்   பஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *