Posted in இலங்கை செய்திகள்

யானை கட்சி இரண்டாக உடைகிறது

யானை கட்சி இரண்டாக உடைகிறது

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெற்று வந்த தலைமை பதவி போட்டி சண்டையை அடுத்து தற்போது

சஜித் தலைமையில் புதிய அணியினர் கூட்டாக இணைந்து கூட்டணி ஆட்சி ஒன்றை நிலை நிறுத்தும் வகையில் புதிய சின்னத்தில் போட்டியிட உள்ளனர் .

இதனால் இலங்கையில் சுதந்திர கட்சி பலம் இழந்து ,செயல் இழந்து காணாமல் போனது போல யானை கட்சியும் இப்பொழுது

ரணில் மேற்கொண்ட அடாவடி பதவி மோகத்தால் இப்பொழுது இரண்டாக உடைந்து செயல் இழந்து போகும் நிலைக்கு மாற்றம் பெருகிறது

சஜித்துடன் வெளியேறும் முக்கிய புள்ளிகள் புதிய கூட்டணியில் போட்டியிட உள்ளதால் அது யானை கட்சி

சுதந்திர கட்சி போல காணாமல் போகும் நிலை உருவாக்கம் பெரும் என்றே அடித்து கூறலாம் .

மங்கள சமரவீர,பொன்சேகா போன்றவர்கள் சஜித் பக்கம் உள்ளனர் .

மகிந்தா ஆட்சியில் பலம் பொருந்திய காட்சிகள் அனைத்தும் உடைக்க பட்டு ,அந்த கட்சிகள் செயல் இழந்து

போகும் நிலைக்கு வித்திட்ட வரலாறுகள் அகல கால் பரப்பி நிற்பதை இந்த விடயங்கள் இடித்து கூறுகின்றன

கோட்டா வந்தார் யானை கட்சி இரண்டாக உடைகிறது,அடுத்து யார் ..?

Posted in இலங்கை செய்திகள்

ஒட்டி சுட்டான் ஒட்டு தொழில் சாலையை இயங்க வைக்கும் கோட்டா அரசு

ஒட்டி சுட்டான் ஒட்டு தொழில் சாலையை இயங்க வைக்கும் கோட்டா அரசு

இலங்கை – ஒட்டி சுட்டானில் அமைந்துள்ள ஒட்டு தொழில் சாலையை மீள் ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு முனைப்பு காட்டி வருகிறது .

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று மீளவும் ஆட்சியில் அமர துடிக்கும் கோட்டபாய குழுவினர் இந்த ஒட்டு தொழில்

சாலையை சில மாதங்களில் புனரமைத்து மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

அங்கு ,ஓடு,செங்கல் போன்றவை தயாரிக்க பட்டு வன்னி , மற்றும் யாழ்ப்பகுதி எங்கும் அமோக விற்பனையில் ஈடுபட்டு வந்தது .

இந்த ஒட்டு தொழிற்ச்சாலையால் பல நூறு மக்கள் வேலை வாய்ப்பையும் பெற்று வந்தனர் .


அவ்வாறான வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒட்டு தொழில் சாலை மீள இயங்க வைக்க படவுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு நீதிமன்றுக்கு வந்தார் சஜித

கொழும்பு நீதிமன்றுக்கு வந்தார் சஜித

முள்ளம் இலங்கையின் சுகாதார அமைச்சர் இன்று இடம்பெற்ற கொழும்பு உயர் நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொண்டுள்ளார் .

பிணையில் சென்ற இவர் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .

கோட்டபாய அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் பழிவாங்கும் அரசிய ல் முன்னெடுக்க பட்டு

வருகின்றமையும் ,முன்னாள் ஆட்சியில் கைதாகி சிறையில் அடைக்க பட்டிருந்த பலரும் விடுதலை செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

மக்களை மோதி தள்ளிய அமைச்சர் வாகனம் – ஒருவர் பலி

மக்களை மோதி தள்ளிய அமைச்சர் வாகனம் – ஒருவர் பலி

இலங்கையின் ஆளும் அமைச்சர் சந்திரேனாவின் வாகனம் ஒன்று ஊந்துருளி ஒன்றுடன் மோதி தள்ளியதில் அதில்

பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்தில பலியானர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

புத்தளம் ,திருமலை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .காயமடைந்தவர்களில் இராணுவ

சிப்பாய் ஒருவரின் மனைவி ,மகள் என கண்டறிய பட்டுள்ளது ,


சிசு ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளது .

போலீசாரை விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்

மக்களை மோதி தள்ளிய
மக்களை மோதி தள்ளிய

Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்காவிற்கு ஆப்பு – கட்சியிலிருந்து நீக்கம் திட்டம்

சந்திரிக்காவிற்கு ஆப்பு – கட்சியிலிருந்து நீக்கம் திட்டம்

முன்னால இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவை அதனக்கல அமைப்பாளர் பதவியில்

இருந்து நீக்க போவதாக கட்சியின் பொது செயலர் தெரிவித்துள்ளார் .

சந்திரிக்காவை ஓரம்கட்டி கட்சியை தன் வசப்படுத்தும் நிலையில் மைத்திரி முயன்று வருகின்றார் .

அவரது திட்டத்தின் படியே இந்த விவகாரம் இடம்பெறுவதாக நம்ப படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு விழா 2020

ஓஸ்ரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா 2020” பற்றிய செய்தியறிக்கை

வங்கக்கடலில் 16-01-1993 இல் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா தமிழர்

ஒருங்கிணைப்புக்குழு-வினால் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் ஓஸ்ரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று

முடிந்துள்ளது. கடந்த 12_01_2020 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் காலை

9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் கோலாகாலமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஓஸ்ரேலியத் தேசியக்கொடியினை விளையாட்டுவிழா செயற்பாட்டாளர்

திரு அருணகிரிநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை மற்றுமொரு நீண்டகால செயற்பாட்டாளர் திரு அன்ரன் வேதநாயகம் அவர்கள்

ஏற்றிவைத்தார். தொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்-களின் திருவுருவப்படத்திற்கு தமிழ் தேசியச் செயற்பாட்டாளர் திரு பரணி அவர்கள்

ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. சிறுவர்களுக்கான

மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு விழா 2020

மெய்வல்லுனர் போட்டிகளில் ஓட்டப்போட்டிகள், சமநிலை ஓட்டம், தவளைப்பாய்ச்சல், தேசிக்காய் கரண்டியில்

வைத்து ஓடுதல் அத்தோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான சங்கீதக்கதிரை என்பனவும் இடம்பெற்றது.

பெரியவர்களுக்கான விளையாட்டுக்களாக சாக்கோட்டம், கயிறு இழுத்தல், நீளம் பாய்தல், ஓட்டப்போட்டிகள்,

குண்டெறிதல் என்பனவும் இடம்பெற்றன. கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பந்தாட்டம் என்பன

விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் பலசுற்றுக்களாக இடம்பெற்றன.

மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய சிறார்கள் அனைவருக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

அத்தோடு பெரியவர்களுக்கான விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கும் விளையாட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதி-

களினாலும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், போட்டிகளின் நடுவர்களினால் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

வழமைபோன்று தாயக உணவுவகைகளான தோசை, பூரி, வடை, கொத்துரொட்டி ஒடியற்கூழ் முதலான உணவுகளும்,

வடை, றோல், பற்றீஸ், டோனட் மற்றும் பாபிகியூ போன்ற சிற்றுண்டிகளும் அத்தோடு வலூடா உள்ளிட்ட குளிர்பானங்களும் விற்பனை செய்யப்பட்டன.

துடுப்ந்தாட்டத்தில் MTG அணியும், Shivash Reegal அணியும் இறுதியாட்டத்திற்கு தேர்வுசெய்யப்பட்டு Shivash Reegal அணி 2020ம் ஆண்டிற்கான வெற்றியாளர் விருதை

தனதாக்கிக்கொண்டது. கரப்பந்தாட்டம் மிக்ஸ்கேம் போட்டியில் நொதேர்ன் டைகர்ஸ் நீல அணியினருக்கும், செந்தமிழ் அணியினருக்கு-மிடையில் நடைபெற்ற

இறுதிச்சுற்றுப்போட்டியில் நொதேர்ன் டைகர்ஸ் நீல அணி வெற்றியீட்டி 2020ம் ஆண்டிற்கான வெற்றிக்கேடயத்தைப் பெற்றுக்கொண்டனர். 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான

துடுப்பாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் ஈழம் போய்ஷ் – சிவப்பு அணியினர் 2020 ஆண்டு சம்பியனாகவும், ஈழம்

போய்ஷ் – மஞ்சள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பந்தாட்டம் என்பவற்றில் இறுதியாட்டங்களுக்கு தேர்வுசெய்யப்பட்டு, இறுதியாட்டங்களில் பங்கெடுத்து வெற்றியீட்டிய

அணிகளுக்கும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, இவ்விளையாட்டுக்களில்

இறுதியாட்டங்களில் பங்கெடுத்த விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இறுதியாக பரிசில்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கும் நிகழ்வையடுத்து மாலை 8.00 மணியளவில்

தேசியக்கொடிகள் இறக்கப்பட்டடு தமிழர் விளையாட்டுவிழா_ 2020 நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறியது.


மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு
மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு
மெல்பேணில் கேணல் கிட்டு விளையாட்டு
Posted in இலங்கை செய்திகள்

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

ராகலை சென்லெனாட்ஸ் தோட்டம் தோட்ட தொழிலாளர்களான திரு திருமதி மெய்யப்பன் ஆழகாய் ஆகியோரின் புதல்வனான சசிகுமார் தனது பாடசாலை

காலத்தில் ஆரம்பிக்கபட்ட தனது விளையாட்டுத்துறையில் தற்போது மரதன் ஒட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வெற்றிகளை தனதாக்கி கொண்டு வருகின்றார். இவர்

2010 ஆம் ஆண்டு இந்தியா நேரு மைதானத்தில் விளையாட்டு பயிற்சி நெறியை கற்வர் (DIPLOMA COURSE FOR

COACHES)இவரை இவரது வீட்டில் இவரது ஊரான ராகலை சென்லெனாட்ஸ் தோட்;டத்தில் நேரில் சந்திக்கும் வாய்பு கிடைத்தது.

இதன் போது எம் சசிகுமாரிடம் இந்த சாதனைகள் குறித்து வினவிய போது

எம் சசிகுமார் ஆகிய நான் ராகலை சென்லெனாட்ஸ் பாடசாலையில் ஆரம்ப கல்வியை ஆரம்பித்து கல்வி கற்றுக் கொண்டு இருக்கும் வேலையில் 1990 பாடசாலை இல்ல

விளையாட்டு போட்டியில் நடந்த மரதன் ஓட்ட போட்டியிலும் மற்றும் அஞ்சல் ஓட்ட போட்டியிலும் கலந்து எனது விளையாட்டு துறையை ஆரம்பித்தேன்.

அதன் பின் இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த (சா/த) கல்வியை தொடர்ந்தேன். அவ் பாடசாலையில் பல போட்டிகளில் பங்கு பற்றிவெற்றி

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

பெற்றேன். 1997 ஆம் ஆண்டு பாடசாலை வலய மட்ட போட்டியில் 10000 M மற்றும் 1500 M ஓட்ட போட்டியில் கலந்து முதலிடம் பிடித்தேன். பின் 1998 ஆம் ஆண்டு கல்வி பொது

சாதாரணதர பரீட்சையில் 06 பாடங்கள் சித்தி அடைந்த நான் தொடர்ந்து கல்வியை தொடர முடியாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை இடை நிறுத்தினேன். பின்னர்

சுயதொழிலில் அதாவது ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டேன். தொடர்ந்து மரதன் 10.000 M ஓட்டம்¸ 1500 M ஓட்ட போட்டிகளில் எனது முயற்சியின் மூலம பயிற்சி பெற்று

நுவரெலியா மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றேன். அதன் பின் எனது அண்ணன் உடன் பிறந்த சகோதரன் சர்வதேச

மரதன் ஓட்ட வீரர் ஆ.மனோகரன் மூலமாக பயிற்சியை துவங்கினேன்.

முறையாக பயிற்சி பெற மைதானம் இல்லை. பயிற்சிக்கான போசனையான உணவுகள் இல்லை. இருந்தும் எனது முயற்சியை கைவிடாமல் 1999 வலப்பனை பிரதேச

போட்டிகளில் கலந்து 4×100 அஞ்சல் ஓட்ட போட்டி 10000 ஆ ஓட்ட போட்டிகள் முதலிடம் பிடித்தேன். 2000 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட மட்ட போட்டிகளில் 1500 M ஓட்ட

போட்டி முதலாம் இடத்தையும் 800அ போட்டி முதலாம் இடத்தையும்¸ மரதன் ஓட்டப் போட்டியில் 4 இடத்தையும் பெற்றேன்.

இவ்வாறான நிலையிலேயே முதன் முதல் கொழும்பு மரதன் ஓட்ட போட்டி 42 முஅ தூரம் ஓட ஆரம்பித்தேன். இந்த போட்டியில் 1800 வீரர்கள் கலந்தும் சிறப்பித்தனர்.

இதில் நான் 13 இடத்தை பெற்றேன். அதே ஆண்டில்SOS வீதி ஓட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றேன் 2001 கண்டியில் நடைபெற்ற 42 KM தூர மரதன் ஓட்ட போட்டியில்

கலந்துக் கொண்டு நான் 13 அம் இடத்தை பெற்றேன். இப்போட்டியில் 2000க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடந்து நடைபெற்ற வீதி மரதன் ஓட்ட போட்டியில் 2002 வருடத்தில் 21km நான்காம் இடம் 2003 வருடத்தில் 21km 14 இடம் 2004 வருடத்தில் 21 km மூன்றாமிடம் 2004 சர்வதேச

புகைத்தல் தடுப்பு தின வீதி மரதன் ஓட்ட போட்டியில் 10000 M முதலாமிடம் பெற்றேன். தொடர்ந்து ஆசிரியர் ஞானசேகரன் வழிகாட்டலில் இரத்தினபுரி மைதானத்தில் தேசிய இளைஞர்

சேவை மன்றத்தினால் நடாத்திய 10000 M மீற்றர் மரதன் ஒட்ட போட்டியில் பங்குபற்றி பெற்றிபெற்றேன். தொடர்ந்து 2005 மத்திய மாகாணம் நடாத்திய 10000 M 1500 M 800 M ஓட்ட

போட்டியில் முதலிடம் பெற்று சிறந்த விளையாட்டு வீரர் விருதினை கௌரவ ஊ.டீ.ரத்நாயக்க அவர்களின் மூலம் சான்றிதழை பெற்றேன்.

சாதிக்க துடிக்கும் மலையத்தின் மரதன் ஒட்ட வீரர் எம். சசிகுமார்

இவ்வாறான நிலையில் 2015 மே 15 இந்தியாவில் பெங்களுர் மரதன் ஓட்ட போட்டி கடும் சிரமத்திற்கு சென்றேன் இதற்கான உதவியினை தோட்ட பொது மக்கள்¸ எனது உடன்

பிறந்த சகோதரர்கள் மற்றும் முன்னால் அமைச்சர் பழனி திகாம்பரம் ஐயா அவர்கள் மூலம் 7000 ரூபாவிற்கு பாதணி

ஒன்று வாங்கி தந்தார். காலஞ்சென்ற அருள்சாமி ஐயா அவர்களும் பாதணி ஒன்று வாங்கி தந்தார். அனைவருக்கும் நன்றிகள்.

பெங்களுர் மரதன் ஓட்ட போட்டியில் 18300 க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கெண்டனர். அதில் நான் 21 km 175 M

தூரத்தை 1 மணித்தியாலயம் 12 நிமிடம் 25 செக்கன் ஓடி முடித்து 12 வது இடத்தை பிடித்து பதக்கமும் சான்றிதழும் பெற்றேன்.

தொடர்ந்து மரதன் ஓட்ட போட்டி ஆர்வத்தோடு கலந்து 2010 விளையாட்டு பயிற்சி நெறியை கற்க இந்தியா நேரு

மைதானத்திற்கு சென்றேன். அங்கு 75 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதில் பயிற்சி பெற்று (DIPLOMA COURSE FOR COACHES) பட்டம் பெற்று வந்துள்ளேன்.

2011 ஆண்டு ஓர் வீதி விபத்தில் இரண்டு விரல்களை இழந்தும் 2015 ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வீதி ஓட்டம்¸ சூரிய வெப்பம் வானொலி மற்றும் மலையக

கல்வி அபிவிருத்தி மன்றம் நடத்திய போட்டிகளில் முதலிடம் பிடித்து என்னை இவ்வளவு தூரம் உலகரியச் செய்த சூரியன் FM ஏ.லோசன் அண்ணன் மற்றும் அறிவிப்பாளர் அஜித்

அண்ணன் மற்றும் மலையக கல்வி அபிவிருத்தி மன்ற உருப்பினர்களும் தொடர்ந்து மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வருடதோரும் நடாத்தி வந்த மரதன் ஒட்ட

போட்டிகளில் 2015 முதலிடம்¸ 2016 மூன்றாம்மிடம் 2017 2ம் இரண்டாமிடம் 2018 இரண்டாமிடம் என தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றேன்.

எனது சொந்த முயற்சியாலும் குறிபிட்ட சிலரின் உதவியுடனும் இவ்வாறன வெற்றிகளை பெற்று

வருகின்றேன். எனக்கு மலையத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் பயிற்சிகளை வழங்கவும்

முடியும் இதற்கான அனுசரனையாளர்கள் கிடைக்குமானால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்களையும்,

வேலை செய்கின்ற வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு குறித்த வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸ் தலைமையில் நேற்று (16) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்

பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பார் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல், நிந்தவூர் ஆயுர்வேத

ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம்

ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர், கல்முனை பிராந்திய சுகாதார

சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கணக்காளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குறித்த வைத்தியசாலைக்காக பாடுபட்ட ஆரம்பகால வைத்தியர்கள், தற்போது சேவையாற்றும் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்

உள்ளிட்டோருக்கும் புதிதாக இடமாற்றம் பெற்றுவந்த, பெற்றுச் சென்றவர்கள் ஆகியோர் இன்றைய நிகழ்வின் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வைத்தியர் எம்.ரீ.அமிராவின் புதல்வியும் இன்றைய

நிகழ்வின்போது வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

2020 தரம் ஒன்றிற்கு மாணவர்கள் உள்வாங்கள்

2020 தரம் ஒன்றிற்கு மாணவர்கள் உள்வாங்கள்

நுவரெலியா மாவட்டம் கொத்மலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட டன்சினன் தோட்டம் குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்திற்கு தரம் 01 க்கு மாணவர்களை

உள்வாங்கும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அதிதியாக கொத்மலை கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் எம்.ஆர்.ரவீந்திரன் அவர்கள்

கலந்துக் கொண்டார் இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்களும் அதிதிகளின் உரைகளும் நடைபெற்றன.

2020 தரம் ஒன்றிற்கு மாணவர்கள்
2020 தரம் ஒன்றிற்கு மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

டுபாய் விபத்தில் இலங்கை பெண்பலி

டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கை பெண் ஒருவர் பலி யாகியுளளார் .

குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை அபுதாபியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

தோட்டத்தில் இருந்து தெரிவான மாணவர்களுக்கு தோட்ட இளைஞர்கள் கௌரவிப்பு

பல்கலைகழகத்திற்கு தங்களது தோட்டத்தில் இருந்து தெரிவான
மாணவர்களுக்கு தோட்ட இளைஞர்கள் கௌரவிப்பு

நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ராகலை குரூப் தோட்டத்தில் இருந்து இம்முறை பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை

கௌரவிக்கும் நிகழ்வு தோட்ட இளைஞர்களின் பாரதி கழகத்தின் ஏற்பாட்டில்; பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி

வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டு பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவித்து பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.

இதன் பொழுது பிரதேச சபை உறுப்பினர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் உட்பட் தோட்ட இளைஞர்களும் பொது மக்களும் கலந்துக் கொண்டனர்..

Posted in இலங்கை செய்திகள்

மக்களின் நீண்ட நாள் தேவை நிரைவேற்றம்

மக்களின் நீண்ட நாள் தேவை நிரைவேற்றம்

நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ராகலை குரூப் 01 தோட்ட மக்களின் குடியிருப்புகளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வதற்கு பாலம்

ஒன்று இன்மையால் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர். இந்த பிரதேசம் அடிக்கடி வெள்ள பெருக்கில் பாதித்து வந்ததும் குறிப்பிடதக்கது.


மழைக்காலங்களில் இந்த பிரசேத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் சந்தர்பங்களில் மக்கள் பல வருடங்களாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து

வந்தனர். இதற்கு தீர்வினை பெற்றுக் கொள்ள மக்கள் முயற்சிகள் பல மேறக்;கொண்ட போதும் அவை பயனளிக்கவில்லை.

இந் நிலையில் இப்பிதேசத்தில் வசித்து வரும் மக்கள் முன்னால் அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்

முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களிடம் நிலமையை விபரித்தனர் இதன் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின்

நிதி ஓதுக்கீட்டின் மூலம் இந்த பாலம் முழுமையாக நிர்மாணிக்கபட்டு மக்களின் பாவனைக்காக மக்களிடம்

கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார்

மக்களின் நீண்ட நாள்
மக்களின் நீண்ட நாள்
Posted in இலங்கை செய்திகள்

21 லட்சம் தங்கத்தை கொள்ளையடித்த 8 பேர் கைது

21 லட்சம் தங்கத்தை கொள்ளையடித்த 8 பேர் கைது

இலங்கையில் 21 லட்ச்சம் பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்த எட்டு பேர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .

போலீசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .


கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

சகோதரனை குத்தி கொன்ற சகோதரன்

சகோதரனை குத்தி கொன்ற சகோதரன்

இலங்கை -புலப்பகோஹபிடிய ப்குதியில் இரு சகோதர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு படுகொலையில் முடிந்துள்ளது .

இதில் 45 வயது சகோதரனை கத்தியால் குத்திய உடன்பிறந்தவர் படுகொலை செய்துள்ளார் .


தற்போது குற்றவாளி கொலை வழக்கில் கைது செய்ய பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மனித உரிமை பாதிப்பு – மனித உரிமை மையம்

இலங்கையில் மனித உரிமை பாதிப்பு – மனித உரிமை மையம்

இலங்கையில் தற்போது கடுமையாக மனித உரிமை பாதிக்க பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .

2020 ஆண்டு மனிதா உரிமை மதிப்பாய்வின் போதே இதனை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு தற்போது ஆளும்

இலங்கை அரசனிடம் இருந்து இதனை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

யாழ் – கொட்டடியில் வாள்வெட்டு – ஏழுபேர் காயம்

யாழ் – கொட்டடியில் வாள்வெட்டு – ஏழுபேர் காயம்

யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியில் வந்த குழு ஒன்று திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியது .இதன் பொழுது

அங்கிருந்த மக்களும் திருப்பி தாக்குதலை நடத்தினர் இதில் சுமார் ஏழுபேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளள்னர் .

ஊந்துருளியை போட்டு விட்டு வாள்வெட்டு குழு தப்பி ஓடிவிட்டது .


வாள்வெட்டு குழுக்களை அடக்குவோம் என கோட்டபாய தெரிவித்த பொழுதும் இதுவரை அவை இடம்பெறவிலை என்பதும் .

வீதி எங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டுள்ள நிலையியல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது

ஆவா என்பதும் தெரு ரவுடிகள் குழு தலைவர் ஆனாலும் கோட்டபாய என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வறுமையில் வாடும் மக்களுக்கு – மலிவு விலையில் உணவு

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும்

தேசிய திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் சகல உரிமை பெறுனருனருக்கும் விசேட சிறப்பு மின்னணு அட்டை ஒன்று வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சமூர்த்தி பெறுனர்கள் அதேபோல் சமூர்தி பெறாதவர்கள், நிலையான தொழிலற்றவர்கள், தோட்டதுறையில் தொழில் புரியும் தொழிலாளர்கள், தொழில் இல்லாத

அங்கவீனமுற்றவர்கள், விதவைகள், நிலையான வருமானமற்ற முதியோர் மற்றும் கடும் நோய்களுக்கு

வறுமையில் வாடும் மக்களுக்கு – மலிவு விலையில் உணவு

உள்ளானவர்கள் உள்ள குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்டவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

சீனி, தேயிலைத் தூள், அரசி, தோதுமை மா, பருப்பு, கடலை, வெங்காயம், மிளகாய்தூள், கருவாடு, கிழங்கு மற்றும்

பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

லங்கா சதோச, கூட்டுறவு விற்பனை வலையமைப்பு மற்றும் கிராம புறங்களில் தெரிவுச்செய்யப்பட்ட விற்பனை

நிலையங்கள் ஆகிய இடங்களில் ஆரம்பத்தில் குறித்த பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் வீடுகள், கிராமப்புறங்கள் மற்றும்

பெருந்தோட்ட தோட்டப் பகுதிகளில் இவ்வாறான கடைகளை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை

அளிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனூடாக சிறு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு

உற்பத்திகள் மற்றும் உணவு மற்றும் பிற பொருட்களை நேரடியாக சந்தைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.வறுமையில் வாடும் மக்களுக்கு

Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் தை பொங்கள் ஆலங்களில் விஷேட பூஜைகள்

மலையகத்தில் தை பொங்கள் ஆலங்களில் விஷேட பூஜைகள்

உலகலாவிய ரிதியில் சைவ மக்கள் இன்று (15) சூரியன் விவசாயத்திற்கு உதவி செய்தமைக்காக அந்த விவசாயத்தின் மூலம் பெறபட்ட அரிசி முலம் பொங்கள்

பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தும் நன்னாலான இந் நாளை மலையக மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மலையக ஆலயங்களில் இன்று பொங்கள் வைத்தலும் விஷேட பூஜைகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. அதன் ஒரு கட்டமாக மலையத்தில் வரலாற்று

சிறப்புமிக்க புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் இன்று பொங்கள் வைத்தல் நிகழ்வும் விஷேட பூஜைகளும்

அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதன் போது பெரும் திறலான பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்

மலையகத்தில் தை பொங்கள்
மலையகத்தில் தை பொங்கள்
மலையகத்தில் தை பொங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வியாபாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்

வியாபாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்

இலங்கையில் -38 வயதான மாணிக்க கல் வியாபாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .

இவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

ராமர் பிள்ளையின் மூலிகை பெற்றல் விற்பனை – குஷியில் மக்கள் – video

ராமர் பிள்ளையின் மூலிகை பெற்றல் விற்பனை – குஷியில் மக்கள் – video

தமிழகத்தின் ராமர் பிள்ளை கண்டு பிடித்த மூலிகை பெற்றோல் வீரப்பனை செய்ய படுகிறது .


தமிழகம் முழுவதும் முதல் முறையாக ஒரு கோடி லீட்ட்ற மூலிகளி பெட்ரோல் விற்பனை செய்ய படுகிறது

கழிவு நீரை பயன் படுத்தி பெற்றோல்

அந்த செய்தியை நீங்கள் பாருங்கள்